Category: Organic Agriculture

விளக்கு பொறி

விளக்கு பொறி
வயல்ல 3 அடி உயரத்துல பெட்ரோமாக்ஸ் விளக்கு இல்லனா கண்டுபல்லைத் தொங்க விடணும்.

Continue reading

ஹ்யூமிக் அமிலம்

ஹ்யூமிக் அமிலம்.

ஹ்யூமிக் அமிலங்கள் மட்கிய பொருட்களின் முக்கிய அங்கமாகும், இவை மண்ணின் (மட்கிய), கரி மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் முக்கிய அங்கமாக உள்ளன.

இது பல மேட்டுப்பாதைகள், நீர்த்த நீரூற்றுகள் மற்றும் கடல் நீர் ஆகியவற்றின் முக்கிய அங்கமாக உள்ளது. இது இறந்த கரிம பொருட்களின் உயிரியலகுப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

Humic அமிலம் என்பது மட்கிய மண், தழைக்கூளம், கரி மற்றும் பிற மண் தயாரிப்புகளின் ஒரு இயற்கை கூறு ஆகும். ஹியூமிக் அமிலம் என்பது கரிம பொருட்களின் சிதைவின் போது உருவாக்கப்பட்ட நுண்ணுயிர்களின் ஒரு தயாரிப்பு ஆகும்.

Humic Acid என்ன செய்கிறது?

ஹ்யூமிக் அமிலம் ஈரப்பதத்தை வைத்திருக்கிறது, நீண்ட காலத்திற்கு மண்ணின் ஈரப்பதத்தை வைத்திருக்கிறது. இது தாவரங்கள் முக்கிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட அமிலம் உரம் ஒரு பயனுள்ள சேர்க்கை இருக்க முடியும். இது நுண்ணுயிரிகளுக்கு ஒரு உணவு மூலக்கூறு மற்றும் உணவு மூலமாகும். தாவரங்களுக்கு வழங்கப்படும் தண்ணீரை தக்கவைத்து ஊட்டச்சத்து அதிகரிப்பதற்கு உதவும் திறனைப் பெறும்

கீரை சாகுபடி

கீரை சாகுபடி

கீரை சாகுபடி
மண் மற்றும் தட்பவெப்பநிலை :
நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இரு மண் பாட்டு நிலம் கீரை சாகுபடி க்கு உகந்தது. அதிகக் களிமண் மற்றும் முற்றிலும் மணல் கொண்ட நிலத்தை தவிர்க்கவேண்டும்.

உப்பு நீர் விதை முளைப்புத் திறனைப் பாதிப்பதால் முளைக்கும் வரை நல்ல நீரும் பின் செடி வளர்ந்த பின் ஓரளவு உப்பு நீரும் உபயோகிக்கலாம்.

கீரை வகைகள் அதிக சூரிய ஒளியில் அதிக விளைச்சல் தரவல்லது. 25-30 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலையில் நன்கு வளரும். தானியக்கீரை வெப்ப மண்டலத்திலும் குளிர் மண்டலத்திலும் பயிரிட ஏற்றது.

பருவம் :

ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம்.

நிலம் தயாரித்தல்:

நிலத்தை மூன்று முறை நன்கு எக்டருக்கு 25 டன்கள் நன்கு மக்கிய தொழு எருவை கடைசி உழவின் போது இட்டு மண்ணுடன் நன்கு கலக்கவேண்டும். பின் 2 x 1.5 மீ என்ற அளவில் சமபாத்திகளும் பக்கத்தில் நீர்ப்பாசனத்திற்கு வாய்க்கால்களும் அமைக்கவேண்டும்.

விதையும் விதைப்பும்:

விதையளவு : எக்டருக்கு 2.5 கிலோ

விதைத்தல் :

விதைகள் மிகவம் சிறியவையாக இருப்பதால் சீராக விதைக்க விதையுடன் 2 கிலோ மணல் கலந்து பாத்திகளில் நேரடியாகத் தூவவேண்டும். பின் விதைகளின் மேல் மண் அல்லது மணலை மெல்லிய போர்வை போல் தூவி மூடிவிடவேண்டும்.

நீர் நிர்வாகம்:

நீர்ப்பாய்ச்சுதல் : விதைத்தவுடன் பாத்திகளில் நிதானமாக நீர்ப்பாய்ச்சவேண்டும். அப்போதுதான் விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்கும். பின்னர் விதைத்த 3ம் நாள் உயிர்த் தண்ணீர் விடவேண்டும். அதன் பின்னர் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும். விதைத்த 6-8 நாட்களில் விதைகள் முளைத்துவிடும். பிறகு 12-15 செ.மீ இடைவெளியில் செடிகளை கலைத்து விடவும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு:

விதைத்த 21 நாட்களில் இருந்தே அறுவடை செய்யப்படுவதால் மருந்துகள் தெளிக்காமல் இருப்பது நல்லது.

அறுவடை:

 

அரைக்கீரை : விதைத்த 25 நாட்களில் தரையிலிருந்து 5 செ.மீ அளவில் கிள்ளி எடுக்கவேண்டும். பின் 7 நாட்கள் இடைவெளியில் 10 முறை அறுவடை செய்யலாம். எக்டருக்கு மகசூல் 30 டன்கள்.

முளைக்கீரை : விதைத்த 21-25 நாட்களில் வேருடன் பறிக்கவேண்டும். சிறிய செடிகளை 10 நாட்கள் இடைவெளியில் மற்றொரு முறை அறுவடை செய்யலாம். மகசூல் எக்டருக்கு 10 டன்கள்.

தண்டுக்கீரை : விதைத்த 35-40 நாட்களில் வேருடன் அல்லது கிளைகளை மட்டும் அறுவடை செய்யலாம். மகசூல் எக்டருக்கு 16 டன்கள்.

தானியக்கீரை : விதைத்த 25 நாட்களில் பசுங்கீரை எக்டருக்கு 8 டன்கள், விதைத்த 90-100 நாட்களில் அறுவடை செய்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம். தானியம் எக்டருக்கு 2.4 டன்கள்.

பொன்னாங்கண்ணி சாகுபடி

பொன்னாங்கண்ணி சாகுபடி

பொன்னாங்கண்ணி சாகுபடி: பொன்னாங்கண்ணிக் கீரையில் “தங்கசத்து’ உண்டு என்றும் இதனை முறைப்படி உண்டு வருபவரது உடல் தங்கம் போன்று உறுதியடையும் உண்மை என்றும் கூறுவர்.

இதனை “பொன் ஆம் காண் நீ’ “இதனை உண்ண உன் உடல் பொன்னாக காண்பாய்’ என்ற வழக்கிற்கேற்ப இந்த மூலிகையின் பெயர் அமைந்துள்ளது எனக்கூறுவர். இதனாலேயே இது கற்பக மூலிகை வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

செழிப்பாய் வளர்ந்த பொன்னாங்கண்ணிக் கீரையைச் செம்மையாய் நெய்யில் வதக்கி, மிளகு, உப்பு கூட்டி, புளியை நீக்கி கற்ப முறைப்படி ஒரு மண்டலம் உட்கொள்ள, உடல் அழகுபெறும். பொன்னிறமடையும், கண் குளிர்ச்சி உண்டாகும். மேலும் நோயற்ற நீண்ட ஆயுளும் பெறலாம்.

தொட்டிகளில் பராமரிப்பு:

பொன்னாங்கண்ணி மற்றும் கரிசலாங்கண்ணி கீரைகளை வேர்ச்செடி மற்றும் நுண்தண்டு மூலம் பயிர்பெருக்கம் செய்யலாம்.

வீடுகளில் எளிய முறையில் பராமரிக்கலாம். மண் தொட்டியில் மணல், மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு இவற்றை 3:1:1 விகிதத்தில் கலந்து தொட்டியில் நிரப்பி வேர்ச்செடிகள் அல்லது நுண்தண்டுகளை நடவேண்டும்.

பின்னர் பூவாளி வைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும்.
இதற்காக மண்புழு கம்போஸ்ட் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு மண் தொட்டிக்கும் 500 கிராம் அளவு மண்புழு கம்போஸ்ட் உரத்துடன், நன்மை தரும் நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, மைக்கோரைசா ஆகியவற்றை தொட்டிக்கு தலா 50 கிராம் வீதம் கலந்து ஆண்டுக்கு இரண்டு முறை (6 மாத இடைவெளியில் இடவேண்டும்).

பாத்தியில் வளர்த்தல்:

மண்ணை நன்றாக வெட்டி 1 சதுர மீட்டர் பாத்திக்கு 2 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்தை இட்டு மண்ணுடன் கலக்கி இட அளவுக்கேற்ப சிறிய பாத்திகளை அமைக்கலாம்.
வேர்களை உடைய பக்கச் செடிகளை நடவுக்கு பயன்படுத்தலாம்.
பாத்தியில் ஒரு அடி இடைவெளியில் செடிகளை நடவு செய்வது நல்லது.
தொட்டியில் பராமரிக்கும்போது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இயற்கை உரங்களான மண்புழு உரம் இடவேண்டும்.
தொட்டியிலும் பாத்தியிலும் செடிகளுக்கு தகுந்த ஈரப்பதம் இருக்கும் வகையில் நீர் தெளிக்க வேண்டும்.
இலைகள் அதிகம் தழைத்து வர இயற்கை உரங்களான பஞ்சகாவ்யா (லிட்டருக்கு 3 மிலி அளவு) தெளிப்பது நல்லது.
செடிகளை நட்ட 4வது மாதத்தில் இலைகளைத் தண்டுடன் கிள்ளி அறுவடை செய்யலாம்.
தரைமட்டத்திலிருந்து 5 செ.மீ. உயரத்தில் முழுச்செடியை வெட்டி எடுக்கலாம்.

தொடர்புக்கு: 61, ஆர்.கே.ஆர்.நகர், தாராபுரம்-638 656. திருப்பூர்.
எம்.அகமது கபீர், பி.எஸ்சி (அக்ரி), எம்.பி.ஏ.,

வேளாண்மை ஆலோசகர், 09360748542.

மல்லி சாகுபடி

மல்லி சாகுபடி

மல்லியை கீரைக்காக மானாவாரி மற்றும் இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.

இது செம்மண், வண்டல் மண் மற்றும் கரிசல் மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது.
வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் தாண்டினாலோ, மிக அதிக மழை பெய்தாலோ செடியின் வளர்ச்சி குன்றும்.

Continue reading

அதிக லாபம் தரும் வெந்தய கீரை

அதிக லாபம் தரும் வெந்தய கீரை

அதிக லாபம் தரும் வெந்தய கீரை!
குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் வெந்தயக்கீரை சாகுபடி குறித்து விளக்கும், புதுவையில் செயல்பட்டு வரும், சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் அபிவிருத்தி மையத்தின் இயக்குனர் கணேஷ் கூறுகிறார்:

வெந்தயக்கீரை பயிரிடும் முறை

நிலத்தை நன்றாக உழுது, தொழு உரமிட்டு, மீண்டும் ஒருமுறை உழுது கொள்ள வேண்டும்.
பின், சீரான இடைவெளியில் மேட்டுப் பாத்தி அமைத்து, அதன்மீது விதைகளை விதைக்க வேண்டும்.

விதைப்பதற்கு முன் வெந்தய விதைகளை, அசொஸ்பைரில்லம் மற்றும் ட்ரைகோடர்மாவிரிடி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

ஏக்கருக்கு, 4 முதல், 5 கிலோ வெந்தய விதைகள் தேவைப்படும். வடிகால் வசதியுடைய கரிசல் அல்லது அங்ககச்சத்து நிறைந்த, மணற்பாங்கான நிலத்தில் வெந்தயம் பயிரிடலாம்.
அக்., முதல், டிச., மாதங்களில் வெந்தய விதைகளை பயிரிடலாம். மானாவாரியாகவும், வெந்தயத்தை பயிரிடலாம்.

25 முதல், 28 டிகிரி வெப்பத்தில், இவை வளரக் கூடியவை.

அறுவடை:

விதைத்த, 10 முதல், 15 நாட்களுக்குள் வெந்தயச் செடிகள் முளைத்து விடும். 25 நாட்களில் வெந்தயச் செடியின் தழைகளை, கீரைகளாக அறுவடை செய்யலாம்.

90 முதல் 100 நாட்களுக்குள் வெந்தய விதைகளை அறுவடை செய்யலாம்.மூன்று நாட்களுக்கு ஒருமுறை, நீர் பாய்ச்ச வேண்டும்.

வெந்தயம் பயிரிடப்பட்டுள்ள நிலப்பகுதியை, ஈரப் பதத்துடன் இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக, தேங்காய் நாரை செடிகளின் இடையே இடலாம்.

மகசூல்:

வெந்தயச் செடிகளின் தழைகளை, கீரைகளாக விற்பனை செய்யலாம். ஏக்கருக்கு, 4 டன் கீரைகளை அறுவடை செய்யலாம்.

நம் பகுதிகளில் வெந்தய விதைகளை அறுவடை செய்ய வேண்டுமென்றால், நிழல் வலை அமைத்து பயிர் செய்ய வேண்டும்.

 

பயன்கள்:

மருத்துவ குணம் கொண்ட வெந்தயத்தை உட்கொண்டால், வயிற்று உபாதைகள் நீங்கும் என்பதோடு, சந்தையில் வெந்தயக் கீரைக்கு எப்போதுமே, ‘டிமாண்ட்’ அதிகம் உள்ளது. ஒரு கட்டு வெந்தயக் கீரையை சராசரியாக, 30 ரூபாய் வரை விற்பனை செய்வதன் மூலம், குறுகிய காலத்தில், அதிக லாபம் ஈட்டலாம்.