Month: July 2018

என்ன மாதம் என்ன செடிகள் வளர்க்கலாம்

என்ன மாதம் என்ன செடிகள் வளர்க்கலாம்

என்ன மாதம் என்ன செடிகள் வளர்க்கலாம்!


ஜனவரி மாதம் (மார்கழி, தை)
இந்த மாதங்களில் (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.நன்கு விளைசல் கிடைக்கும்.

பிப்ரவரி மாதம் (தை,மாசி)
இந்த மாதங்களில் (தை,மாசி) கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

மார்ச் மாதம் (மாசி, பங்குனி)
இந்த மாதங்களில் (மாசி, பங்குனி) வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

ஏப்ரல் மாதம் (பங்குனி, சித்திரை)
இந்த மாதங்களில் (பங்குனி, சித்திரை) செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.


மே மாதம் (சித்திரை, வைகாசி)
இந்த மாதங்களில் (சித்திரை, வைகாசி) செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

ஜூன் மாதம் (வைகாசி, ஆனி)
இந்த மாதங்களில் (வைகாசி, ஆனி) கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

ஜூலை மாதம் (ஆனி, ஆடி)
இந்த மாதங்களில் (ஆனி, ஆடி) மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

ஆகஸ்ட் மாதம் (ஆடி, ஆவணி)
இந்த மாதங்களில் (ஆடி, ஆவணி) முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

செப்டம்பர் மாதம் (ஆவணி, புரட்டாசி)
இந்த மாதங்களில் (ஆவணி, புரட்டாசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

அக்டோபர் மாதம் (புரட்டாசி, ஐப்பசி)
இந்த மாதங்களில் (புரட்டாசி, ஐப்பசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

நவம்பர் மாதம் (ஐப்பசி, கார்த்திகை)
இந்த மாதங்களில் (ஐப்பசி, கார்த்திகை) செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

டிசம்பர் மாதம் (கார்த்திகை, மார்கழி)
இந்த மாதங்களில் (கார்த்திகை, மார்கழி) கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

மேலும் படிக்க :
எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் செய்யலாம்
பட்டம் பார்த்து பயிர் செய்

மண்ணும் மனிதரும் part 3

மண் வீடென்றதும் ஒருவித இளக்காரம் ஏற்பட்டு விடுகிறது. உண்மையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் பயன்படுத்தி வரும் கட்டடப் பொருட்களில் முக்கியமானதும் முதன்மையானதும் இந்த மண்தான். மனித குல நாகரிக வளர்ச்சியுடன் போட்டி போட்டுக் கொண்டு தப்பிப் பிழைத்து விட்ட சிறப்பு மிக்க கட்டடப் பொருள்தான் இந்த மண். இன்றும் கூட மனிதர்களால் அதன் இயல்பான நிலையிலும், உருமாறிய நிலையில் செங்கற்களாகவும் (Bricks) பயன்படுத்தி வரும் பாக்கியத்திற்குரியது இந்த மண்.

Continue reading

பாரம்பரியக் கட்டடக்கலை

பாரம்பரியக் கட்டடக்கலை கட்டிடக்கலை

வீடு கட்டுவதற்கான செலவில் 60%ற்கும் அதிகமான பங்கை இம்மூலப்பொருட்களே எடுப்பதால், குறைந்த செலவு வீடுகளைக் கட்டும்போது இம்மூலப் பொருட்களைத் தகுந்த முறையில், குறைத்த செலவில் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயவேண்டியதன் தேவை தவிர்க்க முடியாததே. வீட்டிற்கான மூலப்பொருட் செலவுகளை எவ்விதம் குறைக்கலாம்? இதற்கான விடையின் ஒரு பகுதியினைப் பாரம்பரியக் கட்டடக்கலை (Traditional Architecture) எமக்குச் சுட்டிக் காட்டுகின்றது.

Continue reading

மக்களை முட்டாளாகவே வைத்து கொள்ள நினைக்கும் மீடியாக்கள் உண்மை முகம்

ஆமாம் டிஎம்சி..டிஎம்சி என்கிறார்களே அப்படியானால் அது எம்மாம் அளவு தண்ணீர் என்று பெரும்பாலானோருக்கு தெரியாது. ஒரு டிஎம்சி தண்ணீர் என்பது தௌஸன் மில்லியன் கியூபிக் ஃபீட்.. அதைத்தான் சுருக்கி டிஎம்சி என்கிறார்கள். தெளிவாக புரியும்படி சொன்னால் 100 கோடி கன அடி நீர்..

ஒரு கனஅடி நீர் என்பது 28.3 லிட்டர். ஒரு டிஎம்சிக்கு 2830 கோடி லிட்டர் அதாவது ஒரு டிஎம்சி தண்ணீரை அம்மா பாட்டிலில் அடைத்து வைத்து விற்றால் 28 ஆயிரத்து 300 கோடி ரூபாயை தேத்தலாம். நமது டாஸ்மாக்கின் ஒரு வருட கலெக்ஷன்.

இதே ஒரு டிஎம்சி தண்ணீரை பெப்சி கம்பெனிக்காரன் பாட்டிலில் அடைத்து லிட்டர் 20 ரூபாய்க்கு விற்றால் 56 ஆயிரத்து 600 கோடி ரூபாயை தேற்றிவிடுவான். ஒரு டிஎம்சியை வைத்து சென்னை மாநகருக்கு 34 நாட்கள் குடிநீர் விநியோகம் செய்யலாம். இவ்வளவு தண்ணீரை 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளில் அடிக்க சுமார் 24 லட்சம் லாரிகள் தேவைப்படும். இப்போது புரிகிறதா ஒரு டிஎம்சி தண்ணீர் என்றால் எவ்வளவு என்று?

Continue reading

கட்டடங்களும் தொழில் மயப்படுத்தலும்

கட்டடங்களும் தொழில் மயப்படுத்தலும்

இந்தியா போன்ற வளர்முகநாடுகளில் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளிலொன்று இந்த வீட்டுப் பிரச்சினை.

இத்தகைய வளர்முகநாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள். இதனால் வீடுகளைக் கட்டினால் மட்டும் போதாது குறைந்த செலவிலும் கட்ட வேண்டும்.

இதன் காரணமாகக் ‘குறைந்த செலவு வீடுகளின்’ (Low Cost Housing) தேவை வளரும் நாடுகளைப் பொறுத்த வரையில் மிகவும் அவசியமாகின்றது. பல்வேறு வளரும், அபிவிருத்தியடைந்த நாடுகளிலெல்லாம் இத்தகைய குறைந்த செலவுக் குடிமனைகளைக் கட்டுவதெப்படி என்பது பற்றியெல்லாம் ஆய்வுகள், பரிசோதனை முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. வெற்றியடைந்திருக்கின்றன. மேலும் ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுமிருக்கின்றன.

Continue reading

சரியா கணக்கு போட்டு உங்க மேஸ்திரிய அசத்துங்க

சரியா கணக்கு போட்டு உங்க மேஸ்திரிய அசத்துங்க

சரியா கணக்கு போட்டு உங்க மேஸ்திரிய அசத்துங்க..

#வீடு_கட்டுமானம்: #சில_உபயோகமான_தகவல்:

ஒரு கன மீட்டர்(cubic meter)9″ கனம் கொண்ட செங்கல்சுவர் கட்ட 450 செங்கற்கள் தேவை. சிமென்ட் 1.5 மூட்டை தேவை!

Continue reading

மஞ்சம் புல்லில் கூரை அமைத்தல்

மஞ்சம் புல்லில் கூரை அமைத்தல்
மஞ்சம் புல்லில் கூரை அமைத்தல் – thatch roofing

 

100 சதம் இயற்கையான கூரை அமைப்பு எனில் அது பனை ஓலை,தென்னை ஓலை,கரும்பு சோகை மற்றும் சில புல் வகைகள் ஆகியவற்றை கொண்டு கூரை அமைக்கும் முறை ஆகும்.

இதில் எது அருகில் கிடைத்ததோ அதை வைத்து அன்று கூரை அமைத்தனர்.

இதில் மிக முக்கியமானது மஞ்சம் புல்.இவற்றில் ஒரு விதமான எண்ணை தன்மை இருப்பதால் மிகவும் பராமரிப்பு குறைவானதும் அதிக நாட்கள் உழைக்க கூடியதும் இந்த மஞ்சம் புல் கூரை.

மற்றும் இந்த புல்லில் பட்டு வரும் காற்று உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. மற்றும் கடுமையான வெயில் காலங்களில் கூட குளிர்ச்சியை கொடுக்க கூடியது.

இந்த மஞ்சம் புல் கூரையை மூங்கிளை கொண்டு நண்பர் Amutham Devaஅவர்கள் தமிழகமெங்கும் அமைத்து தருகிறார்.

தேவைபடுபவர்கள் தொடர்பு கொள்ளவும்….