Month: June 2019

இயற்கை களைக்கொல்லி தயார்

களைகள் மண்டிய நிலத்துக்கு இயற்கை களைக்கொல்லி

ரசாயன களைக்கொல்லிகளை பயன்படுத்துவதால் மண் மலடாவதுடன்,மனித உடலும் மலடாகிவிடுகிறது..இதற்கு தீர்வான இயற்கை களைக்கொல்லி தயார்.
ஒரே கல்லில் எக்கச்சக்கமான
மாங்காய் ங்க..!

நீண்ட பரிசோதனைக்கு பிறகு வெற்றி ..

இது விவசாயிகளுக்கு வரபிரசாதம் என்றுகூட சொல்லலாம்..

ரசாயன களைக்கொல்லிகளை பயன்படுத்துவதால் மண் மலடாவதுடன்,
மனித உடலும் மலடாகிவிடுகிறது..

இதற்கு தீர்வுதான் என்ன என்று யோசித்தேன்..

முகநூலில் பல நண்பர்கள் மாட்டு கோமியம் தெளித்தால் களைச்செடி கருகி விடுகிறது என்று கூறினர்..

முயற்சித்தேன் களைமுளைவிடும் போது..

ஆனால் பலனலிக்கவில்லை..

சரி வெறும் கோமியம் மட்டும் தெளித்தால்
களை கருகாது என்று சிறிது கல் உப்பை சேர்த்தேன்..

களை கருகவில்லை..

எலுமிச்சபழத்தை சேர்த்தேன் பலனில்லை..

இதனுடன் வேப்பெண்ணெய் சேர்த்தேன் களைச்செடி கருகியது..

சரி என்று கடந்த மாதம் எனது வாழை காட்டில் தெளித்து பார்த்தேன்.

களைச்செடி கருகி வாழை கருகரு என்று வளர்ந்தது..

சரி இனி நாம் சின்ன டிராக்டரை விட்டு களைச்செடிகளை அழிக்க தேவை இல்லை என்று முடிவு செய்தேன்..

என்னிடம் இருப்பது இரண்டு நாட்டு மாடு..

பயிருக்கு உரத்தேவையை இந்த இரண்டு மாடுகளே பூர்த்தி செய்கிறது.

இது சராசரியாக தினமும் பத்து லிட்டர் கோமியம் கிடைப்பதே சிரமமாக இருந்தது
(12 மணி நேரத்தில்)

ஆனால் களைக்கொல்லிக்கு நாம் இந்த கோமியத்தை பயன்படுத்தினால் வாழைக்கு நீருடன் கலந்து விட பற்றாகுறை ஆகிவிடுமே என்று யோசித்தேன்..

தீவிரமாக யோசித்தேன்..

ஒரு யோசனை வந்தது..

நாம் ஏன் இந்த
வாழையின் பக்க கன்றுகளையும்,
வாழை பூவையும் மாட்டுக்கு போட்டால்
கோமியம் அதிகமாக கிடைக்குமே என்று ..

வீணாகப்  போன பக்க கற்றுகளையும் வாழை பூவையும் மாட்டிற்கு போட்டேன் ..

கைமேல் பலன் கிடைத்தது.

சராசரியாக நாள் ஒன்றிற்கு இருபது லிட்டர் கோமியம் கிடைத்தது இரண்டு மாடுகளிடமிருந்து..

அப்படியே சேகரித்தேன் ஒரு மாதம்..

நானூறு லிட்டர் கோமியம் கிடைத்தது..

நிம்மதி பெருமூச்சு விட்டேன்..

செய்முறை விளக்கம்..
************************

நீர்கலக்காத மாட்டு கோமியம் ஒரு குடம் (பத்து லிட்டர்) ஒருமாத காலம் ஆகியிருந்தால் இன்னும் சிறப்பு..

முளைத்த களைச்செடியாக இருந்தால் ஒரு கிலோ கல் உப்பு ..

களைச்செடிகள் வளர்ந்திருந்தால் இரண்டு கிலோ கல் உப்பை பத்து லிட்டர் கோமியத்தில் போட்டு நன்றாக கலக்கவும்..

பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும்..

அதனுடன் வேப்ப எண்ணை நூறு மில்லியை
இதனுடன் ஊற்றி கலக்கவும்..

பிறகு வடிகட்டி கைத்தெளிப்பானில் களைச்செடிகள் மீது தெளிக்கவும்..
(பயிருக்கு படாமல்)

அடுத்த இரண்டு நாட்களில் அனைத்து களைச்செடிகளும் கருகிவிடும் பார்த்தீனிய உட்பட கோரை, அறுகம்புல் தவிர..

இந்த களைக்கொல்லி பயிருக்கு எந்த தீங்கும்
தருவதில்லை,

காரணம் கோமியம் பயிர் வளர்ச்சிக்கு உகந்ததது..

வேப்ப எண்ணை தொடர்ந்து பயன்படுத்தினால் கோரை கிழங்கு கூட அழிந்து விடும்..

கல் உப்பு ஒரு கிலோ என்பதால் மண்ணை பாதிப்பது இல்லை..

இதை நீங்கள் செய்ய குறைந்த செலவே ஆகிறது..

அந்த காலத்தில் வேப்பமரத்தில் செய்த கலப்பையை கொண்டு நம் பாட்டன் பூட்டன் உழுதததால் கோரை விவசாய பூமியில் இல்லாமல் போனது..

பச்சை புரட்சி என்ற பெயரில் மரக்கலப்பை இரும்பு கலப்பை ஆன பின்பே கோரைக்கிழுங்கு நம் பூமிக்குள் நுழைந்து விவசாயிகளுக்கு பெரும் தலைவலியை தந்தது..

தயாரிக்க ஆகும் செலவு

ஒரு டேங்க் இயற்கை களைக்கொல்லி தயாரிக்க ஆகும் செலவு,

கல் உப்பு ஒரு கிலோ 3 ரூபாய்
எலுமிச்சை பழம் 3 ரூபாய்
வேப்ப எண்ணை
100Ml 12 ரூபாய்
***********
ஆக மொத்தம் 18 ரூபாய்

கோமியம் இல்லாமல் பதினெட்டு ரூபாயில்
களைகளை  அழித்து விடலாம்..
மண் எந்த விதத்திலும் பாதிக்காமல்..

இதுவே ரசாயன களைக்கொல்லியை பயன்படுத்தினால் ஒரு டேங்க்கிற்கு நாற்பது ரூபாய் செலாவதுடன் மண் மலடாகி
அதில் வாழும் உயிரனங்களும் அழிந்து விடும்..

இன்று மஞ்சள் நடவு செய்துள்ளேன்.

இன்னும் இரண்டு நாட்களில் இந்த களைக்கொல்லியை தெளிக்க போகிறேன்..

இயற்கை களைக்கொல்லி இருக்கும்போது
செயற்கை களைக்கொல்லியை பயன்படுத்தி
சொந்த செலவுல சூனியம் ஏங்க வைக்கனும்..!!?

கலப்பு தீவனம் தயாரிப்பது எப்படி

கால்நடைகளுக்கு கலப்பு தீவனம் தயாரிப்பது எப்படி

கலப்பு தீவனம் தயாரிப்பது எப்படி?
கோவை கால்நடை பயிற்சி மையத்தில் ஆலோசனை..!!

வீடுகளில் எளிய முறையில் நாம் வளர்க்கும் கால்நடைகளுக்கு கலப்பு தீவனம் தயாரிக்க, கோவை கால்நடை பயிற்சி மையத்தில் ஆலோசனை வழங்கப்படுகிறது.

கலப்பு தீவனத்தை, கடைகளில் வாங்கி மாடுகளுக்கு உணவாக கொடுப்பதை காட்டிலும், தீவனங்களின் அளவுக்கேற்ப வீடுகளிலே தயாரிக்க இயலும்.

மாடுகளின் செரிமான முறை, தீவனத்தில் உள்ள சத்துக்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, எடைக்கேற்ப தயாரிப்பதன் மூலம், மாடுகளுக்கு சத்துள்ள மாற்று தீவனத்தை தயாரிக்க முடியும்.

கலப்பு தீவன தயாரிப்பு குறித்து, கால்நடை பயிற்சி மையத்தில், மாதிரிகள் தயாரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதில், மலிவாக கிடைக்கும் தீவனங்களான, சோளம், மக்காச்சோளம், கம்பு, ராகி, பயிறு வகைகள், புண்ணாக்கு, தவிடு, தாது உப்புகள் மற்றும் சமையல் உப்பு மற்றும் கரும்பு சர்க்கரை ஆகியவை கலந்து தயாரிக்கப்பட்டது. இந்த தீவன மாதிரியை, கறவை மாடுகளுக்கு உணவாக அளித்தில் நல்ல பலன். இதில், முன்பை காட்டிலும் அதிகளவு பால் உற்பத்தியாவதும், மாடுகள் ஆரோக்கியமாக இருப்பதும் கண்டறியப்பட்டது.

கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறுகையில்:-

10 கிலோ கலப்பு தீவனம் தயாரிக்க, நான்கு கிலோ தானியங்கள், மூன்று கிலோ புண்ணாக்கு, 2.5 கிலோ தவிடு, 250கிராம் நாட்டு சர்க்கரை மற்றும் 100 கிராம் தாது உப்பு கலவை மற்றும் 150 கிராம் சமையல் உப்பு ஆகியவற்றை சேர்த்து, பொடியாக அரைத்து, மாடுகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

தீவன தட்டுப்பாடு ஏற்படும் சமயத்தில், மாடுகளுக்கு உணவாக கொடுப்பதால், சத்துக்குறைபாடு பிரச்னை ஏற்படுவதை பெருமளவு குறைக்க முடியும்.

கூடுதல் தகவலுக்கு, கால்நடை பயிற்சி மையத்தை நேரிலோ அல்லது 0422 266 9965 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்’ என்றனர்.

தொகுப்பு : நாட்டு மாடுகளை வளர்ப்போம் முகநூல் குழு.

பசு மாடுகளுக்கு தீவன மேலாண்மை

பசு மாடுகளுக்கு தீவன மேலாண்மை:-
*****************************************

அடர்தீவனத்தில் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரிவிகிதத்தில் இருக்க வேண்டும்.

கால்நடைகள் விரும்பி உண்ணும் பொருளாகவும் விலை மலிவாகவும் இருத்தல் நன்று.

அடர்தீவனக்கலவையில் 100 கிலோ தயாரிக்க கீழ்க்கண்ட விகிதத்தில் பொருட்களை கலந்து தயாரிக்கலாம்.

தானிய வகைகள் – 35 கிலோ ( மக்காச்சோளம் அல்லது கம்பு அல்லது சோளம் ) + புண்ணாக்கு வகைகள் – 25 கிலோ ( கடலைப்புண்ணாக்கு அல்லது எள்ளுப்புண்ணாக்கு ) + தவிடு வகைகள் – 37 கிலோ ( அரிசித்தவிடு அல்லது கோதுமை தவிடு ) + தாது உப்புக்கள் – 2 கிலோ ( அக்ரிமின் அல்லது சப்ளிவிட் – மருந்துவ கடைகளில் கிடைக்கும் ) + சாதாரண உப்பு – 1 கிலோ ( சாப்பாடு உப்பு ).

பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதன் மூலம் செலவை குறைத்து பண்ணையை இலாபகரமாக நடத்த இயலும்.

பசுந்தீவனம் அதிக நார் மற்றும் புரதசத்தை தன்னுள் கொண்டிருக்கிறது.

பல்லாண்டு தீவனப்புல் வகைகள்:
———————————————————-
கம்பூ நேப்பியர் வீரியப்புல் ( கோ-1, கோ-3, கோ-4 ), கினியா புல், கொழுக்கட்டைப்புல், எருமைப்புல்.

தானியப்பயிர்கள்:
——————————–
தீவனச்சோளம், கம்பு, மக்காச்சோளம். பயறு வகை தீவனம் – வேலிமசால், காராமணி, குதிரைமசால், முயல்மசால், சணப்பை.

தீவன மரங்கள்:
—————————
சவுண்டல், அகத்தி, கிளைரிசிடியா & முருங்கை.

தொகுப்பு: நாட்டு மாடுகளை வளர்ப்போம் முகநூல் குழு.

Improving health fertility and life within soils

Improving health fertility and life within soils

Improving health fertility and life within soils : Images of soils covered with dry plant residues. Dry organic matter do have more carbon content and once it decomposes in the soil, it will increase carbon content in the soil. This improves health / fertility / life within soils.

Continue reading

கால்நடைகளுக்கான இயற்கை முறையில் குடற்புழு நீக்கம்

கால்நடைகளுக்கான இயற்கை முறையில் குடற்புழு நீக்கம்

இரசாயன குடற்புழு நீக்க மருந்துகள், குடலில் வாழும் நல்ல நுண்ணுயிரிகளையும் சேர்த்து அழித்துவிடும்.
அதனால், உண்ணும் உணவை விரைவில் செரிமானமாக்கும் என்சைம்கள் அழிந்து போவதால், உடலின் எடை குறைந்து ,பின் மீண்டும் உடல் எடை கூடும்.

Continue reading

முல்லைவனம் எப்படிண்ணா வர்ரது

அண்ணா நான் ரகு பேசுறேன்.

சொல்லு தம்பி என்ன விஷயம்?

அண்ணா நான் இப்போ மதுரை மாட்டுத்தாவனில இருக்கேன். முல்லைவனம் எப்படிண்ணா வர்ரது?

எதுக்கு முல்லைவனம் வரப்போறே?

Continue reading