பசுமைப்பாதையின் இயற்கை வாழ்வியல் நிகழ்ச்சி

Agriwiki.in- Learn Share Collaborate

☄⛅💦💨🔥🌏🌈💧🌪🌞☔
*அனைவரையும் ஆழமாக சிந்திக்கத்தூண்டிய,*
*நீங்கள் அவசியம் சந்திக்கவேண்டிய,*
*வாழும் சித்தர்களுடன் வாழ்வியலில் ஒருநாள்…*

*30.07.2017 ஞாயிற்றுக்கிழமை*
👨‍👩‍👦‍👦👱🏽👵👴🏼👤✍👥👨🏻‍🔬👩‍🔬🤰🏻👪
*வாய்ப்பை தவறவிடாதீர்கள் தோழமைகளே…*
*98430 85615, 98430 85616.*

இதுவரையில் விலகாத, உங்கள் கண்களை விட்டு அகலாத தந்திர முடிச்சுகள் *திருச்சியில்* கட்டவிழ்க்கப்படுகிறது, *பசுமைப்பாதையின் இயற்கை வாழ்வியல் நிகழ்ச்சிகளில்…*

*இயற்கை வேளாண்மை* வழிமுறைகள், *பாரம்பரிய உணவுமுறை* பழக்கங்கள், *பண்டைய வாழ்க்கைமுறை* வழக்கங்கள், *மரபுவழி மருத்துவ* நுட்பமுறைகள் வழியே
எப்போதும் அறியப்பட்டவர்களில் *வாழும் சித்தராக வர்ணிக்கப்பட்ட, கரூர்*
*திரு. அன்பு சுந்தரம்* அவர்களின் அனுபவ உரைகளையும், இதுவரை நீங்காத திரைகளையும், மறைக்கப்பட்ட உண்மைகளையும், மூடப்பட்ட வரலாறுகளையும், சுற்றிலும் பின்னப்பட்ட சதிவலைகளையும், சூசகமாய் வஞ்சனை செய்த சீமை சகுனித்தனங்களையும், விழித்தெழுந்து முற்றிலும் இவற்றையெல்லாம் அறுத்தெறிந்து இனிவரும் தலைமுறைகளை காக்கவேண்டிய/மீட்கவேண்டிய வாழ்வியல் வழிமுறைகளையும்… *தெரிந்துகொள்ளவேண்டிய தெளிவான தருணங்கள்!*

ஆங்கிலேயரை எதிர்த்து, தன் குருதியை வீரம் விளைந்த மண்ணில் உதிர்த்து, நம் தேச மக்களுக்காக தன்னுயிரை மாய்த்த, மக்களின் மனதில் நீங்காத நினைவுகளை விதைத்த *வீரன் வாஞ்சிநாதன் அவர்களின் ஒரே மகள் லட்சுமி அம்மாவுக்குப் பிறந்த பேரன், நாட்டுப் பற்றாளர், மூலிகை ஆய்வியலர், சூழல் வல்லுனர், திருச்சி திரு. ஜெயகிருஷ்ணன்* அவர்களின் பகுத்தறிவு திறன் சார்ந்த பாரம்பரிய வீரியங்களையும், தொகுத்துத் திறம்பட வழங்கிட இருக்கும் வீரம் தோய்ந்த வாழ்வியல் ஜீவிதங்களையும் *உளமார உள்ளெடுக்கும் உணர்வுமிகு நிமிடங்கள்!!*

புயலுக்கும், நோய்க்கும் புதிதாக பெயர்களை கண்டறியப் போராடும் இன்றைய நாட்களில், *காய்ந்த மலத்தை கண்டே, அதற்கான மனிதனின் பாதித்த உடல்நலத்தையும், அதற்கென்றே முன்னோர்கள் போதித்த மூலிகை வளத்தையும்,* தனது நுட்பமான உயிரியல் மருத்துவத்தின் மூலம் சூட்சமமாக நோய்களை வெல்லும் பேராற்றலை ஆய்வுகளுடன் உணர்த்த வருகிறார் *மூலிகை உயிரியல் சித்தர், அரியலூர் திரு. காசிப்பிச்சை* அவர்கள்.

உலக வெப்பமயமாதலை உடனடியாக தடுக்கவேண்டிய தற்போதைய தருணங்களில், மரக்கன்றுகளுக்கு மாற்றாக போத்து மரங்களையே நட்டு, *தமிழகம் முழுவதிலும் பல்வேறு வகைப்பட்ட 8 லட்சம் மரங்களை உருவாக்கிய* அனுபவங்களையும், அதைப்பற்றிய சிறப்புத் தகவல்களையும், நெகிழ்ச்சிப் பதிவுகளாக பகிர்ந்துகொள்ள வருகிறார்கள்… *புதுக்கோட்டை திரு. ஆசைத்தம்பி* அவர்கள் மற்றும் *புதுக்கோட்டை*
*திரு. மரங்களானவன்* அவர்கள். நிகழ்வுகள் நடைபெறவுள்ள ஜூலை 30 ம்தேதி வளாகத்திலேயே நுட்பமுறைகளுடன்
*”போத்து மரங்கள்”* நடப்படும்.

இவர்களுடன் *பாரம்பரிய உணவுச் சித்தர், பாண்டிச்சேரி திரு. ராசி ராமலிங்கம்* அவர்கள்,
*நெல் ரகங்கள்/சிறுதானியங்கள்/விதைகள்/கதிர்களின் காவலர், பண்ருட்டி திரு. கவிதை கணேசன்* அவர்கள், வேளாண்மை அறிஞர்கள், விவசாய முன்னோடிகள், நாட்டுவிதைகள் சேமிப்பாளர்கள், தோட்டக்கலை பயிற்சியாளர்கள், உணவியல் ஆய்வியலர்கள், சூழல் வல்லுனர்கள், மருத்துவ நிபுணர்கள், சிறப்புச் சிகிச்சையாளர்கள் மேலும் வாழும் சித்தர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வருகை தரும் அற்புத நிகழ்வுகள்…

*கண்காட்சி மற்றும் அரங்கங்கள்*
இந்தியா முழுவதிலும் இருந்து 300 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள், பலதரப்பட்ட சிறுதானியங்களின் ரகங்கள், நாட்டு விதைகள்/ கதிர்கள், மரபு சார்ந்த உணவு வகைகளின் 20,000 தொழில்நுட்பங்கள், 3333 சிறப்பு உணவுப் பொருட்கள் மற்றும் *நாகப்பட்டினம்*
*திரு. மணிவாசகம் (பொதுச்செயலாளர்)* அவர்களின் மேற்பார்வையில் *தமிழ்நாடு சித்த மருத்துவ பாதுகாப்புச் சங்கத்துடன் இணைந்து வழங்கும் 108 அரியவகை மூலிகைகளின் அற்புத கண்காட்சியில் மூலிகைகள் அடையாளம் காணும் போட்டி,* பண்டையகால பயன்பாடுகளில் இருந்த ஆரோக்கியப் பொருட்கள், நலம் காக்கும் பொருட்கள், மறுசுழற்சிப் பொருட்கள், மக்கும் பொருட்கள், மூலிகைப் பொருட்கள், உணவுப் பொருட்கள், வேளாண்மைப் பொருட்கள், பசுமை மேவும் பொருட்கள் மற்றும் புத்தகங்கள்…

*அனைவரும், அனைத்தும் உங்களது வருகைக்காக…*

*முன்பதிவு அவசியம்.*

*2017 ஜூலை 30, ஞாயிற்றுக்கிழமை.*
*காலை 10:00 மணிமுதல்*
*மாலை 6:00 மணிவரை.*

*சமுதாய நல மன்றம் அரங்கம்,*
*தூய வளனார் கல்லூரி வளாகம் (St Joseph College Campus), நுழைவாயில் எண்- 3 (Gate No- 3) சத்திரம் பேருந்து நிலையம் அருகில், திருச்சி.*
*98430 85615, 98430 85616.*

*நன்றி! பசுமைப்பாதை!!*
🙏🙋‍♂🙏🙋‍♂🙏💐🙋‍♂🙏🙋‍♂🙏🙋‍♂