வறட்சியை சமாளிக்கும் சுழற்சி முறை சாகுபடி

வறட்சியை சமாளிக்கும் சுழற்சி முறை சாகுபடி
Agriwiki.in- Learn Share Collaborate
வறட்சியை சமாளிக்கும் சுழற்சி முறை சாகுபடி

🦋விவசாயிகள் தற்பொழுது நிலவி வருகின்ற வறட்சியை சமாளித்து வெற்றியடைய ஒரே மாதிரியான பயிரை சாகுபடி செய்வதைத் தவிர்த்து, சுழற்சி முறையில் பயிர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

பயறு வகைகளுக்குப் பிறகு

🌱பயறு வகைகள் பயிரிடும் விவசாயிகள் அதன் பிறகு வேறு வகை பயிர்களை அல்லது தானியங்களை ஊடுபயிராக பயிரிடலாம்.

🌱எள், கடலை ஆகிய பயிர்கள் மண்ணில் உள்ள சத்துகள் அனைத்தையும் உறஞ்சிவிடும் தன்மை கொண்டவை.

🌱எனவே, இத்தகையப் பயிர்களைப் பயிரிட்ட பிறகு பயறு வகைகளைப் பயிரிட்டால் சத்துக்களை மண்ணில் நிலை நிறுத்தும்.

இலைகள் மண்ணில் உதிர்வதற்கு

🌱அவ்வப்போது இலைகள் மண்ணில் உதிரும் வண்ணம் உள்ள செடிகளையும் பயிரிடலாம்.

🌱பருத்தி, நெல், கோதுமை, பயறு வகைகள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

தானியப் பயிர்களுக்குப் பிறகு

🌱மானாவாரியாகவோஇறவைப் பயிராகவோ தானியங்களை பயிரிடும் விவசாயிகள், தானிய விளைச்சலுக்குப் பிறகு பசுந்தாள் உரத் தாவரங்களைப் பயிரிடலாம்.

🌱சணப்பை , நெல், துவரம் பருப்பு, பச்சைப் பயறு, மக்காச்சோளம் ஆகியவற்றைத் தேர்வு செய்யலாம்.

🌱நல்ல அதிக ஊட்டச்சத்து தேவையுடைய பயிர்களுக்குப் பிறகு குறைந்த ஊட்டச்சத்து தேவையுடைய மக்காச் சோளம், உளுந்து, பூசணி வகைகளை பயிர்களைப் பயிரிட வேண்டியது அவசியம்.

பருவம் சார்ந்தவை

🌱பருவம் சார்ந்த பயிர்களை பயிரிட்ட பிறகு ஓராண்டுக்கு தாவரங்களைப் பயிரிட வேண்டும்.

🌱நெல், கரும்பு பயிரிட்ட பிறகு நிலக்கடலை, தட்டைப் பயறு பயிரிடலாம்.

காய்கறி சாகுபடி செய்த பிறகு

🌱காய்கறி வகைகளை சாகுபடி செய்த பிறகு தீவனப் பயிர்களைப் பயிரிடலாம்.

🌱சோளம், தட்டைப் பயறு, உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், வெங்காயம்
என சுழற்சி முறையில் பயிர் செய்தால் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

🌱விதைத் தவாரங்களுக்குப் பிறகு வேர்த் தாவரங்களைப் பயிரிடலாம்.

மறுதாம்புப் பயிர்களுக்குப் பிறகு

🌱மறுதாம்புப் பயிர்களுக்குப் பிறகு ஆழமான வேர்கள் செல்லக் கூடிய பயிர்களை சாகுபடி செய்யலாம்.

🌱உருளைக் கிழங்கு, மஞ்சள், பீட்ரூட், கேரட், நெல், வெங்காயம், காய்கறி என சுழற்சி முறையை கடைப்பிடிக்கலாம்.

ஆழமான வேர்களைத் தொடர்ந்து

🌱ஆழமான வேர்களைத் தொடர்ந்து மேலோட்டமான வேருள்ள  பயிர்களை விதைக்கலாம்.

🌱இதற்கு பருத்தி, ஆமணக்கு, துவரம்பருப்பு, உருளைக் கிழங்கு, பச்சைப் பயறுகள் சிறந்தவை.

கோடை உழவுக்குப் பிறகு

🌱அதிக ஆழமான உழவு தேவைப்படும் பயிர்களை, கோடை உழவு முடிந்த பின்னர் சாகுபடி செய்வது அவசியம். சற்று இறுகிய மண்ணிலும் வளரக் கூடிய தாவரங்களைப் பயிரிடலாம்.

🌱உருளைக் கிழங்கு, முள்ளங்கி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கரும்பு, உளுந்து, பசுந்தாள் உரம் என சுழற்சி முறையில் வகைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இரு விதையிலைத் தாவர சாகுபடிக்குப் பிறகு

🌱இரு விதையிலைத் தவாரங்களை சாகுபடி செய்த விவசாயிகள் அடுத்தபடியாக ஒரு விதையிலைத் தாவரங்களைப் பியிரட வேண்டும்.

🌱ஊடுபயிர் இல்லாத தனிப் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் அரிதாள் கட்டை விடும் பயிர்களை சாகுபடி செய்வது சிறந்தது.

பூச்சித் தாக்குதலில் இருந்து காக்க

🌱சில வகை பூச்சிகள் குறிப்பிட்ட பயிர்களைத் தாக்கும் ஆற்றல் கொண்டவை.

🌱எனவே, அத்தகையப் பயிர்களைப் பயிரிடும் விவசாயிகள் அடுத்த முறை அதற்கு மாற்றாக உள்ள பயிர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

🌱சில பயிர்களில் குறிப்பிட்ட வகை களைச் செடிகள் தொடர்ந்து முளைத்த வண்ணம் இருக்கும்.

🌱இதனைக் கட்டுப்படுத்த சுழற்சி முறை பயிர் சாகுபடி அவசியமானது.

🌱மேய்ச்சல் பயிர்களுக்குப் பிறகு தீவனம் அல்லது விதைப் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்.

🌱பாராபுல், சோளம், அவரை, நெல் என வரிசைப்படுத்திக் கொள்ளலாம்.

சுத்தப்படுத்தும் தாவரங்களுக்குப் பிறகு

🌱சுத்தப்படுத்தும் தாவரங்களுக்குப் பிறகு விதைத் தாவரங்களை தேர்வு செய்ய வேண்டும்.

🌱மக்காச் சோளம், நிலக்கடலை, வெங்காயம், அவரை, கம்பு என திட்டமிடல் வேண்டும்.

ஒரே வகை பயிர்களை சாகுபடி செய்யாமல் மேற்கண்டபடி சுழற்சி முறையில் பயிர்களை சாகுபடி செய்தால் வறட்சியை சமாளித்து விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம். மண் வளமும் பாதுகாக்கப்படும்.