பழ மரங்கள் நடக்கூடிய மண்வகைகள்

பழ மரங்கள் நடக்கூடிய மண்வகைகள்
Agriwiki.in- Learn Share Collaborate
பழ மரங்கள் நடக்கூடிய மண்வகைகள்

 

அனைத்து பகுதிகளிலும் மழைபெய்துள்ளது. இந்த மழையை பயன்படுத்தி தரிசாக இருக்கும் இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்தால் எல்லா மரங்களும் பழுதில்லாமல் முளைத்துவிடும்.

உங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை பண்ணையில் கன்றுகள் உள்ளது அவற்றை வாங்கி இப்பொழுதே நடவு செய்யலாம். தற்பொழுது பழ மரங்கள் நடவு செய்ய சில விபரங்ககளை பார்க்கலாம்

மா

பல்வேறு மண்ணிலும் வளரும், களர் வடிகால் வசதியற்ற மண் உகந்ததல்ல வளமான குறுமண் மிக ஏற்றது. அதிக மணலாக இருந்தால் மரம் வளரும். ஆனால் பழத்தின் தரம் குறையும்.மண்கண்டம் ஆழம் வேண்டும். ஆழம் குறைந்தால் பழம் புளிக்கும்.

கொய்யா

களர் நிலத்திலும் கூட வளரும். ஆயினும் மணல் கலந்த வடிகால் வசதியுடைய நிலங்;களில் வறட்சியைத் தாங்கும். ஆயினும் பாசன நிலங்;களிலேதான் அதிக மகசூல் கிடைக்கும்.

சப்போட்டா

இதன் வேர்கள் அதிக ஆழத்தில் செல்லாது, ஓரளவுக்கு உவரைத் தங்;கி வளரும். வடிகால் வசதியுடைய ஆழமான வண்டல், செம்மண், கரிசல்மண், மணல் கலந்த மண் வகையில் நன்கு வளரும்.

எலுமிச்சை

மண்ணில் கார அமில நிலை 6-5- 7.0 க்குள் இருந்தால் நலம். இதன் வேர்கள் மேலாகவே படர்ந்திருக்கும்.
வடிகால் வசதிமிக்க கரிசல் மற்றும் மணற் பாங்கான வண்டல் மண்ணில் நன்கு வளரும்.

மாதுளை

களர் ஈரப்பதத்தையும் தாங்;கி வளரும்.
ஆழமான மணற்பாங்கான வண்டல் மண்ணில்; நன்கு வளரும்

பப்பாளி

வடிகால் வசதியும், அதிக உரமும் இடப்பட்ட மணல் கலந்த மண் ஏற்றது. வண்டல் மற்றும் மிதமான கரிசல் மண்ணிலும் வளரும். சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ள நிலங்களிலும், நீர் தேங்கக்கூடிய பகுதிகளிலும் நன்கு வளராது.

சீத்தா

மணற்பாங்கான வடிகால் வசதியுள்ள நிலங்கள் ஏற்றவை. வறட்சியை தாக்கு பிடித்து வளர்ந்து மகசூல் கோடுக்கும், ஆடுமாடு கடிக்காது.

பலா

ஆழமான வண்டல் நிங்கள் ஏற்றவை.
காற்றிலே ஈரப்பதமும், வெப்பமான தட்ப வெப்ப நிலையும் ஏற்றவை.

வழகால் வசதி குன்றிய, நீர் மட்டம் மேலாக உள்ள இடங்கள் ஏற்றவையல்ல

சீமை இலந்தை

ஆழமான வேர்ப்பகுதி வளரும் பலதரப்பட்ட மண்ணிலும் வளரும். வறட்சி மற்றும் நீர் தேங்கும் நிலங்களிலும் வளரக் கூடியது.

நெல்லி

குறைந்த அளவு மண் கண்டத்திலும் தாக்குபிடித்து வளரும்,
கார அமில நிலை 7.5- 8.5 விரும்பத்தக்கது. 9.5 பிற பழமரங்கள் வளரமுடியாத நிலையிலும் கூட தாக்கு பிடிக்கும். காற்றிலே ஈரப்பதமான சூழ்;நிலையும், மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களின் உதவியும் அவசியம் தேவை.

தென்னை

ஆழமான, வளமான மண்கண்டம் அவசியம், களிம்பு இல்லாத மணல் கலந்த வண்டல் மிகச் சிறந்தது.