பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் பயிர்களின் எதிரிகள் என்று சிலர் கூறுகிறார்கள், உண்மை என்னவென்றால் எந்த ஒரு பூச்சியும் தாவரத்திற்கு எதிரி இல்லை, பூச்சிகள் தாவரத்தின் நண்பர்கள். இயற்கை யாருக்கும் யாரையும் எதிரியாக உருவாக்கவில்லை.
Category: Zero budget farming
இந்திய நாட்டு மாடுகள்
நமது நாட்டு மாடுகளை இந்திய மாடு என்று கூறுவதை விட இந்திய ஆப்பிரிக்க மாடுகள் என்று கூறலாம். எப்படி?
பேரூட்டங்களின் மூலம் எது
மண்ணை சோதிக்கும் போது மண்சோதனை முடிவுகள் பாஸ்பேட் உள்ளது என்று கூறும் ஆனால் அவை கிடைக்கப் பெறாத நிலையில் இரு துகள் மற்றும் முன்று துகள் நிலையில் உள்ளது. வனத்தில் உள்ள மண்ணிலும் ஒரு துகள் பாஸ்பேட் இருப்பதில்லை. இரு துகள் மற்றும் முன்று துகள் பாஸ்பேட் மட்டுமே இருக்கிறது. வனத்தில் உள்ள தாவரத்தின் ஒரு இலையை எடுத்துக்கொண்டு ஆய்வகத்தில் சோதனை செய்தால் அந்த தாவரத்தில் பாஸ்பேட் குறைபாடில்லை என்றே முடிவுகள் கூறும். அதாவது அந்த தாவரத்திற்கு பாஸ்பேட் கிடைத்துள்ளது, இதை வேர்பகுதிக்கு கிடைக்கச் செய்தது யார்? அவர்களே இரு துகள் மற்றும் மூன்று துகள் பாஸ்பேட்டை ஒரு துகள் பாஸ்பேட்டாக பிரித்துள்ளார்கள் யார் அவர்கள்?
தாவரங்களில் 108 தனிமங்கள்
இந்திய தத்துவத்தின் படி உயிரினங்களின் உடல் (தாவரங்கள் உட்பட) பஞ்ச பூதங்களால் ஆனது. இந்த பஞ்ச பூதங்கள் மேலும் 108 தனிமங்களாக பிரிகிறது. தற்கால விஞ்ஞானத்தின் மூலம் சில அடையாளம் காணப்படாத மூலப்பொருட்கள் செடியில் எங்கு உள்ளது என்று கண்டறிய முடியவில்லை ஆனால இந்ததிய தத்துவம் 5000 ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்கள் 108 தனிமங்களால் ஆனது என்பதை கூறியுள்ளது.
ஒளிச்சேர்க்கையும் உணவு உற்பத்தியும்
பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் பஞ்ச பூதங்களின் உருவாக்கப் பட்டுள்ளன. தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், நுண்ணுயிர்கள் என அனைத்தும் பஞ்ச பூதங்களால் ஆனது. இவை நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஐந்து பூதங்களாக உள்ளன.
பீஜாமிர்தம், ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் தயாரிக்க
பீஜாமிர்தம், ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் தயாரிக்க கடையில் இருந்து எந்த மூலப்பொருளும் வாங்க வேண்டியதில்லை. பயறு மாவு ஊடுபயிர்கள் மூலமாக நமக்கு கிடைத்துவிடும். சர்க்கரைக்கு பழமரங்களையும் வளர்த்து கொள்ளலாம், சுபாஷ் பாலேக்கர் விவசாயம் செலவைக் குறைக்கும் விவசாயம்.
நீர் மேலாண்மை – மூடாக்கு
இப்போது நம் காட்டில் முப்பது செமீ முதல் ஐம்பது செமீ வரை மூடாக்கு உள்ளது. உழவு செய்து ஏழு ஆண்டுகள் முடிந்து இது எட்டாவது ஆண்டு. இன்னும் இரண்டு வாரங்களில் மிளகாய் நாற்று நடவு செய்ய வேண்டும். முதலில் மூடாக்கு இட்டு அதன் பின்னரே நாற்று நடுவது. சரி இதனால் என்ன நன்மை? சாதாரணமாக மிளகாய் நட்டால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆனால் இங்கே நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் கொடுப்பது. வேர் பகுதியில் மண்ணை எப்போதும் வெப்பம் தாக்குவதில்லை. எனவே ஈரத் தன்மை முற்றிலும் காக்கப் படுகிறது.