Month: November 2018

சாப்பாட்டுத்தட்டை நிரப்பும் மிகச்சிறந்த இரகம்

சாப்பாட்டுத்தட்டை நிரப்பும் மிகச்சிறந்த இரகம்

எப்போதாவது நடக்கும் அதிசயம் இப்போது நடந்துள்ளதாக கருதுகிறேன்

என்னதான் விவசாய புதிய இரக கண்டுபிடிப்புகளை கிண்டலடித்தாலும் அரிதிலும் அரிதாக நெல்லில் ஐ..ஆர்.20,பபட்லா 5204,பருத்தியில் எம்சி.யூ.5 ஆகிய இரகங்கள் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் ஜல்லிகட்டு காளைகளாக களத்தில் நின்றன.
.
தற்போது தோட்டி முதல் தொண்டைமான்களின் குடும்பத்தினர் தினசரி சாப்பிடும் அரிசி பொன்னி என்றே சொன்னாலும் அவை 1986-ல் அதாவது முப்பது ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டு அவ்வப்போது புதிய கலையத்தில் வைக்கப்படும் கள்ளாகவே இருக்கும் ஆந்திராபொன்னிமட்டுமே..

Continue reading

வானக நண்பர்களுக்கு வணக்கம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வானகம் சிறிது சிறிதாக தன் இயல்பு நிலைக்கு திருப்பி வருகிறது.

வானகத்தின் செயல்பாடுகள் அனைவரும் அறிந்ததே. வானகம் தனக்கென தனியான எந்தவித நிதி ஆதாரத்தையும் கையில் வைத்துக்கொண்டு செயல்படவில்லை. வானகத்தின் செயல்பாடுகள் அனைத்தும் நடைபெறும் பயிற்சிகள் மூலமாக கிடைக்கப்பெறும் நிதியில் இருந்தும், அய்யா நம்மாழ்வாரின் புத்தக்கங்களை வானகமே பதிப்பித்து வெளியிடு செய்வது மூலமாகவும் மற்றும் வானகத்தின் நண்பர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் உதவியில் இருந்தும் பணிகளை செய்து வருகிறது.
அவ்வாறு கிடைக்கபெற்ற நிதியில் அய்யா நம்மாழ்வார் அவர்களின் பிறந்த நாள் விழா, நினைவு நாள் நிகழ்ச்சி, வானக ஊழியர்களின் ஊதியம்,தன்னாலர்களுக்கான உணவு, பயிற்றுனர்களுக்கான ஊதியம்,மின்சாரம், அலைபேசி, கால்நடை பராமரிப்பு, மற்றும் அலுவலக நானாவித செலவுகளையும் செய்தது போக மீதமுள்ள நிதியை பயன்படுத்தி வானகத்தில் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் பண்ணை விரிவாக்கம் செய்து வருகிறது.

அப்படி உருவாக்கபட்ட உள்கட்டமைப்புகளில் கஜா புயல் ஏற்படுத்திய சேத விவரம்.

Continue reading

கஜா புயல் பேரழிவுக்கு உண்மையான காரணம் பனைமரங்கள் வெட்டப்பட்டதே

சுனாமி, புயல் காற்று வரும் போது அரணாக இருந்து தடுத்து நிறுத்தக் கூடிய வலிமை பனை மரத்துக்கு உண்டு. தானே  புயலாலும் சரி. கஜா புயலாலும் பனை மரத்தை வீழ்த்த முடியவில்லை

Continue reading

தற்சார்பு விவசாயி-10 ஆற்றல் தற்சார்பு

ஆற்றல் தற்சார்பு-flatbed fresnel

சிறு குறு விவசாயி ஆற்றல் தற்சார்பு குறித்து எவ்வளவு சிந்தித்தாலும், நாட்டில் நடக்கும் நல்லது கேட்டதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். நாம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயையும் வீணாகி விடக்கூடாது. இலவச கரண்டை பிடுங்க போகிறார்கள். மின்சார உற்பத்தியை இஷ்டத்துக்கு நிறுத்துகிறார்கள். வீட்டு மின்சாரம் மட்டுமே ஆயிரக்கணக்கில் ஆகிறது. மீட்டருக்கு மேலே என்னென்னவோ சார்ஜ் போடுகிறார்கள். அதற்கும் மேலே பலவகையான வரி.
இந்தியாவின் தற்போதைய ஹைட்ரோகார்பன் நிலையை ஒரு சில வரிகளில் பார்ப்போம்.

Continue reading

பல்லுயிர் பண்ணைகள் மட்டும்தான் தீர்வு

கஜா புயல் வந்தவேகத்தில் கடந்து சென்றுவிட்டது. நல்லவேளை மழை வெள்ளம் இல்லை. ஆனால் கட்டுக்கடங்காத வேகத்தில் காற்று வழித்துவிட்டுள்ளது. தொலைதூரத்திலிருந்து கொண்டு குவியும் பதிவுகளை பார்த்து எப்போதும்போல கையறு நிலையில் அமர்ந்திருக்கிறோம். நம்மை சுற்றியுள்ள வடக்கிந்தியர்களுக்கு, ஏன் தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் உள்ள என் நண்பனுக்கே எதுவும் தெரியவில்லை. அவரவர் வேலையாக உள்ளார்கள்.

Continue reading

மண் வீடு version 2.0

மண் வீடு version 2.0 mannveedu20

மண்ணுல வீடுன உடனே ஒழுகிகிட்டு, தூசி அண்டிக்கிட்டு,கதவு ஜன்னல் அழகா இல்லாம,ஓதம் அடிச்சிக்கிட்டு இருக்குமே அந்த மண் வீடுனு நெனச்சியா…

Continue reading