Category: தற்சார்பு வாழ்வியல்

தற்சார்பு விவசாயி-10 ஆற்றல் தற்சார்பு

ஆற்றல் தற்சார்பு-flatbed fresnel

சிறு குறு விவசாயி ஆற்றல் தற்சார்பு குறித்து எவ்வளவு சிந்தித்தாலும், நாட்டில் நடக்கும் நல்லது கேட்டதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். நாம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயையும் வீணாகி விடக்கூடாது. இலவச கரண்டை பிடுங்க போகிறார்கள். மின்சார உற்பத்தியை இஷ்டத்துக்கு நிறுத்துகிறார்கள். வீட்டு மின்சாரம் மட்டுமே ஆயிரக்கணக்கில் ஆகிறது. மீட்டருக்கு மேலே என்னென்னவோ சார்ஜ் போடுகிறார்கள். அதற்கும் மேலே பலவகையான வரி.
இந்தியாவின் தற்போதைய ஹைட்ரோகார்பன் நிலையை ஒரு சில வரிகளில் பார்ப்போம்.

Continue reading

மாற்று கட்டுமானத்தில் கான்க்ரீட் மற்றும் சிமென்டின் பயன்பாடு

எங்களிடம் மண் அல்லது மாற்றுக்கட்டுமானம் பற்றி கேட்கும் போது பேச்சு சிமெண்ட் அல்லது கான்கிரீட் பக்கம் திரும்பும்.நான் கட்டுமான துறையில் பணியாற்றும் போது எனக்குள் எப்போதும் ஒருவிதமான குழப்பம் மட்டும் இருந்தது என்று சொல்ல முடியாது. ஒரு விதமான குற்ற உணர்ச்சியே என்னை உறுத்தியது. ஏதோ தெரிந்தே பாவம் செய்கிற உணர்ச்சி இருந்தது என்று சொன்னால் அது மிகையல்ல. நல்ல வேளை, இப்பொழுதெல்லாம் இதை நினைத்து தூக்கமிழப்பதில்லை.

ஒவ்வொரு புதிய கனவும் மெய்ப்படும் போதும் சரி, அது எதிர்பாராத விளைவுகளையும் நமக்கு பரிசாக தரும். எல்லா புதிய சிந்தனைகளுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகள், கேள்விகள்,கேலிகள் எல்லாம் பரிச்சயமான ஒன்று. இதைத் தாண்டித் தாக்குப் பிடிக்கற சிந்தனைகள் மக்களால் ஏற்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து விடுகிறன‌

Continue reading

தற்சார்பு விவசாயி-9 குவிக்கப்பட்ட சூரிய வெப்பம்

ஒரு தற்சார்பு விவசாயி விதை, ஆற்றல், உரம், தண்ணீர் எதற்குமே கைநீட்டக்கூடாது என்று சென்ற அத்தியாயங்களில் பார்த்தோம். தோட்டத்துக்கு வேண்டிய ஆற்றலை நாமே உற்பத்தி செய்துகொள்ள பல வழிகள் உள்ளன என்றும் தெரிந்துகொண்டோம். அது, கட்டமைத்துக்கொள்ள எளிதாகவும், விலையில்லாமலும் சுற்றுச்சூழலை பாதிக்காவண்ணமும் இருக்கவேண்டும்.

Continue reading

தற்சார்பு விவசாயி-8 சூரிய வெப்பம்

நான் பள்ளியில் படிக்கும்போது கால்பந்து மைதானத்தின் வேலியோரம் யூகலிப்டஸ் மரங்கள் வரிசையாக நடப்பட்டிருந்ததை கண்டேன். தைல மரங்கள் வேகமாக வளரும். எங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் ஒரு ஆயர். நீண்ட பிரம்பை முதுகுப்புறம் அங்கியினுள் மறைத்து வைத்திருப்பார்.ஒருநாள் அவரது செல்ல நாய் இறந்துவிட்டது. ஒரு தைல மரத்தடியில் இந்த நாயை புதைத்தனர். கொஞ்ச நாளில் அந்த மரம் மட்டும் மற்ற மரங்களைவிட வேகமாக நெட்டையாக வளர்ந்ததை நான் பார்த்து வியந்ததுண்டு. நாய் நல்ல உரமாகி இருக்கலாம்.

ஒருநாள் அவரது செல்ல நாய் இறந்துவிட்டது. ஒரு தைல மரத்தடியில் இந்த நாயை புதைத்தனர். கொஞ்ச நாளில் அந்த மரம் மட்டும் மற்ற மரங்களைவிட வேகமாக நெட்டையாக வளர்ந்ததை நான் பார்த்து வியந்ததுண்டு. நாய் நல்ல உரமாகி இருக்கலாம்.

Continue reading

தற்சார்பு விவசாயி-7 மாட்டுவண்டி

விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை இறைக்க மட்டும் ஆற்றல் இருந்தால் போதாது. எருவை கொண்டுவரவும், விளைபொருட்களை கொண்டுசெல்லவும், மண் அடிக்கவும் இன்ன பிற செயல்கள் செய்யவும் மற்றும் போக்குவரத்துக்கும் ஆற்றல் தேவை. தற்போதுள்ள நிலைமையில் ஒரு டிராக்டர் மற்றும் ட்ரைலர் மொத்தமாக சேர்ந்து குறைந்தபட்சம் 3 லட்சம் ஆகும். தற்போது ஒரு வண்டியை வேலைக்கு வாடகைக்கு எடுக்கவேண்டுமென்றால் 800 தேவை. பக்கத்து ஊருக்கு போக சுளையாக 1500 முதல் ஆகும். சிறு, குறு விவசாயிகளால் அது முடியாது.

Continue reading

தற்சார்பு விவசாயி-6 காற்றாடி

நான் விறகு பொறுக்க போகும்போது அம்மா, “அத்தி மரத்திலிருந்தோ அதனைச் சுற்றியோ காய்ந்த விறகைப் பொறுக்காதே,” என்று என்னை எச்சரித்தார். “ஏன்” என்றேன். “அது கடவுளின் மரம், அதனை வெட்டவோ, தீ எரிக்கவோ மாட்டோம்” என்றார். அப்போது அவர் என்ன சொல்கிறார் என்று எனக்கு புரியவில்லை.

அத்தி மரத்திலிருந்து இருநூறு முழம் தள்ளி ஒரு நீரோடை இருந்தது. அதற்கு ஆப்பிரிக்காவில் காணுங்கு என்று பெயர். நேரடியாகவே அந்த தண்ணீரை குடிப்போம். சிறுமியாக, நீரூற்று கொப்பழித்து புறப்படும் இடத்துக்கு போயிருக்கிறேன். ஆரோரூட் பயிரிடுவோம். செடிகளின் கீழ் நூற்றுக்கணக்கான தவளை முட்டைகள் இருக்கும். அவற்றை மாலையாக அணிய ஆசை.

அத்திமர வேர் அமைப்பிற்கும் நிலத்தடி நீர் தேக்கத்திற்கும் நேரடி தொடரிப்பு இருக்கிறது என்று பின்னல் அறிந்துகொண்டேன். வேர்கள் பாறையை குடைந்து மண்ணையும் தாண்டி நிலத்தடி நீரை அடையும். வேர்களின் வழியாக தண்ணீர் மேல் எழும்.

Continue reading

தற்சார்பு விவசாயி-5 பேண்தகைமை

தற்சார்பு விவசாயி-5 பேண்தகைமை

நஞ்சில்லா இயற்கை வேளாண்மையா ? பஞ்சகவ்யா போடு என்று அன்புடன் ஆளாளுக்கு தெரிந்ததை சொல்லிவிட்டு போவார்கள். சொன்னதை எல்லாம் செய்துவிட முடியுமா. நானும் ஒருமுறை செய்முறை விளக்கமளித்தேன். (படம் 1). தோட்டத்தில் பணியாளர்கள் என்றைக்காவது ஒரு நாள் போட்டால் அதிசயம். அதற்கு காரணமிருக்கிறது. இந்த படத்திலுள்ள பொருட்களை சேகரிக்க முதலில் என் நண்பனின் அம்மா அதிகாலையில் மாட்டுக் கோமியத்தை குடத்தில் பிடிக்கவேண்டும். நல்ல மாட்டுச்சாணி எங்கிருந்தாவது கொண்டு வர வேண்டும். பக்கத்து ஊரில் மண்டை வெல்லம், பால், பழம், தயிர், கடலை மாவு, கரும்புச்சாறு என்று கிடைத்ததை வாங்கி வரவேண்டும். எல்லாவற்றையும் உற்ச்சாகத்துடன் கலந்து மூன்று நாட்கள் தேவுடு காத்தால் பஞ்சகவ்வியா தயார்.

Continue reading