கற்பூரக் கரைசல்: கற்பூர கரைசல் பூச்சி கொல்லி மற்றும் பயிர் ஊக்கி
கற்பூர கரைசல் அணைத்து வகையான பயிர்களுக்கும் பூச்சி கொல்லி மற்றும் பயிர் ஊக்கியாக பயன்படுகிறது. இக்கரைசல் பல விவசாயிகளால் உபயோகப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.
Category: Agriculture News
கவனம்கோடையின் தாக்கம் அதிகமிருக்கும்
அன்பு விவசாய சொந்தங்களே
தற்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருக்கவேண்டிய அதிகாலைப் பனியின் அளவு மிகவும் குறைவாக உள்ளது.இது வருத்தமளிக்கக்கூடிய நிகழ்வு.
எதிர்வரும் கோடையின் தாக்கம் அதிகமிருக்கும் என்பதற்கான அடையாளம்.
நிலத்தடி நீரீனை அளவாகப் பயன்படுத்துவது ரும் வறட்சி மாதங்களில் ஓரளவு தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்கும்.
விவசாயத்தில் இப்போதிருந்தே பயிருக்கான தினசரி தண்ணீர்த் தேவை என்னவென அறிந்து காலை, மாலை வேளைகளில் பிரித்துக் கொடுத்து பாசனம் செய்வது நல்ல பலன்தரும்.
பல்வேறு வகையான மூடாக்கு அமைத்து பாசனம் செய்வது, கொடுக்கும் தண்ணீர் வேர் வழி சென்று உறுதியாக செடியின் வளர்ச்சிக்கு உதவ வாய்ப்பாகும்.
சொட்டுநீர் பாசனம் அதிலும் சொட்டுவான்(Dripper) அமைத்து பாசனம் செய்வது சிறப்பு. மேலும் விழும் சொட்டுக்களையும் பூமியில் ஒரு அடி ஆழக்குழி அமைத்து அதில் விழவைப்பது தென்னை,தோட்டக்கலைப் பயிர்களுக்கு அவசியம்.
தெளிப்புநீர் பாசனத்தைத் தவிருங்கள். வாய்க்கால் வழிப் பாசனத்தைத் தவிர்த்து குறைந்தபட்சம் வாய்மடை வரையிலாவது குழாய் அமைத்து நீரீனைக் கடத்துவோம்.
தற்போது நிலத்தடி நீர் நிறைய இருப்பது போல் தோன்றினாலும் வற்றிப்போக நிறைய வாய்ப்புள்ளது.கவனம்.
பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்
26.12.2017.
மண்ணில் மண்புழுக்களின் ஓட்டம் அவசியம்
இடு பொருட்கள் விலை கொடுத்து வாங்காமல் நாம் நமது கால்நடைகளின் கழிவுகளில் இருந்து இடுபொருட்களை தயாரித்து பயிர்களுக்கு கொடுத்து வருவதே சிறந்தது.
கால்நடை கழிவுகள் நுண்ணுயிரிகளை பெருக்கம் செய்வது இல்லை.
நுண்ணுயிரிகள் அதனுள் அடங்கியுள்ளன.
அசோலா
அசோலா படுக்கை / குட்டை – நேரிடையாக வெயிலில் பட கூடாது.
உங்களது ஜல்லிக்கட்டு காளை குளிப்பாட்டும் குளம் அநேகமாக வெயிலில் படும் அமைப்பில் இருக்கலாம், அசோலா வளர அதற்கு உணவு நாம் கொடுக்க வேண்டும். தழைசத்து அதற்கு தேவை ..
மீன் வளர்ப்பு
மீன் வளர்ப்பு தொழிலை தொடங்க எந்த நிலம் சரியானது? என்னென்ன செய்யணும்? இதை வாசிங்க தெரியும்
ஒரு மாடு தினம் தருவது 10 கிலோ சாணம்
அனைவரின் மனதில் பதிய ஒரு எளிமையான செய்தி தருகிறோம்.
ஒரு மாடு தினம் தருவது 10 கிலோ சாணம், 7 லிட்டர் கோமூத்திரம்.
ஒரு வருடத்தில் 3500 கிலோ சாணம், 2500 லிட்டர் கோமூத்திரம் கிடைக்கும்.
சாணத்தை விட கோமூத்திரத்தில் 50% தழை சத்து மற்றும் 25% சாம்பல் சத்து அதிகமாக கிடைக்கிறது. ஆகையால்
உடனே கோமூத்திரம் சேகரிக்க ஏற்பாடு செய்யுங்கள்.
தொழு எரு தயாரித்தல்:
15 அடி நீளம், 8 அடி அகலம், 3 அடி ஆழம் உள்ள குழி தேவை.
இதன் மூலம் 5 டன் தொழு எரு தயாரிக்கலாம். நீளம் அகலம் மாறுபட்டாலும், ஆழம் 3 அடி இருப்பது அவசியம். குழியில் முதல் அடுக்காக 3/4அடி உயரத்திற்கு சான கழிவுகளை நிரப்பி, அதன் மீது 3 அங்குலம் மண் பரப்பி விட வேண்டும். இதை முதல் அடுக்காக கொள்ளலாம்.
இது போல் 3 அடுக்குகள் செய்தால் குழி நிரம்பிவிடும்.
பிறகு இதன் மேல் 1 அடி உயரம் மண் போட்டு நீரை தெளித்து மொழுக்கி விடவேண்டும்.
6 மாத காலத்திற்குள் எரு நன்கு மக்கிவிடும்.
100 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்தில்
500 கிராம் தலை சத்து
300 கிராம் மணி சத்து
500 கிராம் சாம்பல் சத்து உள்ளது.
பெரும்பாலான விவசாயிகள் தொழு உரத்தை மேற்கண்ட முறையில் மக்க வைப்பது இல்லை.
நல்ல முறையில் மக்க வைத்தால்தான் நல்ல பலன் கிடைக்கும்.
உதாரணமாக
சரியான முறையில் பாலில் உரை ஊற்றினால்தான் பால் தயாராகும், பால் திரிந்துபோனால் அதை யாரும் சாப்பிடுவதில்லை.
அதே போல் தொழு எருவை சரியான முறையில் மக்க வைக்காவிட்டால் அது பயனற்று போகும்.
பயிர் என்னும் குழந்தைக்கு திரிந்த பாலுக்கு சமமான மக்காத தொழு உரத்தை கொடுப்பதில் என்ன பயன்?
அதனால் முறையோடு மக்கிய தொழு உரம் தயாரிக்க ஆவண செய்யுங்கள்.
வணக்கதுடன் நன்றி. அசோக்குமார் கார்கூடல்பட்டி
கடைகளில் விற்கப்படும் மஞ்சள் தூள் பாக்கெட்டுகள் வேண்டாமே
கடைகளில் விற்கப்படும் மஞ்சள் தூள் பாக்கெட்டுகள் வேண்டாமே…!!!
Curcumin…
தென்னிந்திய மக்கள் பயன்படுத்தும் அதிகபடியான மிளகாய் காரம் மற்றும் மசாலா பொருட்களால் வயிற்று புற்றுநோய் மிக அதிகமாக இருக்கவேண்டும் ஆனால் நிலைமை தலைகீழாக உள்ளது ஏன் என்று ஆராய்ந்த டாக்டர்களுக்கு பிடிபட்டது மஞ்சளில் உள்ள curcumin எனப்படும் ஒரு வகையான வேதிபொருள் அப்புறம் என்ன….?
புற்றுநோய் மருந்தாக வெளிநாடுகளில் .
ஓசூர் மற்றும் பெங்களூருவில் உள்ள சில தனியார் பெருநிருவனங்கள் மஞ்சளில் உள்ள curcuminதனியாக பிரித்து டாலர்களாக பணம் சம்பாதிக்கின்றனர்
Curcumin ஐ பிரித்தெடுத்த பின்பு உள்ள மஞ்சளை தமிழகத்தில் உள்ள பிரபலமான மசாலா கம்பெனிகள் கீழ்கண்டவாறு மஞ்சள் தூளை தயாரிக்கின்றனர்
40% ரேசன் அரிசி ,
40%மக்காச்சோளம் ,
18% மஞ்சள்(சத்துபிரிக்கபட்ட)
02% chemical color agents இவைகளே மஞ்சள் தூளாக கலப்படம் செய்யப்பட்டு, வலம்வருகிறதுஅலங்காரமாக
அழகான பேக்குகளில் .
மஞ்சளை வாங்கி அரைக்கும் போது அவற்றின் நிரம் ஒருவித ஆரஞ்சு நிறமாக இருக்கும்
கடைகளில் வாங்கும் இவற்றை கவனியுங்கள் thick yellow நிறத்தில் இருக்கும் .
ஒரு குடும்பத்திற்கு 500 கிராம் மஞ்சள் அரைத்தால் போதுமானது ஒரு வருடத்திற்கு
இதற்காக நீங்கள் ஆர்கானிக் அங்காடிகளுக்கு ( ஸ்டோர்ஸ்களுக்கு) செல்ல தேவையில்லை மாறாக பணத்தை மிச்சம் செய்ய யோசியுங்கள் !!!
சரி எப்படி பட்ட மஞ்சளை தேர்ந்தெடுப்பது எப்படி ??? மஞ்சள் கிழக்கில் இரண்டு வகை உள்ளது ஒன்று விரலி மஞ்சள் மற்றொன்ரு கொட்டை மஞ்சள் ( கிழங்கு மஞ்சள் ) இதை நீங்கள் சரிசமமான இடையில் பலசரக்கு கடைகளில் அல்லது நாட்டு மருந்து கடைகளில் வாங்கி கொள்ளுங்கள்.
அதை வெயிலில் ஒரு நாள் காலை முதல் மாலை வரை முடிந்தால் வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
அதற்கு அடுத்து அம்மிகல்லில் வைத்து சிறு சிறு துண்டுகளாக உடைத்து கொள்ளவும்.
அதற்கு பிறகு மிக்ஸியில் போட்டு நன்றாக நைசாக பொடியாக பொடித்து கொள்ளவும்.
இதற்கு நிகர் நீங்கள் எந்த ஆர்கானிக் கடைகளில் சென்றாலும் கிடைக்காது பணமும் மிச்சம் , உங்கள் ஆரோக்கியமும் பாதுகாக்கபடும் !!!