மிகவும் எளிமையாக உயிர் உரங்களின் பயன்படுத்தும் முறைகள

மிகவும் எளிமையாக உயிர் உரங்களின் பயன்படுத்தும் முறைகள
#உயிர்உரங்களின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள், கேள்வி பதில்கள்

Continue reading

விளைநிலங்களை எலிகளிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள்

விளைநிலங்களை எலிகளிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள்

விளைநிலங்களை எலிகளிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள்

விவசாயத்தில் பூச்சி தாக்குதல் என்று எடுத்துக்கொண்டால், அவற்றை கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளது. ஆனால் தானிய பயிர்களை மட்டுமே அதிகமாக தாக்கும் எலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த விவசாயிகள் அதிகம் கஷ்டப்படுவார்கள். எனவே எலிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்கும் முறைகள் பற்றி பார்ப்போம்.

எலி தாக்குதல் :

🐀 நெல், மக்கசோளம், கரும்பு, பயிறுவகைகள், பருத்தி, கடலை போன்ற வயல்களில் எலிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

🐀 எலிகள் தாக்கப்பட்ட பயிர்களின் நாற்றுகள் துண்டுகளாய் வெட்டப்பட்டது போல் காணப்படும்.


🐀 மேலும் நெற்பயிர் வயலின் கரையோரங்களில் ஆரம்ப நாட்களில் சிறுசிறு பொந்துகள் ஆங்காங்கே காணப்படும். வளர்ச்சியடைந்த நெற்பயிர்களையோ அல்லது முதிர்ச்சியடைந்த நெல்மணிகளை கொhpத்து தின்றது போல காணப்படும்.

🐀 பொதுவாக நெல் வயல்களில் உள்ள எலிகள் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படும்.

தடுக்கும் முறைகள் :

🐀 வயல்களில் முதலில் உழவுக்கு முன்பு ஆட்டுப்பட்டி அமைத்தால், அந்த வயல்களில் எலி வரவே வராது.

🐀 ஒரே வயலில் தொடர்ந்து தானிய பொருட்களை மட்டும் சாகுபடி செய்யாமல், பு ச்செடிகள், மரவகைகள் என மாற்றி சாகுபடி செய்ய வேண்டும். மேலும் வைக்கோல் போர்களை வயலுக்கு அருகில் அமைக்காமல் இருக்க வேண்டும்.

🐀 பப்பாளிப்பழத்தை சின்ன சின்ன துண்டுகளாக்கி வயலில் ஆங்காங்கே வைத்தால் எலிகள் அதனை விரும்பி உண்ணும். இவை இனிப்பாக இருப்பதால் அவற்றை அதிகமாக உண்டு வயிற்றோட்டம் ஏற்பட்டு இறந்து விடும்.

🐀 வயல்களில் தெர்மோகோல் துண்டுகளை சீனிப்பாகு அல்லது சர்க்கரைப்பாகில் தோய்த்து ஆங்காங்கே வைத்தாலும் எலிகள் அவற்றை உண்டு உணவு செரிக்காமல் இறந்து போகும்.

🐀 வரப்புகளை அவ்வப்போது சீராக்குதல், கோடையில் வரப்பை வெட்டி அழிப்பது, எலி வலைக்குள் வைக்கோல் புகை மூட்டம் செய்து களிமண்ணால் வலை முழுவதும் பு சுவது, எலி பொந்துகள் சுவர் அருகில் இருப்பின் கல், சிமெண்ட், வைத்து பு சுதல் போன்றவைகளை பின்பற்றலாம்.

🐀 இரவு பறவையான ஆந்தைகள் வயல்களில் வந்து அமர்ந்து எலிகளை பிடிப்பதற்கு ஏதுவாக காலிப்பானைகள் அல்லது மண்சட்டிகளை தலைகீழாக கவிழ்த்து வு வடிவில் குச்சிகளை வைத்து அவற்றில் கட்டி வைக்கலாம்.

🐀 நெல் வயலில் எலியை கட்டுப்படுத்த சணப்பு பு வை சிறிய துண்டுகளாக்கி, அதை பரவலாக தூவி விட்டால் அதிலிருந்து வரும் வாடையினால் எலிகள் ஓடி விடும்.

🐀 எலி எண்ணிக்கையை குறைக்க ஒவ்வொரு பயிர் அறுவடைக்குப்பின்பும், எலி வலையைத்தோண்டி எலிகளை அழிக்க வேண்டும்.

🐀 எலிகள் அதிகம் தங்கும் வலைகள் உள்ள இடத்தில், தனி ஆட்கள் கொண்டு அவற்றைப் பிடித்து அழிக்க வேண்டும்.

பாசன நிலத்தை எவ்வாறு தயார் செய்வது

பாசன நிலத்தை எவ்வாறு தயார் செய்வது

1. நெல் அறுவடைக்குப் பின் கரும்பு பயிரிட பாசன நிலத்தை எவ்வாறு தயார் செய்வது?

நன்செய் நிலங்களில் மண்ணினை உழவு செய்து நல்ல மென்மை தன்மையைக்கொண்டு வர இயலாது.

நெல் அறுவடை செய்தபின் நிலத்தை நன்றாக உழுது 40 செ.மீ ஆழமும், 30 செ.மீ அகலமும் கொண்ட பாசன வாய்க்கால் – வடிகால்வாய் அமைக்கவும்.

Continue reading

புண்ணாக்கு

coconut-oil-cake

புண்ணாக்கு என்பது எண்ணெய்வித்து பயிர்களில் உருவாகும் விதையில் இருந்து எண்ணையை பிரித்தெடுத்த கழிவு. எந்த வகை புண்ணாக்கில் என்ன சத்துக்கள் உள்ளன என்பது பற்றி

Continue reading

முருங்கைக்காயும் அதன் சுவையும்..!

முருங்கைக்காயும் அதன் சுவையும் moringa-oleifera-leaves-and-pods
முருங்கைக்காயும் அதன் சுவையும்..!

பொதுவாகவே அசைவப்;பிரியர்;களுக்கு ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவம் சாப்பிட்டால் தான் அந்த நாள் ஞாயிற்றுக்கிழமை போல் உள்ளது என தோன்றும்.

அதேபோன்று பருப்பு சாம்பார் என்றாலே முங்கைக்காயும், முள்ளங்கியும் இருக்க வேண்டும். விருந்து நிகழ்ச்சிக்கு உறவினர்கள் உள்ளார்களோ இல்லையோ, ஆனால் விருந்துக்கு சமைத்த சாம்பரில் முருங்கக்காய் இருக்கனும். அந்த அளவிற்கு சுவை தரக்கூடியது முருங்கக்காய்.

எதற்காக முருங்கையை பற்றி சொல்லறாங்கனு பார்க்கறீங்களா… ஏனா.. இப்போ நாம் முருங்கை சாகுபடி பற்றி தெரிஞ்சுக்க போறோம்.

முருங்கை :

🌱 முருங்கைக்காயுக்கு பொதுவாக ஆண்டு முழுவதுமே சந்தையில் கிராக்கி உண்டு. அதுவும் முகூர்த்த நாட்கள், விரத காலங்களில் சொல்லவே வேண்டியதில்லை. அவ்வளவு உச்சத்திலிருக்கும் முருங்கையின் விலை.

🌿 தற்போதும் முருங்கையின் விலை அப்படி தான் உள்ளது. ஒரு கிலோ குறைந்தபட்சம் 90 ரூபாயிலிருந்து 130 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

🌱 ஒரு கிலோ ரூ. 10, ரூ. 20 க்கு விற்க்கப்பட்ட காலம் போய், தற்போது ரூ. 90, ரூ. 100-க்கு கூட முருங்கை கிடைக்காத காலமாக உள்ளது.

🌿 இதனால் முருங்கை செடிகளை பயிரிட்டு தற்போது முருங்கை அறுவடை செய்யும் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆனால் மக்கள்தான் மயக்கமாகியுள்ளனர்.

🌱 இவ்வளவு விலை விற்கும் முருங்கை செடிகளை வளப்பது அவ்வளவு ஒன்றும் கஷ்டம் இல்லை. வீட்டு உபயோகத்திற்கு தேவையான முருங்கை காய்களை பெற வீட்டின் வெளிப்புறத்தில் மூன்று அடி நீளமுடைய இரண்டு முருங்கை குச்சிகளை நட்டு வளர்த்தாலே போதும்.

🌿 முருங்கை கீரை முதல் காய் வரை அனைத்தையும் அந்த மரத்தில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம்.

🌱 முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர். இலைகள், வேர், காய், விதை எண்ணெய் என முருங்கையின் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டவை.

நடவு செய்வதற்கு ஏற்ற பருவம் :

🌱 தற்போது முருங்கை செடி அல்லது முருங்கை குச்சிகளை நடவு செய்து வளர்த்துவதற்கு ஏற்ற பருவமாகும்.

🌿 முருங்கை கன்றுகளை 45 செ.மீ நீள, அகல இடைவெளியில் நட்டு வளர்த்தாலே போதும். இதற்கு பாதுகாப்பு அதிகம் தேவைப்படாது. நன்கு வளரும் வரை ஆடு, மாடுகள் கடிக்காமல் பார்த்துக்கொண்டாலே போதும்.

🌱 ஒரு கன்றுக்கு வேப்பம் புண்ணாக்கு 150 கிராம் மற்றும் 1 கிலோ மண்புழு உரம் அல்லது தொழு உரத்தை போட்டு முருங்கை மரக்கன்றை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மரம் கணுவு விடும் போது ஒரு கணுவு விட்டு அடுத்தகணுவை கிள்ளி விடவேண்டும்.

🌿 முருங்கை மரத்தின் அடியிலேயே கிள்ளி விட்டால் அதிக உயரம் வளராமல், மரம் நிறைய போத்துகள் வெடித்து அதிக பக்ககன்றுகளுடன் இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் ஏற்றினாலே போதும். 6 மாதத்தில் காய் வந்துவிடும்.

🌱 தொடர்ந்து 5 வருடங்கள் வரை காய்வரும். பூச்சி, புழு தென்பட்டால் வேம்பு சார்ந்த மருந்துகள் அடித்தாலே போதும். முருங்கை பூ பூக்கும் சமையத்தில் தண்ணீர் பாய்ச்சுவதை குறைக்க வேண்டும்.

🌱 முருங்கையில் பூ எடுக்கும் சமையத்தில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி நன்கு புளித்த தயிரை செடியின் மீது தெளித்துவிட்டால் பூக்கள் கொட்டாமல் காய் நிறைய பிடிக்கும்.

🌿 அப்பரம் என்னங்க.. இன்றே முருங்கை செடி அல்லது மரத்தை நட்டு வளர்க்க ஆரப்பியுங்கள்.

காய்கறி சாகுபடி பட்டம்

காய்கறி சாகுபடி பட்டம்

“காய்கறி சாகுபடி பட்டம் ”

எந்தெந்த பட்டத்துல எந்தெந்த காய்கறி சாகுபடி செய்யவேண்டுமென தெரிந்து கொள்வது காய்கறி வேளாண்மையை லாபகரமாக மாற்றும் :

Continue reading

பால் கறத்தல் மற்றும் பால் உற்பத்தி முறைகள்

பால் கறத்தல் மற்றும் பால் உற்பத்தி முறைகள்
பால் கறத்தல் மற்றும் பால் உற்பத்தி முறைகள்.

கறவை மாடுகள் வைத்திருப்போர், சுத்தமாக பால் உற்பத்தி செய்வது பற்றி அறிந்து, கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

பால் ஓர் இன்றியமையாத சமச்சீர் உணவாகும். இது, பச்சிளம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாகும். பாலில் அசுத்தம் சேராதவாறு சேகரித்து நன்கு காய்ச்சி உட்கொள்வது மிக முக்கியம்.

பாலில் கொழுப்புச் சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள் போன்ற பல இன்றியமையாத சத்துப் பொருள்கள் உள்ளன. சாதாரணமாக விற்பனைக்கு வரும் பசும்பாலில் 3.5 சதம் கொழுப்பு சத்தும், 8.5 சதம் கொழுப்பில்லாத மற்ற திடப்பொருளும் இருத்தல் வேண்டும்.

பாலில் நமது உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துகளும் சரியான விகிதத்தில் உள்ளன.

அசுத்தமான சூழ்நிலையில் பால் உற்பத்தி செய்தால், பாலின் மூலம் காசநோய், தொண்டை அடைப்பான், டிப்தீரியா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு முதலிய நோய்கள் வரக்கூடும். மேலும், பாலில் சேரும் கிருமிகள் பன்மடங்கு பெருகி, அதன் தரத்தையும் கெடுத்துவிடும்.

பாலை வெளியே வெதுவெதுப்பாக நம் சுற்றுச் சூழ்நிலையில் நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது. கிருமிகள் வெகுவாக வளர்ந்து பால் கெட்டு விடும். எனவே, கறவை மாடுகள் வைத்திருப்போர், சுத்தமாக பால் உற்பத்தி செய்வது பற்றி அறிந்து, கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

பால் கறக்கும் முறைகள்:

 

முழு விரல்களை உபயோகித்தல்

இம் முறையில் ஒரு கையின் விரல்களால் காம்பினைப் பிடித்து, உள்ளங்கையில் அழுத்துவதால் பால் கறக்க முடியும். இம் முறையில் காம்பின் எல்லா பாகங்களிலும் ஒரே அளவான அழுத்தம் கிடைக்கும். பெரிய காம்புகள் உள்ள பசுக்களிலும், எருமைகளிலும் இம் முறையைக் கையாள்வது சிறந்தது.

இரு விரல்களை உபயோகித்தல்:

கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் காம்புகளைப் பிடித்து, சிறிய அழுத்தம் கொடுப்பதன் மூலம் பால் கறக்க முடியும். இம் முறையில் காம்புகளுக்கு ஒரே சீரான அழுத்தம் கிடைக்காது.

மேலும், காம்பின் மேல் பாகம் இதனால் பாதிக்கப்பட்டு, சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இம் முறையைக் காட்டிலும் முழு விரல்களை உபயோகிப்பது சிறந்தது.

பால் கறத்தல்:

மாடுகளில் பால் கறத்தல் என்பது தனிக் கலையாகும். இதற்கு, முதிர்ந்த நல்ல அனுபவமும், திறமையும் தேவை. பால் கறக்கும்போது கவனமாகவும், அமைதியாகவும், விரைவாகவும், அதே சமயம் பாலை முழுமையாகவும் கறக்க வேண்டும்.

சுத்தமாக பால் கறக்கும் முறைகள்:

பால்காரர் தனது கையை சுத்தமாகக் கழுவ வேண்டும் மற்றும் மாட்டின் மடியை சுத்தமாகத் துடைக்க வேண்டும். காம்பிலிருந்து வரும் முதல் பீச்சில் திரி மற்றும் சீழ் இருக்கிறதா என்று பரிசோதித்து, அவ்வாறு இருந்தால் கீழே ஊற்றி விட வேண்டும்.

பாலில் சேரும் அசுத்தத்தைக் கட்டுப்படுத்தும் முறைகள்:

கறவை மாடுகளின் மடியிலேயே சில கிருமிகள் இருப்பதற்கு வாய்ப்புண்டு. ஆரோக்கியமான மாடுகளில் இவ் வகையான கிருமிகள் எவ்விதமான கெடுதலும் செய்வதில்லை. எனவே, பால் கறக்கும்போது முதலில் வரும் பாலை நீக்கி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் காம்பினுள் உள்ள கிருமிகளை நீக்கி விடலாம்.

மாடுகளை அடிக்கடி நன்கு தேய்த்து, கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மடியின் மீதும், பக்கத்திலுள்ள இடங்களிலும் நீண்ட உரோமம் காணப்பட்டால், அவற்றை கத்தரித்து நீக்கலாம்.

கறப்பதற்கு முன் மடி, பக்கத் தொடை ஆகிய பாகங்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த நீரினால் கழுவி, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். கொட்டகையில் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

சுத்தமான பாத்திரங்களை உபயோகப்படுத்த வேண்டும். பால் பாத்திரங்களை சுத்தம் செய்தபின், தண்ணீர் அல்லது சுடுதண்ணீராலோ சுத்தம் செய்ய வேண்டும். சூரிய ஒளியில் நன்கு உலர்த்திட வேண்டும். ஈரத்தைப் போக்க துணியைக் கொண்டு துடைப்பது நல்லதல்ல. சோப்பு உபயோகிக்கக் கூடாது. ஏனென்றால், இவை பாலில் ஒவ்வாத வாசனையை ஏற்படுத்திவிடும்.

பால் கறப்பதற்கும், சேகரிப்பதற்கும் அதற்கென தயாரிக்கப்பட்ட பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும்.

பாலை பாதுகாத்தல்:

பாலை கறந்தவுடன் கொட்டகையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால், மாட்டுத் தொழுவத்தில் உள்ள நாற்றம் பாலில் சேர்ந்து விடும்.

பாலை கறந்தவுடன் வடிகட்ட வேண்டும். பாலை 5 டிகிரி செல்சியஸூக்கு குளிர்ப்படுத்த வேண்டும். குளிர் சாதனம் இல்லையெனில், குளிர்ந்த நீரில் பாத்திரத்தை வைக்க வேண்டும்.

பாலை கறந்த 4 மணி நேரத்துக்குள் விற்பனை நிலையத்துக்கு அனுப்ப வேண்டும்.