Category: Agriculture News

புரட்டாசிப் பட்டத்தில் என்னென்ன பயிர்கள் விதைக்கலாம்

புரட்டாசிப் பட்டத்தில் என்னென்ன பயிர்கள் விதைக்கலாம்

தமிழ்நாட்டின் முக்கிய சாகுபடி பட்டங்களில் புரட்டாசிப் பட்டமும் ஒன்று. இப்பட்டத்தில் தானியங்கள், சிறு தானியங்கள், பயறு வகைகள், நார்ப் பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுவது வழக்கம். தென்மேற்குப் பருவ மழை சிறப்பாக கைகொடுத்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவ மழையும், அக்டோபர் முதல் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதால் இந்தாண்டு புரட்டாசிப் பட்டம் செழிப்பு நிறைந்ததாகவே இருக்கும். புரட்டாசிப் பட்டத்தில் என்னென்ன பயிர்கள் விதைக்கலாம், சராசரியாக எவ்வளவு மகசூல் கிடைக்கும்? இதோ…

Continue reading

Waste Decomposer பற்றிய தெளிவான விளக்கம்

Waste Decomposer - வேஸ்ட் டீகம்போஸ்ர் தெளிவான விளக்கம்

இது நாட்டு மாட்டின் சாணத்தில் இருந்து பிரித்தெடுத்து கொடுக்கப் படுகிறது. சிலர் இது குறித்து மாறுபட்ட கருத்துக்களை சொல்கிறார்கள். நாட்டுமாட்டின் சாணத்தில் இருக்கும் பல்லாயிர நுண்ணுயிர்களில் சிலதை மட்டுமே இது கொண்டுள்ளதால் முழுமையான பலனை கொடுக்காது என்பதே இவர்களின் வாதம்.

Continue reading

Understanding my soil

Understanding my soil manage soil

Understanding my soil. The most important steps in establishing and managing a moisture efficient farm is to understand and manage my soil.

– Soils with high moisture holding capacity with effective infiltration and good drainage are best able to use any available rainfall

– knowing the soil type will help to understand the percentage of sand – silt – clay contents in my soil. This is also called as structure of soil.

Organic Matter:

The organic matter in my soil adds value to my soil. Whatever be the soil type, adding more organic matter can help improve the soil structure and increase its ability to store moisture and nutrients.

Regularly adding more organic matter is recommended
because high rainfall and high temperatures cause it to
break down quickly.

Mulch and its uses

A layer of organic mulch placed over the soil is a useful
addition to the soil. Mulch helps to reduce evaporation
from the soil and insulates plant roots against extremes of
heat and cold. It also helps prevent weed growth.

Over time, organic mulches decompose into the soil, adding further nutrient and water holding capacity.

நன்மை செய்யும் பூச்சிகளின் பயன்கள்

ஊசி தட்டான் நன்மை செய்யும் பூச்சிகளின் பயன்கள்

1. ஓநாய் சிலந்தி
தலையும் மார்பும் சேர்ந்த பகுதியில் லு போன்று குறி இருக்கும் 100 நாட்கள் வரை வாழ்;ந்து 380 முட்டைகள் இடும். பகலில் இலை அடியிலும், தண்டின் அடியிலும், அல்லது தண்ணீரின் மேல் புறத்தில் தென்படும். இரவில் இலையின் மேல்பாகத்திற்கு சென்று விடும். ஒரே நாளில் 5 முதல் 12 பூச்சிகளை உண்ணும்

Continue reading

இயற்கை களைக்கொல்லி தயார்

களைகள் மண்டிய நிலத்துக்கு இயற்கை களைக்கொல்லி

ரசாயன களைக்கொல்லிகளை பயன்படுத்துவதால் மண் மலடாவதுடன்,மனித உடலும் மலடாகிவிடுகிறது..இதற்கு தீர்வான இயற்கை களைக்கொல்லி தயார்.
ஒரே கல்லில் எக்கச்சக்கமான
மாங்காய் ங்க..!

நீண்ட பரிசோதனைக்கு பிறகு வெற்றி ..

இது விவசாயிகளுக்கு வரபிரசாதம் என்றுகூட சொல்லலாம்..

ரசாயன களைக்கொல்லிகளை பயன்படுத்துவதால் மண் மலடாவதுடன்,
மனித உடலும் மலடாகிவிடுகிறது..

இதற்கு தீர்வுதான் என்ன என்று யோசித்தேன்..

முகநூலில் பல நண்பர்கள் மாட்டு கோமியம் தெளித்தால் களைச்செடி கருகி விடுகிறது என்று கூறினர்..

முயற்சித்தேன் களைமுளைவிடும் போது..

ஆனால் பலனலிக்கவில்லை..

சரி வெறும் கோமியம் மட்டும் தெளித்தால்
களை கருகாது என்று சிறிது கல் உப்பை சேர்த்தேன்..

களை கருகவில்லை..

எலுமிச்சபழத்தை சேர்த்தேன் பலனில்லை..

இதனுடன் வேப்பெண்ணெய் சேர்த்தேன் களைச்செடி கருகியது..

சரி என்று கடந்த மாதம் எனது வாழை காட்டில் தெளித்து பார்த்தேன்.

களைச்செடி கருகி வாழை கருகரு என்று வளர்ந்தது..

சரி இனி நாம் சின்ன டிராக்டரை விட்டு களைச்செடிகளை அழிக்க தேவை இல்லை என்று முடிவு செய்தேன்..

என்னிடம் இருப்பது இரண்டு நாட்டு மாடு..

பயிருக்கு உரத்தேவையை இந்த இரண்டு மாடுகளே பூர்த்தி செய்கிறது.

இது சராசரியாக தினமும் பத்து லிட்டர் கோமியம் கிடைப்பதே சிரமமாக இருந்தது
(12 மணி நேரத்தில்)

ஆனால் களைக்கொல்லிக்கு நாம் இந்த கோமியத்தை பயன்படுத்தினால் வாழைக்கு நீருடன் கலந்து விட பற்றாகுறை ஆகிவிடுமே என்று யோசித்தேன்..

தீவிரமாக யோசித்தேன்..

ஒரு யோசனை வந்தது..

நாம் ஏன் இந்த
வாழையின் பக்க கன்றுகளையும்,
வாழை பூவையும் மாட்டுக்கு போட்டால்
கோமியம் அதிகமாக கிடைக்குமே என்று ..

வீணாகப்  போன பக்க கற்றுகளையும் வாழை பூவையும் மாட்டிற்கு போட்டேன் ..

கைமேல் பலன் கிடைத்தது.

சராசரியாக நாள் ஒன்றிற்கு இருபது லிட்டர் கோமியம் கிடைத்தது இரண்டு மாடுகளிடமிருந்து..

அப்படியே சேகரித்தேன் ஒரு மாதம்..

நானூறு லிட்டர் கோமியம் கிடைத்தது..

நிம்மதி பெருமூச்சு விட்டேன்..

செய்முறை விளக்கம்..
************************

நீர்கலக்காத மாட்டு கோமியம் ஒரு குடம் (பத்து லிட்டர்) ஒருமாத காலம் ஆகியிருந்தால் இன்னும் சிறப்பு..

முளைத்த களைச்செடியாக இருந்தால் ஒரு கிலோ கல் உப்பு ..

களைச்செடிகள் வளர்ந்திருந்தால் இரண்டு கிலோ கல் உப்பை பத்து லிட்டர் கோமியத்தில் போட்டு நன்றாக கலக்கவும்..

பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும்..

அதனுடன் வேப்ப எண்ணை நூறு மில்லியை
இதனுடன் ஊற்றி கலக்கவும்..

பிறகு வடிகட்டி கைத்தெளிப்பானில் களைச்செடிகள் மீது தெளிக்கவும்..
(பயிருக்கு படாமல்)

அடுத்த இரண்டு நாட்களில் அனைத்து களைச்செடிகளும் கருகிவிடும் பார்த்தீனிய உட்பட கோரை, அறுகம்புல் தவிர..

இந்த களைக்கொல்லி பயிருக்கு எந்த தீங்கும்
தருவதில்லை,

காரணம் கோமியம் பயிர் வளர்ச்சிக்கு உகந்ததது..

வேப்ப எண்ணை தொடர்ந்து பயன்படுத்தினால் கோரை கிழங்கு கூட அழிந்து விடும்..

கல் உப்பு ஒரு கிலோ என்பதால் மண்ணை பாதிப்பது இல்லை..

இதை நீங்கள் செய்ய குறைந்த செலவே ஆகிறது..

அந்த காலத்தில் வேப்பமரத்தில் செய்த கலப்பையை கொண்டு நம் பாட்டன் பூட்டன் உழுதததால் கோரை விவசாய பூமியில் இல்லாமல் போனது..

பச்சை புரட்சி என்ற பெயரில் மரக்கலப்பை இரும்பு கலப்பை ஆன பின்பே கோரைக்கிழுங்கு நம் பூமிக்குள் நுழைந்து விவசாயிகளுக்கு பெரும் தலைவலியை தந்தது..

தயாரிக்க ஆகும் செலவு

ஒரு டேங்க் இயற்கை களைக்கொல்லி தயாரிக்க ஆகும் செலவு,

கல் உப்பு ஒரு கிலோ 3 ரூபாய்
எலுமிச்சை பழம் 3 ரூபாய்
வேப்ப எண்ணை
100Ml 12 ரூபாய்
***********
ஆக மொத்தம் 18 ரூபாய்

கோமியம் இல்லாமல் பதினெட்டு ரூபாயில்
களைகளை  அழித்து விடலாம்..
மண் எந்த விதத்திலும் பாதிக்காமல்..

இதுவே ரசாயன களைக்கொல்லியை பயன்படுத்தினால் ஒரு டேங்க்கிற்கு நாற்பது ரூபாய் செலாவதுடன் மண் மலடாகி
அதில் வாழும் உயிரனங்களும் அழிந்து விடும்..

இன்று மஞ்சள் நடவு செய்துள்ளேன்.

இன்னும் இரண்டு நாட்களில் இந்த களைக்கொல்லியை தெளிக்க போகிறேன்..

இயற்கை களைக்கொல்லி இருக்கும்போது
செயற்கை களைக்கொல்லியை பயன்படுத்தி
சொந்த செலவுல சூனியம் ஏங்க வைக்கனும்..!!?