இந்த நாலு செடி இருந்தா தென்னைக்கு உரமே தேவை இல்லை

இந்த நாலு செடி இருந்தா தென்னைக்கு உரமே தேவை இல்லை
Agriwiki.in- Learn Share Collaborate
தென்னையை சுற்றி மட்டை நிழல் விழுவதிற்குள்ள இடத்தில் இவை இருக்கவேண்டும். அதன் பலனே வேறு.
1. சப்பாத்தி கள்ளி
2. எருக்கு
3. சோற்று கற்றாழை
4. பப்பாளி.
1. சப்பாத்தி கள்ளி
சப்பாத்தி கள்ளி ஒரு செடி ஒரு தென்னை அருகில் இரண்டு மூன்று மீட்டர் தூரத்தில் இருந்தால் உரமே தேவை இல்லை.
சப்பாத்தி கள்ளி மிக சிறந்த தண்ணீர் சுத்திகரிப்பு செய்யும் தாவரம். 98% கெட்ட தண்ணீரையும் சுத்திகரிப்பு செய்யும்.
கால்சியம் சத்து மிகுந்த தாவரம்.பொட்டாசியம் , மக்னீசியம், பயிர் வளர்ச்சி அடைய பாஸ்பரஸ் மிகுந்த அளவு உள்ளது.
2. பப்பாளி
பப்பாளி உள்ள சத்துக்கள் பொட்டாசியம் மக்னீசியம் காப்பர்
பப்பாளி வேர்கள் செம்மரம் போன்று நேராக கீழே செல்லும். அடியில் உள்ள சத்துக்கள் பப்பாளி வேர்கள் உறுஞ்ச தென்னை வேர்கள் அந்தவேர்களில் உறுஞ்சி கொள்ளும்.
3. சோற்று கற்றாழை
சோற்று கற்றாழை காற்றில் உள்ள ஈரப்பதத்தை இழுத்து வளரக்கூடியது.
கால்சியம் குளோரின் பொட்டாசியம் மக்னீசியம் காப்பர் போன்ற சத்துக்கள் உள்ளன. அல்லாய்ன் எனும் பொருள் பாதி அளவு உள்ளது. இது வெப்பத்தை தாங்கும் தன்மை உள்ளது.
4. எருக்கன்

போரான் சத்து மிகுந்தது.

Kalyan Sundar from Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.