தண்ணீரின் முக்கியம் அறிய

தண்ணீரின் முக்கியம் அறிய
Agriwiki.in- Learn Share Collaborate

தண்ணீரின் முக்கியம் அறிய

மழை பொழியும் போது –

புதிய விவசாய நிலங்கள்/மானாவாரி நிலங்களுக்குக் குடையைப் பிடித்தேனும் மழை பெய்யும்போது ஒரு முறை செல்லாம். அப்போது தான் பல செயல்பாடுகள் புரியும்.

உங்கள் நிலத்தின் மேடு பள்ளங்கள் தெளிவாக விளங்கும்.

நிலத்தில் உள்ள நீர்வழிப்பாதைத் தெரியும்.

எவ்வளவு மழைநீர் உங்கள் நிலத்தைக் கடந்து செல்கிறதெனத் தெரியும். ஏன் மழைநீரை சேமிக்க வேண்டும் எனப்புரியும்.

உயரமான வரப்பு ஏன் போடவேண்டும், ஏன் மழைநீரை வரப்புகளுக்ள் சேமிக்க வேண்டும் எனப் புரியும்.

பண்ணைக்குட்டை போடுவதற்கான இடத்தைத் தேர்வு செய்ய வசதியாக இருக்கும். அதிக மழை உங்கள் நிலத்தில் கடந்து செல்லும் வழியில் அதனை வாயாக வைத்து எவ்வாறு குட்டை அமைக்கலாம் என முடிவெடுக்க முடியும்.

வயலில் எந்த இடத்தில் கரைகள் அமைத்து சமப்படுத்தலாம் அல்லது எங்கு மண்ணைக் கொட்டி உயரமாக்கலாம் அல்லது குழாய் மாதிரி அமைப்பு வைத்து நீரைக் கடத்தலாம் என முடிவெடுக்கலாம்.

உழாத நிலங்களில் உழவு குறித்து முடிவெடுக்கலாம்.

மரங்கள் வைப்பதெனில் மேட்டு நிலத்தில் நீர் குறைந்த நிலத்திற்கான மரங்கள், நிறைய நீர் தேங்குவதோ அலது அரிப்பதற்கான நிலத்திற்கேற்ற மரங்கள் அல்லது தடுப்பான்கள் குறித்து முடிவெடுக்கலாம்.

எனவே
மழையின் போது ஒரு முறையேனும் நிலத்தினை சுற்றிப் பாருங்கள், தண்ணீரின் முக்கியம் அறிய.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.