Month: July 2017

சுந்தரராமன் ஐயாவின் காய்கறி சாகுபடி பயிற்சி-2

சுந்தரராமன் ஐயாவின் காய்கறி சாகுபடி பயிற்சி. விரிவான தகவல்களுடன் இடுபொருட்கள் தயாரிப்பு பற்றிய விளக்கங்களுடன் உள்ளது. அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி.

சுந்தரராமன் ஐயாவின் காய்கறி சாகுபடி பயிற்சி-1

சுந்தரராமன் ஐயாவின் காய்கறி சாகுபடி பயிற்சி. விரிவான தகவல்களுடன் இடுபொருட்கள் தயாரிப்பு பற்றிய விளக்கங்களுடன் உள்ளது. அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி

தென்னையை விட சிறந்தது வேப்பமர வெள்ளாமை

தென்னையை விட சிறந்தது வேப்பமர வெள்ளாமை

போன வருஷம் வேப்பங்கொட்டைகள் கிலோ ரூ.38, இந்த வருஷம் கிலோ ரூ.72. இது இந்த ஒரு வருஷத்தின் ஏற்றமல்ல.. பல வருஷங்களாகவே வேப்பங்கொட்டைகள் விலை ஏறுமுகத்தில்தான் தொடர்ந்து உள்ளது. இறங்குமுகம் என்பதே இல்லை.

Continue reading

50 சென்ட் நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம்

50 சென்ட் நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் வருடத்திற்கு 2 லட்சம் ருபாய்

சென்ற ஆண்டு டெல்லியில் நடந்த விவசாய வேளாண் வளர்ச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘விவசாயிகள் ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு… என மாற்றுத் தொழில்களையும் செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான் அதிக வருமானம் எடுக்க முடியும்’ என்று கூறியிருந்தார். இதே கருத்தைத்தான் இயற்கை விவசாய வல்லுநர்களும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்கள். பல விவசாயிகள் விவசாயத்தோடு ஆடு, கோழி எனச் சேர்த்து ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். அப்படி ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து அதில் நவீனத் தொழில்நுட்பங்களையும் புகுத்தி நல்ல லாபம் எடுத்து வருகிறார், மதுரை மாவட்டம், குலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி, கிருஷ்ணன்.

கிருஷ்ணன், அரை ஏக்கர் அளவில் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து, அதில் அருமையான லாபம் எடுத்து வருகிறார்.

2010-ம் ஆண்டு ஒருங்கிணைந்த பண்ணையைத் தொடங்கிய இவருக்கு ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட, மாநில, தேசிய விருதுகள் எனக் குவிந்துகொண்டிருக்கின்றன. அரசு சார்பில் பல மாநிலங்களுக்குச் சென்று விவசாயிகளுக்குத் தொழில்நுட்பம் சொல்லிக் கொடுத்தும் வருகிறார், இவர். கிருஷ்ணனை அவரது பண்ணையில் சந்தித்தோம்.

மனது நிறைந்த வாழ்க்கை!

“எங்க பாட்டன் காலத்திலிருந்தே விவசாயம்தான் நம்ம பரம்பரைத் தொழில். நான் அந்தக் காலத்து பி.யூ.சி. படிப்பு முடிஞ்சதுமே விவசாய வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். ஒரு தடவை மதுரை விவசாயக் கல்லூரியில் நடந்த ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த கருத்தரங்குல கலந்துக்கிட்டேன். அதுக்கப்பறம், அந்தக் கல்லூரிப் பேராசிரியர்களோட அறிவுரையின்படி 2010-ம் வருஷம் 50 சென்ட் நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் ஆரம்பிச்சேன். முழுக்க இயற்கை வழி விவசாய முறையிலதான் பயிர்களை சாகுபடி செய்றேன். ஒருங்கிணைந்த பண்ணை முறையில் கை நிறைய லாபம், மனசு நிறைஞ்ச வாழ்க்கை கிடைச்சிருக்கு. அதோட, பல விருதுகளும் என்னைத் தேடி வந்திருக்கு. ஒரு விவசாயியாக பெருமையா வாழ்ந்துகிட்டிருக்கேன்” என்று பெருமிதப்பட்ட கிருஷ்ணன், பண்ணையைச் சுற்றிக்காட்டினார்.

“20 சென்ட் நிலத்துல நெல், 8 சென்ட் நிலத்துல மீன் வளர்ப்புக் குட்டை, 20 சென்ட் நிலத்துல தென்னை, 2 சென்ட் நிலத்துல ஆடு கோழி மாடுகளுக்கான கொட்டகைகள் இருக்கு. தென்னை மரங்களுக்கு இடையில் தேனீ வளர்ப்புப் பெட்டிகளை வெச்சிருக்கேன். அதோட, மண்புழு உரம் தயாரிக்கிறதுக்கான குழிகளும் இருக்கு. இங்க, நானும் என் மனைவியுமே எல்லா வேலையும் பாத்துடுவோம். சில வேலைகளுக்கு மட்டும்தான் வெளியாட்களைக் கூப்பிடுவோம்.

ஒரு போகம் நெல்… அடுத்த போகம் சோளம்!

நெல் வயல்ல சோளத்தையும் நெல்லையும் மாறி மாறி விதைப்போம். ஏ.எஸ்.டி 16 ரக நெல்லைத்தான் சாகுபடி செய்றோம். இதுல, 12 மூட்டை நெல் அறுவடையாகும். ஒரு மூட்டை நெல் தொள்ளாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும். அதுமூலமா, 11 ஆயிரம் ரூபாய் வருமானம் வரும். செலவெல்லாம் போக, 8 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். அடுத்து சோளம் போடும்போது 20 சென்ட் நிலத்துல 4 மூட்டை அறுவடை ஆகும். இது 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும். அதுல செலவு போக 4 ஆயிரம் ரூபாய் லாபமா இருக்கும்” என்ற கிருஷ்ணன், மீன்குட்டைக்கு அழைத்துச் சென்றார்.

8 சென்ட் குளம்… 4 வகை மீன்கள்!

“70 அடி நீளம், 50 அடி அகலம், 6 அடி ஆழத்துல குளம் அமைச்சிருக்கேன். பெரியாறு பாசனக் கால்வாய் தண்ணிதான் மீன் குளத்துக்கு. கட்லா, ரோகு, கண்ணாடி, நாட்டு விரால்னு மொத்தம் 700 குஞ்சுகள் விடுவேன். வருஷத்துக்கு ஒரு அறுவடைதான். ஆனி மாசம் குஞ்சுகளை விட்டு பத்து மாசத்துல அறுவடை பண்ணிடுவோம். நாட்டு விரால் மட்டும் 100 குஞ்சுகளை விடுவோம். மற்ற வகைகள்ல தலா 200 குஞ்சுகள் விடுவோம். நாட்டுவிரால் குஞ்சு ஒண்ணு 5 ரூபாய். மற்ற ரகங்கள் 3 ரூபாய். அரிசித் தவிடு, கோதுமைத் தவிடு, கடலைப் பிண்ணாக்கு, காய்கறிக் கழிவுகள், மாட்டுச்சாணம், கோழிப் பண்ணைக் கழிவுகள், கொழிஞ்சித் தழைகள்தான் மீன்களுக்குத் தீவனம். பத்து மாசம் தீவனத்துக்கு மட்டும் 10 ஆயிரம் ரூபாய் செலவாகும். நானும், என் மனைவியுமே மீன்களைப் பிடித்து விற்பனை செஞ்சிடுவோம்.

பத்து மாசத்துல நாட்டு விரால் மீன்கள் ஒவ்வொண்ணும் அரைக் கிலோ அளவு வந்துடும். கிலோ 400 ரூபாய்னு பண்ணையிலயே வந்து வியாபாரிங்க வாங்கிக்கிறாங்க. மொத்தம், தரமா, 25 கிலோ விரால் கிடைக்கும். அதை விற்பனை செய்றப்போ, 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மற்ற ரக மீன்கள் ஒவ்வொண்ணும் அரைக் கிலோவுல இருந்து ஒரு கிலோ வரை இருக்கும். இந்த ரகங்கள் கிலோ 120 ரூபாய்னு விற்பனையாகும். எல்லா ரகங்களும் சேர்ந்து 300 கிலோ அளவுக்குக் கிடைக்கும். இதன் மூலமா, 36 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மொத்தமாக மீன்கள் மூலமா 46 ஆயிரம் ரூபாய் வருமானம். அதுல செலவெல்லாம் போக, 33 ஆயிரம் ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்கும். மீன் பிடிப்பு முடிஞ்சதும், குளத்தை உழுது மூணு மாசம் காயவிட்டு தண்ணி நிரப்பிடுவோம்.

3 மாத வயதில் நாட்டுக்கோழிகள் விற்பனை!

20 அடிக்கு 16 அடி அளவுல கொட்டகை அமைச்சு 100 நாட்டுக்கோழிகளை வளர்க்கிறேன். ஒரு நாள் வயதுடைய குஞ்சுகளை இருபத்தைந்து ரூபாய்க்கு வாங்கி 90 நாள் வளர்த்து விற்பனை செய்திடுவேன். வருஷத்துக்கு இப்படி நாலு ‘பேட்ச்’ வளர்க்க முடியும். 3 மாசம் வளர்த்தா ஒரு கோழி ஒரு கிலோ வரை எடை இருக்கும். ஒவ்வொரு பேட்ச்லயும் சராசரியா 10 கோழிகள்வரை இறந்துடும். எல்லாம் போக, ஒரு பேட்சுக்கு உயிர் எடையில 70 கிலோ அளவுக்குக் கோழிகள் இருக்கும். உயிர் எடையில ஒரு கிலோ இருநூறு ரூபாய்னு பண்ணையிலேயே விற்பனை செய்துடுவேன். ஒரு பேட்சுல 14 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். வருஷத்துக்கு 56 ஆயிரம் ரூபாய் வருமானம். குஞ்சுகள், மின்சாரம், தீவனம்னு எல்லா செலவும் போக, வருஷத்துக்கு 36 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். கோழிகளுக்கு மக்காச்சோளக் குருணை, கம்பு, முட்டைகோஸ் கழிவு, கேரட் கழிவுனு தீவனமாகக் கொடுக்கிறோம். தடுப்பூசிகள் இலவசமாகக் கிடைக்கின்றன.

20 ஆடுகள்… ஆண்டுக்கு 15 குட்டிகள்!

20 அடிக்கு 16 அடி அளவுல கொட்டில் அமைச்சு ஆடு வளர்க்கிறேன். கன்னி வகையைச் சேர்ந்த 15 ஆடுகள், 5 கிடாக்கள் இருக்கு. ஆடுகளுக்கு பிண்ணாக்கும், பசுந்தீவனமும் கொடுக்கிறேன். பசுந்தீவனம் நம்ம வயல்ல இருந்தே கிடைச்சிடும்.

15 ஆடுகள்ல இருந்து ரெண்டு வருஷத்துக்கு 30 குட்டிகள் கிடைக்கும். ஒரு வருஷத்துக்கு 15 குட்டிகள் கிடைக்கும். 10 கிலோ வரை வளர்ந்த குட்டிகளை ஒரு குட்டி 4 ஆயிரம் ரூபாய்னு விற்பனை செய்வேன். அதன் மூலமா வருஷத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். எல்லா செலவும் போக, வருஷத்துக்கு 45 ஆயிரம் லாபமா நிக்கும்.

20 சென்ட் நிலத்துல 40 தென்னை மரங்கள் இருக்கு. 40 மரங்கள்லயும் சேர்த்து வருஷத்துக்கு 4 ஆயிரத்து 800 தேங்காய்கள் வரை கிடைக்கும். ஒரு காய் ஏழு ரூபாய்னு விற்பனை செய்வேன். இதன் மூலமா 33 ஆயிரத்து 600 ரூபாய் கிடைக்கும். இதுல இடுபொருள், வெட்டுக்கூலி போக 25 ஆயிரம் ரூபாய் அளவுக்குக் கண்டிப்பா லாபம் கிடைக்கும்.

தினமும் 10 லிட்டர் பால்!

இரண்டு பசுக்கள் இருக்கு. இரண்டுமே இப்போ கறவையில இருக்கு. தினமும் 10 லிட்டர் அளவுக்கு பால் கிடைக்குது. எங்க வீட்டுல நானும் என் மனைவியும்தான். அதனால் வீட்டு உபயோகம் இல்லை. அதனால, 10 லிட்டர் பாலையும் லிட்டர் 40 ரூபாய்னு விற்பனை செய்துடுவோம். வயல்ல கிடைக்கிற வைக்கோலும் பிண்ணாக்கும்தான் மாடுகளுக்குத் தீவனம். வருஷத்துக்கு சராசரியா ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு பால் மூலமா வருமானம் கிடைக்கும். அதுல பாதி அளவு செலவானாலும், வருஷம் 50 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும்.

5 தேனீப் பெட்டிகள் இருக்கு. 40 நாட்களுக்கு ஒரு முறை தேன் எடுப்போம். 5 பெட்டிகள்ல வருஷத்துக்கு 300 கிலோ வரை தேன் கிடைக்குது. இதுல வருஷம் 7 ஆயிரத்து 500 ரூபாய் கிடைச்சிடுது. தேனீக்குனு பெருசா செலவில்லை. பல்லி மாதிரியான பிராணிகள்கிட்ட இருந்து பாதுகாக்கிறதுதான் வேலை. இதுக்கு வருஷத்துக்கு 500 ரூபாய்தான் செலவாகும்.

10 அடி நீளம், 8 அடி அகலம், 3 அடி ஆழத்துல மண்புழு உரம் தயாரிக்க குழி அமைச்சிருக்கேன். பண்ணைக் கழிவுகளையும், பசுஞ்சாணத்தையும் போட்டு மண்புழுக்களை விட்டா 45 நாளைக்கு 300 கிலோ வரை மண்புழு உரம் கிடைக்கும். இதை சொந்தத் தேவைக்கே பயன்படுத்திக்கிறேன்” என்ற கிருஷ்ணன் நிறைவாக,

“இந்த அரை ஏக்கர் இல்லாம தனியா நாலரை ஏக்கர் இருக்கு. அதுல நெல் சாகுபடி பண்றேன். அரை ஏக்கர்ல மட்டும் செய்து பார்க்கலாம்னு ஒருங்கிணைந்த பண்ணையை அமைச்சேன். ரொம்பவே நல்லா வந்திருக்கு. இதுலேருந்து வருஷத்துக்கு ரெண்டு லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைச்சிடுது. அதில்லாம மத்த விவசாயிகளுக்கு மாதிரிப் பண்ணையாவும் இது இருக்கிறதுல எங்களுக்கு முழுத் திருப்தி” என நெகிழ்ச்சியுடன் சொன்னார்.

விவசாயம் வாங்கித் தந்த விருதுகள்!

கிருஷ்ணன், 2011-ம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடமிருந்து ‘சிறந்த முன்னோடி விவசாயி’ விருது பெற்றுள்ளார்.
2012-ம் ஆண்டு அப்போதைய மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாரிடமிருந்து தேசிய விருது மற்றும் 2 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை பெற்றுள்ளார்.
2013-ம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடமிருந்து விருது பெற்றுள்ளார். 2014-ம் ஆண்டு ‘சிறந்த வேளாண் விவசாயி’ என்ற மாநில விருது; 2015-ம் ஆண்டு சிறந்த ‘உழவர் ஊக்குவிப்பாளர்’ என மாநில விருது; 2016-ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலையிலிருந்து ‘வேளாண்மைச் செம்மல்’ விருது என ஒவ்வொரு ஆண்டும் விருது பெற்றுள்ளார்.
தொடர்புக்கு,
கிருஷ்ணன்,
செல்போன்: 08973737379 .

வாங்க பதநீர் குடிக்கலாம்

வாங்க பதநீர் குடிக்கலாம்

வாங்க பதநீர் குடிக்கலாம் யார் கிட்டயும் சண்டை சச்சரவு இல்லாமல் இருக்கலாம் நமக்கு தெரியும் நாம் உண்ணும் உணவு 70% அதிகமாக மூளையின் செயல்பாட்டிற்கு தான் செலவாகிறது என்று,நவீன அறிவியலும் இதை தான் சொல்கிறது

Continue reading

மண்வளத்தை மேம்படுத்த தக்கப்பூண்டு

மண்வளத்தை மேம்படுத்த தக்கப்பூண்டு விதைத்தல் Sesbania_bispinosa

முன் காலத்தில் நெற்பயிர் சாகுபடிக்கு மட்டும்தான் தக்கப்பூண்டு விதைத்து வயலுக்கு தழை உரமாக பயன்படுத்தினார்கள். ஆனால் தற்பொழுது அனைத்து பயிர்களுக்கும் தழைச்சத்து தேவைப்படுவதால் பயிர்கள் சாகுபடி செய்வதற்கு முன்போ அல்லது பயிர் சாகுபடி செய்திருந்தால் அறுவடை முடிந்தவுடன் தக்கப்பூண்டு விதைக்கலாம்

Continue reading

வேர்கடலை கொழுப்பு அல்ல

வேர்கடலை கொழுப்பு அல்ல Nilakadalai-Verkadalai

வேர்கடலை கொழுப்பு அல்ல…! பெண்களின் கர்ப்பபைக்கான மூலிகை…!!

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம்:

நிலக்கடலையில் *போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம்.* எனவே *நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.* தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். *கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம்.* இல்லையேல் *கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.*

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் (osteoporosis) வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக்கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்:

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது

கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள் பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் *நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள்.* இதன் காரணமாக *குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.*

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடி இருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

*பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது.* இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் *பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.* பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக *பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள்* ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிலக்கடலையில் நிறைந்துள்ள சத்துக்கள்:

*100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.*

கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.