விவசாயிகள் தோல்வி என்ன விவசாயிகளிடம் என்ன மிஸ்ஸிங் ? எப்படி மிஸ்ஸிங்

விவசாயிகள் தோல்வி என்ன விவசாயிகளிடம் என்ன மிஸ்ஸிங்
Agriwiki.in- Learn Share Collaborate

விவசாயிகள் தோல்வி என்ன? , விவசாயிகளிடம் என்ன மிஸ்ஸிங் ? எப்படி மிஸ்ஸிங் ?

செந்தில் சின்னசாமி

1 . விவசாயத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் படிக்காதவர்கள் , அதாவது எந்த தொழிலும் கிடைக்க வில்லை என்பதால் விவசாயம் செய்பவர்கள் அதிகமாக உண்டு .. படித்தவர்கள் , கொஞ்சம் அறிவாளிகள் அதிக லாபம் வரும் தொழிலுக்கு மாறி கொள்கிறார்கள்.

2 . எந்த சூழல் ,என்ன விவசாயம் செய்யலாம் என்ற பொது அறிவு சுத்தமாக இல்லை .., இந்த விவசாயிகளுக்கு பொதுவாகவே சொந்த புத்தியும் இருக்காது , சொல்லு புத்தியும் இருக்காது, தானே அறிவாளி என்ற மட்டமான புத்தி .

3 . அந்த ஈ அடிச்சான் காப்பி அடிக்கும் மாணவர்களை போல பக்கத்தில் இருப்பவர் என்ன விதைக்கிறர்ர்களே, பயிர் செய்கிறர்ர்களோ அதையே பயிர் செய்வார்கள் .

4 விவசாயத்தில் ஒரு பிளான் என்பதே சுத்தமாக இல்லை . மனம் போன போக்கில் விவசாயம் , செய்த் வேலையவே திருப்பி திருப்பி செய்யும் மன நிலை , ஒரு சிஸ்டம் அவர்களிடம் இல்லை

5 . என்ன முதலீடு போடுகிறோம் , என்ன வரும் என்ற வியாபார யுத்தியும் இல்லை , அதை யாருக்கு விற்க போகிறோம் , எப்பொழுது விற்க போகிறோம் என்ற அறிவு சுத்தமாக இல்லை .

6 .தனக்கு தெரிந்ததையே திருப்பி திருப்பி விவசாயம் செய்யும் மனநிலை . கொஞ்சமும் மாற்றி யோசித்து விளைச்சலை பெருக்கும் மன நிலை இல்லை , யாரவது ஏதாவது சொன்ன அதையவே பிடித்து கொள்வது , தட்ட முட்ட விவசாயிகள்

7 . மழை அதிகமாக பெய்தால் என்ன பண்ணுவேன் , மழையே பெய்யாவிட்டால் என்ன பண்ணுவேன் , என்ற தொலை நோக்கும் பார்வை இல்லை . கண்டதையும் விவசாயம் செய்ய வேண்டியது, கடைசியில் குறை சொல்வது …, உதாரணத்திற்கு தீபாவளி நேரத்தில் மழை வரும் , மார்கழியில் பனி வரும் இதையெல்லாம் கணக்கில் கொள்வதில்லை .

8 . தான் என்ன செலவு செய்தேன் என்ற கணக்கு சுத்தமாக இல்லை , எழுதி வைப்பதும் இல்லை , விவசாய முதலீட்டுக்கு இருக்கும் பணத்தை வேறு ஏதாவ்துக்கு செலவு செய்வது ,அப்புறம் கடன் வாங்கி பயிரிடுவது , ஏதாவது இயற்கை சீற்றம் வந்தால் மொத்தமும் போச்சு என்று நிவாரணத்துக்கு ஏங்குவது ..

9 , அரசாங்கம் அளிக்கும் மானியங்ககளை கேட்டு பெறுவது இல்லை , அதை யாரிடம் வாங்குவது என்ற அறிவும் இல்லை , அல்லது தெரிந்து கொள்வதும் இல்லை , பொத்தாம் பொதுவாக கிடைக்காது என்று ஒதுங்கி விடுவது . அல்லது படிக்க வில்லை என்று சொல்வது !! சாதரண விஷயம் இதுக்கு எதுக்கு படிப்பெல்லாம் – சரி ஏன் படிக்க வில்லை ?

10 . பக்கத்துக்கு தோட்டத்து காரர்களிடம் எப்பவும் சண்டை , வாய்க்காலுக்கும் , வரப்புக்கும் சண்டையோ சண்டை . ஒற்றுமை குணம் இல்லாத விவசாயிகள் , பொறாமை குணம் அதிகம் உள்ளவர்கள் தொழில் விவசாயம

11 , உரம் ஏன் போட வேண்டும் , எதுக்கு போடவேண்டும் , அதற்க்கு ஏதாவது மாற்று உண்டா என்ற அடிப்படை அறிவு கூட இல்லை . உரத்தை , பூச்சி கொல்லியும் வாங்கி கொட்ட வேண்டியது .. தற்காலிக வருமானத்தை பார்த்து அனுபவித்து விட்டு காணாமல் போய் விடுவது ..

12 , பல விதமான பயிர்களை வைத்து விவசாயம் பண்ணுவதில்லை , ஒன்று போனாலும் ஒன்று கிடைக்கும் , மொத்தமாக ஒரே பயிரை போட வேண்டியது வந்தா பெரிய லாபம் , இல்லாட்டி நாட்டமே .. ஆடு , மாடு , கோழி என்று பலவிதமான வருமானங்களை பெற வேண்டும் .

13 .மார்கட்டிங் , விற்பனை யுத்திகளை படித்து கொண்டே இருக்க வேண்டும் , வாய்ப்பு கிடைக்கும் போது தரமான பொருட்களை நேரடியாக மக்களிடம் விற்கலாம் , அது என்னோட வேலை இல்லை என்று ஒதுங்கி கொள்வது

14 , ஒவ்வொருவரும் ,விவசாயத்தில் வெற்றி பெற்றவர்களிடம் ட்ரைனிங் எடுக்கவேண்டும் , அதே போல தோல்வி பற்றியும் விவாதித்து அறிந்து கொள்ளவேண்டும் , முடிந்த அளவு ஆட்களை குறைந்து கொண்டு , இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். கடுமையா உழைப்பத்ற்கு பதில் , தந்திரமாகவும் ,ஸ்மார்ட்டாகவும் உழைக்க வேண்டும். – இதெல்லாம் யாரும் செய்வதில்லை ..

15 . பெரும்பாலான விவசாயிகள் பொறுப்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள் , கோவில் க்கு போகிறேன் , மலைக்கு போறேன் , பண்டிகை , பெரியப்ப வீட்டில் இலவு , சித்தப்பா வீட்டில் கல்யாணம் , மாமனார் வீட்டில் கிடா விருந்து இப்படி பெரும்பாலான நாட்கள் வீணடிக்ககிறார்கள் , விவசாயம் பற்றிய அறிவுக்கு ஒரு நிமிடம் கூட செலவு செய்வது இல்லை .

16 . நல்ல படிப்பவர்க்ள டாக்டர் என்ஜினீயர் , அதைவிட கொஞ்சம் கம்மி வக்கீல் ,அறிவியல் , அதைவிட சுமார் தொழில் தொடுங்குறேன் , பேங்க் , கவர்மெண்ட் எக்ஸாம் படிக்கிறேன் னு போயிடுறீங்க ….

எங்கேயும் போக தெரியாதவன் அல்லது சோம்பேறிகள் மட்டும் விவசாயத்துக்கு வந்தா எப்படி விவசாயம் ஜெயிக்கும் .. அவனும் , வீடு , நாடு மொத்தமும் நாசமாக போனதற்கு காரணம்..

டாக்டர் , என்ஜினீயர் , வக்கீல் அரசியில் வாதி , சினிமாக்காரன் தங்கள் பிள்ளைகளை அதே தொழிலில் வைக்கிறான் , பிச்சைக்காரன் கூட தன பிள்ளையை பிச்சை கரண் ஆக்குகிறான் , ..

விவசாயி தன பிள்ளையை விவசாயி ஆக்க ரெடி இல்லை … .

என்னை பொறுத்தவரை …
விவசாயத்தில் நாட்டம் இல்லாமல் , உரம் பூச்சி கொல்லி மருந்து அடிக்காமல் தரமான விவசாயம் செய்ய முடியும் , கொள்ளை லாபம் சம்பாதிக்க முடியாவிட்டாலும் , சுமாரான லாபம் பார்க்கலாம் .

உழைப்பை விட அறிவு மட்டுமே மூலதனம்

One Response to “விவசாயிகள் தோல்வி என்ன விவசாயிகளிடம் என்ன மிஸ்ஸிங் ? எப்படி மிஸ்ஸிங்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.