காட்டுப் பன்றியிடம் இருந்து பயிர்களை காக்கும் வழிகள்

காட்டுப் பன்றியிடம் இருந்து பயிர்களை காக்கும் வழிகள் wild pig
Agriwiki.in- Learn Share Collaborate
காட்டுப் பன்றியிடம் இருந்து பயிர்களை காக்கும் வழிகள் !!

🐖 காட்டுப் பகுதிகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காட்டுப் பன்றி போன்ற வனவிலங்குகளினால் ஏற்படும் சேதம் அதிகமாக இருக்கும்.

🐷 இவைகள், காட்டில் உள்ள இயற்கையான உணவைக் காட்டிலும், நெல், சோளம், மக்காச் சோளம், பயறு வகைகள், போன்றவைகளை அதிக அளவில் நாடுகின்றன.

🐖 காட்டுப் பன்றிகள், பயிர்களை உண்பதை விட அவற்றை அதிக அளவில் சேதம் செய்கிறது.

🐷 பெரும்பாலும், இவைகள் மாலை மற்றும் விடியற்காலை வேளைகளில் வெளியே செல்லும்.

🐖 காட்டுப் பன்றிகள் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் இவற்றைக் கொல்வது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது.

🐷 எனவே, இவற்றை தாக்காமல், அவைகளிடம் இருந்து பயிர்களைக் காக்க சில வழிகளை மேற்கொள்ளலாம்.

பாரம்பரிய வழிமுறை :

🐖 இவைகளுக்கு மோப்பத்திறன் அதிகம் உள்ளதால் பயிர்களை எளிதில் கண்டுபிடித்து விடுகிறது.

🐷 எனவே விவசாயிகள் முடிதிருத்தும் கடையிலிருந்து மனித முடிகளை வாங்கி பயிர்களைச் சுற்றி வேலிப் போல், மெலிதாக கோடுபோல் பரப்பி விட வேண்டும்.

🐖 இதனால் காட்டுப்பன்றிகள் அந்த இடத்தை நுகரும் போது, இந்த மனித முடிகள் பன்றிகளுக்கு எரிச்சலை உருவாக்கும்.

🐷 இதன் மூலம் அவை பாதிப்புக்குள்ளாகி, அபாயக் குரல் எழுப்பும். இதனால் மற்ற காட்டுப் பன்றிகளும் சேர்ந்து விரட்டப்படும்.

வரப்புகளில் ஆமணக்கு பயிரிடுதல் :

🐖 நெல், சோளம் போன்ற பயிர்கள் பயிரிட்டு, வரப்பினைச் சுற்றி 4 வரிக்கு ஆமணக்கு பயிரிட வேண்டும்.

🐷 ஏனெனில் ஆமணக்கு வாசம் மற்ற பயிரின் வாசத்தை மறைத்துவிடும்.

🐖 மேலும் ஆமணக்கில் அதிக அளவு ஆல்காய்டுகள் இருப்பதாலும், அவை சுவையின்றி இருப்பதாலும், காட்டுப் பன்றிகளுக்கு பிடிக்காது