வரகு சாகுபடியும்
நம் முன்னோர்களின் நுட்பமும் ………
நம் முன்னோர்கள் சிறுதானியங்களில் முன் காலங்களில் பல நுட்பங்களைக் கையாண்டுள்ளனர் அதனில் வெள்ளாடை கொண்டு மேய்ப்பது ……
தமிழகத்தில் மானாவாரி பயிர்களில் பருத்தி மக்காச்சோளம் மட்டுமே இந்த காலகட்டத்தில் பிரதானமாக உள்ளது…
இதனால் நாம் பல பாதிப்புகளையும் சந்தித்து வருகிறோம் நஷ்டங்களையும் சந்தித்து வருகிறோம்….
ஆனால் நம் முன்னோர்கள் சிறுதானியங்களை விதைத்து வந்தனர் அதில் பல நுட்பங்களை பயன்படுத்தினர் …….
அதில் வரகு சாகுபடி விதைத்து 40 நாட்களுக்கு பிறகு கதிர் வரும் தருவாயில் ஆடுகளை கொண்டு வரகு விதைத்த வயலில் மேய்ப்பர்கள் இதனால் வரகு கதிர் விடும் நேரங்களில் வெள்ளாடு வரகின் தண்டை மொட்டையாக கடிக்கும் போது அதிலிருந்து கதிர் பூக்கும் பக்க கிளைகள் அதிகமாக வருகிறது இதனால் கதிர்கள் அதிகம் கிடைக்கின்றது இப்படி கதிர்கள் அதிகம் கிடைக்கும் போது நமக்கு வரகின் விளைச்சலும் அதிகமாக இருக்கும் இந்த நுட்பத்தை நம் முன்னோர்கள் கையாண்டு வந்தனர்..
பொதுவாக வெள்ளாடு எந்த பயிரையும் மொட்டையாக கடிப்பது அதன் பழக்கம் இதனால் இந்த நுட்பம் லாபகரமாக வரகில் கையாளப்பட்டுள்ளது…
மொட்டையாக என்பது பயிரின் நுனிகளை மட்டும் உண்ணும்.. முழுவதுமாக பில்களை உண்ணாது…..
இதனில் மற்றொரு நுட்பம் உள்ளது அக்காலங்களில் மழை அதிகமாக பொழிவதால் கால்நடைகளை வெளியில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல முடியாது அப்படி கொண்டு சென்றாலும் அவை ஈரமாக உள்ள பில்களை மண்ணுடன் இருக்கும்போது உண்ண முடியாது இதனால் மேய்ச்சலுக்கு அதிகமாக கொண்டு செல்ல முடியாது ஆனால் வரகு சாகுபடி என்பது இப்படி செய்வதினால் ஆடுகளுக்கும் தீவனமாகக் கிடைத்து விடுகிறது நமக்கும் வரகு சாகுபடி விளைச்சல் அதிகமாக கிடைக்கிறது இதனால் 2 லாபகரமான விஷயங்களை நம் முன்னோர்கள் கையாண்டுள்ளனர்…..
இதனில் மற்றொரு உண்மை என்னவென்றால் அந்த வயலில் மேயும் ஆடுகள் தனது கழிவுகளை அந்த வயலிலே இட்டுச்செல்கிறது இதுவும் அந்த வயலுக்கு உரமாகவும் ஆகிவிடுகின்றது…
இதேமாதிரி இப்பொழுது இந்த விவசாயி கையாண்டுள்ளார் பார்த்ததில் கற்ற பாடம்……
சிறுதானியம் பயிர் செய்வோம்…..
நோய்கள் இன்றி வாழ்வோம்…..
இடம்:பெரம்பலூர் மாவட்டம்…
எளம்பலூர் கிராமம்…
நன்றி…
அகரம் பனை ஆனந்த்…..