Tag: பசுமை வீடுகள்

லாரிபேக்கர் கட்டிடத்துறையின் காந்தி

லாரிபேக்கர் கட்டிடத்துறையின் காந்தி

திருவனந்தபுரம் ரயில்வே நிலையத்தையோ அல்லது பேருந்து நிலையத்தையோ கடந்து செல்லும் எவரும் அந்த இந்தியன் காஃபி ஹவுஸ் கட்டிடத்தின் மீது விழி பதிக்காமல் கடக்க முடியாது. நான் திருவனதபுரத்திற்கு செல்லும்போதெல்லாம் பிரம்மாண்டமான கலோசியத்தின் ஒரு பகுதி போலிருக்கும் அந்த கட்டிடத்தில் சென்று தேங்காய் எண்ணெயில் சுடப்பட்ட மைதா பூரியையும், தொட்டுக்கொள்ள பீட் ரூட் உருளை குருமாவையும் ஒரு ஜன்னலோரம் அமர்ந்து அவசரகதியில் இயங்கும் உணவகத்தில் கொஞ்சம் நிதானமாக வேடிக்கை பார்த்தப்படி உண்டபடி அமர்ந்திருப்பது வழக்கம். அது லாரி பேக்கர் கட்டிய கட்டிடம் என்று அவரை பற்றி அண்மையில் வாசித்த போது தான் அறிந்துகொண்டேன். லாரி பேக்கர் எனும் வரலாற்று ஆளுமையை அறிந்து கொண்டதும், நான் உணவருந்திய எனக்கு பிடித்தமான கட்டிடம் அவர் கட்டியது என்று அறிந்து கொண்டதும் எனக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது.

Continue reading

புவிதம் பள்ளி

புவிதம் பள்ளி

நிச்சயம் மரபு முறையில் வீடு கட்ட நினைக்கும் அத்தனை பேரும் இந்த கட்டிடங்களை நிச்சயம் பார்வையிடவேண்டும் உங்களுடைய சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் உங்கள் கண் முன்னே காணலாம்.

Continue reading

நீங்கள் வீட்டு மனை இடம் வாங்கி இருக்கிறீர்களே அது விவசாய பூமியா விவசாயத்துக்கு பயன்படாத பூமியா

நீங்கள் வீட்டு மனை இடம் வாங்கி இருக்கிறீர்களே அது விவசாய பூமியா விவசாயத்துக்கு பயன்படாத பூமியா

ஜக்கியை காட்டை அழித்துவிட்டார்,வன விலங்கு வழிதடத்தை அளித்துவிட்டார், என்று கூச்சல் போடுகிறீர்களே அதை நான் தவறு என்று சொல்லவில்லை ஆனால் நீங்கள் வீட்டு மனை இடம் வாங்கி இருக்கிறீர்களே அது விவசாய பூமியா விவசாயத்துக்கு பயன்படாத பூமியா?…

Continue reading

நீங்கள் ஏன் இதை செய்வதில்லை

90 சதமான மக்கள் கேரளாவில் வீடு கட்டும்போது இதுபோல சுவர் எழுப்பும்போதே கதவு மற்றும் ஜன்னலகளின் நிழவுகளை வைத்துவிடுகிறார்கள்.நானும் வைத்துவிடுகிறேன்.காரணம் மீண்டும் உடைக்க வேண்டிய தேவை இல்லை.மற்றும் சுவர் கட்டும் போது தூக்கு (plumb) விட வேண்டிய தேவை இல்லை.கட்டுமான செலவு குறைகிறது.

Continue reading

இயற்கை மரபு வீடுகள்

இயற்கை மரபு வீடுகள்

சென்னையில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் அண்மையில் நடைபெற்ற ஐம்பூத விழாவில், சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணன் கலந்து கொண்டு பேசினார். வீட்டுக் கூரைகளில் வெள்ளைப் பூச்சு பயன்படுத்துவதால் ஏற்படும் பயன் பற்றி அவர் குறிப்பிட்டுப் பேசினார்.�“புவி வெப்பமடைதல் பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது.

இதைத் தடுக்க வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் இதில் பங்கெடுக்க வேண்டும். வீட்டின் மேற்கூரையில் வெள்ளைப் பூச்சு பூசுவதன் மூலம் நாம் உதவ முடியும். வெள்ளைப் பூச்சு வெப்பத்தைக் கிரகிக்காது என்பதால், வீடு உஷ்ணமாவது கணிசமாகக் குறையும். வீட்டுக்குள் வெப்பம் ஊடுருவதைத் தவிர்க்க முடியும். இதனால் வீட்டில் அனல் அடிப்பது குறையும்.
வீடுகளில் ஃபேன், ஏ.சி. பயன்பாடு குறையும்.இதன்மூலம் மின் கட்டணம் சிக்கனமாகும் .இதெல்லாம் நேரடி பயன்கள்.
ஏ.சி. பயன்பாடு குறைவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் நாம் உதவ முடியும். வீட்டின் மேற்கூரை மட்டுமின்றி, வீடு முழுவதும் வெள்ளைப்பூச்சில் இருந்தால் இன்னும் நல்லது’’ என்று ரமணன் வலியுறுத்திப் பேசினார்

Continue reading

மாற்று கட்டுமானமும் மக்களின் மனநிலையும்

சமீபத்தில், எங்கள் க்ளையண்ட் ஒருவரிடம் பேசும்போழுது சொன்னார் –

நீங்க எவ்ளோதான் சொல்லி புரியவெச்சாலும், யாரையும் மாத்த முடியாதுங்க. ரொம்ப நாளா ஒரே மாதிரி யோசிச்சு மைண்ட் ஃபிக்ஸ் ஆகிருக்கும். நீங்க எடுக்கற முயற்சிலாம் பிரயோஜனம் இல்லாமயே போய்டும்னு சொல்லாம சொன்னாங்க. அவருக்கு நாங்கள் ஆரம்பத்திலிருந்து  இதற்கான முயற்சிகள் எடுக்கும் போதிலிருந்தே அவர் எங்களை கவனித்து வருகிறார். ஒரு வெல்விஷராக எங்கள் மீதான அக்கறை தான் அப்படி வெளிப்படுகிறது என்று எனக்கு தோன்றுகிறது.

அவர் சொல்வது சரி தானா? இது நடுநிலையான ஒரு புரிதல் என்று எடுத்துக்கொள்ளலாமா?

பல ஆண்டுகளாக கண்டிஷன் செய்யப்பட்ட எண்ண ஓட்டத்தோடு போராடுவது அவ்வளவு எளிதல்ல. அதை நாங்கள் புரிந்தே இருக்கிறோம். இதை விளக்க ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. டெட்டால் -சாவ்லான் மோதிய வரலாறு.

Continue reading