வயல்களில், 25 சதவீதம், பயிர்களையே உணவாக உட்கொள்ளும் தீமை செய்யும் பூச்சிகளும்; தீமை செய்யும் பூச்சிகளை தேடி, அதை பிடித்து உணவாக உட்கொள்ளும், 75 சதவீதம் நன்மை செய்யும் பூச்சிகளும் உள்ளன.
தீமை செய்யும் பூச்சிகளைத் தேடி, பயிர்களின் மேல்பகுதியில் நன்மை செய்யும் பூச்சிகள் இருக்கும்.
தீமை செய்யும் பூச்சிகள், பயிர்களின் உட்பகுதியில் இருக்கும்
Category: Agriculture News
உயிர் உரங்கள், ஊட்ட உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள்
#உயிர் உரங்கள், ஊட்ட உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் போன்றவற்றை குறித்து கேள்வி பதில்கள்
பயிர் பாதுகாப்பிற்கான உயிர் உரங்கள், ஊட்ட உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் போன்றவற்றை கத்தரி. தக்காளி. மிளகாய், வெங்காயம் போன்றவற்றில் சில கேள்வி பதில்களைப் பற்றி பார்க்கலாம்.
1. நல்ல நிலம் எப்படி இருக்கனும்?
வடிகால் வசதியுள்ள வளமான மண்ணாக இருக்கனும்.
Pர் 6.5 முதல் 7.5 வரை கார அமிலம் இருக்கனும்
மண்ணில் நீர் பிடிப்பு தன்மை இருக்கனும்
2. பயிருக்கு என்னென்ன சத்துக்கள் போடனும் அவை
யாவை?
மொத்தம் பயிருக்கு இடவேண்டியசத்துக்கள் 16 அவை
பேரூட்டச்சத்துக்கள் , நுண்ணூட்டச்சத்துக்கள்
பேரூட்டச்சத்துக்கள் என்பது அதிகளவில் பயிர்களுக்கு
போடக்கூடிய உரமாகும்
நுண்ணூட்டச்சத்துக்கள் என்பது பயிருக்கு குறைந்த
அளவில் கொடுக்கக் கூடிய உரமாகும்.
சத்துக்கள்
1. தழைச்சத்து
2. மணிச்சத்து
3. சாம்பல் சத்து
4. சுண்ணாம்பு சத்து
5. மெக்னீசியம்
6. கந்தகம்
7. துத்தநாகம்
8. இரும்பு
9. போரான்
10. மாங்கனீசு
11. குளோரின்
12. மாலிப்டினம்
13. போராக்ஸ்
14. கார்பன்
15. ஹைட்ரஜன்
16. ஆக்சிஜன்
தழை, மணி, சாம்பல் – இவை பேரூட்டச்சத்துக்கள்
தழைச்சத்தும், மணிச்சத்தும் வாயுநிலையில் இருக்கும்.
பயிருக்கு காற்றின் மூலம் கிடைக்கும்
கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிசன் (வாயுநிலை ) இவை
கொழுப்புச்சத்து காற்றிலிருந்து கிடைக்கும்.
மண்ணிலிருந்து கிடைக்ககூடிய சத்துக்கள்
சாம்பல் சத்து, சுண்ணாம்புசத்து
3. சத்துக்களை எப்பொழுது பயிர்களுக்கு போட வேண்டும்?
மணிச்சத்தை அடியுரமாக மட்டுமே போட வேண்டும். மற்ற சத்துக்களை களை வெட்டிய பிறகு கூட போடலாம்.
நுண்ணூட்ட சத்துக்களை நடுவதற்கு முன் மேலாக தூவிவட வேண்டும். இவற்றை மேலுரமாகவும்,
இலைவழி உரமாகவும் கொடுக்கலாம்.
4. விதை நேர்த்தி செய்ய டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ் எவ்வளவு கலக்க வேண்டும் இரண்டையும் ஒன்றாக கலக்கலாமா?
டிரைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் கலக்கலாம் இரண்டையும் ஒன்றாக கலக்கக் கூடாது.
சூடோமோனஸை இரும்புச்சத்து இல்லாத செம்மண் நிலங்களுக்கு மட்டும் விதை நேர்த்தி செய்ய பயன்படுத்தலாம்
சூடோமோனஸை 1 கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம்.
5. மேட்டு நாற்றங்கால் தயாரிக்கும் பொழுது ஏன் நீளம் அளவு தேவையில்லை அகலம் மட்டும் 3 அடி வைக்கவேண்டும் காரணம் என்ன?
மேட்டு நாற்றங்காலில் ஈரப்பதம் ஒன்று சேர்வதற்கும்
சீராக தண்ணீர் எல்லா இடங்களுக்கும் பரவவும்.
களை எடுக்க ஏதுவாகவும்; இருக்கும்.
6. கத்தரி நாற்றின் வயது எவ்வளவு இருக்கனும்?
நாற்றங்காலில் 22 முதல் 25 நாள் வயதுடைய நாற்றுக்களை எடுத்து நடவு செய்யனும்.
7. கத்தரி நடவு செய்தவுடன் என்னென்ன நோய்கள், பூச்சிகள் வரும்?
வாடல் நோய், இலைக்கருகல் நோய் தண்டு அழுகல், சாறு உறிஞ்சும் பூச்சிகள், எறும்பு, வெள்ளைஈ, தண்டு துளைப்பான், காய்ப்புழு
8. கத்தரி நடவு செய்தவுடன் எறும்பு, சாறுஉறிஞ்சும் பூச்சிகள், வெள்ளைஈ, தண்டுதுளைப்பான், காய்ப்புழு இவற்றை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்.?
ஊடுபயிர் சாகுபடி செய்யலாம்
ஒட்டுண்ணி அட்டைகட்டலாம் ஒரு எக்கருக்கு 3 சி.சி
இனக்கவர்ச்சிபொறி ஒரு ஏக்கருக்கு 2 இடங்களில் வைக்கலாம்
நிறப்பொறி மஞ்சள் அட்டை, ஒரு ஏக்கருக்கு 4 இடத்தில் வைக்கலாம்
விளக்குப்பொறி, ஒரு ஏக்கருக்கு ஒரு இடத்தில் வைத்து கவர்ந்து அழிக்கலாம். தாவர இலைச்சாறு அடிக்கலாம்.
9. நோய் தாக்குதல் என்றால் என்ன? பூச்சி தாக்குதல்
என்றால் என்ன?
சாறு உறிஞ்சும் பூச்சிகளின் மூலம் நோய்கள் ஏற்படுகிறது கத்தரியில் சிற்றிலை நோய் வாடல், இலைகருகல் நோய் வரும. நூற்புழு தாக்குதல் தண்டுதுளைப்பாண், காய்ப்புழு, காய் அழுகல்
10. காய்கறி பயிர்களுக்கு போடக்கூடிய நுண்ணுயிர் உரம் எது?
அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா
11. 100 கிலோ கத்தாரிக்காய் உற்பத்தி செய்ய அவை
மண்ணிலிருந்து எடுத்துக் எடுத்துக்கொள்ளும்
சத்துக்களின் அளவு என்ன?
தழைச்சத்து – 4
மணிச்சத்து 0. 5
சாம்பல் சத்து 6
சுண்ணாம்பு சத்து 2
மெக்னீசியம் 0.5
கந்தகம் 0.5
12. 100 கிலோ தொழுவுரத்தில் உள்ள சத்துக்களின் அளவு என்ன?
தழைச்சத்து – 1
மணிச்சத்து 0. 5
சாம்பல் சத்து 1
சுண்ணாம்பு சத்து 3
மெக்னீசியம் 0.5
கந்தகம் 0.5
13. சூப்பர்பாஸ்பேட்டை எப்படி போட்டால் சத்துக்கள் வீணாகாமல் பயிருக்கு அப்படியே கிடைக்கும்?
ஊட்டமேற்றிய தொழுவுரமாக மாற்றி போட்டால் சத்து அப்படியே பயிருக்கு கிடைக்கும்.
14.ஜிப்சத்தில் உள்ள சத்துக்கள் என்ன அளவு எவ்வளவு?
கந்தகசத்து 14 சதம்
சுண்ணாம்பு சத்து 22 சதம்
15.பயிருக்கு நோய்வர காரணிகள் என்ன?
காலநிலை – ( வெளிக்கூறுகள்)
ஊட்டச்சத்து பற்றாக்குறை
விதை நேர்த்தி செய்யாமை
நீர் பாய்ச்சுவதன் மூலம்
16.கத்தரியில் பச்சை தத்துப்பூச்சியை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்.?
பூச்சி விரட்டியை பயன்படுத்தலாம்
மஞ்சள் அட்டை கட்டலாம்
ஊடுபயிர் சாகுபடி செய்யலாம் ( மகரந்தம் அதிகம் இருக்கக்கூடிய பயிர்கள் மக்காச்சோளம், சூரியகாந்தி போன்ற பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.விளக்குப் பொறி வைக்கலாம்.
17. தத்துப்பூச்சியின் தாக்குதல் எப்படி இருக்கும்? இலைப்பேன் தாக்குதல் எப்படி இருக்கும்?
தத்துப்பூச்சியின் தாக்குதல் – இலை கீழ்நோக்கி சுருண்டு காணப்படும் இலைப்பேன் தாக்குதல் – இலைமேல் நோக்கிசுருண்டு காணப்படும்.
தத்துப்பூச்சி – மூன்று வகைதான் இருக்கும்
முட்டை பருவம், இளம் பருவம், முதிர்ந்த பருவம்
இறக்கைஇருக்காது
சாறு உறிஞ்சும் பூச்சி. முட்டையை தண்டுக்குள் இடும்.
புழு பருவம் இருக்காது.
செம்பேன் , இலைபேன், மாவு பூச்சி இவை மிகச் சிறியது
காற்று அதிகமாக இருந்தாலும், வெயில் அதிகமாக
இருந்தாலும் இப்பூச்சிகள் வரும். மாவு பூச்சியை பயிர் சிலந்தி என்று கூறுவர்.
18. அஸ்விணியை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்.?
அஸ்விணி முட்டை இடாமல் குஞ்சு பொறிக்கும் தன்மை
உள்ளது
இவை ஒன்று பத்தாகும் பத்து நூறு ஆகும் இப்படி பெருகிக்கொண்டே போகும். உணவு பற்றாக்குறை – தீனி குறைவாக இருந்தால் இறக்கை முளைத்து விடும். – ( பறந்து வேறு இடங்களுக்கு சென்று
விடும்) இவற்றை கட்டுப்படுத்த
ஊடுபயிர் தட்டபயிர் சாகுபடி செய்யலாம்.
உரத்தை குறைக்கனும்,
வேப்பங்கொட்டைச் சாறு அடிக்கலாம்.
மைதா மாவு, கோதுமை மாவு கரைத்து ஊற்றலாம்.
தாவரக் கலைசல். அடிக்கலாம்.
பூண்டு அரைக்கிலோ, மிளகாய் அரைக்கிலோ, வேப்பங்கொட்டை இடித்த தூள் 1 கிலோவை 1 லிட்டர் கோமியத்தில் ஒரு நாள் ஊறவைத்த கரைசல் அடிக்கலாம். (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி)
19. தக்காளியில் வாடல் நோய்க்கும், பாக்டீரியா வாடலுக்கும் என்ன வித்தியாசம்?
வாடல் நோய் கொஞ்சம், கொஞ்சமாக வாடும்.
பூஞ்சாண நோய் ஒரு பைப் லயன் – இவை பயிரின் வேர்
அடைத்து இருக்கும் பயிர் கொஞ்சம் கொஞ்சமாக மாறும்( நூற்புழு வேரை அடைத்துவிடும்.) அதனால் பயிரின் மற்ற பாகங்களுக்கு போகும் சாறை ( பைப் லயன் அடைத்து விடும்) பாக்டீரியா வாடல் உடனே வாடிவிடும். –(இலைகருகி)பாக்டீரியா வாடல் – ஒரு
கண்ணாடி டம்ளரில் தண்ணீரை ஊற்றி
அதில் செடியின் வேரை பாகத்தை வெட்டி தண்ணீர் நிறம்பிய டம்ளரில் வேரை போடவேண்டும் அதில் ஒரு வித திரவம் வடியும் அப்படி வடிந்தால் அது பாக்டீரியா வாடல் நோய் எனப்படும்
பஞ்சகவ்யா
பஞ்சகவ்யா
பஞ்சகாவ்யா ஒரு அங்கக பொருள். இது செடியின் வளர்ச்சியை உயர்த்தியும் மற்றும் நோய் பற்றாநிலையை கொடுக்கும். பஞ்சகாவ்யாவில் ஒன்பது வகையான பொருட்கள் உள்ளன.
தேவையான பொருட்கள்:
மாட்டுச்சாணம்
மாட்டு சிறு நீர்
பால்
தயிர்
வெள்ளம்
நெய்
வாழை
இளநீர்
தண்ணீர்
செய்முறை
மாட்டுச்சாணம் – 7 கிலோ
மாட்டு நெய் – 1 கிலோ
இந்த இரண்டு
பொருட்களையும் நன்றாக காலை மற்றும் மாலை நேரங்களில் கலக்கி மூன்று நாட்கள் வரை வைக்கவும்.
மாட்டு சிறு நீர் – 10 லிட்டர்
தண்ணீர் – 10 லிட்டர்
மூன்று நாட்கள் கழித்து மாட்டு சிறுநீர் மற்றும் தண்ணீரை இதனுடன் கலக்கி தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நன்றாகக் கலக்கி 15 நாட்கள் வரை வைக்கவும். 15 நாட்கள் கழித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அதனுடன் வைத்தால் 30 நாட்களுக்குள் பஞ்சகாவ்யா தயாராகிவிடும்.
தயாரிக்கும் முறை
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மண் பானை, கற்காரை தொட்டி அல்லது பிளாஸ்டிக் கேன்களில் மேலே கொடுக்கப்பட்டுள்ள வரிசைகளில் சேர்க்கவும் கொள்கலனை நிழலில் திறந்து வைக்கவும். உட்பொருளை நாளொன்றிற்கு இருமுறை காலையும், மாலையும் கலக்கி வைக்கவும. 30 நாட்களுக்கு பிறகு பஞ்சகாவ்யா கரைசல் தயாராகிவிடும். இதை தயாரிக்கும் போது எருமையுடைய பொருட்களை கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாட்டு மாடுகள் சிறந்தது.. இதனை நிழலில் வைக்கவும். கம்பி வலைக்கண் அல்லது பிளாஸ்டிக் கொசு வலையை அதன் மேல் மூடி வைக்கவும் ஈக்கள் முட்டை இடுவது மற்றும் கரைசலில் ஈ இன காலில்லா புழுக்கள் உருவாவதை தடுக்க கரும்பு சாறு இல்லையென்றால் 500 கிராம் வெள்ளத்தை மூன்று லிட்டர் தண்ணீரில் கலக்கி பயன்படுத்தலாம்..
பஞ்சகாவ்யாவிற்கு தேவையானவை
சாணம்
கோமியம்
நெய்
பால்
தண்ணீர்
தயிர்
வெல்லமம்
இளநீர்
பூவன் பழம்
வேதிப்பொருள்களின் கூட்டமைப்பு
அமில நிலை 5.45
ஈ.சி டி எஸ்.எம்2 10.22
மொத்த தழைச்சத்து (பிபிஎம்) 229
மொத்த மணிச்சத்து (பிபிஎம்) 209
மொத்த சாம்பல்சத்து (பிபிஎம்) 232
சோடியம் 90
சுண்ணாம்புச்சத்து 25
ஐ.ஏ.ஏ.(பி.பி.எம்.) 8.5
ஐி.ஏ.(பி.பி.எம்.) 3.5
நுண்ணுயிரி சுமை
பூசணம் 38800 மி.லி
பாக்டீரியா 1880000 மி.லி.
லேக்டோபேசில்லஸ் 2260000/மி.லி.
மொத்த காற்றில்லாச் சுவாச உயிரி 10000/மி.லி.
அமிலம் 360/மி.லி.
மெத்தனோஜென் 250/மி.லி.
பஞ்சகாவ்யாவின் இயல்பு வேதிப்பொருள் மற்றும் உயிரியல் பொருட்களில் முக்கியமான ஊட்டப்பொருள், நுண் ஊட்டப்பொருள் மற்றும் வளர்ச்சிப் பொருள்கள், நுண் ஊட்டப்பொருள் மற்றும் வளர்ச்சிப் பொருள்கள் (IAA & GA) உள்ளன. நுண்ணுயிரியை நொதித்தல் அதாவது ஈஸ்ட், லேக்கேடாபேசில்லஸ் இணைந்து அமில நிலையை குறைத்துவிடும். பால் பொருட்கள் மற்றும் வெள்ளம்/கரும்பு சாறினை சேர்த்தால் வளர்வதற்கு உருதுணையாக இருக்கும்.
லேக்டோபேசில்லஸில் நன்மை பயக்கும் வளர்ச்சிதைப்பில் உருவாகும். அவை பின்வருமாறு அங்கக அமிலம், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் எதிர் உயிரிப்பொருள்களை உருவாக்கும். இவை மற்ற நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிக்கு எதிர்ப்பாக செயலாற்றும். ஜி.சி.-எம்.எஸ். பகுப்பாய்வில் உள்ள கூட்டுகள்.விலங்குகளின் நலத்திற்கு பயன்படும் பஞ்சகாவ்யா….
நுண்ணுயிரி, பாக்டீரியா, பூஞ்சாண், புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, அமினோ அமிலங்கள், வைட்டமின், நொதிப்பொருள், வளர்ச்சி ஊக்கக் கூறு, நுண்ணூட்டச்சத்து, எதிர் உயிரியமாக்கி மற்றும் முழுத்தடுப்பாற்றலை அதிகப்படுத்தும் காரணிகள் ஆகியவைகளுக்கு பஞ்சகாவ்யா முக்கியமாகத் திகழ்கின்றது.
மனிதர்களில்
பஞ்சகாவ்யாவில் இருக்கும் நுண்ணுயிரிகள் முழுத்தடுப்பாற்றலை தூண்டி, உடம்பினுள் கொண்டு செல்லும் நுண்ணுயிரிகளுக்கு எதிராக அதிகப்படியான நோய் எதிர்ப்பொருளை உருவாக்கும். இது நோய்த்தடுப்பாற்றல் மருந்தினை போல் செயல்படும். பஞ்சகாவ்யா விலங்குகள் மற்றும் மனிதர்களின் முழுத்தடுப்பாற்றலை அதிகப்படுத்தும். நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாத்து, குணப்படுத்த உதவும். முதிர்ச்சியைக் கட்டுப்படுத்தி நீண்ட நாட்களுக்கு இளமையாக வைத்திருக்க உதவும். பஞ்சகாவ்யாவில் இருக்கும் காரணிகள் பசியார்வம், ஜீரணத்தன்மை, தன்மயாதல் மற்றும் நச்சுத்தன்மையை உடலில் இருந்து அகற்றுதல் உதவி புரியும். மலச்சிக்கலை முழுமையாகக் குணப்படுத்திவிடும்.
வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு
ஆடுகளின் வயதைப் பொருத்து ஒரு நாளைக்கு ஒரு ஆட்டிற்கு 10.மி.லி.யில் இருந்து 20.மி.லி. வரை பஞ்சகாவ்யாவை கொடுத்தால் அதனுடைய எடை குறுகிய காலத்தில் அதிகமாகி, திடமாகவும் இருக்கும். நோய் தாக்குதலும் குறையும்..
மாடுகள்
மாடுகளுக்கு நாளொன்றுக்கு ஒரு மாட்டிற்கு 100 மி.லி. பஞ்சகாவ்யாவை தீனியிலும், தண்ணீரிலும் கலந்து கொடுத்தால் மாடுகள் திடமாகவும், பால் உற்பத்தி அதிகமாகவும், கொழுப்பும் அதிகமாகி காணப்படும். கருக்கொள்ளுதலின் எண்ணிக்கை அதிகமாகும்.
கருஇணையம், பால்மடி வீக்கம். பாதம் மற்றும் வாய் நோய்களைக் குறைத்துவிடும். மாடுகளின் தோல்களில் நிறைய முடிகளுடனும், மினு மினுப்பாகவும் தோன்றும். வேலி போடுவதற்கு முன் உலர்ந்த புற்களின் மேல் யூரியாவை தெளிப்பதற்கு பதிலாக சில விவசாயிகள் 3 சதவீதம் பஞ்சகாவ்யா கரைசலை தெளிப்பார்கள். அடுக்கடுக்க உலர்ந்த புற்கள் புளித்துப் போகும். மாடுகளுக்கு பஞ்சகாவ்யா தெளிக்காத புற்களை விட இந்த வகையான உலர்ந்த புற்களையே மாடுகள் விரும்புகின்றது.
கோழி
தினமும் தீனியிலோ அல்லது குடிநீரிலோ ஒரு பறவைக்கு 1.மி.லி. என்ற அளவில் கலந்து கொடுத்து வந்தால் கோழிகளுக்கு நோய் தாக்குதல் இல்லாமல், திடமாக இருக்கும் அதிக காலங்களுக்கு முட்டைகள் இடும். எடை அதிகரிக்கும்.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மீன்
மீன் குளங்களில் பஞ்சகாவ்யாவை தினமும் மாட்டு சாணத்தில் கலந்து வைக்கவும். மீனின் வளர்ச்சி துரிதமாக இருக்கும்.. அதிக எடை உள்ளதாக வளரும்.. அதிகப்படியான இழப்பும் இருக்காது..
விதைக்கும் போது கவனிக்க வேண்டியவை
விதைக்கும் போது கவனிக்க வேண்டியவை
காய்கறிகள், கீரைகள் போன்ற பல விதைகளை விதைக்கும் போது சில முறைகளை கவனிக்க வேண்டும். அதைப் பற்றி இங்கு காண்போம்.
👉 சிலர் தொட்டியில் விதை போட்டு வளர்ப்பார்கள். அதற்கு பயன்படுத்தும் தொட்டியானது சிறியதாக இருந்தால் அதில் விதைக்க கூடாது.
👉 மண் இறுகி உள்ள நிலத்தில் விதைப்பை தவிர்க்க வேண்டும். மண்ணின் தன்மைகேற்ப பலன் கொடுக்கும் விதைகளை விதைக்க வேண்டும்.
🍃 விதைக்கும் போது விதைகளை மிக மிக அருகில் விதைக்க கூடாது.
🍃 மேலும் ஆழமாக விதைக்க கூடாது. விதை மண்ணில் மூடி இருந்தால் போதும்.
🍃 விதைத்தப்பின் நீர் அதிகமாக ஊற்ற கூடாது. விதை மக்கிதான் முளைக்கும் அதிகம் ஈரம் இருந்தால் முளைக்காது.
🍃 கீரை விதையை தூவிவிட்டு மண்ணை கிளறி விட வேண்டும். பின் மெதுவாக மண்ணை அழுத்தி விட வேண்டும்.
🍃 இதன் மூலம் விதையும், மண்ணும் ஒட்டும் முளைப்பு நன்றாக இருக்கும். மண்ணில் கீரை விதை விதைத்த பின் நீரை தெளித்து விட வேண்டும்.
🍃 தொட்டியாக இருந்தால் அதன் ஓரத்தில் நீர் ஊற்ற வேண்டும். நிழலில் வைக்க கூடாது.
🍃 நாட்டு விதைகள் மண்ணில் வளர்வதை விட தொட்டியில் வளர்ச்சி குறைவாக தான் இருக்கும்.
🍃 நாட்டு விதையை விதைக்கும் முன் பஞ்சகாவியாவில் இரண்டு மணி நேரம் ஊற வைத்து, பின் காய வைத்து விதைத்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
🍃 தக்காளி, கத்தரி, மிளகாய் விதைகளை கண்டிப்பாக நாற்று விட்டு தான் பின் எடுத்து நடவு செய்ய வேண்டும். கீரை விதை விதைக்கும் முறையில் இதனை விதைக்க வேண்டும்.
🍃 விதைகளை நாட்டு மாட்டு கோமியத்தில் ஊற வைத்து பின் அதனை காய வைத்து சுரைக்குடுவையில் வைத்து எத்தனை வருடம் வேண்டுமாலும் சேமிக்கலாம்.
🍃 மண்ணில் மாட்டு சாணியை கலந்த பின் விதைத்தால் விதை விரைவாக மக்கி முளைக்கும்.
அவரைக்காய் மாடித் தோட்டம்
அவரைக்காய் மாடித் தோட்டம்
தேவையான பொருட்கள்
1. Grow Bags அல்லது Thotti.
2. அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண் புழு உரம், செம்மண், உயிர் உரங்கள், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
3. விதைகள்
4. நீர் தெளிக்க பூவாளி தெளிப்பான்
5. பந்தல் போடுவதற்கான உபகரணங்கள்
தொட்டிகள்
தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாணம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு இட்டு தொட்டியை நிரப்ப வேண்டும். இந்த கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது. 7-10 நாட்கள் கழித்து விதைப்பு செய்ய வேண்டும். செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.
விதைத்தல்
நோய் தாக்காத ஆரோக்கியமான விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். அவரையில் செடி அவரை, கொடி அவரை உள்ளன. செடி அவரைக்கு 3 விதைகள் வரை ஒரு தொட்டியில் ஊன்றலாம். கொடி அவரைக்கு 3 முதல் 4 விதைகள் வரை ஊன்றலாம்.
நீர் நிர்வாகம்
விதைகளை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை நீர் ஊற்ற வேண்டும்.
பந்தல் முறை
மாடித்தோட்டத்தில் பந்தல் போடுவது சுலபமான வேலை. அதற்கு நான்கு சாக்குகளில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும் நான்கு மூலைகளில் வைக்க வேண்டும். பின்னர் இதில் கயிறு/கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும். இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும்.
உரங்கள்
செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு கிளறிவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
பாதுகாப்பு முறைகள்
கொடி அவரையில் வளரும் நுனி கிளைகளை கவாத்து செய்வதால் அதிக கிளைகள் தோன்றும். செடியைச் சுற்றி அடி மண்ணை வாரம் ஒரு முறை கிளறி விட வேண்டும். பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.
பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பைகளில் ஊற்ற வேண்டும். இது சிறந்த நோய் தடுப்பானாக செயல்படும்.
அறுவடை
காய்களை முற்றி விடாமல் சரியான பருவத்தில் இருநாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்ய வேண்டும். இது 3 முதல் நான்கு மாதம் வரை பலன் கொடுக்கும்.
பசு மாடுகளுக்கு தீவன மேலாண்மை
பால் மாடுகளுக்கு அதன் உடல் எடையில் 10% (7%பசுந்தீவனம், 2% உலர் தீவனம், 1%அடர் தீவனம்) தினமும் தீவனம் அளித்தல் முக்கியம்.
நீர் காலை அல்லது மாதியம் மற்றும் மாலையில் தேவையான அளவு நீர் அளிக்க வேண்டும்.
எ.கா தோரயமாக 20 கிலோ பசுந்தீவனம், 4-6 கிலோ உலர் தீவனம், 3-6 கிலோ அடர் தீவனம்.
கறவை மாடுகளுக்கு ஒவ்வொரு 1லிட்டர் பாலுக்கும் 500கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும்.
காளான் வளர்ப்பு
இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை. எப்போது வேண்டுமானால் வளர்க்கலாம்.
இத்தொழிலை எப்படிச் செய்வது?
மிகவும் எளிதுதான். நம் வீட்டிலேயே செய்யலாம். கொஞ்சம் இடம் இருந்தால் அதற்காக ஒரு குடில் அமைத்தும் செய்யலாம்.