மண்ணை சோதிக்கும் போது மண்சோதனை முடிவுகள் பாஸ்பேட் உள்ளது என்று கூறும் ஆனால் அவை கிடைக்கப் பெறாத நிலையில் இரு துகள் மற்றும் முன்று துகள் நிலையில் உள்ளது. வனத்தில் உள்ள மண்ணிலும் ஒரு துகள் பாஸ்பேட் இருப்பதில்லை. இரு துகள் மற்றும் முன்று துகள் பாஸ்பேட் மட்டுமே இருக்கிறது. வனத்தில் உள்ள தாவரத்தின் ஒரு இலையை எடுத்துக்கொண்டு ஆய்வகத்தில் சோதனை செய்தால் அந்த தாவரத்தில் பாஸ்பேட் குறைபாடில்லை என்றே முடிவுகள் கூறும். அதாவது அந்த தாவரத்திற்கு பாஸ்பேட் கிடைத்துள்ளது, இதை வேர்பகுதிக்கு கிடைக்கச் செய்தது யார்? அவர்களே இரு துகள் மற்றும் மூன்று துகள் பாஸ்பேட்டை ஒரு துகள் பாஸ்பேட்டாக பிரித்துள்ளார்கள் யார் அவர்கள்?
Month: February 2019
தாவரங்களில் 108 தனிமங்கள்
இந்திய தத்துவத்தின் படி உயிரினங்களின் உடல் (தாவரங்கள் உட்பட) பஞ்ச பூதங்களால் ஆனது. இந்த பஞ்ச பூதங்கள் மேலும் 108 தனிமங்களாக பிரிகிறது. தற்கால விஞ்ஞானத்தின் மூலம் சில அடையாளம் காணப்படாத மூலப்பொருட்கள் செடியில் எங்கு உள்ளது என்று கண்டறிய முடியவில்லை ஆனால இந்ததிய தத்துவம் 5000 ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்கள் 108 தனிமங்களால் ஆனது என்பதை கூறியுள்ளது.
ஒளிச்சேர்க்கையும் உணவு உற்பத்தியும்
பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் பஞ்ச பூதங்களின் உருவாக்கப் பட்டுள்ளன. தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், நுண்ணுயிர்கள் என அனைத்தும் பஞ்ச பூதங்களால் ஆனது. இவை நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஐந்து பூதங்களாக உள்ளன.
பீஜாமிர்தம், ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் தயாரிக்க
பீஜாமிர்தம், ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் தயாரிக்க கடையில் இருந்து எந்த மூலப்பொருளும் வாங்க வேண்டியதில்லை. பயறு மாவு ஊடுபயிர்கள் மூலமாக நமக்கு கிடைத்துவிடும். சர்க்கரைக்கு பழமரங்களையும் வளர்த்து கொள்ளலாம், சுபாஷ் பாலேக்கர் விவசாயம் செலவைக் குறைக்கும் விவசாயம்.
மண்புழுக்களை மேலே கொண்டுவரும் நுண்பருவநிலை
மண்புழுக்கள் சாதகமில்லா நேரங்களில் மண்ணின் ஆழத்திற்கு சென்று சமாதி (dormancy) நிலையில் உள்ளன, சமாதி நிலை என்பது செயலற்ற நிலையாகும், இது எல்லா உயிர்களுக்கும் பொருந்தும், மரங்களும் குளிர்காலங்களில் சமாதி நிலையில் இருக்கக்கூடியது. விலங்குகளில் தவளைகள் வாழ்க்கையிலும் நாம் இதை நேரடியாகப பார்க்க முடியும்.
ஜீவாமிர்தம் தயாரிக்க நாட்டுமாடு கோமியம்
நான் பல வயதுடைய நாட்டு மாடுகளைக் கொண்டு சோதனை செய்த போது புதிய சாணத்தை பயன்படுத்துவது சிறந்தது என்று கண்டறிந்தேன்.
ஆனால் நாட்டு மாட்டு கோமியம் எந்த அளவு பழையதாக இருக்கிறதோ அந்த அளவு சிறந்தது. அப்படியானால் நீண்ட காலத்திற்கு சேமித்து வைக்கமுடியும். நாட்டுமாட்டு கோமியத்தை எந்த வகையிலும் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்.
யூரியா ஏன் பயன் படுத்தக்கூடாது
யூரியா மண்ணில் சிதையும் போது அமோனியா மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாறுகிறது என்பது பலருக்கும் தெரியும் தானே. ஒரு டீஸ்பூன் யூரியா சாப்பிட்டால் அது மனிதனை கொன்றுவிடுகிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் இந்த விஷத்தைத் தாங்குமா?