மாவுப்பூச்சி கட்டுப்படுத்த எளிய முறை

மாவுப்பூச்சி கட்டுப்படுத்த எளிய முறை
Agriwiki.in- Learn Share Collaborate
மாவுப்பூச்சி கட்டுப்பாடு

இன்றைக்கு விவசாயிகளுக்கு மிகவும் வேதனைக்கு உள்ளாக்குவது மாவு பூச்சி பிரச்சனை.. இதற்கு ஒரு எளிய தீர்வை முன்னோடி விவசாயி திரு மேட்டுப்பாளையம் நவநீத கிருஷ்ணன் அவர்கள் கூறியதை பகிர்கிறேன்
ஒரு ஏக்கருக்கு 100 லிட்டருக்கு ஆன அளவு.
வெல்லம் 5 kg
புகையிலை தூள் 500 gram
வெல்லத்தை தண்ணீரில் கரைத்து 7 நாட்கள் புளிக்க வைத்து பின் அதனுடன் புகையிலை தூள் கஷாயம் கலந்து தெளித்தால் மாவு பூச்சி கட்டுப்படும்.
புகையிலை தூளை 3 நாட்கள் 1 liter தண்ணீரில் ஊறவைத்து பின் அம்மியில் அரைத்து மீண்டும் ஊறவைத்த நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி கஷாயம் தயார் செய்து கொள்ளவேண்டும்
8ம் நாளில் இவை இரண்டையும் கலந்து செடிகள் மீது நன்றாக படும்படி தெளிக்க வேண்டும்..
இந்த கலவை மாவு பூச்சிகள் மீது நன்றாக படும்படி தெளித்தால்.. மாவு பூச்சிகள் கட்டுப்படும்..
ஒரு முறை அடித்து பின் ஒரு வாரம் கழித்து ஒரு முறை மீண்டும் தெளிக்கும் போது மாவு பூச்சி பிரச்சனை கட்டுக்குள் வரும் . நன்றி
லோ. ஜெயக்குமார்
மறைமலை நகர்.
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.