ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நீர் சேகரிப்பு

Agriwiki.in- Learn Share Collaborate

ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நீர் சேகரிப்பை விளக்கும் ஒரு பக்க கட்டுரை.
தாராபுரம் நீர் மேம்பாடு
ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நீர் சேகரிப்பு
ஏன் தாமதிக்க கூடாது?
1. ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கையால் நில அதிர்வுகள் ஏற்படும்.
2. திடீர் நில மற்றும் கட்டிட புதைவுகள் ஏற்படும்.
3. நிலத்தடியில் வெற்றிடம் ஏற்படுவதால் கடல் நீர் ஊடுறுவி நிலத்தடி நீர் ஒட்டுமொத்தமாக மாசுபட்டு பல உடல் நல கோளாறுகள் ஏற்படும்.
4. ஆங்காங்கே தற்போது இருக்கும் தண்ணீர் மாபியாக்கள் அதிகமாகி ஒட்டு மொத்த சமுதாயமும் அடிமைப்பட்டு சீரழிய நேரிடும்.
அவசியம் ஏன்?
1. காலநிலை மாற்றங்களால் மழை பொழியும் நாட்கள் குறைந்து வெப்பம் அதிகமாகி வருவதால் நிலத்தின் மேற்பரப்பில் நீரை தேக்கி வைப்பதால் நீர் மிகுதியாக ஆவியாகிவிடுகிறது.
2. நிலத்தடி நீர் கடல் மட்டத்தை தாண்டி ஏற்கனவே வறண்டுவிட்டது.
3. இருக்கும் ஆழ்குழாய்களை செறிவூட்டுவதால் புதிய கிணறுகளின் தேவை குறையும் மற்றும் பொருளாதார இழப்பையும் தவிர்க்க முடியும்.
செயல் படுத்தும் முறை
1. நீர் பிடிப்பு பகுதியின் பரப்பளவிற்கு உகந்த அளவில் தற்காலிகமாக மழை நீரை தேக்கி வைக்க பண்ணை குட்டையை அமைக்கவும்.
2. மண் கலந்த நீரை நன்றாக வடிக்க குட்டையின் நடுவிலோ அல்லது ஒரு ஒரத்திலோ சுமார் 5அடி x 5அடி x 5அடி பரப்புள்ள குழியை அமைக்கவும்.
3. நீர் வடிக்கும் குழியின் அடிப்பகுதியிலிருந்து ஆழ்குழாய் கிணறு வரைக்கும் சிறு அகலத்தில் அமைத்து பி.வி.சி. பைப்பை படத்தில் காட்டியுள்ளவாறு இணைக்கவும்.
4. பக்கவாட்டில் பி.வி.சி. பைப்பை படத்தில் காட்டியுள்ளவாறு நிறைய குறு துளைகள் இட்டு பச்சை பிளாஸ்டிக் வலையால் நன்கு சுற்றி மண்துகள்கள் எதுவும் நுளையா வண்ணம் கட்டி விடவும். இந்த சல்லடை அமைப்பு மூலம்தான் மழை நீர் மெல்ல ஊடுறுவி ஆழ்குழாய் கிணற்றுக்குள் செல்லும்.
5. நீர் வடிக்கும் குழியை முதலில் பெரும் கற்களால் பாதி அளவு மூடி விடவும். மீதியை சிறு கற்கள் கொண்டு மூடி விடவும். மேற்பகுதியில் ஓரிரு அடிக்கு மணலையோ அல்லது மணல் கப்பிகளையோ கொண்டு மூடிவிடவும். இந்த வடிகால் அமைப்பு சல்லடை அமைப்பை அடைக்காமல் இருக்க உதவும்.
6. மேலும் விபரங்களுக்கு பின்பக்கமுள்ள படத்தை பார்க்கவும்.

Home Page