Month: July 2017

சுரைக்காய்

சுரைக்காய்
சுரைக்காய்

 

இரகங்கள் :

கோ 1, பூசா சம்மர் (நீளம்), பூசா சம்மர் (உருண்டை), பூசா மஞ்சரி, பூசா மேகதூத், அர்கா பகார்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை : பலவிதமான மண் வகைகளிலும் பயிர் செய்யலாம். வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. பனிவிழும் பிரதேசங்களில் இதனைப் பயிர் செய்ய முடியாது. சிறந்த மகசூலுக்கு கார அமிலத்தன்மை 6.5-7.5 இருத்தல்வேண்டும்.

பருவம் :

ஜீலை மற்றும் ஜனவரி

விதையும் விதைப்பும்

விதை அளவு : ஒரு எக்டருக்கு 3 கிலோ விதைகள்.
விதை நேர்த்தி : விதைப்பதற்கு முன் விதைகளை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும்.

ஒரு கிலோ விதைக்கு 1கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 100 கிராம் சூடோமோனாஸ் என்ற அளவில் உபயோகிக்கவேண்டும்.

சுரைக்காய் கோ 1

நிலம் தயாரித்தல்

நிலம் தயாரித்தல் மற்றும் விதைத்தல் : நிலத்தை அமைத்து 3-4 முறை உழவு செய்து கடைசி உழவின் போது எக்டருக்கு 10 டன் மக்கிய தொழு உரம் இடவேண்டும். பின்பு 2.5×2 மீட்டர் இடைவெளியில் வாய்க்கால்கள் 30x30x30 செ.மீ நீளம், அகலம், ஆழம் என்ற அளவில் குழிகள் எடுக்கவேண்டும். பின்பு ஒவ்வொரு குழியிலும் 5 விதைகளை நீர் ஊற்றவேண்டும். 15 நாட்கள் கழித்து குழி ஒன்றில் இரண்டு வளமாக செடிகளை விட்டு விட்டு மற்றவைகள களைந்துவிடவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

ஒவ்வொரு குழிக்கும் மக்கிய தொழு உரம் 10 கிலோ இடவேண்டும்.

நீர் நிர்வாகம்

பத்து, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சவேண்டும்.

கொடி வகை காய்களுக்கு பந்தல்

கொடி வகை காய்களுக்கு பந்தல்: 
கொடி வகை காய்களுக்கு பந்தல் போடுவதுதான் அதிக செலவு பிடிக்கும். நிரந்தர பந்தல் போட்டுவிட்டால் மூன்று வருடங்களுக்கு கூட நாம் கொடி வகை காய்களை பயிரிடலாம்.

Continue reading

தன்னார்வலர்களுக்கான இயற்கை வழி வேளாண் மற்றும் வாழ்வியல் பயிற்சி

வானகத்தில் மூன்று மற்றும் ஆறு மாத கால தன்னார்வலர்களுக்கான இயற்கை வழி வேளாண் மற்றும் வாழ்வியல் பயிற்சி.

என்னுடைய நோக்கங்கிறது…
இந்த நாட்டுல உணவு உற்பத்தி செஞ்சி குவிக்கிற 52 விழுக்காடு மானாவாரி விவசாயிங்க, நாட்டோட பசியைத் தீர்க்குற அவங்களோட நிலமை ரொம்ப மோசம், மேலும் வறுமையில தற்கொலைக்கு தள்ளப்படுகிற அப்படியான புழுதியிலும் புழுதியாய் இருக்கிற விவசாயிங்கள ஒருபடி மேல உயர்த்தி விடனும், அதே போல என்னை மாதிரி ஆயிரம் பேரைக் கண்டறிந்து அவங்களுக்குப் பயிற்சி அளித்து நாடு முழுவதும் பரவ விடனும், அது தான் வானகத்த மையமா வச்சி செயல்படுற நம்மாழ்வாரோட நோக்கம். இந்தப் பணியை நானும், எனக்கு அப்புறம் வானகமும் தொடர்ந்து செய்து வரும். இந்த நோக்கத்துல தங்களையும் இணைச்சுக்க விரும்புறவங்க வந்து இணைஞ்சுக்கலாம் வானகம் எப்போதும் திறந்தே இருக்கும், திறந்த கரங்களோடு அரவணைத்துக்கொள்ளும்.

இப்படியான மானாவரி நிலமான நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவம், தனது உணவு உற்பத்தி மற்றும் பண்ணை ஆராய்ச்சிப் பணிகளை விரிவாக்கம் செய்ய பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது, சரளைக் கற்களும் சுண்ணாம்பு குவியளுமாக கிடக்கும் 25 ஏக்கர் நிலப்பரப்பில் நிரந்தர வேளாண்மை, மானாவரி விவசாயம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு, கால்நடை வளர்ப்பு, அனைத்தும் விதையில் இருந்து துளிர்ப்பது போல புதிய செயலாக்கமாக அமையவுள்ளது, இயற்கை வழி வேளாண் மற்றும் இயற்கையோடு இயைந்த வாழ்கையை விரும்பும் நண்பர்களை இணைத்துக்கொண்டு பயணிக்க வானகம் அழைக்கிறது.

இந்த ஆறு மாத பயிற்சியில் உயிர் வேலி அமைத்தல் தொடங்கி, உழவு, விதைத்தல், தினசரி பராமரிப்போடு, இயற்கையை கூர்ந்து கவனித்து காலநிலை மாற்றங்களோடு எவ்வாறு ஒரு உயிர் தன்னை தகவமைத்து வளர்கிறது, பூச்சிகள், நுண்ணுயிர் நமக்கு எவ்வாறு நண்பனாக இருக்கின்றன போன்றவைகளையும், விழிப்புணர்வோடு பதிவு செய்து, அறுவடை வரைக்குமான அணைத்து செயல்பாடுகளும் செயல் வழி கற்றல் என்ற பாணியில் நடைபெறும்.

கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து, “எல்லாமும் எல்லோருக்கும்” என்ற அடிப்படை புரிதலோடு இயங்குவோம், அது உணவில் தொடங்கி பொது வேலைகள், பண்ணை வேலை என அனைத்திலும் அனைவரது பங்களிப்போடு இயங்குவோம்.

ஆசிரியர் மாணவர் மனநிலை உடைத்து கூடி கற்றலுக்கான தளமொன்றை அமைக்க விரும்பினார் அய்யா நம்மாழ்வார், அப்படியான தளத்தை அமைத்து கொடுக்க வானகம் மகிழ்ச்சியோடு உங்களை அழைக்கிறது, பண்ணை ஆராய்ச்சி மற்றும் உணவு உற்பத்திக்கான செயல்பாடுகளில் இணைத்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் வானகத்துடன் ஒன்றிணையலாம்.

கட்டணத்தை செலுத்த முடியாது பங்கெடுக்க இயலவில்லை என்ற வருத்தம் தெரிவித்த நண்பர்களை கணக்கில் கொண்டு, இந்த ஆறு மாத கால பயிற்சிக்கு விருப்பக் கட்டணம் (தாங்கள் விரும்பிய தொகையை) நேரில் செலுத்தி இணைந்து கொள்ளலாம்.

உணவு தங்குமிடம் வழங்கப்படும்.

மாதம் இருமுறை கால்நடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பூச்சிகள் நமது நண்பன், நிரந்தர வேளாண்மை, தோட்டக் கலை, கிராமிய பொருளாதாரம், சுவரில்லாக் கல்வி இன்னும் பிற சிறப்பு வகுப்புகள் இருக்கும்.

தமிழகத்தில் உள்ள சிறந்த மாதிரி பண்ணைகளை பார்வையிடல்.

தினசரி பண்ணை வடிவமைத்தல் மற்றும் உணவு உற்பத்திக்கு குறைந்த பட்சம் 5 மணி நேரம் உடல் உழைப்பு அவசியம்.

மாதம் இரண்டு நாள் மட்டும் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

பயிற்சியில் பனிரெண்டு நபர்கள் மட்டுமே இணைய வாய்ப்புள்ளது.

3 ஆகஸ்ட் 2017 வியாழன் முதல் பயிற்சி தொடங்கவுள்ளது,
ஆகஸ்ட் 4,5,6 நடைபெறவுள்ள மூன்று நாள் பயிற்சியில் கட்டாயம் பங்கு கொள்ள வேண்டும் .
(வானகத்தில் முன்னரே முன்னரே மூன்று நாள் பயிற்சி பெற்றவர்கள் 4,5,6 பயிற்சிக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை, மற்றவர்கள் 1800/- செலுத்த வேண்டும்)
மூன்று மற்றும் ஆறு மாத கால பயிற்சிக்கு நாள் ஒன்றுக்கு 50/- ரூபாய் வழங்க வேண்டும்.
அதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் வானகத்தில் தங்கி வானக சூழலை புரிந்து கொண்ட பின்னர் ஆறு அல்லது மூன்று மாத பயிற்சியில் தொடரலாம்.
>>அடையாள அட்டை மற்றும் புகைப்படம் அவசியம் கொண்டு வரவும்
விருப்பமுள்ள நண்பர்கள் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதி செய்யவும்.
தொடர்புக்கு : 9500765537 – 9944236236

கஙசஞ: எத்திசைச் செல்லினும்

Anand chellaiah

கஙசஞ: எத்திசைச் செல்லினும்

‘தமிழனுக்குத் தமிழே துணை’ என்று எழுதி விருப்பக் கையொப்பமிடுவது இரசிகமணி டி.கே.சியின் வழக்கம். இந்தச் சொற்றொடர் வெகு நாட்களாகவே என் மனத்தில் உருண்டுகொண்டிருந்தது. கடந்த மரபுக்கூடல் அன்று நான் எழுதிய‘கஙசஞ – சிறுவர்களுக்கான தமிழ் இலக்கணம்’ நூல் வெளியானது. சிலர் புத்தகத்தை வாங்கிவிட்டு, அதில் கையொப்பமிட்டுத் தரச் சொன்னார்கள். ’தமிழே துணை’ என்று எழுதி கையொப்பமிட்டேன். தமிழின் தயவில் எனக்கும் ஓர் அடையாளம் 🙂

‘ஊடகத்துறை வேலையை நம்பிக்கொண்டு காலம் தள்ள முடியாது, என்றைக்கானாலும் சொந்தத் தொழிலே கைகொடுக்கும்‘ என நான் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் முடிவுக்கு வந்தேன். ஒரு தொழில் என் மனத்தில் தோன்றியது. நேரம் வாய்க்கும்போதெல்லாம் நண்பர்களிடம் அதை பற்றி ஆர்வத்துடன் உரையாடுவேன். பெரியவர்களுக்கு ஆங்கிலம் பேசக் கற்றுக்கொடுப்பதற்கான வகுப்புகளை நடத்துவதுதான் அத்தொழில். எனக்கு ஆங்கிலம் பேசத்தெரியாது. ஆனால் ஆங்கில மொழி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஒரு திட்டம் 🙂 இத்தனைக்கும் தமிழ் அடையாளம், தமிழர் உரிமை சார்ந்து இயங்கும் ஊடகவியலாளனாக அறியப்படுபவனாகவே அப்போது இருந்தேன். வேறொன்றுமில்லை. சமூகத்தில் எதற்குத் தேவை இருக்கிறதோ, அதன் பின்னால் ஓடும் வழக்கமான வணிகப்பார்வைதான் என்னையும் அப்படி திட்டமிட வைத்தது. நல்ல வேளை, திட்டம் கைகூடவில்லை. 🙂

தமிழில் எனக்கு ஓரளவு தேர்ச்சி உண்டு. தமிழ் அறிவு குறித்த பெருமிதத்தைக் காட்டிலும், அது என் மனத்துக்கு மிக நெருக்கமான பாடம் என்ற உணர்வை ஏற்படுத்தியவர் என் பள்ளி ஆசிரியர் கயத்தாறு மீனாட்சி சுந்தரம். தேர்ச்சியைக் காட்டிலும், அந்த உணர்வே என்னைப் பல இடங்களில் வழிந்டத்தியிருக்கிறது. ஆசிரியர் என்ற வகையில் ஒருவருக்கு இதுவே இன்றியமையாத பணி எனக் கருதுகிறேன்.

முதுகலைக் கல்விக்கான பருவத்தில் பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதியைச் சந்திக்க நேர்ந்தது என் வாழ்வில் முக்கியமானதொரு திருப்புமுனை. பல்கலைக்கழகத்தில் அவருக்குப் பின்னால் அலைந்த
மாணவர்களில் நானும் ஒருவன். என்னைப் போன்ற சில மாணவர்கள் அவரது வீட்டுக்குச் சென்று உரையாடுவோம். எங்களுக்கு உணவும் கொடுத்து, தமிழ், இலக்கியம், திரைப்படம், வரலாறு எனப் பல தளங்களைச் சார்ந்த செய்திகளையும் அறிமுகப்படுத்துவார். அப்போது அவர் ஒரு விரிவுரையாளர். பணியில் புதிதாகச் சேர்ந்திருந்தார். அக்காலத்தில் தான் பெற்ற குறைவான ஊதியத்தில்தான் இதையெல்லாம் செய்தார் என்பதை மிக மிக தாமதமாகவே அறிந்துகொண்டேன். ‘ப்ளேடு உறை மேல ‘Do not wipe out’ன்னு எழுதிருப்பாங்க. துணியை வச்சு துடைச்சாக் கூட, ப்ளேடோட கூர்மை போய்டும். அதைத் தவிர்க்கத்தான் இந்தச் செய்தி. அதே மாதிரிதான் மொழியும். சொற்களைக் கவனமா கையாளணும். இல்லைனா மொழியின் கூர்மை போய்டும்’ என்று அவர் சொன்னது என் மனதில் நிலைத்திருக்கும் கூற்றுகளில் ஒன்றாகிவிட்டது.

என் மகளுக்கு ஆதிரா என்று பெயரிட்டேன். ரொம்பவும் மெனக்கெடாமல் தமிழ்ப்பெயர் வைத்துவிட்ட பெருமையில் அலைந்த என்னை சலபதியின் குட்டு தட்டி வைத்தது. ‘ஆதிரை எப்படி இருக்கா…மன்னிக்கணும்…ஆதிரா எப்படிருக்கா?’ என்று விளையாட்டாக மின்னஞ்சலில் நலம் விசாரிப்பார். ‘இவ்வளவு தூரம் ஒரு விஷயத்தைக் கூர்மையா பார்க்கணுமா என்ன?’ என்று நான் அலுத்துக்கொள்வேன். பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. காலம், ‘ஆதிரா வேறு, ஆதிரை வேறு’ என்று எனக்குப் புரிய வைத்தது.

தமிழ்ச்சான்றோர் பலருண்டு. அதை ஒரு வாழ்க்கைமுறையாக ஏற்றுக்கொண்டவர் யாரேனும் இருக்கிறாரா எனில் நண்பர் செந்தமிழனின் பெயரையே சொல்வேன். வேளாண்மை, மருத்துவம், கட்டுமானம், உறவுகள், குடும்பம் என வாழ்வின் அனைத்துத் தேவைகளுக்குமான வழிகாட்டல் தமிழில் இருக்கிறது என்பதை என்னைப் போல பலருக்கு உணர்த்திவருபவர். தமிழை உணர்ந்து பயின்றவர்கள்
எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்பவர். அவர் சொல்லவில்லை எனில், இந்நூலை நான் எழுதியிருக்க மாட்டேன்.
நூலைப் பதிப்பிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதுடன், இது சரியானதொரு நூலாக வருவதற்குத் தனது வழிகாட்டலையும் வழங்கினார். அவருடைய மனைவி காந்திமதி மெய்ப்பு பார்த்ததுடன், உள்ளடக்கத்தைச் செழுமைப்படுத்தும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

இவர்களுக்கெல்லாம் நான் உளமாரக் கூறும் நன்றிகள் நான் தொடர்ந்து செய்ய விரும்பும் நற்பணிகளாக உருமாறட்டும் என இறையை வேண்டுகிறேன். நூல் கூறும் செய்தியை அட்டை வடிவமைப்பில் ஒரு சின்ன விளையாட்டு மூலம் அழுத்தமாகக் கூறிவிடுவது நண்பன் சந்தோஷ் நாராயணனின் பாணி. அதை ‘கஙசஞ’விலும் நிகழ்த்தியுள்ளான். அவனுக்கு நன்றி சொன்னால், ‘லேசா கண்ணு கலங்குற மாதிரி இருக்குது. அழுறியோ?’ என்றெல்லாம் கேட்டு பீதியைக் கிளப்புவான். 🙂 எதுக்கு வம்பு?

தமிழ் இலக்கணத்தை இறுக்கமற்ற தன்மையில், நட்பார்ந்த தொனியில் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் சில ஆண்டுகளுக்கு முன்னால் எழுந்தது. செம்மை மரபுப்பள்ளி மூலமாக அது் செயல்வடிவம் பெற்றது. ‘கஙசஞ’ மூலமாக என் விருப்பம் நூல் வடிவம் பெற்றுள்ளது. என் முதல் நூல் தமிழ் இலக்கணத்தை மக்களிடம் பேசும் ஒரு முயற்சியாக இருக்கும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

செம்மை மரபுப்பள்ளியில் மாணவர்கள் வகுப்புதோறும் ஒரு தூய தமிழ்ச் சொல்லை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு விளையாட்டை நடத்துவேன். குறிப்புகளின் துணையுடன் புதையலைக் கண்டுபிடிக்கும் வேலைதான் அந்த விளையாட்டின் வடிவம். மரமும் செடி கொடிகளும் நிறைந்த வளாகத்தில் அங்கங்கே குறிப்புகள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும். ஒரு குறிப்பு இன்னொன்றுக்கு வழிகாட்டும். இறுதியில் ஒரு புதையலைப் போல ஒரு நல்ல தமிழ்ச்சொல் காகிதத்தில் எழுதப்பட்டு மண்ணுக்கடியில் காத்திருக்கும். ஆழி, கயல், களிறு போன்ற சொற்கள் புதையல் விளையாட்டு மூலம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் கற்பித்தல் பணி குறித்து நிறைவு எனக்கு இல்லை. இத்தகைய சோர்வில் நான் பேச்சற்று இருந்த ஒரு நாள் அது. மீள்பார்வைப் பயிற்சியாக ஏழெட்டு மாதங்களுக்கு முன்னால் புதையல் விளையாட்டு மூலமாக அவர்களுக்கு அறிமுகமான சொற்களை நினைவுகூரச் சொன்னேன். ‘டால்பினுக்குத் தமிழில் என்ன பேருன்னு ஞாபகம் இருக்கா?’ என்ற வினாவுக்கு என் முன்னால் நின்று கொண்டிருந்த மாணவர்களிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. எங்களுடன் தொடர்பே இன்றி சிலம்பக் கம்புடன் சுற்றிக்கொண்டிருந்த நித்திக்கிடமிருந்து விடை வந்தது, ‘ஓங்கில்!’

நித்திக் ஒரு ‘பால்கனி’ மாணவன். பெரும்பாலும் வகுப்பில் அமர மாட்டான். அருகில் உள்ள வாகை மரத்தின் கிளை மீது அமர்ந்தபடிதான் பாடத்தைக் கவனிப்பான். கோபத்தை அடக்கிக்கொண்டுதான் அவனிடம் உரையாடுவேன். அவன் இச்செய்திகளை நினைவில் வைத்திருப்பான் என நான் எதிர்பார்க்கவில்லை.

அப்படி ஒன்றும் நம் கைகள் வெறுமையாக இல்லை; சில பிஞ்சு மனங்களையாவது உள்ளே கொண்டு வந்திருக்கிறோம் என்ற நிறைவு எனக்கு அன்று ஏற்பட்டது. ‘கஙசஞ’ வழியாக அத்தகைய சிறு மாற்றம் நிகழ்ந்தாலும், மகிழ்ச்சி கொள்வேன்

பீஜாமிர்தம் என்றால் என்ன

பீஜாமிர்தம் என்றால் என்ன?

விதைக்கும் முன் விதைக்கு ஊட்டமளிக்க இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கலவையே பீஜாமிர்தம் எனப்படும்.

Continue reading

பூமியிலிருந்து ஆக்ஸிஜன் நீங்கி விட்டால்

பூமியிலிருந்து ஆக்ஸிஜன் நீங்கி விட்டால்

ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்?

‘இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை ‘னு கேக்கறீங்களா… காரணம் இருக்கு அதை கடைசியா சொல்றேன் இப்ப விடை சொல்லுங்க பாஸ்…

“இதென்ன கேள்வி எல்லா உயிரினங்களும் அழிந்து போகும் ” என்கிறீர்களா…?

சரி…நான் சொல்வது வெறும் ஐந்து நொடிகளுக்கு மட்டும் என்றால்?
‘அப்படி என்றால் ரொம்ப பயப்பட தேவை இல்லை என்ன …எல்லோரும் கூவத்தை கடந்து போறா மாதிரி ஒரு ஐந்து நொடி மூச்சை இழுத்து பிடித்து கொண்டால் முடிந்தது பெரிசா ஆபத்து ஒன்னும் இல்லை ‘ என்பது உங்கள் பதிலாக இருக்குமேயானால்..
இனி சொல்ல போகும் அனைத்தும் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

Continue reading