மலைக்க வைக்கும் மலைவேம்பு

மலைக்க வைக்கும் மலைவேம்பு
Agriwiki.in- Learn Share Collaborate

மலைக்க வைக்கும் மலைவேம்பு!

மலை வேம்பு! இன்றைய தேதியில் இந்த மரத்தை அடித்துக்கொள்ள வேறு மரம் இல்லை. இதை விவசாயிகள் பயிரிட்டால் அவர்கள் பணக்காரர்களாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி ஒரு வல்லமை இந்த மரத்துக்கு உண்டு. விதையில்லா இனப்பெருக்கத்தின் மூலம் இந்தக் கன்றுகளை நாங்கள் உற்பத்தி செய்துள்ளோம். இம்மரத்தின் தேவை மிகஅதிகம். பிளைவுட் கம்பெனிகள் இவற்றை வாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கின்றன.

இன்றைய தேதியில் இந்த மரத்தை அடித்துக்கொள்ள வேறு மரம் இல்லை. இதை விவசாயிகள் பயிரிட்டால் அவர்கள் பணக்காரர்களாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி ஒரு வல்லமை இந்த மரத்துக்கு உண்டு.

உவர் மற்றும் களர் நிலத்தைத் தவிர, வடிகால் வசதியுள்ள எந்த நிலத்திலும் வளரக்கூடிய தன்மை படைத்தது இந்த மலைவேம்பு. இந்த மரத்துக்கும் நீர்ப்பாசனம் தேவையில்லை. எந்த வகை மரமாக இருந்தாலும் அது மாதந்தோறும் ஒரு செ.மீ. உயரம் வளர்ந்தால் சிறந்த மரம் என்று சொல்வார்கள். ஆனால், இந்த மலைவேம்புவோ… 2 செ.மீ. வரை வளர்வதால்… சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கிறது.

இந்த மரத்தை வளர்ப்பதிலும் ஒரு புதிய முறையினை புகுத்தியுள்ளேன். நமக்குக் கிடைக்கிற மழையளவு, மிகவும் குறைவு. அதுவும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் வேகமாக கொட்டித் தீர்த்துவிடும். நிலத்தில் விழும் ஒவ்வொரு துளி நீரையும் சேமிப்பதோடு, அதை வைத்தே இந்த மரத்தையும் வளர்க்கலாம் என்பதுதான் திட்டம். இதற்காக 3 மீட்டர் விட்டமும் 30 செ.மீ ஆழமும் கொண்ட டீ (கப்) சாசர் வடிவில் குழி தோண்டினேன். 6 மீட்டர் இடை வெளியில் வரிசையாக இப்படி பள்ளம் தோண்டி, அதன் இரண்டு பக்க கரைகளிலும் எதிரெதிரே இரண்டு மலைவேம்பு கன்றுகளை நடவு செய்தேன். ஒரு குழியில் 1,000 லிட்டர் மழைநீர் தேங்கும். ஏக்கருக்கு மொத்தம் 100 குழிகள் மூலம் மொத்தமாக ஒரு லட்சம் லிட்டர் நீர் சேமிக்கப்பட்டு, செடிகளுக்குக் கிடைக்கும். விதையில்லா இனப்பெ ருக்கம் மூலம் கிடைத்த மலைவேம்பு கன்றுகளை, இந்த முறையில் நடவு செய்தால், ஏக்கருக்கு 200 கன்றுகள் வரைக்கும் நடமுடியும். 6-ம் ஆண்டே மரம் பெருத்து, ஒரு மரம் மூன்றாயிரம் ரூபாய் விலைபோகும். 200 மரங்களுக்கு 6 லட்ச ரூபாய் கிடைக்கும். இது உண்மை. நீங்கள் 24 மணி நேரமும் உழைத்தால் கூட வேறு எந்தப்பயிரிலும் இந்த அளவுக்கு வருமானத்தைப் பார்க்க முடியாது” என்று சொல்லி ஆச்சர்யப் படுத்திய குமாரவேலு,

பெரும்பாலான மரங்கள் மழைநீரை மட்டுமே நம்பி வளர்க்கப்படுபவை. நீர்ப்பாசனம் செய்தால் இன்னும் கூடுதல் லாபம் கிடைக்கும். இத்தகைய மரங்கள் தான் இனி விவசாயிகளை வாழவைக்க போகிறது. அவற்றில் பத்து மரங்களை நான் பட்டியலிட்டு வைத்திருக்கிறேன். மலைவேம்பு, மூங்கில், பீதனக்கன், கடம்பு, குமிழ், கத்திசவுக்கு, வேங்கை, இந்தோனேஷிய சவுக்கு, ஏழிஇலைபாலை, புங்கன் ஆகியவைதான் அந்த பத்து மரங்கள்

”இதையெல்லாம் படித்துவிட்டு மரங்களை மட்டுமே எல்லோரும் பயிர் செய்ய ஆரம்பித் தால், உணவுக்கு என்ன செய்வது… உணவுப் பஞ்சம் வந்துவிடுமே… என்று நீங்கள் நினைக் கலாம். ஆனால், அப்படியெல்லாம் ஏதும் நிகழ்ந்துவிடாது. ஒரு காலத்தில் நம்முடைய முன்னோர்கள் உணவுக்காக பயிரிட்ட கம்பு, கேழ்வரகு, திணை போன்ற சிறுதானியங்கள் எல்லாமே மர நிழலில் வளரும் தன்மை கொண்டவைதான். இப்போது அவற்றைப் பயிர் செய்வது குறைந்துவிட்டது. மரப்பயிர்களுக்கு நடுவே இவற்றைப் பயிரிட்டால் உணவுப் பயிர்கள் கிடைத்துவிடப் போகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நெல்லும், கத்தரிக்காயும் கூட காடுகளில் உள்ள மரத்தின் அடியில்தான் வளர்ந்தன. அதை வெயிலுக்குக் கொண்டு வந்தது நாம்தான். மீண்டும் அவற்றை பழைய இடத்திலே வளர்த்தால் உணவுப் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமிருக்காதே!

பெரும்பாலான மரங்கள் மழைநீரை மட்டுமே நம்பி வளர்க்கப்படுபவை. நீர்ப்பாசனம் செய்தால் இன்னும் கூடுதல் லாபம் கிடைக்கும். இத்தகைய மரங்கள் தான் இனி விவசாயிகளை வாழவைக்க போகிறது. அவற்றில் பத்து மரங்களை நான் பட்டியலிட்டு வைத்திருக்கிறேன். மலைவேம்பு, மூங்கில், பீதனக்கன், கடம்பு, குமிழ், கத்திசவுக்கு, வேங்கை, இந்தோனேஷிய சவுக்கு, ஏழிஇலைபாலை, புங்கன் ஆகியவைதான் அந்த பத்து மரங்கள். தமிழகத்துக்கு மிகவும் ஏற்ற இந்த பத்து மரங்களும் ஜெயிக்கக் கூடிய குதிரைகள் என்பதில் சந்தேகமில்லை. இவற்றைத் தமிழக விவசாயிகள் பயிரிட் டால் மரப்பயிரில் புதிய புரட்சி தொடங்கும்’’ என்று கட்டை விரலை உயர்த்திச் சொன்னவர்,

”எல்லா நிலத்திலும் மரம் வளரும் என்று சொன்னதுமே… பாறையில் கூட வளரும் என்று எண்ணிவிடக்கூடாது. மரப்பயிர்களை வளர்க்க மண்கண்டம் கண்டிப்பாக 6 அடி அளவுக்கு இருக்க வேண்டும். மண்ணே இல்லாத நிலத்தில் எப்படி மரத்தை வளர்க்க முடியும். எனவே நிலத்தையும் முக்கியமாக தேர்ந்தெடுக்கவேண்டும்.

மரக்கன்றுகள் கிடைக்குமா… எந்த மரம்போட்டால் லாபம் என்று வரிசை யாக தொலைபேசியில் விவசாயிகள் கேட்டவண்ணம் உள்ளனர். இப்படிப்பட்ட சந்தேகங்கள் கொண்ட விவசாயிகள் என்னுடைய சென்னை அலுவலகத்துக்கு (கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை-15. தொலைபேசி 044-24323343) கடிதம் எழுதினால் போதும், எல்லாவற் றுக்கும் தெளிவாக பதில் எழுதத் தயார்.

ஸ்ட்ராவில் சவுக்குக்கன்று தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் கடந்த இதழிலும் இந்த இதழிலும் நான் சொல்லியிருக்கிறேன். இவற்றுக்கெல்லாம் காப்புரிமை பெறுவதற்காக பதிவு செய்திருக்கிறேன். எனவே, போலியான வர்களை நம்பி விவசாயிகள் ஏமாற வேண்டாம்.

கட்டுரையைப் படித்ததுமே மரக்கன்று களை வாங்கி நட்டுவிடவேண்டும் என்று எங்களிடமோ… தனியாரிடமோ போய் நிற்கத் தேவையில்லை. ஜூலை மாதத்தில் தான் மலைவேம்பு உள்ளிட்ட அனைத்து வகை கன்றுகளும் வனத்துறையிடம் கிடைக்கும். அது பருவமழை தொடங்கும் காலம் என்பதால், அப்போது நடவு செய்தால்தான் உரிய பலன் கிடைக்கும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. எனவே, அந்த சமயத்தில் வனத்துறையைத் தொடர்பு கொண்டு மரக்கன்றுகளை பெற்று பலனடைலாம்” என்று விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் சொன்ன குமாரவேலு,

”ஒவ்வொரு துளி நீரையும், ஒவ்வொரு பருக்கை மண்ணையும், ஒவ்வொரு சூரியக் கதிரையும் சரியாகப் பயன்படுத்தும் முறையை வளர்த்துக் கொண்டாலே ஒவ்வொருவரும் சாதனை படைக்கும் விவசாயிதான்!” என்று முத்தாய்ப்பாகச் சொல்லி முடித்தார்.

‘மலைவேம்பு இருக்கா மலைவேம்பு!’

-என்றபடி தேடித்தேடி மலைவேம்பு மரத்தை விலைக்கு வாங்கிக் கொண்டி ருக்கிறது ‘யுனிபிளை பிளைவுட்’ நிறுவனம். இந்நிறுவனத்தின் கம்பெனி செகரட்டரி தாஸ் இதைப்பற்றிச் சொல்லும்போது, ‘‘100 செ.மீ. சுற்றளவும், 5 மீட்டர் உயரமும் கொண்ட மலைவேம்பு மரம் ஒன்றுக்கு இன்றைய மதிப்பின்படி மூன்றாயிரம் ரூபாய் கொடுக்கிறோம். நாளுக்கு நாள் மலைவேம்புவின் மதிப்பு கூடிக்கொண்டேதான் இருக்கிறது’’ என்றார்.

மலை வேம்பு மரமானது மெலிசைன் தாவர இனத்தை சேர்ந்தது. இதனுடைய இலைகள், இறகு போன்று நீளமாக இருக்கும்.

• இம்மரம் குளிர்காலத்திலும், வறட்சியான காலத்திலும் சில நேரங்களில் இலைகளை உதிர்க்கும் தன்மையுடையது.

• இம்மரமானது சீனாவிலும், ஆஸ்திரேலியாவிலும், இந்தியாவில் எல்லா இடங்களிலும் பரவலாக காணப்படுகிறது.

• வேகமாக வளரக்கூடிய மரம் ஆகும். குறைந்த அளவு தண்ணீர் போதுமானது.

• ஒரு ஏக்கருக்கு (6×6) 1200 மரங்கள் வரை நடவு செய்யலாம்.

3 – 4 ஆண்டுகளில் 600 மரங்களை அறுவடை செய்து விறகு தேவைக்கு,தீக்குச்சி தயாரிக்க,விறகு எரித்து மின்சாரம் தயாரிக்க மேலும் பேப்பர் கூல் தயாரிக்க பயன்படுத்தினால் கூட (600×1000) ரூ.6 இலட்சம் வருமானம்.

7 – 8 ஆண்டுகளில் அதில் பாதி (300) மரங்களை அறுவடை செய்து (300×6000) ரூ.18 இலட்சம் வருமானம் பெறலாம்.

12 – 14 ஆண்டுகளில் மீதி உள்ள 300 மரங்களை அறுவடை செய்து (300×10000) ரூ. 30 இலட்சம் வருமானம் பெறலாம்.

• மலைவேம்பு இலை, காய், விதை, பட்டை, கோந்து போன்ற அனைத்தும் பலவிதமான நோய் தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டவை.

• மலைவேம்பு மரமானது பாலீஷ் போட நன்றாக இருக்கும். ரீப்பர், சட்டம், பர்னீச்சர்கள், சோபா செட்டுகள், அலமாரிகள்,

ஸோகேஸ்கள் மற்றும் அனைத்து மரச்சாமான்களும் செய்யலாம். விறகு மின்சாரம், தீக்குச்சி தயாரிக்கப்படுகிறது.

• பிளைவுட் கம்பெனிகள் மலைவேம்பு மரத்தினை விரும்பி கேட்கிறார்கள்.

பிளைவுட், பிரஷ்டோர்கள் செய்ய பயன்படுகிறது.

பிளைவுட் கம்பெனியில் பிளைவுட்டின் மேல் இரு பக்கத்திலும் போர்த்தப்பட்டிருக்கும் பார்வை பிளேட்டிற்கும் பயன்படுகிறது.

மற்றும்பேப்பர் மில்களில் மூலப் பொருளாகவும் பயன்படுகிறது.

• 1 டன் மலைவேம்பு மரம் ரூ.7000/- வரை விற்கப்படுகிறது.

• மலைவேம்பு மரம் வளர்ப்பிற்கு மத்திய அரசு 20% மானியம் வழங்குகிறது.

மலைவேம்பு கேள்வி – பதில் :

1. மலைவேம்பு மரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
மிலியா டுபியா என்பது தாவரவியல் பெயர்  (Melia Dubia)

2. மலைவேம்பு மரம் எதற்கு பயன்படுகிறது?
பிளைவுட் தயாரிப்பதற்கும், கனரக வாகனங்களுக்கு பாடி பில்ட்டர் செய்யவும், விறகின் ½ அங்குலம் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுகிறது. பேப்பர் மில்களில் மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. பிளைவுட் கம்பெனியில் பிளைவுட்டின் மேல் போர்த்தப்பட்டிருக்கும் பார்வை பிளேட்டிற்கும் பயன்படுகிறது

3. மலைவேம்பு இந்தியாவை தாயகமாகக் கொண்டதா?
மலைவேம்பு மரத்தின் தாயகம் இந்தியா

4. மலைவேம்பு மரம் எத்தனை ஆண்டுகள் கழித்து பயன்தரும்?
மூன்று முதல் 14 ஆண்டுகள் வரை பயன் தரும்.

5. வேம்புமரம் ஒரு மூலிகை மரமா?
மலைவேம்பு மரம் ஒரு மூலிகை மரமே. மலைவேம்பு மரத்தின் இலை, பூ, காய், பட்டை, கோந்து, வேர் அனைத்தும் மூலிகை வைத்தியத்திற்கு பயன்படுகிறது.

6.ஒரு ஏக்கர் நிலத்தில் எத்தனை மலைவேம்பு மரங்களை நடவு செய்யலாம்?
1 ஏக்கர் நிலத்தில் 530 மரங்களை நடவு செய்யலாம்.
5 வருடம் கழித்து ஒருமரம் விட்டு ஒரு மரத்தை வெட்டி அதில் வருமானம் பெறலாம்.

7. மலைவேம்பு மரம் 1 ஏக்கரில் பயிர் இடும்போது எவ்வளவு இலாபம் கிடைக்கும்?
மலைவேம்பு மரம் அடர் நடவு முறையில் ஒரு ஏக்கருக்கு (6×6) 1200 மரங்கள் வரை நடவு செய்யலாம்.

* 3 – 4 ஆண்டுகளில் 600 மரங்களை அறுவடை செய்து விறகு தேவைக்கு,தீக்குச்சி தயாரிக்க,விறகு எரித்து மின்சாரம் தயாரிக்க மேலும் பேப்பர் கூல் தயாரிக்க பயன்படுத்தினால் கூட (600×1000) ரூ.6 இலட்சம் வருமானம்.

* 7 – 8 ஆண்டுகளில் அதில் பாதி (300) மரங்களை அறுவடை செய்து (300×6000) ரூ.18 இலட்சம் வருமானம் பெறலாம்.

* 12 – 14 ஆண்டுகளில் மீதி உள்ள 300 மரங்களை அறுவடை செய்து (300×10000) ரூ. 30 இலட்சம் வருமானம் பெறலாம்.

8. மலைவேம்பு மரம் எத்தனை அடி உயரம் வரை வளரும்?
மண்ணின் தன்மைக்கேற்ப குறைந்தபட்சம் 35 அடிமுதல் அதிகபட்சம் 60 அடி உயரம் வளரும் தன்மை கொண்டது

9. மலைவேம்பு மரம் வளர்க்கும் நிலத்தின் சந்தன மரத்தை இடைவெளியில் வளர்க்கலாமா?
மலைவேம்பு மரத்தின் வளர்ச்சி விரைவாக உயரச்செல்லக்கூடிய தன்மை கொண்டது.  சந்தனம் மெதுவாக வளரும் தன்மை கொண்டதால் தாராளமாக வளர்க்கலாம்.

10. மலைவேம்பு மரத்திற்கு அரசு மானியம் உண்டா?
மத்திய அரசு மூலிகை மர மானியம் ½ முதல் 20% கொடுக்கிறது.

11. மானாவாரி நிலத்தில் மலைவேம்பு மரம் வளருமா?
மானாவாரி நிலத்தில் மலைவேம்பு மரம் வளரக்கூடிய தன்மை கொண்டது.

12. மலைவேம்பு நட்ட தோட்டத்தில் ஊடுபயிர்கள் மற்றும் ஊடுமரம் வளர்க்கலமா?
வாழை, செடி வகைகள், கீரை வகைகள், மூலிகை செடி வகைகள், தானிய வகைகள், காய்கறி வகைகள் போன்றவற்றை மலைவேம்பு நட்ட தோட்டத்தில் 3 – 4 வருடங்களுக்கு ஊடு பயிர் செய்து கொள்ளலாம். சந்தனம்,அகர் மரங்களை ஊடுமரமாக வளர்க்கலாம்.

13. மலைவேம்பு மரத்தில்(டூப்ளிக்கெட்) துலக்க வேம்பு மரம் என்ற ரகம் உள்ளதா?
டூப்ளிகெட் மலைவேம்பு மரம் என்ற ரகம் உள்ளது. அது அதிகம் வளராது. 3 ஆண்டுகளுக்கு மேல் வளர்ச்சி நின்று போய்விடும்.

14. மலைவேம்பு மரத்தின் பக்க கிளைகள் வளருமா?
மலைவேம்பு மரத்தில் 6 – 8 அடிக்கு மேல் வளரும்போது பக்க கிளைகள் வளரும்.

15. மலைவேம்பு மரத்தில் நோய் தாக்கம் இருக்குமா?
மலைவேம்பிற்கு நோய் அதிகம் வருவதில்லை. சிறிய இருக்கும்போது வெட்டுக்கிளிகள் சேதப்படுத்துகிறது. சில இடங்களில் வேர் அழுகல் நோய் ஏற்படுகிறது.

16. எவ்வளவு ஆழம் குழி எடுத்து நடவு செய்ய வேண்டும்?
மண் தன்மையானது ஆழமாக உள்ள நிலத்தில் 1.5*1.5*1.5 அடி நீளம், அகலம், ஆழ குழி எடுத்தும் மண் தன்மை குறைவாக உள்ள இடங்களில் 2*2*2 அடி நீளம், அகலம், குழி எடுத்து நடவு செய்யலாம்.

17.மலைவேம்பு மரத்தின் ஆயுட்காலம் எவ்வளவு?
மலைவேம்பு மரத்தின் ஆயுட்காலம் 40/50 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது.