நகரத்திலேயே பிறந்தவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. கிராமத்தில் பிறந்தவர்கள், பால்யத்தை செலவிட்டவர்கள், இரண்டொரு நிமிடம் கண்களை மூடி, கால இயந்திரத்தில் பயணித்து உங்கள் பால்ய நினைவுகளை மீட்டெடுங்கள்… உங்களால் உங்களது கிராமத் தெருவின் புழுதி வாசனையை நுகர முடிகிறதா… ? உங்கள் முகத்தில் வீசிய இளந்தென்றல் காற்றை உணர முடிகிறதா…? கீற்றோ, பனை ஓலையோ அல்லது நாட்டு ஓடோ வேய்ந்த உங்கள் வீட்டில் காலையில் நுழையும் ஒளியை பார்க்க முடிகிறதா…?. வீடெனப்படுவது அதுதான்….
Category: மரபு கட்டுமானம்
சுட்டெரிக்கும் வெயிலுக்கு காரணம் யார்
நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கை அரிசியிலும், வெயிலும் மழையும் கலந்து இருக்கிறது. அரிசியில் மட்டுமல்ல, காய்கறிகள், பழங்கள், நீர் என இயற்கையின் அனைத்து கொடையிலும் வெயில் இருக்கிறது; மழை இருக்கிறது. நாம் இதனைதான் அள்ளி பருகுகிறோம், உண்கிறோம். ஆனால், மோசமான அரசு நிர்வாகம் வெயிலையும், மழையையும் நமக்கு அந்நியமாக்கிவிட்டது, எதிரியாக்கிவிட்டது. மழையை, வெயிலை தூற்றத் துவங்கிவிட்டோம்.
உலகமயமாக்கலுக்கு பிறகு பிறந்த குழந்தைகள் கூட, வீடு வரைய சொன்னால் மரத்துடன்தான் வீடு வரைகின்றன. இந்த பண்பு, அதன் மரபில் படிந்து இருக்கிறது. ஆனால், வளர்ந்த நாம்தான் மரத்தை மறந்து விட்டோம்.
வீடு கட்டும் செலவை குறைக்க
வீடு கட்டும் செலவை குறைக்க பவுண்டேசன் எனப்படும் கடைக்கால் அமைப்பு மற்றும் பேஸ்மென்ட் எனப்படும் அடித்தள அமைப்பு இரண்டையும் எவ்வாறு அமைப்பது என்பதை பார்க்க போகிறோம்.
நம் பாரம்பாரிய கட்டிடங்களில் அனைத்திலும் கடைக்கால் இடுவதற்கு பெரும்பாலும் மணலை பயன்படுத்தினர்.காரணம் மனலுக்கு அதிக எடை தாங்கும் திறன் இருக்கிறது.இது கடைக்காளுக்கு அடியில் உள்ள மண்ணின் ஏற்ற இரக்கங்களை சரி செய்து வாகனத்தில் சஸ்பென்ஷன் அமைப்பு செயல்படுவதை போல செயல்படுகிறது.
(எ.கா )தஞ்சை பெரிய கோயிலின் கோபுரத்தின் அடியில் மணல் 4 அடிக்கு கொட்டப்பட்டு உள்ளது.
மண்ணுல வீடு கட்டினா மழைக்கு தாங்குமா
மண்ணுல வீடு கட்டினா முதல்ல கவுரவ குறைச்சலா நினைக்கிறதை நிப்பாட்டுங்க.
1.மண்ணுல வீடு கட்டினா மழைக்கு தாங்குமா?
2.அழகா இருக்குமா?
3.கரையான் பாதிக்குமா?
4.செலவு ?
இதற்கு பதில்:
சரியான தொழில்நுட்பம் மட்டும் தான் தேவை.
தேள் கொடுக்காப்புளி பனைமரம்
நாம் எப்போதும் தமிழ்நாட்டின் மரம் என்று அழைக்கப்படும் பனை மரத்தை மட்டும் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம் உண்மைதான் எல்லா மரங்களையும் விட பனைமரம் அதிக உபயோக பயன் கொண்டது என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை ஆனால் அதே நேரத்தில் இன்னும் பல மரங்களும் நிறைய உபயோக திறனை கொண்ட மரங்கள் அழிந்து வரும் நிலையிலும் இருப்பது நாம் மறக்கக் கூடாத விஷயம்.
மண்ணுக்கோ, கல்லுக்கோ,சுண்ணாம்புக்கோ வயது என்பதே கிடையாது
மண்ணுக்கோ, கல்லுக்கோ,சுண்ணாம்புக்கோ வயது என்பதே கிடையாது. வயது ஆக ஆக வலிமை கூடி கொண்டே தான் போகும். சிமென்டுக்கு தான் வயது. ஏனென்றால் சிமெண்ட் ஒரு செயற்கையாக உருவாக்கப்பட்ட பொருள்.அதற்க்கு lifetime என்ற ஒன்று உண்டு.அதற்கு பிறகு அது தாங்காது.
உணவு,உடை,இருப்பிடம்
உணவு,உடை,இருப்பிடம் மனிதனின் அடிப்படை தேவைகள். இவை மூன்றும் இயற்கையாகவும்,நஞ்சில்லாமலும் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் பட்சத்தில் அவன் வாழ்க்கை ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
அதைத்தான் நமது பெரியோர்கள் “”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”என்று சொல்லி வைத்தனர்.