Month: December 2017

வஜ்ஜிரவல்லி பிரண்டை

வஜ்ஜிரவல்லி பிரண்டை pirandai
வஜ்ஜிரவல்லி பிரண்டை

வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் கூறினார்.

உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு!

முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்……

கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள்….

எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம் ……

பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன் ……

பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்……

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல்(அ)உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து…..

நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க…..

இதற்கு மற்றொரு பெயர் “வஜ்ஜிரவல்லி” தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ….

 

ஆழ்துளை கிணறு மற்றும் நீர்முழ்கி மோட்டார்

ஆழ்துளை கிணறு மற்றும் நீர்முழ்கி மோட்டார். borewell

புதுவீடு கட்ட தொடங்கும் ஒவ்வொருவரும் செய்யும் முதல்வேலை ஆழ்துளை கிணறு அமைப்பதுதான். ஏனென்றால் தண்ணீர் இல்லாமல் எந்த வேலையும் நடைபெறாது. அதே நேரம் எல்லா இடத்திலும் தேவையான அளவு நீர் கிடைத்து விடுவதில்லை. சில இடங்களில் 1000 அடி வரை ஆழ்துளை கிணறு அமைத்தும் குடிபதற்கே பற்றா குறையான நீர் கிடைப்பது இயற்கை நமக்கு விடும் சவால் என்றே தோன்றுகிறது.

சற்று நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற பொருளாதார இழப்பை தவிர்ப்பதுடன் நமக்கு தேவையான நீரினை மிக எளிதாக பூமியில் இருந்து எடுத்து பயன்படுத்தமுடியும்.

மழை பெய்யும் போது பூமிக்குள் உள்ள இடைவெளியில் மழை நீர் இறங்கி பூமியின் ஈர்ப்பு விசையால் பாறைகளின் இடையில் சேமிக்கப்படும் நீரே நிலத்தடி நீர். இதில் குறிப்பிட்ட இடத்திலுள்ள பாறையை பொறுத்து அதில் கலந்துள்ள சோடியம், கால்சியம், மக்னீசியம் போன்ற உப்புகள் கலந்து விடுவதால் நீரில் உப்புத்தன்மை அதிகமாகி விடுகிறது.

Continue reading

கால்நடை வளர்ப்பு மற்றும்இனப்பெருக்கம் செய்யும் முறைகளும்

Model Cattle Feed Making methods மாதிரி அடர் தீவனம் தயாரித்தல்

கால்நடை வளர்ப்பு மற்றும் (பசு) இனப்பெருக்கம் செய்யும் முறைகளும்.

இளம்பசு

முதல் கன்று ஈனுவதற்குத் தயார்படுத்தும் பசுவானது நல்ல பால் உற்பத்தி கொடுக்கக் கூடியதாக, ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். எந்த மரபியல் பரம்பரைக் குறைபாடும் இன்றி, சரியான வளர்ச்சியுடன் இருக்கவேண்டும். 2 வருடங்களுக்குள்ளாக கருவுற்றுவிடவேண்டும்.

இளம்பசு
பசு

பசுவைத் தேர்ந்தெடுக்கும் போது முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பால் உற்பத்தி. ஒரு கலப்பின மாடு நாளொன்றுக்கு 5.5 லிட்டர் பால் கொடுக்கவேண்டும். பொருளாதார ரீதியில் 305 நாட்களுக்கு, 2500 லிட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும். முதல் 2 கன்றுகளில் மாட்டின் பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 10 லி எனில் அதன் அப்பருவப் பால் உற்பத்தி 2000-2500 லி ஆகவும், நாளொன்றுக்கு 15 லி பால் கறக்கும் மாட்டின் ஒரு பருவ உற்பத்தி 3000 லி வரையிலும் இருக்கும். முதல் கன்று ஈனும் வயது 3 வருடங்களுக்கு மிகாமலும், அடுத்தடுத்த கன்று இடைவெளி 12-15 மாதங்களுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேலும் பசுவானது எந்த உடல் குறைபாடும் இன்றி, நன்கு வளர்ச்சியடைந்த மடியுடன் நல்ல பால் நரம்புகளுடன், கையாள்வதற்கு எளிதானதாக இருக்கவேண்டும். வயது முதிர்ந்த மாடுகளை மாற்றிவிட்டு புதிய இளம் பசுக்களைச் சேர்க்கலாம். பண்ணைக்குள் வளர்ந்த இளம் பசுக்களின் மூலம், வருடம் ஒரு முறை 20 சதவிகிதம் அளவாவது முதிர்ந்த மாடுகளை மாற்றிக் கொள்ளுதல் நன்று.
மந்தைகளின் உற்பத்தி சரியில்லாத நிலையில் வெளியில் இருந்து மாடுகளை வாங்கிச் சேர்த்துக் கொள்ளலாம்.

பசு காளை மாடுகள்

கன்றுகளின் மரபியல் குணங்களில் 50 சதவிகிதம் அளவு காளை மாடுகளுக்கு பங்குள்ளது. புதிய தலைமுறைகளின் மேம்பாடு நல்ல காளைகளின் தேர்வைப் பொறுத்தே அமையும். பசுத் தேர்வில் மட்டும் தீவர கவனம் செலுத்தினால் போதாது. நல்ல பால் உற்பத்தி பெறக் காளையிலும் நல்ல வம்சாவளியுள்ள காளையைத் தேர்ந்தெடுக்கவேண்டும். நல்ல இளம் காளையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல இளம் காளைகளை இனப்பெருக்கக் கலப்பில் பயன்படுத்தும் போது 4500 கி.கி அளவு பால் உற்பத்தி ஒரு பருவத்தில் பெற முடிகிறது. பிற பண்புகளான கன்று ஈனுவதில் நோய் எதிர்ப்பு போன்றவையும் கவனிக்கப்பட வேண்டும்.

காளைமாடு
கால்நடை விவசாயிகள் காளைத் தெரிவு பற்றி நன்கு தெரிந்துவைத்திருக்கவேண்டும். பல ஆராய்ச்சி அறிவியல் நிறுவனங்களில் செயற்கைக் கருவூட்டல், காளைத் தெரிவு பற்றிய செய்திகள் வெளியிடப்படுகின்றன. இதைப் பற்றிய விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும். பாரம்பரியப் (வம்சாவளிப்) பண்புகள் அடிப்படையில் தேர்ந்தெடுத்த காளைகளைக் கலப்பில் பயன்படுத்திப் பிறக்கும் கன்றின் பண்புகள் அடிப்படையில் காளைகளைத் தெரிவு செய்வதே சிறந்தது. முறையற்ற கலப்பு, விரும்பத்தக்காத பண்புகள் கன்றில் உருவாக வாய்ப்பளிக்கும்.

கால்நடை இனப்பெருக்கம்

இந்தியாவில் கால்நடை வளர்ப்பு வேளாண்மைக்கு இன்றியமையாத ஒன்றாகும். இது நமது கிராமப் பொருளதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனினும் ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடுகையில் நம் நாட்டின் கால்நடை எண்ணிக்கை மிகக் குறைவு. இதற்குக் காரணம் நல்ல இனப்பெருக்க முறைகளும், புதிய கண்டுபிடிப்பும் கிராமங்களில் இல்லாமையே ஆகும். கீழ்வரும் கருத்துக்கள் மூலம் கால்நடைகளில் சிறந்த இனப்பெருக்கம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அறிமுகம்

கால்நடைப் பராமரிப்பில் இனப்பெருக்கம் இன்றியமையாத ஒன்று. சரியான இனப்பெருக்கமும், கன்று ஈனுதலும் இல்லாமல் கால்நடை வளர்ப்பில் இலாபம் பெற இயலாது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு ஆரோக்கியமான கன்றை ஒவ்வொரு கால்நடையும் கொடுக்கவேண்டும். அதற்கேற்ற, சிறந்த திறன் கால்நடைகளிடம் இருத்தல்வேண்டும்.கலப்பில் ஈடுபட்டு, கருவைப் பெற்று அதைப் பாதுகாத்து, சினைக்கால முடிவில் நல்ல கன்றாகக் கொடுப்பதே இனப்பெருக்கம் ஆகும். இந்தî சங்கிலித் தொடரில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் பசுவானது கருவைப் பெற முடியாமல் போகலாம் அல்லது கரு இறப்பு, முழு வளர்ச்சியற்ற பிறப்பாக வெளிப்படும்.

இனச்சேர்க்கை
இனப்பெருக்கத் திறன் மரபியல் மற்றும் இதர பிற காரணிகளைப் பொறுத்தது. இதர காரணிகளான தட்பவெப்பநிலை, ஊட்டச்சத்துக்கள் மற்றும் முறையான பராமரிப்பு போன்றவற்றில், ஒரே இன மாடுகளிடையே இனப்பெருக்கத் திறன் வேறுபடும். சரியான பராமரிப்பையும் மீறி மரபியல் காரணிகள் செயல்பட்டால் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். எனவே மரபியல் பண்புகளையும் மேம்படுத்த வேண்டும். ஒரு சிறந்த இனப்பெருக்க முறைக்கு நல்ல கவனிப்பு அவசியமாகும்.
இனப்பெருக்கத் திறனை பாதிக்கும் காரணிகள்:

கரு முட்டையின் எண்ணிக்கை

ஒவ்வொரு கருவுறுதல் நிகழ்ச்சியின் பொதும் வெளிவரும் கருமுட்டைகள் ஒரு முக்கியக்காரணி. இந்த கரு முட்டைகளை கரீஃபியின் பாலிக்கிள் குழாயில் விழச் செய்வதே கருவுறுதல் ஆகும். ஒரு முட்டை 5-10 மணி நேரம் வரை இருக்கும். இந்த நேரத்தில் கலப்பு செய்தால் மட்டுமே கரு உருவாகும்.

கருத்தரித்தல் சதவீதம்

சரியான சினைத் தருணத்தில் கலப்பு செய்யாமல் மிகச் சீக்கிரமாகவோ அல்லது மிகத் தாமதமாகவோ செய்தால் விந்தணுவும், கருமுட்டையும் சந்தித்துக் கொள்ள முடியாமல் போகலாம். எனவே மாடு கருவுறாது.

கரு அழிதல்

கறவை மாடுகளில் கரு அழிதல், சரியாக கருத்தரியாமை, கருத்தரித்தபின் கருவானது கருப்பையில் நிலை கொள்ளாமல் வெளித்தள்ளப் படுவதால் (அ) கரு வளரும்போது ஏதேனும் அடிபடுவதால் ஏற்படுகிறது. இவ்வாறு கரு அழிவது ஹார்மோன் சுரக்காததால் (அ) சரியான விகிதத்தில் இல்லாததால் ஏற்படுகிறது.

முதல் சினையின் காலம்

முதல் கன்று ஈனும் காலம் அதிகமானால் அது இனப்பெருக்கத்திறனைப் பாதிக்கும். விரைவில் சினைக்கு வரும் மாடுகள், சிறிது குட்டையாகக் காணப்பட்டாலும் நல்ல இனப்பெருக்கத் திறனுடையவையாக இருக்கும்.

சினைப் பருவ எண்ணிக்கை

குறுகிய காலத்தில் (அடிக்கடி)சினைக்கு வரும் மாடுகள் நல்ல இனப்பெருக்கத் திறனுடையவை. விரைவில் சினைப் பருவமடைந்த மாடுகளை அதன் ஒவ்வொரு பருவத்திலும் முடிந்த வரை இனவிருத்தி செய்து கொள்வது நல்லது. இம்முறையில் அதன் வாழ்நாள் திறன் அதிகரிக்கும். கன்று ஈன்ற 9-12 வாரங்களுக்குப் பிறகு அடுத்த சினைக்குத் தயாராகிவிடும்.

வாழ்நாள்

பசுவின் வாழ்நாள் அளவும் இனப்பெருக்கத்திறனை அதிகரிக்கும். பசுக்கள் அதிக நாட்கள் ஆரோக்கியத்தோடு இருந்தால் ஆண்டுதோறும் மாற்றும் பசுக்கள் எண்ணிக்கை குறையும். அதோடு ஈனும் கன்றுகள் எண்ணிக்கை அதிகமாகும்.
இனப்பெருக்கத் திறனை மேம்படுத்தும் முறைகள்

சினை அடைந்த காலம், கன்று ஈன்ற நாள் போன்வற்றை பதிவேட்டில் பதிந்து பராமரித்து வந்தால் ஒவ்வொரு பசுவிற்கும் அடுத்த சினைக்கான காலத்தை முறையாகக் கணிக்கலாம்.
சரியான சினைத் தருணத்தில் கலப்பு செய்யவேண்டும்.
பசுக்களில் திரவப்போக்கு அதிகமிருந்தால், மருத்துவரை அழைத்துப் பரிசோதிக்கலாம்.
4 கலப்பிற்குப் பின்பும் சினைத் தரிக்கவில்லை எனில் மருத்துவரிடம் கொண்டு செல்லலாம்.
ஒவ்வொரு இனக்கலப்பிற்குப் பிறகும், கன்று ஈனும் முன்பு ஒரு முறை முழுமையாகப் பரிசோதனை செய்துவிடவேண்டும்.
வெளியிலிருந்து மாடுகள் வாங்கிவரும் போது நன்கு பரிசோதித்த பின்பே மந்தையில் சேர்க்கவேண்டும்.

கன்று ஈனுவது அதற்காகத் தயாரித்துள்ள தனி அறையில் சுத்தமான இடத்தில் நிகழ்தல் வேண்டும். ஒவ்வொரு தடவையும் கன்று பிறந்த பின்பு நல்ல கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துவிடவேண்டும்.

சரியாக நோய் எதிர்ப்புச் சக்தி பெற்றுள்ளவையா என்று பார்த்துத் தடுப்பூசிகளை முன்கூட்டியே போட்டு விடுதல் நலம்.

சுகாதாரமான முறையைப் பின்பற்றலாம்.
தேவையான ஊட்டசத்துக்களை அளிக்க வேண்டும்.
சரியான பாகாப்பு முறைகளைக் கையாளுதல் வேண்டும்.
தேவையான இடவசதி செய்து வைத்தல் வேண்டும்.
சரியான சினைக்கு வரும் பருவத்ததை சிறிய சூடாக இருந்தாலும் அதை டீசர் காளை மூலம் கண்டுபிடிக்கலாம்.

பால் கறத்தல் மற்றும் பால் உற்பத்தி முறைகள்

milk more-milk-production-techniques

பால் கறத்தல் மற்றும் பால் உற்பத்தி முறைகள்.

பால்
பால் ஓர் இன்றியமையாத சமச்சீர் உணவாகும். இது, பச்சிளம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாகும். பாலில் அசுத்தம் சேராதவாறு சேகரித்து நன்கு காய்ச்சி உட்கொள்வது மிக முக்கியம்.

பாலில் கொழுப்புச் சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள் போன்ற பல இன்றியமையாத சத்துப் பொருள்கள் உள்ளன. சாதாரணமாக விற்பனைக்கு வரும் பசும்பாலில் 3.5 சதம் கொழுப்பு சத்தும், 8.5 சதம் கொழுப்பில்லாத மற்ற திடப்பொருளும் இருத்தல் வேண்டும்.
பாலில் நமது உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துகளும் சரியான விகிதத்தில் உள்ளன.

அசுத்தமான சூழ்நிலையில் பால் உற்பத்தி செய்தால், பாலின் மூலம் காசநோய், தொண்டை அடைப்பான், டிப்தீரியா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு முதலிய நோய்கள் வரக்கூடும். மேலும், பாலில் சேரும் கிருமிகள் பன்மடங்கு பெருகி, அதன் தரத்தையும் கெடுத்துவிடும்.
பாலை வெளியே வெதுவெதுப்பாக நம் சுற்றுச் சூழ்நிலையில் நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது. கிருமிகள் வெகுவாக வளர்ந்து பால் கெட்டு விடும். எனவே, கறவை மாடுகள் வைத்திருப்போர், சுத்தமாக பால் உற்பத்தி செய்வது பற்றி அறிந்து, கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

பால் கறக்கும் முறைகள்

முழு விரல்களை உபயோகித்தல்:
இம் முறையில் ஒரு கையின் விரல்களால் காம்பினைப் பிடித்து, உள்ளங்கையில் அழுத்துவதால் பால் கறக்க முடியும். இம் முறையில் காம்பின் எல்லா பாகங்களிலும் ஒரே அளவான அழுத்தம் கிடைக்கும். பெரிய காம்புகள் உள்ள பசுக்களிலும், எருமைகளிலும் இம் முறையைக் கையாள்வது சிறந்தது.

இரு விரல்களை உபயோகித்தல்: கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் காம்புகளைப் பிடித்து, சிறிய அழுத்தம் கொடுப்பதன் மூலம் பால் கறக்க முடியும். இம் முறையில் காம்புகளுக்கு ஒரே சீரான அழுத்தம் கிடைக்காது.
மேலும், காம்பின் மேல் பாகம் இதனால் பாதிக்கப்பட்டு, சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இம் முறையைக் காட்டிலும் முழு விரல்களை உபயோகிப்பது சிறந்தது.
பால் கறத்தல்

மாடுகளில் பால் கறத்தல் என்பது தனிக் கலையாகும். இதற்கு, முதிர்ந்த நல்ல அனுபவமும், திறமையும் தேவை. பால் கறக்கும்போது கவனமாகவும், அமைதியாகவும், விரைவாகவும், அதே சமயம் பாலை முழுமையாகவும் கறக்க வேண்டும்.

சுத்தமாக பால் கறக்கும் முறைகள்:
பால்காரர் தனது கையை சுத்தமாகக் கழுவ வேண்டும் மற்றும் மாட்டின் மடியை சுத்தமாகத் துடைக்க வேண்டும். காம்பிலிருந்து வரும் முதல் பீச்சில் திரி மற்றும் சீழ் இருக்கிறதா என்று பரிசோதித்து, அவ்வாறு இருந்தால் கீழே ஊற்றி விட வேண்டும்.

பாலில் சேரும் அசுத்தத்தைக் கட்டுப்படுத்தும் முறைகள்:
கறவை மாடுகளின் மடியிலேயே சில கிருமிகள் இருப்பதற்கு வாய்ப்புண்டு. ஆரோக்கியமான மாடுகளில் இவ் வகையான கிருமிகள் எவ்விதமான கெடுதலும் செய்வதில்லை. எனவே, பால் கறக்கும்போது முதலில் வரும் பாலை நீக்கி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் காம்பினுள் உள்ள கிருமிகளை நீக்கி விடலாம்.

மாடுகளை அடிக்கடி நன்கு தேய்த்து, கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மடியின் மீதும், பக்கத்திலுள்ள இடங்களிலும் நீண்ட உரோமம் காணப்பட்டால், அவற்றை கத்தரித்து நீக்கலாம். கறப்பதற்கு முன் மடி, பக்கத் தொடை ஆகிய பாகங்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த நீரினால் கழுவி, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். கொட்டகையில் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

சுத்தமான பாத்திரங்களை உபயோகப்படுத்த வேண்டும். பால் பாத்திரங்களை சுத்தம் செய்தபின், தண்ணீர் அல்லது சுடுதண்ணீராலோ சுத்தம் செய்ய வேண்டும். சூரிய ஒளியில் நன்கு உலர்த்திட வேண்டும். ஈரத்தைப் போக்க துணியைக் கொண்டு துடைப்பது நல்லதல்ல. சோப்பு உபயோகிக்கக் கூடாது. ஏனென்றால், இவை பாலில் ஒவ்வாத வாசனையை ஏற்படுத்திவிடும். பால் கறப்பதற்கும், சேகரிப்பதற்கும் அதற்கென தயாரிக்கப்பட்ட பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும்.

பாலை பாதுகாத்தல்
பாலை கறந்தவுடன் கொட்டகையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால், மாட்டுத் தொழுவத்தில் உள்ள நாற்றம் பாலில் சேர்ந்து விடும்.
பாலை கறந்தவுடன் வடிகட்ட வேண்டும். பாலை 5 டிகிரி செல்சியஸூக்கு குளிர்ப்படுத்த வேண்டும். குளிர் சாதனம் இல்லையெனில், குளிர்ந்த நீரில் பாத்திரத்தை வைக்க வேண்டும். பாலை கறந்த 4 மணி நேரத்துக்குள் விற்பனை நிலையத்துக்கு அனுப்ப வேண்டும்.

கொசு விரட்டும் தும்பை இலை

கொசு விரட்டும் தும்பை இலை thumbai plant

கொசுவினால் பரவும் நோய்களை எவராலும் பட்டியலிட முடியாது. அவ்வளவு நோய்களையும் மனிதர்களிடம் பரப்பும் சத்தி கொசுவிற்கு உண்டு. கிராமங்களில் கொசு விரட்ட தும்பையைப் பயன்படுத்துவது உண்டு.

இன்று சந்தையில் கிடைக்கும் கொசு விரட்டிகள் நிறையப் பேரை ஆஸ்துமா நோயாளியாய் ஆக்கிவிட்டுள்ளது. அதற்கு மாற்றாகப் பின் வரும் முறையை நீங்கள் கையாண்டு பாருங்கள்.

Continue reading

காணாமல் போன தமிழரின் பாரம்பரிய 2600 நெல் ரகங்கள்

காணாமல் போன தமிழரின் பாரம்பரிய 2600 நெல் ரகங்கள்
காணாமல் போன தமிழரின் பாரம்பரிய 2600 நெல் ரகங்கள்

காணாமல் போன தமிழரின் பாரம்பரிய 2600 வகைக்கு மேல் நெல் ரகங்கள் இருந்துள்ன.
அவற்றில் தற்ப்போது மீட்டொடடுக்கப் பட்டுள்ள 24 வகை நெல் வகைகள்.

பாரம்பரிய நெல் ரகங்கள்:
(வயது நாள்கள் அடைப்புக்குள்):

1.பூங்கார் – (100 – 105)
2.மாப்பிள்ளைச் சம்பா – (165 – 170 )
3.கருடன் சம்பா – (170 – 180)
4.சிவப்பு கவுனி – (135 – 140)
5.பனங்காட்டு குடவாழை – (135 – 145 ) 6.கருத்தக்கார் – (105 – 110)
7.சண்டிகார் – (155 – 165)
8.கருங்குறுவை – (120 -125)
9.குருவைக்களஞ்சியம் – (140 – 145)
10.தூயமல்லி – (135 – 140)
11.தங்கச்சம்பா – (160 – 165)
12.நீலச்சம்பா – (175 – 180)
13.செம்புளிச்சம்பா – (135 – 140) 14.கிச்சடிச்சம்பா – (135 – 140)
15.இலுப்பைப்பூ சம்பா – (135 – 140)
16.அறுபதாம் குறுவை – ( 80 – 90) 17.சீரகச்சம்பா – (125 – 130)
18.காட்டுயானம் – (180 – 185)
19.சொர்ணமுசிறி – (140 – 145)
20.சிவப்பு குருவிக்கார் – (120 – 125)
21.கருப்புக்கவுனி – (140 – 150)
22.மிளகி – (120 – 130)
23.சம்பாமோசனம் – (160 – 165)
24.கைவிரச்சம்பா – (160 – 165)

பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ள மருத்துவ குணங்கள்:

அனைத்து ரகங்களுமே எளிதில் ஜீரணமாகக்கூடியது, மலச்சிக்கலை நீக்கும், நரம்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது.

பூங்கார்:

உடம்பில் சுரக்கும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. கர்பிணிப் பெண்களுக்குப் பத்தியக் கஞ்சி வைத்துக் கொடுத்தால் சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும், துத்தநாக சத்து உள்ளது.

மாப்பிள்ளைச்சம்பா:

நேரடி விதைப்பிற்கும் ஏற்றது, சத்துள்ள இந்த நீராகாரத்தை சாப்பிட்டால் இளவட்டக் கல்லைக் தலைக்கு மேல் சுலபமாகத் தூக்க முடியும். நரம்புகளை வலுப்படுத்தும், ஆண்மைத்தன்மையை அதிகரிக்கும்

சிவப்பு கவுணி:

இதயத்தை பலப்படுத்தும், பல் அலகுகளை பலப்படுத்தும், இரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்தும், மூட்டு வலியை நிவர்த்தி செய்யும்.

குடவாழை:

குடலை வாழ வைப்பதால் இப்பெயர் வந்தது. சர்க்கரை நோய் வராமல் தடுக்கும், அஜீரண கோளாறை குணப்படுத்தும். நீர்ப்பிடிப்பு பகுதிக்கு மிகவும் ஏற்றது.

கருத்தக்கார்:

வெண்குஷ்டத்தை போக்கும் காடி தயாரிப்பதற்கு பயன்படுகிறது. பாதரசத்தை முறித்து மருந்து செய்வதற்கு பயன்படுகிறது.

சண்டிகார்:

தீராத நோய்களை தீர்க்க வல்லது, உடல் வலிமையை கொடுக்கும், முறுக்கேற்றும் நரம்புகளை பலப்படுத்தும். போன்ற பல்வேறு வகையான மருத்துவ
குணங்களை உள்ளடங்கியுள்ளன

கருங்குறுவை:

விரண தோல் நோய்களையும், குறிப்பிட்ட விஷத்தையும் போக்கும். யோக சக்தியையும் தரும்.

மாப்பிள்ளை சம்பா:

இது புரதம், நார், தாது, உப்புச்சத்து நிறைந்தது. இதன் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்

கைகுத்தல் புழுங்கல் அரிசி:

low glycemic தன்மை கொண்டது. அது இரத்ததில், சர்க்கரை அளவினை மெதுவாக ஏற்றி சர்க்கரை நோயாளிக்கு திடீர் சர்க்கரை உயர்வைத் (hyper glycemia) தடுக்கும். குழந்தைகள், வாத இருப்பவர்கள், அரும்பத்தியம் இருப்பவர்களுக்கு உதவும்.

காட்டுயானம்:

ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும். டைப் 2 சக்கரை வியாதி நோயாளிகளுக்கு உகந்தது.

அன்னமழகி:

மிகவும் இனிப்பு சுவையுள்ள‌ அன்னமழகி அரிசி சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்க கூடியது. உடலுக்கு சுகத்தை கொடுக்கும்.

இலுப்பைப் பூச்சம்பா:

பித்தத்தினால் விளையும் சிற்சில ரோகம், சிரஸ்தாபம், உபசர்க்கதாகம், உஷ்ணம் ஆகியவற்றை உண்டாக்கும்.

கல்லுண்டைச்சம்பா:

இதை உண்பவர்களுக்கு மல்யுத்தக்காரரும் எதிர்க்க இயலாத தோள் வலிமையை தரும். மிகுந்த வார்த்தை வளமும் உண்டாக்கும்.

காடைச்சம்பா:

இந்த அரிசி பிரமேக சுரமும், குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும். விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்

காளான் சம்பா:

உடலுக்கு மலை போன்ற உறுதியையும், சுகத்தையும் தரும். சில வாத ரோகத்தையும் குறைக்கும்.

கிச்சிலிச்சம்பா:

பலம், உற்சாகம், உடல் பளபளப்பு ஆகியவற்றை உண்டாக்கும். தேறாத உடல் தேறும்.

குறுஞ்சம்பா:

பித்தம், கரப்பான் நீங்க விந்து விருத்தியை உண்டாக்கும். வாத நோயைநீக்கும்.

கைவரை சம்பா:

உடலுக்கு அதிக வலிமையும், சுகமும் உண்டாக்கும். இதில் சிறிது பித்தமும் அதிகரிக்கும்

சீதாபோகம்:

உடல் பலம், தேக பளபளப்பு, விந்து விருத்தி உண்டாகும். அஜீரணத்தை குறைக்கும்.

புழுகுச்சம்பா:

இந்த அரிசியை உண்பவர்களுக்கு வனப்பும், அமைதியும், பசியையும், பலமும் உண்டாக்கும். தாகம் நீங்கும்.

மணக்கத்தை:

தோல் நோய்கள் அனைத்தையும் போக்கும். புண்கள், ரணங்கள் ஆகியவற்றை குறைக்கும்.

மணிச்சம்பா:

அளவுக்கு அதிகமாக சிறுநீரை குறைக்கும். குழந்தை, முதியவர்களுக்கு அதிகசுகத்தை உண்டாக்கும்.

மல்லிகை சம்பா:

நாவிற்கு மிகவும் ருசியானது. தேகத்திற்கு சுகத்தையும், உறுதியையும் தரும். கரப்பான், பிரமோகம், உடல் வெப்பம் ஆகியவற்றை போக்கும்.

மிளகு சம்பா:

உடலுக்கு சுகத்தை தரும். பசியை உண்டாக்கும். வாதம் போன்ற பல விதமான ரோகத்தை போக்கும்.

மைச்சம்பா:

வாதம், பித்தம் போன்ற கோளாறுகளை குறைக்கும். வாத கோபம்,வாந்தி போன்றவற்றை போக்கும்.

வளைத்தடிச்சம்பா:

வாத, பித்த தொந்தரவு, வயிற்று உப்புசம், வயிற்று இரைச்சல், கரப்பான் ஆகியவற்றை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்.

வாலான் அரிசி:

மந்தம், தளர்ச்சி முதலியவை குறையும். உடலுக்கு அழகும், கொழுமையும் உண்டாக்கும்.

மூங்கில் அரிசி:

மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். இந்த பூவிலிருந்து வரும் காய்கள் தான் நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். மூங்கிலிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசியைச் சமைத்து உண்டு வர, உடல் திடம் உண்டாகும், உடல் இறுகும், கொடிய நோய்களெல்லாம் நெடுந்தூரம் ஓடிவிடும்.

பழைய அரிசி:

பாலர், முதியோர்களுக்கு மிகவும் உகந்தது. பசியும், உடலுக்கு குளிர்ச்சியும் உண்டாகும். சில நோயும்,கபமும் குறையும்.

இவை அனைத்தும் அரிசியின் பல வகைகளும், அவற்றை உண்பதால் ஏற்படும் நன்மை, தீமைகளும் ஆகும்.

இதை கொண்டு உடலுக்கு ஆரோக்கியமானஅரிசியை மட்டும் சாப்பிட்டு நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம்.

கிராமத்து இளைஞன்.

பட்டுனு மாறுங்க பாரம்பர்ய அரிசிக்கு

பட்டுனு மாறுங்க பாரம்பர்ய அரிசிக்கு

பட்டுனு மாறுங்க… பாரம்பர்ய அரிசிக்கு!

நம் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீரா ?

1. கருப்பு கவுணி அரிசி:
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. மாப்பிள்ளை சம்பா அரிசி :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

3. பூங்கார் அரிசி :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

4. காட்டுயானம் அரிசி :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

5. கருத்தக்கார் அரிசி :
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

6. காலாநமக் அரிசி :
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

7. மூங்கில் அரிசி:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

8. அறுபதாம் குறுவை அரிசி :
எலும்பு சரியாகும்.

9. இலுப்பைப்பூசம்பார் அரிசி :
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

10. தங்கச்சம்பா அரிசி :
பல், இதயம் வலுவாகும்.

11. கருங்குறுவை அரிசி :
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

12. கருடன் சம்பா அரிசி :
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

13. கார் அரிசி :
தோல் நோய் சரியாகும்.

14. குடை வாழை அரிசி :
குடல் சுத்தமாகும்.

15. கிச்சிலி சம்பா அரிசி :
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

16. நீலம் சம்பா அரிசி :
இரத்த சோகை நீங்கும்.

17.சீரகச் சம்பா அரிசி :
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.

18. தூய மல்லி அரிசி :
உள் உறுப்புகள் வலுவாகும்.

19. குழியடிச்சான் அரிசி :
தாய்ப்பால் ஊறும்.

20.சேலம் சன்னா அரிசி :
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.

21. பிசினி அரிசி :
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.

22. சூரக்குறுவை அரிசி :
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

23. வாலான் சம்பா அரிசி :
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

24. வாடன் சம்பா அரிசி :
அமைதியான தூக்கம் வரும்.