சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகை, கடலூர் மாவட்ட விவசாயிகளின் நிலமெல்லாம் கடல் நீர் புகுந்து உப்பு படிந்தது. நிலத்தை சோதித்த விவசாயத் துறை வல்லுநர்களும், மிகப் பெரும் விஞ்ஞானிகளும் நிலத்தை சோதித்து இந்த நிலத்தில் பயிர் செய்ய பல வருடமாவது ஆகும் என்றனர். நிறைய செலவும் ஆகும் என்று கைவிட்டனர்.
இந்நிலையில் நம்மாழ்வார் ஐயா அவர்கள் அந்த நிலங்களை வேளாண் நிலங்களாக மாற்ற முடியும் என்று கூறினார். பேசியதுமட்டுமல்ல, மூன்றே மாதங்களில் அந்த நிலங்களை விளை நிலங்களாக மாற்றியும் காட்டினார் அவர்.