Month: July 2017

கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்

கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்

கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம் ..!!
மாடுகளுக்கு வரும் நோய்களுக்கு மூலிகை மற்றும் முதலுதவி மருத்துவம் பற்றி பார்ப்போம்

 

மடி வீக்க நோய் (Mastitis):

கறவை மாடுகளில் மடி வீக்க நோய் பெரும்பாலும் நுண்கிருமி தொற்று மூலமாகவே ஏற்படுகிறது. மாட்டின் மடியானது வீக்கமாகவும்,

கடினத்தன்மையுடனும், வெப்பம் அதிகரித்தும் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பாலானது திரிந்து வெள்ளையாகவோ மஞ்சள் அல்லது இரத்தம் கலந்தோ காணப்படும்.

மடியினை நன்கு கழுவி, சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள்

சோற்றுக்கற்றாழை-200 கிராம் (ஒரு மடல்)மஞ்சள் பொடி-50 கிராம்சுண்ணாம்பு-5 கிராம் ( ஒரு புளியங்கொட்டை அளவு)

சிகிச்சை முறை : (வெளிப்பூச்சு)

மேற்கண்ட பொருட்கள் மூன்றையும் ஆட்டுக்கல் உரலில் இட்டு நன்றாக கெட்டியாக அரைத்து பின் ஒரு கை அளவு எடுத்து நீர் விட்டு கரைத்து நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதி முழுவதும் நன்றாக தடவ வேண்டும். நாள் ஒன்றுக்கு 10 முறை என்ற அளவில் மடி வீக்கம் குறையும் வரை பூச வேண்டும்.

வயிறு உப்புசம் (Bloat):

கால்நடைகளில் உப்புசம் அல்லது நுரையோடு கூடிய வயிறு உப்புசம் தீவன மாறுபாடுகளினால் ஏற்படக் கூடியது. இது மிக எளிதில் செரிக்கக் கூடிய தானிய வகை உணவு மற்றும் ஈரமான பசுந்தீவனங்கள் அதிகமாக உண்பதால் ஏற்படுகிறது.

ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருத்துவப் பொருட்கள்

வெற்றிலை-10 எண்ணிக்கைபிரண்டை-10 கொழுந்துவெங்காயம் -15 பல்இஞ்சி -100 கிராம்பூண்டு -15 பல்மிளகு-10 எண்ணிக்கைசின்ன சீரகம்-25 கிராம்மஞ்சள்-10 கிராம்

வயிறு உப்புசம்  சிகிச்சை முறை : (வாய் வழியாக)

சின்ன சீரகம் மற்றும் மிளகினை இடித்து பின்பு மற்ற பொருட்களோடு கலந்து அரைத்து இக்கலவையை 200 கிராம் கருப்பட்டியுடன் (பனை வெல்லம்) கலந்த பின் சிறு சிறு உருண்டைகளாக பிரித்து கல் உப்பு (தேவைப்படும் உப்பு – 100 கிராம்) தொட்டு நாக்கின் மேல் தடவி ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும்.

கோமாரி வாய்ப்புண் (Foot & Mouth disease):

கோமாரி அல்லது கால் – வாய் காணை ஒரு நச்சுயிரி நோயாகும். இது மாடு, ஆடு மற்றும் பன்றிகளைத் தாக்குகிறது.

வாயிலும் நாக்கிலும் கொப்புளங்கள் ஏற்படும். எச்சிலானது கம்பி போன்று வழிந்து கொண்டிருக்கும். காலின் குளம்புப் பகுதியில் புண்கள் தோன்றி கால் முழுவதும் வீக்கம் காணப்படும்.

பாதிக்கப்பட்ட கால்நடைகளின் மடியில் கன்றுகளை பால் ஊட்ட விடுதல் கூடாது. இந்நோய் வராது தடுக்க முறையாக கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடுதல் மிக அவசியம்.

ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள்

தேங்காய் துருவல் -1 தேங்காய் ( பால் கட்டியது)சீரகம் -50 கிராம்வெந்தயம் -30 கிராம்மஞ்சள் பொடி -10 கிராம்கருப்பட்டி (பனை வெல்லம்) -20 கிராம்

சிகிச்சை முறை – மாடு ஒன்றுக்கு உள் மருந்து : (வாய் வழியாக):

சீரகம், வெந்தயம், மஞ்சள், கருப்பட்டி அரைத்து தேங்காய் துருவலுடன் கலந்து நோய்கண்ட மாடு ஒன்றுக்கு தினமும் இருவேளை குறைந்த பட்சம் 3 நாட்கள் கொடுக்க வேண்டும். ஐந்து நாட்கள் கொடுக்க கால்நடைகள் நன்றாக குணமடைகிறது. மாட்டின் தலையைத் தூக்கிப்பிடித்து இரு கடைவாய் பகுதியிலும் மெதுவாக உள்ளே செலுத்த வேண்டும்.

கோமார் கால் புண் (Foot lesions):

தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் :

குப்பைமேனி -100 கிராம்பூண்டு-10 பல்மஞ்சள்-100 கிராம்இலுப்பை எண்ணெய் (அ) நல்லெண்ணெய்-250 கிராம்

சிகிச்சை முறை : (வெளி பூச்சு மருந்து)

முதல் மூன்று பொருட்களை இடித்து இலுப்பை எண்ணெயுடன் கலந்து காய்ச்சி பாதிக்கப்பட்ட கால்நடையின் கால்களை உப்பு, மஞ்சள் கலந்த நீரில் கழுவி ஈரத்தை சுத்தமான காய்ந்த துணியால் ஒற்றி எடுத்து பின் மேற்கண்ட மருந்தை இட வேண்டும்.

 

விட(ஷ)க்கடி:

விடத்தன்மையுள்ள உயிரினங்களான தேள், குளவி, வண்டு, பூரான், அரணை மற்றும் சிறு பாம்புக் கடியினால் தோலில் தடிப்பு, உடல் வீக்கம், வயிறு உப்புசம், வாயில் நீர் வடிதல், முச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஆடுகளில் தென்படும்.

தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் :

உப்புதும்பை இலை -15 எண்ணிக்கைசிறியா நங்கை (இலை) (நில வேம்பு)-15 எண்ணிக்கைமிளகு-10 எண்ணிக்கைசீரகம் -15 கிராம்வெங்காயம்-10 பல்வெற்றிலை -5 எண்ணிக்கைவாழைப்பட்டை சாறு-50 மி.லி -15 கிராம்

சிகிச்சை முறை :

சின்ன சீரகம், மிளகினை இடித்து பின்பு இதனுடன் மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து இக்கலவையை சிறு உருண்டைகளாக 100 கிராம் கருப்பட்டி (பனை வெல்லம்) கலந்து உப்பில் தொட்டு நாக்கின் மேல் தேய்த்து ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள் செலுத்த வேண்டும்.

தகவல் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம்.

தொகுப்பு : நாட்டு மாடுகளை வளர்ப்போம் முகநூல் குழு.

கால்நடை

கால்நடை சார்ந்த கேள்விகளும் பதில்களும் பாகம் – 1

கேள்வி :

ராமேஸ்வரம் பகுதியில் ஆடு மற்றும் மாடுகள் மேய்ப்பதற்கு என்று மேய்ச்சல் நிலம் இல்லை. இதனால் அடிக்கடி பக்கத்து வயல்களில் ஆடு சென்று மேயும் போது பிரச்சனை வருகிறது. இதனை தவிர்க்க வீட்டிலேயே வளர்க்கும் வகையில் தீவனங்களை பரிந்துரைத்தால் நன்றாக இருக்கும்

Continue reading

இஸ்ரேல் விவசாயம்

இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் அப்போது உலகத்தின்பல பகுதிகளில் வசித்த யூதர்கள் இஸ்ரேலில் திரண்டனர்.

இஸ்ரேலில் பெரும்பகுதி பாலைவனம்.கோடையில் தீபொறி பறக்கும். குளிர் காலத்தில் குளிர் பல்லைக்கிட்டும் .ஆனால் அங்கு விவசாயம் பார்க்க வேண்டிய தேவை இருந்தது. அன்று அது அவர்களுக்கு பழக்கம் இல்லாததொழில்.

இஸ்ரேல் நாட்டின் பரப்பளவு மிகவும் குறைவு. அங்கு உள்ளஇயற்கை வளங்கள் அதைவிட குறைவு. உலகில் பலநாடுகளுக்கு லாபகரமான விவசாயத்தைசொல்லிகொடுக்கும் நாடாக விளங்குகிறது இன்றைய இஸ்ரேல்.

Continue reading

கிளைமேட் சேஞ்ச் ஓர் அறிமுகம்

1. பருவநிலை மாற்றம் என்றால் என்ன ?

பருவ நிலை மாற்றத்தின் மறு பெயர் இயற்கையின் கோபம். காற்றின் கோபம் புயல்: மழையின் கோபம் வெள்ளம்: வெய்யிலின் கோபம் வறட்சி; இவை எல்லாமே கூட்டாக சேர்ந்து கோபப் படுவதும் உண்டு.

Continue reading

நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள்

நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகள் பெற நாம் வளர்க்கும் 5 பெட்டைக் கோழிகளுக்கு ஒரு சேவல் என்ற விகிதத்தில் பெட்டை சேவலை இணைத்து வளர்க்க வேண்டும்.

இவ்வாறு வளர்க்கும்போது சேவல் பெட்டைக் கோழியுடன் இணைந்தவுடன் கருவுறுதல் எளிதில் நடைபெற்று கருக்கூடிய முட்டைகள் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது.

மாறாக பெட்டை சேவல் கோழிகளின் விகிதம் 10:1 என்று இருந்தால் குஞ்சு பொரிப்புத்திறன் குறையும்.

Continue reading

மானியத்துடன் பால்பண்ணை கடன்

மானியத்துடன் பால்பண்ணை கடன்

மானியத்துடன் பால்பண்ணை கடன் திட்டம் பற்றிய விபரம் : இந்த திட்டமானது மாட்டு பண்ணை வைக்க நபார்டு (Nabard) வங்கியின் மூலம் கடன் வழங்குவதாகும்.

💰 இந்த திட்டத்தில் 2 முதல் 10 மாடுகள் வரை வளர்க்க 6 லட்சம் வரை கடன் பெறலாம்.

யாரெல்லாம் கடன் பெறலாம்…?

💰 விவசாயிகள், தனிநபர் தொழில் முனைவோர், சுய உதவி குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள்.

💰 ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்டோர் கூட இத்திட்டத்தில் கடன் பெறலாம்.

💰 ஆனால் அவர்களின் பண்ணை 500 மீட்டருக்கு மேல் தள்ளி இருக்க வேண்டும். ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் கடன் பெறலாம்.

நபார்டு வழங்கும் கடன் திட்டங்கள் :

💰 இந்த திட்டத்தில் பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 25% மானியம் பெறலாம். தாழ்த்தப்பட்டோர் 33.33% மானியம் பெறலாம்.

💰 சிறிய மாட்டு பண்ணைகள் அமைக்க கடன் பெற்ற பின் (Back Ended Subsidy) வழங்கப்படும்.

💰 கன்று குட்டிகள் வளர்க்கும் திட்டத்தில் 20 கன்று குட்டிகள் வரை வாங்கலாம். இதற்கு ரூ.5.30 லட்சம் வரை கடன் பெறலாம்.

💰 மண்புழு உரம் தயாரிக்கும் கடன் திட்டத்தில் ரூ.22,000 வரை கடன் பெறலாம்.

💰 பால் கறக்கும் இயந்திரங்கள் மற்றும் குளிரூட்டும் இயந்திரம் வாங்கும் கடன் திட்டத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம்.

💰 பால் குளிரூட்டி அதனை எடுத்து எடுத்து செல்லும் வாகனம் வாங்க ரூ.26.50 லட்சம் வரை கடன் பெறலாம்.

💰 பால் குளிரூட்டும் பதனக் கிடங்கு அமைக்க ரூ.33 லட்சம் வரை கடன் பெறலாம்.

💰 தனியார் கால்நடை மருத்துவமனை அமைக்க கடன் பெறலாம். இதில் நடமாடும் கிளினிக் அமைக்க ரூ.2.60 லட்சமும், நிலையான கிளினிக் அமைக்க ரூ.2 லட்சமும் வழங்கப்படுகிறது.

💰 பால் விற்பனை நிலையம் அமைத்து பால் பொருட்களை விற்பனை செய்ய ரூ.1 லட்சம் வரை கடன் பெறலாம்.

பயனாளியின் பங்கு :

💰 ரூபாய் 1 லட்சம் வரை கடன் பெறம் பயனாளிகள் பங்கு தொகை எதுவும் கட்டத் தேவையில்லை. அதற்கு மேற்பட்ட கடனுக்கு 10மூ பங்குத் தொகையாக தர வேண்டும்.

கடன் வழங்கும் வங்கிகள் :

🏠 வணிக வங்கிகள்

🏠 கிராம மற்றும் நகர்ப்புற வங்கிகள்

🏠 மாநில கூட்டுறவு வங்கிகள் ரூ மாநில வேளாண் கூட்டுறவு வங்கிகள்

🏠 நபார்டு வங்கியில் மறுசுழற்சி நிதி பெறும் நிதி நிறுவனங்கள்

🏠 நபார்டு வங்கியில் கடன் பெறும் திட்டங்களுக்கே இது பொருந்தும்.

விண்ணப்பிக்கும் காலம் :

🕛 2017 – 18-ம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் மேலே குறிப்பிட்டுள்ள வங்கிகள் மூலமாக நபார்டு வங்கிக்கு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் விண்ணபிக்க வேண்டும்.

🕛 தகுதியான விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு நபார்டு வங்கி கடன் வழங்கும்.

🕛 தொழில்முனைவோர் தங்களின் திட்ட அறிக்கைகளை வங்கியில் சமர்பிக்க வேண்டும்.

🕛 வங்கிகள் அதனை பரிசீலனை செய்து சரியாக இருக்கும் பட்சத்தில் முதல் தவணை பணம் கொடுக்கப்பட்ட பின் வங்கிகள் நபார்டு வங்கியை அணுகி மானியத்தினைப் பெற்று கொள்ளலாம்.

🕛 இவை அனைத்தும் அந்த பகுதியில் உள்ள நபார்டு கிளை அலுவலகத்தில் இரண்டு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

🕛 3 முதல் 7 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.