Category: மரபு கட்டுமானம்

தன்னிகரற்றக் கட்டிடக் கலைஞர் லாரி பேக்கர்

இந்தியாவின் தன்னிகரற்றக் கட்டிடக் கலைஞர் லாரி பேக்கர், நமது பாரம்பரியக் கட்டிடக் கலையை நமக்கே மீட்டெடுத்துத் தந்தவர். இயற்கைக்கு ஏதுவாகக் கட்டிடக் கலையை மாற்றியமைத்தவர். அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் கட்டுமானப் பொருள்களைக் கொண்டு முன்னுதாரணமான கட்டிடங்களை உருவாக்கினார்.

அவர் கட்டிய கட்டிடங்கள் இன்னும் வலுவுடன் அவரது கட்டிடக் கலையின் சிறப்பைப் பறைசாற்றிக்கொண்டுள்ளன. அவர் குறித்தும் அவரது கட்டிடக் கலை அனுபவங்கள் குறித்தும் அவரது மனைவி எலிசபெத் பேக்கர் எழுதிய நூலின் தமிழாக்கம் தான் “பறவைக்கு கூடுண்டு அனைவருக்கும் வீடு”

நம்ம ஊர் சந்தையில் நூல் அறிமுகம்:

சூழலுக்கிசைவாய் மனித மனங்களை நகரச் செய்ய சந்தையில் புத்தகங்கள் வாயிலாகவும் வழி காணும் சிறு செயலாய் ,
இம்மாதம்
எலிசபெத் பேக்கர் எழுதி,
மருத்துவர்.வெ.ஜீவானந்தம் அவர்கள் மொழியாக்கம் செய்து
தடாகம் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள

பறவைக்கு கூடுண்டு அனைவருக்கும் வீடு
புத்தகம்.
சூழலை அழிக்காமல் வாழ்விடத்தை உருவாக்கும் மரபுக் கட்டிடக்கலை பற்றிய புத்தகம்.

அறிமுகம் செய்பவர்
கு. பாலமுருகன், நூலகர்
GRD கல்லூரி.

புத்தக வாசிப்பாளர்கள், மரபுக் கட்டிடக்கலை பற்றி அறிய விரும்புவோர் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.
நம்ம ஊரு சந்தை – Namma Ooru Sandhai

mud blocks கொண்டு கட்டப்பட்ட மண் வீடு

mud blocks கொண்டு கட்டப்பட்ட மண் வீடு

கர்நாடகா எல்லையில் உள்ள அஞ்செட்டியில் உள்ள மலைப்பகுதியில் நண்பரின் mud blocks கொண்டு கட்டப்பட்ட மண் வீடு பார்வையிட வாய்ப்பு கிடைத்தது. சிறு குளம்,முன்புற திண்ணை,முற்றம்,சுற்றியும் மரங்கள்,கருங்கல் வேலைப்பாடுகள்,சாய்தள மங்களூர் ஒட்டு கூரை,மண்வாசயுடன் சுவர்,அழகான கருங்கல் படிக்கட்டு,பழைய செட்டிநாட்டு வீடுகளின் தூண்கள்,என வர்ணித்து கொண்டே போகலாம்.

Continue reading

மண் வீடு version 2.0

மண் வீடு version 2.0 mannveedu20

மண்ணுல வீடுன உடனே ஒழுகிகிட்டு, தூசி அண்டிக்கிட்டு,கதவு ஜன்னல் அழகா இல்லாம,ஓதம் அடிச்சிக்கிட்டு இருக்குமே அந்த மண் வீடுனு நெனச்சியா…

Continue reading

மாற்று கட்டுமானமும் மக்களின் மனநிலையும்

சமீபத்தில், எங்கள் க்ளையண்ட் ஒருவரிடம் பேசும்போழுது சொன்னார் –

நீங்க எவ்ளோதான் சொல்லி புரியவெச்சாலும், யாரையும் மாத்த முடியாதுங்க. ரொம்ப நாளா ஒரே மாதிரி யோசிச்சு மைண்ட் ஃபிக்ஸ் ஆகிருக்கும். நீங்க எடுக்கற முயற்சிலாம் பிரயோஜனம் இல்லாமயே போய்டும்னு சொல்லாம சொன்னாங்க. அவருக்கு நாங்கள் ஆரம்பத்திலிருந்து  இதற்கான முயற்சிகள் எடுக்கும் போதிலிருந்தே அவர் எங்களை கவனித்து வருகிறார். ஒரு வெல்விஷராக எங்கள் மீதான அக்கறை தான் அப்படி வெளிப்படுகிறது என்று எனக்கு தோன்றுகிறது.

அவர் சொல்வது சரி தானா? இது நடுநிலையான ஒரு புரிதல் என்று எடுத்துக்கொள்ளலாமா?

பல ஆண்டுகளாக கண்டிஷன் செய்யப்பட்ட எண்ண ஓட்டத்தோடு போராடுவது அவ்வளவு எளிதல்ல. அதை நாங்கள் புரிந்தே இருக்கிறோம். இதை விளக்க ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. டெட்டால் -சாவ்லான் மோதிய வரலாறு.

Continue reading

மாற்று கட்டுமானத்தில் கான்க்ரீட் மற்றும் சிமென்டின் பயன்பாடு

எங்களிடம் மண் அல்லது மாற்றுக்கட்டுமானம் பற்றி கேட்கும் போது பேச்சு சிமெண்ட் அல்லது கான்கிரீட் பக்கம் திரும்பும்.நான் கட்டுமான துறையில் பணியாற்றும் போது எனக்குள் எப்போதும் ஒருவிதமான குழப்பம் மட்டும் இருந்தது என்று சொல்ல முடியாது. ஒரு விதமான குற்ற உணர்ச்சியே என்னை உறுத்தியது. ஏதோ தெரிந்தே பாவம் செய்கிற உணர்ச்சி இருந்தது என்று சொன்னால் அது மிகையல்ல. நல்ல வேளை, இப்பொழுதெல்லாம் இதை நினைத்து தூக்கமிழப்பதில்லை.

ஒவ்வொரு புதிய கனவும் மெய்ப்படும் போதும் சரி, அது எதிர்பாராத விளைவுகளையும் நமக்கு பரிசாக தரும். எல்லா புதிய சிந்தனைகளுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகள், கேள்விகள்,கேலிகள் எல்லாம் பரிச்சயமான ஒன்று. இதைத் தாண்டித் தாக்குப் பிடிக்கற சிந்தனைகள் மக்களால் ஏற்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து விடுகிறன‌

Continue reading