Category: Cattle rearing

நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள்

நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகள் பெற நாம் வளர்க்கும் 5 பெட்டைக் கோழிகளுக்கு ஒரு சேவல் என்ற விகிதத்தில் பெட்டை சேவலை இணைத்து வளர்க்க வேண்டும்.

இவ்வாறு வளர்க்கும்போது சேவல் பெட்டைக் கோழியுடன் இணைந்தவுடன் கருவுறுதல் எளிதில் நடைபெற்று கருக்கூடிய முட்டைகள் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது.

மாறாக பெட்டை சேவல் கோழிகளின் விகிதம் 10:1 என்று இருந்தால் குஞ்சு பொரிப்புத்திறன் குறையும்.

Continue reading

மானியத்துடன் பால்பண்ணை கடன்

மானியத்துடன் பால்பண்ணை கடன்

மானியத்துடன் பால்பண்ணை கடன் திட்டம் பற்றிய விபரம் : இந்த திட்டமானது மாட்டு பண்ணை வைக்க நபார்டு (Nabard) வங்கியின் மூலம் கடன் வழங்குவதாகும்.

💰 இந்த திட்டத்தில் 2 முதல் 10 மாடுகள் வரை வளர்க்க 6 லட்சம் வரை கடன் பெறலாம்.

யாரெல்லாம் கடன் பெறலாம்…?

💰 விவசாயிகள், தனிநபர் தொழில் முனைவோர், சுய உதவி குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள்.

💰 ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்டோர் கூட இத்திட்டத்தில் கடன் பெறலாம்.

💰 ஆனால் அவர்களின் பண்ணை 500 மீட்டருக்கு மேல் தள்ளி இருக்க வேண்டும். ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் கடன் பெறலாம்.

நபார்டு வழங்கும் கடன் திட்டங்கள் :

💰 இந்த திட்டத்தில் பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 25% மானியம் பெறலாம். தாழ்த்தப்பட்டோர் 33.33% மானியம் பெறலாம்.

💰 சிறிய மாட்டு பண்ணைகள் அமைக்க கடன் பெற்ற பின் (Back Ended Subsidy) வழங்கப்படும்.

💰 கன்று குட்டிகள் வளர்க்கும் திட்டத்தில் 20 கன்று குட்டிகள் வரை வாங்கலாம். இதற்கு ரூ.5.30 லட்சம் வரை கடன் பெறலாம்.

💰 மண்புழு உரம் தயாரிக்கும் கடன் திட்டத்தில் ரூ.22,000 வரை கடன் பெறலாம்.

💰 பால் கறக்கும் இயந்திரங்கள் மற்றும் குளிரூட்டும் இயந்திரம் வாங்கும் கடன் திட்டத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம்.

💰 பால் குளிரூட்டி அதனை எடுத்து எடுத்து செல்லும் வாகனம் வாங்க ரூ.26.50 லட்சம் வரை கடன் பெறலாம்.

💰 பால் குளிரூட்டும் பதனக் கிடங்கு அமைக்க ரூ.33 லட்சம் வரை கடன் பெறலாம்.

💰 தனியார் கால்நடை மருத்துவமனை அமைக்க கடன் பெறலாம். இதில் நடமாடும் கிளினிக் அமைக்க ரூ.2.60 லட்சமும், நிலையான கிளினிக் அமைக்க ரூ.2 லட்சமும் வழங்கப்படுகிறது.

💰 பால் விற்பனை நிலையம் அமைத்து பால் பொருட்களை விற்பனை செய்ய ரூ.1 லட்சம் வரை கடன் பெறலாம்.

பயனாளியின் பங்கு :

💰 ரூபாய் 1 லட்சம் வரை கடன் பெறம் பயனாளிகள் பங்கு தொகை எதுவும் கட்டத் தேவையில்லை. அதற்கு மேற்பட்ட கடனுக்கு 10மூ பங்குத் தொகையாக தர வேண்டும்.

கடன் வழங்கும் வங்கிகள் :

🏠 வணிக வங்கிகள்

🏠 கிராம மற்றும் நகர்ப்புற வங்கிகள்

🏠 மாநில கூட்டுறவு வங்கிகள் ரூ மாநில வேளாண் கூட்டுறவு வங்கிகள்

🏠 நபார்டு வங்கியில் மறுசுழற்சி நிதி பெறும் நிதி நிறுவனங்கள்

🏠 நபார்டு வங்கியில் கடன் பெறும் திட்டங்களுக்கே இது பொருந்தும்.

விண்ணப்பிக்கும் காலம் :

🕛 2017 – 18-ம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் மேலே குறிப்பிட்டுள்ள வங்கிகள் மூலமாக நபார்டு வங்கிக்கு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் விண்ணபிக்க வேண்டும்.

🕛 தகுதியான விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு நபார்டு வங்கி கடன் வழங்கும்.

🕛 தொழில்முனைவோர் தங்களின் திட்ட அறிக்கைகளை வங்கியில் சமர்பிக்க வேண்டும்.

🕛 வங்கிகள் அதனை பரிசீலனை செய்து சரியாக இருக்கும் பட்சத்தில் முதல் தவணை பணம் கொடுக்கப்பட்ட பின் வங்கிகள் நபார்டு வங்கியை அணுகி மானியத்தினைப் பெற்று கொள்ளலாம்.

🕛 இவை அனைத்தும் அந்த பகுதியில் உள்ள நபார்டு கிளை அலுவலகத்தில் இரண்டு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

🕛 3 முதல் 7 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.