Category: Agriculture News

என்ன மாதம் என்ன செடிகள் வளர்க்கலாம்

என்ன மாதம் என்ன செடிகள் வளர்க்கலாம்

என்ன மாதம் என்ன செடிகள் வளர்க்கலாம்!


ஜனவரி மாதம் (மார்கழி, தை)
இந்த மாதங்களில் (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.நன்கு விளைசல் கிடைக்கும்.

பிப்ரவரி மாதம் (தை,மாசி)
இந்த மாதங்களில் (தை,மாசி) கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

மார்ச் மாதம் (மாசி, பங்குனி)
இந்த மாதங்களில் (மாசி, பங்குனி) வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

ஏப்ரல் மாதம் (பங்குனி, சித்திரை)
இந்த மாதங்களில் (பங்குனி, சித்திரை) செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.


மே மாதம் (சித்திரை, வைகாசி)
இந்த மாதங்களில் (சித்திரை, வைகாசி) செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

ஜூன் மாதம் (வைகாசி, ஆனி)
இந்த மாதங்களில் (வைகாசி, ஆனி) கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

ஜூலை மாதம் (ஆனி, ஆடி)
இந்த மாதங்களில் (ஆனி, ஆடி) மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

ஆகஸ்ட் மாதம் (ஆடி, ஆவணி)
இந்த மாதங்களில் (ஆடி, ஆவணி) முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

செப்டம்பர் மாதம் (ஆவணி, புரட்டாசி)
இந்த மாதங்களில் (ஆவணி, புரட்டாசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

அக்டோபர் மாதம் (புரட்டாசி, ஐப்பசி)
இந்த மாதங்களில் (புரட்டாசி, ஐப்பசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

நவம்பர் மாதம் (ஐப்பசி, கார்த்திகை)
இந்த மாதங்களில் (ஐப்பசி, கார்த்திகை) செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

டிசம்பர் மாதம் (கார்த்திகை, மார்கழி)
இந்த மாதங்களில் (கார்த்திகை, மார்கழி) கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

மேலும் படிக்க :
எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் செய்யலாம்
பட்டம் பார்த்து பயிர் செய்

பாழ்பட்ட நிலத்தையும் வளமாக்கும் பலதானிய விதைப்பு

பலதானிய விதைப்பும், விதைப் பரவலாக்கமும்

சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகை, கடலூர் மாவட்ட விவசாயிகளின் நிலமெல்லாம் கடல் நீர் புகுந்து உப்பு படிந்தது. நிலத்தை சோதித்த விவசாயத் துறை வல்லுநர்களும், மிகப் பெரும் விஞ்ஞானிகளும் நிலத்தை சோதித்து இந்த நிலத்தில் பயிர் செய்ய பல வருடமாவது ஆகும் என்றனர். நிறைய செலவும் ஆகும் என்று கைவிட்டனர்.

இந்நிலையில் நம்மாழ்வார் ஐயா அவர்கள் அந்த நிலங்களை வேளாண் நிலங்களாக மாற்ற முடியும் என்று கூறினார். பேசியதுமட்டுமல்ல, மூன்றே மாதங்களில் அந்த நிலங்களை விளை நிலங்களாக மாற்றியும் காட்டினார் அவர்.

Continue reading

நமது நண்பர்கள்

விவசாயத்தில் நமது கண்ணுக்கு தெரியாத பாக்டீரியா போன்ற உயிரினங்கள் முதல் கண்ணுக்கு தெரியும் பறவைகள் போன்ற உயிரினங்கள் பல வகைகளில் நமக்கு உதவி செய்கின்றன. அவற்றில் முக்கியமான சில உயிரினங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

Continue reading

கருநொச்சி ஒரு கிலோ ₹1500

கருநொச்சி ஒரு கிலோ 1500 karunotchi

ஒரு கிலோ இலை ₹1500… ஒரு செடி ₹500… அழிவின் விளிம்பில் கருநொச்சி மூலிகை!

கருநொச்சியின் ஒரு கிலோ இலை 500 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரையிலும், சிறிய செடியின் விலை 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரையிலும் சந்தையில் விற்பனையாகிறது.

Continue reading

மலைக்க வைக்கும் மலைவேம்பு

மலைக்க வைக்கும் மலைவேம்பு

மலை வேம்பு! இன்றைய தேதியில் இந்த மரத்தை அடித்துக்கொள்ள வேறு மரம் இல்லை. இதை விவசாயிகள் பயிரிட்டால் அவர்கள் பணக்காரர்களாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி ஒரு வல்லமை இந்த மரத்துக்கு உண்டு.

Continue reading

நுண்ணுயிர் சார்ந்த பூச்சிக்கட்டுப்பாடு

நுண்ணுயிர் சார்ந்த பூச்சிக்கட்டுப்பாடு

வயல்களில், 25 சதவீதம், பயிர்களையே உணவாக உட்கொள்ளும் தீமை செய்யும் பூச்சிகளும்; தீமை செய்யும் பூச்சிகளை தேடி, அதை பிடித்து உணவாக உட்கொள்ளும், 75 சதவீதம் நன்மை செய்யும் பூச்சிகளும் உள்ளன.
தீமை செய்யும் பூச்சிகளைத் தேடி, பயிர்களின் மேல்பகுதியில் நன்மை செய்யும் பூச்சிகள் இருக்கும்.
தீமை செய்யும் பூச்சிகள், பயிர்களின் உட்பகுதியில் இருக்கும்

Continue reading

உயிர் உரங்கள், ஊட்ட உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள்

உயிர் உரங்கள் ஊட்ட உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள்

#உயிர் உரங்கள், ஊட்ட உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் போன்றவற்றை குறித்து கேள்வி பதில்கள்

பயிர் பாதுகாப்பிற்கான உயிர் உரங்கள், ஊட்ட உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் போன்றவற்றை கத்தரி. தக்காளி. மிளகாய், வெங்காயம் போன்றவற்றில் சில கேள்வி பதில்களைப் பற்றி பார்க்கலாம்.

1. நல்ல நிலம் எப்படி இருக்கனும்?

வடிகால் வசதியுள்ள வளமான மண்ணாக இருக்கனும்.
Pர் 6.5 முதல் 7.5 வரை கார அமிலம் இருக்கனும்
மண்ணில் நீர் பிடிப்பு தன்மை இருக்கனும்

2. பயிருக்கு என்னென்ன சத்துக்கள் போடனும் அவை
யாவை?
மொத்தம் பயிருக்கு இடவேண்டியசத்துக்கள் 16 அவை
பேரூட்டச்சத்துக்கள் , நுண்ணூட்டச்சத்துக்கள்

பேரூட்டச்சத்துக்கள் என்பது அதிகளவில் பயிர்களுக்கு
போடக்கூடிய உரமாகும்
நுண்ணூட்டச்சத்துக்கள் என்பது பயிருக்கு குறைந்த
அளவில் கொடுக்கக் கூடிய உரமாகும்.

சத்துக்கள்
1. தழைச்சத்து
2. மணிச்சத்து
3. சாம்பல் சத்து
4. சுண்ணாம்பு சத்து
5. மெக்னீசியம்
6. கந்தகம்
7. துத்தநாகம்
8. இரும்பு
9. போரான்
10. மாங்கனீசு
11. குளோரின்
12. மாலிப்டினம்
13. போராக்ஸ்
14. கார்பன்
15. ஹைட்ரஜன்
16. ஆக்சிஜன்

தழை, மணி, சாம்பல் – இவை பேரூட்டச்சத்துக்கள்
தழைச்சத்தும், மணிச்சத்தும் வாயுநிலையில் இருக்கும்.
பயிருக்கு காற்றின் மூலம் கிடைக்கும்

கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிசன் (வாயுநிலை ) இவை
கொழுப்புச்சத்து காற்றிலிருந்து கிடைக்கும்.
மண்ணிலிருந்து கிடைக்ககூடிய சத்துக்கள்
சாம்பல் சத்து, சுண்ணாம்புசத்து

3. சத்துக்களை எப்பொழுது பயிர்களுக்கு போட வேண்டும்?

மணிச்சத்தை அடியுரமாக மட்டுமே போட வேண்டும். மற்ற சத்துக்களை களை வெட்டிய பிறகு கூட போடலாம்.

நுண்ணூட்ட சத்துக்களை நடுவதற்கு முன் மேலாக தூவிவட வேண்டும். இவற்றை மேலுரமாகவும்,
இலைவழி உரமாகவும் கொடுக்கலாம்.

4. விதை நேர்த்தி செய்ய டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ் எவ்வளவு கலக்க வேண்டும் இரண்டையும் ஒன்றாக கலக்கலாமா?

டிரைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் கலக்கலாம் இரண்டையும் ஒன்றாக கலக்கக் கூடாது.
சூடோமோனஸை இரும்புச்சத்து இல்லாத செம்மண் நிலங்களுக்கு மட்டும் விதை நேர்த்தி செய்ய பயன்படுத்தலாம்

சூடோமோனஸை 1 கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம்.

5. மேட்டு நாற்றங்கால் தயாரிக்கும் பொழுது ஏன் நீளம் அளவு தேவையில்லை அகலம் மட்டும் 3 அடி வைக்கவேண்டும் காரணம் என்ன?

மேட்டு நாற்றங்காலில் ஈரப்பதம் ஒன்று சேர்வதற்கும்
சீராக தண்ணீர் எல்லா இடங்களுக்கும் பரவவும்.
களை எடுக்க ஏதுவாகவும்; இருக்கும்.

6. கத்தரி நாற்றின் வயது எவ்வளவு இருக்கனும்?
நாற்றங்காலில் 22 முதல் 25 நாள் வயதுடைய நாற்றுக்களை எடுத்து நடவு செய்யனும்.

7. கத்தரி நடவு செய்தவுடன் என்னென்ன நோய்கள், பூச்சிகள் வரும்?

வாடல் நோய், இலைக்கருகல் நோய் தண்டு அழுகல், சாறு உறிஞ்சும் பூச்சிகள், எறும்பு, வெள்ளைஈ, தண்டு துளைப்பான், காய்ப்புழு

8. கத்தரி நடவு செய்தவுடன் எறும்பு, சாறுஉறிஞ்சும் பூச்சிகள், வெள்ளைஈ, தண்டுதுளைப்பான், காய்ப்புழு இவற்றை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்.?

ஊடுபயிர் சாகுபடி செய்யலாம்
ஒட்டுண்ணி அட்டைகட்டலாம் ஒரு எக்கருக்கு 3 சி.சி
இனக்கவர்ச்சிபொறி ஒரு ஏக்கருக்கு 2 இடங்களில் வைக்கலாம்
நிறப்பொறி மஞ்சள் அட்டை, ஒரு ஏக்கருக்கு 4 இடத்தில் வைக்கலாம்
விளக்குப்பொறி, ஒரு ஏக்கருக்கு ஒரு இடத்தில் வைத்து கவர்ந்து அழிக்கலாம். தாவர இலைச்சாறு அடிக்கலாம்.

9. நோய் தாக்குதல் என்றால் என்ன? பூச்சி தாக்குதல்
என்றால் என்ன?

சாறு உறிஞ்சும் பூச்சிகளின் மூலம் நோய்கள் ஏற்படுகிறது கத்தரியில் சிற்றிலை நோய் வாடல், இலைகருகல் நோய் வரும. நூற்புழு தாக்குதல் தண்டுதுளைப்பாண், காய்ப்புழு, காய் அழுகல்

10. காய்கறி பயிர்களுக்கு போடக்கூடிய நுண்ணுயிர் உரம் எது?

அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா

11. 100 கிலோ கத்தாரிக்காய் உற்பத்தி செய்ய அவை
மண்ணிலிருந்து எடுத்துக் எடுத்துக்கொள்ளும்
சத்துக்களின் அளவு என்ன?

தழைச்சத்து – 4
மணிச்சத்து 0. 5
சாம்பல் சத்து 6
சுண்ணாம்பு சத்து 2
மெக்னீசியம் 0.5
கந்தகம் 0.5

12. 100 கிலோ தொழுவுரத்தில் உள்ள சத்துக்களின் அளவு என்ன?

தழைச்சத்து – 1
மணிச்சத்து 0. 5
சாம்பல் சத்து 1
சுண்ணாம்பு சத்து 3
மெக்னீசியம் 0.5
கந்தகம் 0.5

13. சூப்பர்பாஸ்பேட்டை எப்படி போட்டால் சத்துக்கள் வீணாகாமல் பயிருக்கு அப்படியே கிடைக்கும்?

ஊட்டமேற்றிய தொழுவுரமாக மாற்றி போட்டால் சத்து அப்படியே பயிருக்கு கிடைக்கும்.

14.ஜிப்சத்தில் உள்ள சத்துக்கள் என்ன அளவு எவ்வளவு?
கந்தகசத்து 14 சதம்
சுண்ணாம்பு சத்து 22 சதம்

15.பயிருக்கு நோய்வர காரணிகள் என்ன?
காலநிலை – ( வெளிக்கூறுகள்)
ஊட்டச்சத்து பற்றாக்குறை
விதை நேர்த்தி செய்யாமை
நீர் பாய்ச்சுவதன் மூலம்

16.கத்தரியில் பச்சை தத்துப்பூச்சியை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்.?

பூச்சி விரட்டியை பயன்படுத்தலாம்
மஞ்சள் அட்டை கட்டலாம்
ஊடுபயிர் சாகுபடி செய்யலாம் ( மகரந்தம் அதிகம் இருக்கக்கூடிய பயிர்கள் மக்காச்சோளம், சூரியகாந்தி போன்ற பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.விளக்குப் பொறி வைக்கலாம்.

17. தத்துப்பூச்சியின் தாக்குதல் எப்படி இருக்கும்? இலைப்பேன் தாக்குதல் எப்படி இருக்கும்?

தத்துப்பூச்சியின் தாக்குதல் – இலை கீழ்நோக்கி சுருண்டு காணப்படும் இலைப்பேன் தாக்குதல் – இலைமேல் நோக்கிசுருண்டு காணப்படும்.

தத்துப்பூச்சி – மூன்று வகைதான் இருக்கும்
முட்டை பருவம், இளம் பருவம், முதிர்ந்த பருவம்
இறக்கைஇருக்காது

சாறு உறிஞ்சும் பூச்சி. முட்டையை தண்டுக்குள் இடும்.
புழு பருவம் இருக்காது.

செம்பேன் , இலைபேன், மாவு பூச்சி இவை மிகச் சிறியது
காற்று அதிகமாக இருந்தாலும், வெயில் அதிகமாக
இருந்தாலும் இப்பூச்சிகள் வரும். மாவு பூச்சியை பயிர் சிலந்தி என்று கூறுவர்.

18. அஸ்விணியை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்.?
அஸ்விணி முட்டை இடாமல் குஞ்சு பொறிக்கும் தன்மை
உள்ளது

இவை ஒன்று பத்தாகும் பத்து நூறு ஆகும் இப்படி பெருகிக்கொண்டே போகும். உணவு பற்றாக்குறை – தீனி குறைவாக இருந்தால் இறக்கை முளைத்து விடும். – ( பறந்து வேறு இடங்களுக்கு சென்று

விடும்) இவற்றை கட்டுப்படுத்த

ஊடுபயிர் தட்டபயிர் சாகுபடி செய்யலாம்.
உரத்தை குறைக்கனும்,
வேப்பங்கொட்டைச் சாறு அடிக்கலாம்.
மைதா மாவு, கோதுமை மாவு கரைத்து ஊற்றலாம்.
தாவரக் கலைசல். அடிக்கலாம்.

பூண்டு அரைக்கிலோ, மிளகாய் அரைக்கிலோ, வேப்பங்கொட்டை இடித்த தூள் 1 கிலோவை 1 லிட்டர் கோமியத்தில் ஒரு நாள் ஊறவைத்த கரைசல் அடிக்கலாம். (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி)

19. தக்காளியில் வாடல் நோய்க்கும், பாக்டீரியா வாடலுக்கும் என்ன வித்தியாசம்?

வாடல் நோய் கொஞ்சம், கொஞ்சமாக வாடும்.
பூஞ்சாண நோய் ஒரு பைப் லயன் – இவை பயிரின் வேர்
அடைத்து இருக்கும் பயிர் கொஞ்சம் கொஞ்சமாக மாறும்( நூற்புழு வேரை அடைத்துவிடும்.) அதனால் பயிரின் மற்ற பாகங்களுக்கு போகும் சாறை ( பைப் லயன் அடைத்து விடும்) பாக்டீரியா வாடல் உடனே வாடிவிடும். –(இலைகருகி)பாக்டீரியா வாடல் – ஒரு

கண்ணாடி டம்ளரில் தண்ணீரை ஊற்றி
அதில் செடியின் வேரை பாகத்தை வெட்டி தண்ணீர் நிறம்பிய டம்ளரில் வேரை போடவேண்டும் அதில் ஒரு வித திரவம் வடியும் அப்படி வடிந்தால் அது பாக்டீரியா வாடல் நோய் எனப்படும்