Month: January 2018

தென்னை ஈரியோபிட் கரையான்

தென்னை ஈரியோபிட் கரையான் coconut tree
தென்னை ஈரியோபிட் கரையான்:

 

அறிகுறிகள்:

முக்கோண வடிவ மஞ்சள் நிறத் திட்டுக்கள் காய்களின் கழுத்துப் பகுதியில் காணப்படும்.

காய்ந்த திசுக்கள் பழுப்பு நிற திட்டுக்கள், நீளவாக்கில் பிளவுகள், நார்ப்பகுதியில் வெட்டுப்பட்டிருக்கும்.

தாக்கப்பட்ட பகுதியிலிருந்து பிசின் போன்று திரவம் வடிதல் கொப்பரையின் அளவு குறைந்து காணப்படும்.

உருமாறிய காய்கள் பிளவுகளுடன், கெட்டியான நார்களுடன் காணப்படும்.

பூச்சியின் விபரம் :

இளம் பூச்சி மற்றும் பூச்சி – நீளமான உடலுடன் இளம் மஞ்சள் நிறத்தில் புழு போன்ற தோற்றத்துடன் காணப்படும்.

இதன் பாதிப்பு தவிர்க்க வை உப்பு கலந்து மஞ்சள் தூள் கலந்து
மரத்தின் மேலே வைக்கிறார்கள்​

செவ்வாழை பயிரிட்டு சிறப்படைய சில வழிமுறைகள்

செவ்வாழை பயிரிட்டு சிறப்படைய சில வழிமுறைகள்
செவ்வாழை பயிரிட்டு சிறப்படைய சில வழிமுறைகள்!

ஈஷா விவசாயக்குழு கோபி செட்டிப்பாளையம் அருகில் TN பாளையத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி திரு.ஆறுமுகம் அவர்களை அவரது பண்ணையில் சந்தித்தது. குறைந்த நிலத்தில் வாழையையும் மஞ்சளையும் நிறைவான வகையில் இயற்கை விவசாயம் செய்துவருகிறார். அவரது அனுபவங்களும், ஆலோசனைகளும் உங்களுக்காக!

நீங்கள் எவ்வளவு வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறீர்கள்?

வணக்கம், திண்டுக்கல்லில் 2007ம் வருடம் நடைபெற்ற சுபாஷ் பாலேக்கர் ஐயா அவர்களின் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயப் பயிற்சியில் கலந்து கொண்டேன், அதன் பின் படிப்படியாக இயற்கை விவசாயத்திற்கு மாறினேன்.

இயற்கை விவசாயத்தின் மேல் தங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?

நான் இரசாயன விவசாயம் செய்துவந்த போது, விவசாயிகள் அனைவரும் கண்டிப்பாக இயற்கை விவசாயத்திற்கு மாறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை உணரமுடிந்தது, படிப்படியாக இந்த எண்ணம் வலுப்பெற்று இயற்கை விவசாயத்திற்கு மாறினேன். இதை ஒவ்வொரு விவசாயியும் உணர்ந்து இயற்கைக்கு மாறவேண்டிய அத்தியாவசியம் தற்போதுதான் அனைவருக்கும் புரியவந்துள்ளது.

பசுமைபுரட்சியில் சாதனை படைத்த மாநிலம் பஞ்சாப், ஆனால் தற்போது பஞ்சாப் விவசாயிகள் மைராடா பயிற்சி மையத்திற்கு வந்து இயற்கை விவசாயம் கற்று வருகின்றனர். அவர்கள் ஒருமுறை என்னிடம் பேசியபோது, மண் எந்த அளவு கெட்டுப்போயுள்ளது என்பதை புரிந்துகொள்ளமுடிந்தது.

“எங்கள் வயல்களில் இரசாயன உரம் போட்டு போட்டு உப்பு படிந்து விட்டது, அந்த உப்பை நீக்காமல் விவசாயமே செய்ய முடியவில்லை. நிலத்தில் இருந்து நான்கு அங்குல ஆழத்திற்கு மேல் மண்ணை வெளியில் எடுத்துப் போட்டுவிட்டுதான் தற்போது விவசாயம் செய்யமுடிகிறது” என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

மண் தாய் என்றால், அதில் மடி போன்றது மேல் மண்; அந்த மேல் மண்ணில் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகியுள்ளது. இப்படிப்பட்ட அவலமான சூழ்நிலையை நோக்கித்தான் விவசாயம் சென்றுகொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட விஷயங்களை எல்லாம் கேள்விப்படும் போது, இந்த நிலை எல்லா மாநிலத்துக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற உணர்வும், இருப்பதையாவது காத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும், இயற்கை விவசாயத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலும் ஏற்படுகிறது.

பொன்ன காப்பாத்துனா வீடு செழிக்கும்; மண்ண காப்பாத்துனா நாடு செழிக்கும்னு என்ற ஊர்ல ஒரு சொலவட சொல்லுவாங்கோ! அதைய தானுங்க நம்ம ஆறுமுகம் அண்ணா சொல்ல வர்றாப்டி! இந்த கள்ளிப்பட்டி கலைவாணி கூட இயற்கை விவசாயத்தோட அவசியத்த செரியா புரிஞ்சுகிட்டு, இப்போ ஒட்டுக்க அல்லா நெலத்துலயும் இயற்கை விவசாயத்த செய்யுறேனுங்க!

தற்போது என்னென்ன சாகுபடி செய்து வருகிறீர்கள்?

நான் வழையையும் மஞ்சளையும்தான் சாகுபடி செய்துவருகிறேன், அதிலும் முக்கியமா செவ்வாழையைத்தான் பயிர் செய்கிறேன். இந்த வருஷம் ஒரு ஏக்கரில் செவ்வாழை இருக்கு, 10 மாதப்பயிர் அதில் ஊடுபயிரா மஞ்சள் போட்டிருக்கேன், மற்றொரு ஏக்கரில் செவ்வாழை நட்டு 4 மாதம் ஆகிறது, அதில் தட்டைப்பயிரை ஊடுபயிரா போட்டிருக்கேன். வாழை நடவு செய்யும்போது சிறிய கன்றுகள் மற்றும் பெரிய கன்றுகள் என பிரித்து தனித்தனியாக நடுவேன், இதனால் கன்றுகளின் வளர்ச்சி ஒரே சீராக இருக்கும்.

வாழையில் மூடாக்கு மற்றும் உயிர் மூடாக்கு எப்படிச் செய்வது?

வாழையில் களைகளை கட்டுப்படுத்த மூடாக்கு அவசியம், வாழையில் தட்டைப்பயிரை ஊடுபயிராக போடுவது நல்லது, வாழைக்கட்டை நடும் போதே தட்டை பயிரைத் தூவிவிடவேண்டும். தட்டைப்பயிர் வேகமா வளர்ந்து நல்லா மண்ணை மூடிக்கும், சூரிய வெளிச்சம் மண்ணில் படாத அளவு மண்ணை மூடிடும். தட்டைபயிரை சில நேரம் காய்ப்புக்கும் விடுவேன், சிலநேரம் பூப்பதற்கு முன்பே மடக்கி உழுதும் விடுவேன்.

உளுந்து, பாசிப்பயிரையும் ஊடுபயிரா போடுவாங்க ஆனா உளுந்தும் பாசிப்பயிரும் வேகமா வளர்ந்து மண்ணை மூடாது, அதனால் களைகள் அதிகமா வளர்ந்துடும். எனக்குத் தேவைப்பட்டால் பக்கத்தில் உள்ள பண்ணைகளில் கிடைக்கும் சோளத்தட்டையையும் மூடாக்காக போடுவேன். மஞ்சள் இல்லாதபோது பாகல், பீர்க்கன் போன்றவையும் விதைத்து விடுவேன். உயிர் மூடாக்காக மண்ணை போர்த்துவதோடு கனிசமான காய்கறிகளும் கிடைக்கும்.

அட சாமி… அண்ணா ரொம்ப வெகராமத்தா மூடாக்கு போடுறாப்புடி பாருங்கோ! நம்ம ஊர்ல ரொம்ப விவசாயிக நெலத்துல பயிர்களுக்கு பக்கத்தாப்புல ஒரு செடிகூட இருக்க கூடாதுன்னு களையெடுக்க ஆள் போட்டு, ரொம்ப செலவழிப்பாங்கல்லீங்கோ! ஆனா… அதெல்லாங் வேஸ்ட்டுங்கோ! பயிர்களுக்கு பக்கத்தாப்புல இப்புடி ஊடுபயிரா மூடாக்கு போடுறது இயற்கை விவசாயத்துல ஒரு தொழிற்நுட்பமுங்க!

மூடாக்கு போடும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

மூடாக்கு போடுவது எந்த அளவு அவசியமோ, அந்த அளவுக்கு முக்கியம் மூடாக்கை சரியான முறையில் பராமரிப்பது. மூடாக்கு இட்ட நிலத்திற்கு கண்டிப்பாக வடிகால் வசதி இருக்க வேண்டும். நிலத்தில் தண்ணீர் கோர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சரியான அளவு இருக்கும் போது மட்டும்தான் அளவான ஈரப்பதம், நல்ல காற்றோட்டம் மற்றும் மண்ணில் பொலபொலப்புத் தன்மை ஏற்பட்டு வாப்சா என்ற நிலை உருவாகி இருக்கும்.

மண்ணில் இயற்கை விவசாயம் ஏற்படுத்திய மாற்றம்…

கடந்த எட்டு வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருவதால் எனது நிலத்தில் மண் வளமாக மாறியுள்ளது. இதை நேரடியாகவே நீங்கள் பார்க்கலாம். இப்படிப்பட்ட சூழலை இயற்கை விவசாயப் பண்ணைகளில் மட்டுமே காணமுடியும்” என்று நிலத்தை எங்களுக்கு காட்டினார்.

வாழைத் தோப்பில் உள்ள மூடாக்கை கரையான்கள் தின்று கொண்டிருந்ததையும், அதனால் ஏற்பட்ட துளைகளினால் மண்ணுக்கு நல்ல காற்றோட்டம் ஏற்பட்டிருப்பதையும் காணமுடிந்தது. உச்சிவெய்யில் நேரத்திலும் மண்ணை தோண்டிப் பார்த்ததில், மண் மிக குளிர்ச்சியாக இருந்தது. மண்ணை கையில் எடுத்து பார்க்கும்போது மண்புழுக்கள் துளையிட்டதற்காக அடையாளங்கள் நன்றாகத் தெரிந்தன, மேலும் மண் பொறுபொறுப்புத் தன்மையுடன் குருணை குருணையாக இருந்தது.

இப்போ மனுசங்களோட மனசு இறுக்கமாகிப் போனதுமாறிய அவங்க நெலமும் இரசாயன உரங்களால இறுகிப்போச்சுதுங்க! ஆனா… உண்மையில மண்ணுன்னா நல்லா நம்ம ஆத்தா கடையில இருக்குற பச்சரிசி புட்டு மாதிரி பொல பொலன்னு இருக்கோனுமுங்க! அதுக்கு மண்ணுல மண்புழு அவசியமுங்க. ஆனா… இரசாயன உரம்போட்டா மண்புழு இருக்காதுங்க!

இடுபொருட்கள் என்னென்ன பயன் படுத்துகிறீர்கள்?

இடுபொருட்கள் என்று சொன்னவுடன் ஒரு விஷயத்தை நான் சொல்ல விரும்புகிறேன். எந்த இடுபொருளைச் செய்தாலும் அதன் தயாரிப்பு முறையும் அதை பாதுகாக்கும் முறையும் மிக அவசியம். பாலேக்கர் ஐயா இடுபொருள் தயாரிப்பை எவ்விதம் செய்யச் சொன்னாரோ அதை விட ஒரு பங்கு மேலாகவும் தூய்மையாகவும் செய்ய வேண்டும், அந்த கவனம் இருந்தால்தான் இடுபொருட்கள் நன்றாக வேலை செய்யும்.

உதாரணமாக ஜீவாமிர்த தொட்டியை வெய்யிலில் வைத்துவிடுவது, பழைய சாணத்தை பயன்படுத்துவது, தினந்தோறும் காலை மாலை கலக்கிவிடாமல் அப்படியே விட்டுவிடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அந்த வகையில் புதிய விவசாயிகள், ஈஷா விவசாய இயக்கம் தற்போது நடத்திவரும் இடுபொருள் தயாரிப்புப் பயிற்சியில் கலந்து கொள்வது மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த பயிற்சியினால் விவசாயிகள் சரியான தயாரிப்பு முறைகளைத் தெரிந்து கொள்கின்றனர்.

மஞ்சள் விதை கிழங்கை பீஜாமிர்தம் நனைத்து நடுவேன், 8 நாளுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம் தருகிறேன், பெரும்பாலும் ஜீவாமிர்தம் தயாரிக்க பழைய கோமியத்தைதான் பயன்படுத்துகிறேன். அதிகப்படியாக கிடைக்கும் கோமியத்தை தனித்தனியாக சேமித்து வைத்துள்ளேன். ஒரு வருடம் பழையதான கோமியம் கூட என்னிடம் இருக்கிறது. ஒரு விவசாயிக்கு அவரது மாட்டை நன்றாகப் பராமரிக்கத் தெரிந்திருக்க வேண்டும், இந்த தன்மை இயற்கை விவசாயத்திற்கு மிகவும் அவசியமானது.

ஐயோ சாமி… என்ன அருமையா சொல்றாப்டி நம்ம ஆறுமுகம் அண்ணா பாருங்கோ! என்ற ஊர்ல பெரிய வூட்டு ஆத்தா, மாடு மேய்க்காம கெட்டது; பயிரு பாக்காம கெட்டதுன்னு ஒரு பழமொழிய அடிக்கடி சொல்லுவாப்டிங்கோ! இயற்கை விவசாயமானாலும் விவசாயிக பக்குவமா பாத்தாதானுங்க அதுக்கான பலன் கிடைக்கும். அதைய தானுங்க அண்ணா சொல்றாப்டி.

இறுதியாக நம்மிடம் பகிர்ந்து கொண்டவை…

எனது பண்ணைக்கு மாணவ மாணவிகள் அவ்வப்போது வந்து பயிற்சி பெற்று செல்கின்றனர். மாணவச்செல்வங்களுக்கும் விவசாயிகளுக்கும் இயற்கை விவசாயத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம்.

இதற்காக அனுபவ விவசாயிகளை பயிற்றுனராக நியமித்து, அவர்களுக்கு பயிற்சிகள் அளித்து சேனாதிபதியாக மாற்றவேண்டும், அவர்கள் மூலம் இரசாயன விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொழில் நுட்பத்தையும் கற்றுத்தர வேண்டும், என்று அவரது விருப்பத்தையும் தெரிவித்தார்.

ஆறுமுகம் ஐயாவின் ஆர்வத்திற்கும் நல்லெண்ணத்திற்கும் ஈஷா விவசாய இயக்கம் சார்பாக வணக்கங்களைக் கூறிக்கொண்டு விடைபெற்றோம்.

தொகுப்பு
ஈஷா விவசாய இயக்கம்

ஊட்டஉரம்

ஊட்டஉரம் compost

நுண்ணுயிரிகளின் பெருக்கம் சிறப்பாய் இருக்க வயலுக்கு ஊட்ட உரம்

வணக்கம்,
1 ஏக்கருக்கு 100 கிலோ மட்கிய தொழுவுரம் அல்லது ஆட்டுசாணத்துடன்
மீன்அமிலம் – 1லிட்டர்
இஎம் – 500 மில்லி
கோமியம் – 10 லிட்டர்
பயறு மாவு – 2 கிலோ
பழக்கரைசல் – 2 லிட்டர்
வெல்லம் – 2 கிலோ
பஞ்சகவ்யா – 1 லிட்டர்
அசோஸ்பைரில்லம் – 1 கிலோ
சூடோமோனஸ் – 500 கிராம்
கடலைபுண்ணாக்கு -10 கிலோ
புங்கன் புண்ணாக்கு – 10 கிலோ
ஆமணக்கு புண்ணாக்கு – 10 கிலோ.

நிழல்பாங்கான இடத்தில் கீழே தார் பாய் அல்லது பிளாஸ்டிக் ஷீட் விரித்து, அதன் முதல் அடுக்கு எரு போட்டு அதன் மேல் மேலே உள்ள இடுபொருட்களை போட்டு மீண்டும் எரு வை மேலே போட்டு தண்ணீர் தெளித்து மீண்டும் அடுத்த லேயர் எரு மற்றும் இடுபொருட்கள் போட்டு தண்ணீர் தெளித்து, மேலே தார்பாய் போட்டு முழுவதுமாக நன்றாக மூடிவைக்க வேண்டும்.

6ம்நாள் தார்பாயை எடுத்து மீண்டும் தண்ணீர் தெளித்து மண்வெட்டி கொண்டு மேலும், கீழுமாக நன்கு கலந்து மீண்டும் மூடி வைத்து, மறுநாள் காலை அல்லது மாலை வேளையில், வேப்பம் புண்ணாக்கு- 10 கிலோ கலந்து வயலுக்கு தூவி விடவும்.

ஊட்டஉரம் வயலுக்கு இடும் போது வயலில் ஈரப்பதம் கண்டிப்பாக இருக்கவேண்டும். அப்பொழுது தான் நுண்ணுயிரிகளின் பெருக்கம் சிறப்பாய் இருக்கும்.

 

பருவமழை நமக்கில்லை ஏன்?

பருவமழை நமக்கில்லை ஏன்?நம்மாழ்வார் nammalvar
பருவமழை நமக்கில்லை ஏன்?

 

1987-ல் இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன். அங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். சுற்றுச்சூழல் கழகத்தினுடைய தலைவர் அவர். அவர் என்னிடம் “இனிமேல் உங்கள் நாட்டில் பருவ மழையே பெய்யாதென்று” சொன்னார். இதை அவர் 1987-ல் சொன்னார்.

ஏன் என்று நான் கேட்டதற்கு, “உங்களுடைய மேற்குத் தொடர்ச்சி மலை 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதில் 300 அடி உயரத்திற்கு மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அது அரபிக் கடலிலிருந்து வருகின்ற ஈரக் காற்றையெல்லாம் மேகமாக மாற்றி, மழையாக மாற்றி கீழே இறக்குகிறது. அந்த மழை நீரை பூமியில் இறக்கி பிறகு ஆற்றில் நீராக ஓடுகிறது. அந்த மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிவிட்டு, இடுப்பளவு உயரமுள்ள “டீ” தோட்டம் போட்டு விட்டீர்கள். இன்னமும் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இன்னமும் குறையவே இல்லை அது.

அதற்குப் பிறகு முழங்கால் உயரத்திற்கு உருளைக்கிழங்கு செடிகளை நடுகிறீர்கள். ஒரு ஜான் உயரத்திற்கு முட்டைக்கோஸ், காலிஃபிளவர் எல்லாம் பயிர் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனுடைய விளைவு அரபிக்கடலிலிருந்து வரக் கூடிய ஈரக் காற்றை மேகமாக மாற்ற முடியவில்லை. மழையாக மாற்ற முடியவில்லை. அப்படியே தப்பித் தவறி மழை பெய்து ஓடுகின்ற தண்ணீரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆகவே எங்குப் பார்த்தாலும் வெள்ளம்.

ஆக, இனி உங்களுக்கு புயல் மழைதான் வரும். பருவ மழை வருவதற்கு வாய்ப்பில்லை” என்று சொன்னார் அவர்.

அவர் சொன்ன அன்றிலிருந்து தொடர்ந்து உற்றுக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். அதே தான் நடந்து கொண்டிருக்கிறது. நான் போகின்ற அத்தனை கூட்டங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் எழுதும் அத்தனை கட்டுரைகளிலும் எழுதி கொண்டுதான் இருக்கின்றேன்.

யாராவது இதை வாசித்து உணர மாட்டார்களா? தவறைத் திருத்திக் கொள்ள மாட்டார்களா? என்று. ஆனால் யாரும் யோசித்த மாதிரி தெரியவில்லை. தொடர்ந்து காடு அழிக்கப்படுகின்ற செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது.

நம்மாழ்வார்

கறவை மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரிக்க இயற்கையான வழிகள்

To increase milk production in cattle

To increase milk production in cattle : கறவை மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரிக்க இயற்கையான வழிகள்:

🐄 கறவை மாடுகளுக்கு கன்று ஈன்ற 35 நாள் முதல் 45நாட்களுக்குள் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும் . ஏன் என்றால் கறவை மாடுகளுக்கு வயிற்றில் உள்ள புழுக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் முட்டைகள் வெளியேறிய பின்னர் மாடுகள் நன்றாக தீவனம் எடுக்கும் . மாடுகள் உட்கொண்ட தீவனம் முழுமையாக செரிமானமாகும்.

Continue reading

சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி

fig8walking

சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி !

எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை;

எட்டு வடிவ நடைப்பயிற்சி :

தினமும் 15 முதல் 30 நிமிடம் வரை ஒன்று (அ) இருவேளை செய்தால் போதுமானது.காலை நேரத்திலோ அல்லது நேரம் கிடைக்கும் போதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவெளியிலோ, கிழக்கு மேற்காக கோடு வரைந்து அதேபோல் 10 அடி விட்டு கோடுகளை வரைந்து அதற்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யவேண்டும்.

(இருசக்கர மோட்டார் வாகனம் பழகுவோர் செய்தல் போன்று).

இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும்.
15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம்.
பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.

பயன்கள் :

இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம்.

70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்..சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும்.

குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி மலச்சிக்கல் தீரும்.
முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாட்யின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது.

செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது.
உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.

காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும்.

அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தப் குறைக்கப்படுகிறது.

இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.

முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.

நண்பர்களும் பயிற்சி செய்து ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்களை்.
இயற்கை உணவின் அதிசயம் ஆரோக்கிய வாழ்வின் ரகசியம்.