Category: News

மஞ்சள் நிற ஒட்டுப் பொறி

மஞ்சள் நிற ஒட்டுப் பொறி.

பழைய டால்டா டன்கள்ல மஞ்சள் நிறத்தில் தடவி, அதுமேல விளக்கெண்ணெய் அல்லது கிரீஸை தடவி, ஒரு ஏக்கருக்கு 5 இடம்கிற கணக்குல, உயரமா குச்சியை நட்டு அதுமேல கவுத்து வெச்சிடணும்.

மஞ்சள் நிறத்தால கவரப்பட்டு பக்கத்துல வர்ற அசுவுணி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, இலைப்பேன் ஆகிய பூச்சிகள் டப்பா மேல ஒட்டிக்கிட்டு இறந்து போகும்.

விளக்கு பொறி

விளக்கு பொறி
வயல்ல 3 அடி உயரத்துல பெட்ரோமாக்ஸ் விளக்கு இல்லனா கண்டுபல்லைத் தொங்க விடணும்.

Continue reading

Agri Intex 2017

விவசாய செய்திகள்

👉 கடந்த முறை கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற விவசாய கண்காட்சியை காண தவறவிட்டவர்கள் கவலைப்பட வேண்டாம். இந்த வருடம் இந்தியாவின் மாபெரும் வேளாண் கண்காட்சி கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது.

👉 விவசாயிகள் மற்றும் விவசாயத்திற்கு முற்றிலும் பயன்படும் வகையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அக்ரி இன்டெக்ஸ்,
ஜூலை 14 முதல் 17 வரை,
கொடிசியா தொழிற்காட்சி வளாகம்,
கோயமுத்தூர் – 641014
தொலைப்பேசி எண்
75028-22000

83449-22000

முக்கிய அம்சங்கள் :

👉 விவசாய உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள்

🐠 மீன் வளர்ப்பு

🌱 பசுமை விவசாயம் மற்றும் தாவர பாதுகாப்பு

🌾 பயோடெக்னாலஜி

🌳 பசுமை வீடு

🍁 உரங்கள் மற்றும் இரசாயனங்கள்

🍀 மறுசுழற்சி சக்தி

🌷 மலரியல்

🐓 கோழி வளர்ப்பு

💦 பாசன மற்றும் நீர் தொழில்நுட்பம்

🍀 விதைகள் மற்றும் செடி வளர்ப்பு சாதனங்கள்

🐄 கால்நடை மற்றும் பால்பண்ணை தொழில்நுட்பம்

🍃 துல்லிய விவசாயம்

🍂 கிராமப்புற வளர்ச்சி

👉 வெளிநாட்டினரின் சிறப்பு அரங்குகள்

👉 ஆகிய அனைத்து முக்கிய அம்சங்களையும் கொண்டு ஒரு புது பொலிவுடன் விவசாய கண்காட்சி உதயமாக உள்ளது.

👉 விவசாயத்தை காக்கவும், விவசாய தொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து தகவல்கள், உபகரணங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை ஒரே இடத்தில் காண வேண்டுமா…. விரைந்திடுங்கள் ஜூலை 14 அன்று கோவைக்கு…

👉 உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தாங்கி கொள்ள தயாராக உள்ளது கொடிசியா வளாகம்….!!

விவசாய நண்பர்களுக்கு

விவசாய நண்பர்களுக்கு வணக்கம்.
இங்கு தங்களுக்கு ஒரு புதிய செய்தியை சொல்ல விரும்புகிறோம்.
மேலே உள்ள GO வை முழுமையாக படித்து பாருங்கள்.
1000பேர் கொண்ட குழுக்கள் இப்போது சுருங்கி குறைந்த பட்ச விவசயிகளிஒருங்கிணைத்து குழுக்கள் அமைத்து அரசு சலுகைகளை பெற்று திறம்பட தொழில் செய்ய வாய்ப்புகள் உள்ளன.
விவசாயிகள் இதுபோன்ற சலுகைகளை பயன்படுத்தி அடுத்த பரிணாம வளர்ச்சியை எட்ட வேண்டும்.
கூடி வாழ்ந்தால் கோடி நம்மை.
இனி தனி மனிதர் வெறும் பேச்சால் மட்டுமே இருக்கமுடியும் அன்றி சிறப்பாக இயங்க வாய்ப்புகள் குறைவு.
தங்கள் போக்கிற்கு ஒத்து செயல்படும் விவசாயிகளை ஒருங்கிணைத்து தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை மதிப்பு கூட்டி தங்கள் ஊரிலோ அல்லது அருகில் உள்ள நகரத்திலோ விற்பனைசெய்து தங்கள் பொருளுக்கு அதிகபட்ச விலையை தாங்களே நிர்ணயம் செய்து பயனடைய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
உணவு பொருட்கள் மட்டுமே அன்றி நாம் விவசாய உற்பத்தி பொருட்கள் எதை வேண்டுமானாலும் ஏற்றுமதிசெய்யவோ, இயந்திரங்கள் கொண்டு மதிப்புகூட்டவோ, மொத்த வியாபாரத்தில் ஈடுபடவோ, உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்கவோ வழிவகை உண்டு. இதற்கெல்லாம் ஒரே மூலதனம் ஒற்றுமை மற்றும் விட்டு கொடுக்கும் மனப்பான்மை.
இதை மூலதனமாக வைத்துக்கொண்டு அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இது சாதாரண செயல் அல்ல.
ஆனால் செயல்படுத்திவிட்டால் வெற்றி நிச்சயம்.
முதலில் ஒத்த கருத்துகள் கொண்ட 10 நபர்கள் ஒன்றிணைந்து குழுக்களை உருவாக்கி, நன்றாக இயங்கக்கூடிய குழுக்களை கண்டறிந்து அவர்களுடன் இணைந்து செயல்படலாம்.
இதற்கென ஆலோசனை வழங்க தனி நபரை ஆலோசகராக அரசு நியமித்து உள்ளது. அவர்களை கலந்தாலோசித்து தங்களை சரியான பாதையில் வழிநடத்தி செல்ல வழிவகை செய்து கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
அரசு சலுகைகளை எதிர்பாராமல் 10 நபர்களுடன் உருவாக்கப்பட்ட நமது
பாரம்பரியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்
இன்று 6 மாத காலத்தில் 30 நபர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட தொழிலில் ஈடுபட்டு நமது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள விவசாயிகள் இனி ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெற்றி அடையலாம். சிக்கல்கள் வராதா என்றால் வாடும் என்றே சொல்லலாம். ஒரு குடும்பத்தில் பிறந்த நாம் கருத்துவேறுபாடுகள் கொண்டு இருப்பதை நாம் தினம் தினம் பார்த்து தானே வருகிறோம்.
அப்பபை இருக்க வேறு வேறு மன ஓட்டம் கொண்ட நபர்கள் இணையும்போது கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு. அவற்றை களைந்து அதில் இருந்து மீண்டு எழுந்து செயல்படும் குழுக்கள் வெற்றி அடையும்.நன்றி.

தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால்

தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால் நல்லது.

ஆனா, பச்சையா சாப்பிட்டா, முழுசா ஒன்னை சாப்பிடறதே கஷ்டம். என்ன செய்யலாம்?

கடையில தேன் நெல்லிக்காய்-ன்னு கிடைக்குது, விலை அதிகம். உண்மையான தேன்ல தான் ஊற வைக்கிறாங்களான்னா. சந்தேகம் தான். பெரும்பாலும், சர்க்கரைப்பாகுன்னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்றாங்க. அதனால அதை வாங்குறது இல்ல.

Continue reading

யார் இந்த நம்மாழ்வார்

யார் இந்த #நம்மாழ்வார்

இயற்கை வேளான் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார பிறந்த தின (ஏப்ரல் 6, 1939) சிறப்பு பகிர்வு.!!

#லட்சக் கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த நம்மாழ்வார், இயற்கை விவசாயம்பற்றிக் களமிறங்கிக் கற்றுக்கொண்டது பாண்டிச்சேரி ஆரோவில்லில் இருக்கும் பெர்னார்டுவிடம்தான். மேற்கத்திய நாடுகளின் விவசாய முறைகள், அங்குள்ள இயற்கை விவசாயம்குறித்த நிறைய புத்தகங்களை நம்மாழ்வாருக்கு அறிமுகம்செய்து வைத்தவரும் இவரே.

#பாரம்பரிய விதை ரகங்களை அதிகம் நேசித்தவர் நம்மாழ்வார். அதைப் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம், மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக இருந்த ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யாவைக் குறிப்பிட்டுப் பேசுவார். ரிச்சார்யா இந்தியாவின் 22,972 பாரம்பரிய நெல் ரகங்களை வெளிநாடுகள் கைக்குச் செல்லாமல் பாதுகாத்தவர். அதனாலேயே தனது பணியையும் இழந்தவர். ரிச்சார்யா மற்றும் இயற்கை விஞ்ஞானிகளின் கோரிக்கைகளைப் புறந்தள்ளி, அத்தனை பாரம்பரிய நெல் ரகங்களையும் பன்னாட்டு நிறுவனமான ஸின்ஜெண்டாவிடம் 2003-ல் அரசு ஒப்படைத்தபோது, கண்ணீர்விட்டு அழுதார் நம்மாழ்வார்.

#நம்மாழ்வாரை அதிகம் ஈர்த்தவை ஜே.சி. குமரப்பாவின் கொள்கைகள். ‘‘டிராக்டர் நல்லாத்தான் உழும்; ஆனால் சாணி போடாதே’’ என்று ஜே.சி. குமரப்பா சொன்னதை நகைச்சுவை ததும்பத் தனது ஒவ்வொரு கூட்டத்திலும் குறிப்பிடுவார் நம்மாழ்வார்.

#நைட்ரஜன் சத்துக் குறைவுக்காக யூரியா போன்ற உரங்கள் மண்ணுக்குத் தேவை என்று பலரும் வாதிட்டபோது, நமது பாரம்பரிய உழவுமுறையான பயிர் சுழற்சி உழவு மூலம் இயல்பாகவே மண்ணில் நைட்ரஜன் சத்து அதிகரிக்கிறது என்று முதன்முதலாக நிரூபித்துக்காட்டியவர் நம்மாழ்வார்.

#நாடெங்கும் பசுமைப் புரட்சி தீவிரமாகப் பரவிய அதே காலகட்டத்தில், இயற்கை விவசாயம் தொடர்பாகத் தனது வாழ்நாள் பயணத்தைத் தொடங்கினார் நம்மாழ்வார். அதற்காகத் தான் பார்த்துவந்த அரசு வேலையான மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனப் பணியையும் உதறினார்.

#பசுமைப் புரட்சியின்போது அரசு உரங்களை ஊக்குவித்துக்கொண்டிருந்த காலம் அது. நம்மாழ்வார் கால்நடையாகக் கிராமந்தோறும் சென்று விவசாயிகளைச் சந்தித்தார். உரப் பயன்பாட்டால் மண்ணின் காரத்தன்மை கூடி, அது அளவுக்கு அதிகமான தண்ணீரை உறிஞ்சுகிறது என்பதைச் சிறிய செயல்விளக்கம் மூலம் நிரூபித்துக்காட்டினார் நம்மாழ்வார். இன்றைக்கு இயற்கை விவசாயம்பற்றி தமிழகத்தில் ஓரளவேனும் விழிப்புணர்வு இருக்கிறது என்றால், அதற்கு நம்மாழ்வாரின் படிப்படியான செயல்பாடுகளே காரணம்.

#பலரும் நினைப்பதுபோல் நம்மாழ்வார் நவீனத் தொழில்நுட்பங்களுக்கு எதிரானவர் அல்ல.பயோடெக்னாலஜியின் அத்தனை பரிமாணங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார் நம்மாழ்வார். இது அவரது வானகம் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்கு நன்கு தெரியும். மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மூலம் மண்ணுக்கு, மனிதனுக்குக் கேடு ஏற்படும் என்பதால்தான் நம்மாழ்வார் எதிர்த்தார்.

#கேடு விளைவிக்கும் மரபணு மாற்றுப் பயிர்களை எதிர்த்த நம்மாழ்வார், நமது பாரம்பரிய ஒட்டுரகங்களை ஆதரித்தார். இவரது வழிகாட்டுதலில் ஒரு புதிய ஒட்டு எலுமிச்சை ரகத்தையே உருவாக்கினார் புளியங்குடி அந்தோணிசாமி.

#ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் நெல் நடவு என்பது உலக அளவில் பிரபலமானது. ஒற்றை நாற்று நடவு அல்லது செம்மை நெல் சாகுபடி என்றழைக்கப்படும் மடகாஸ்கர் நெல் நடவு 1960-களில் வெளியே தெரிந்தது. ஆனால், விதை, நீர், நேரம் அனைத்தையும் குறைத்து, மகசூலை மட்டும் அதிகமாகக் கொடுத்த ஒற்றை நாற்றுநடவை உலகுக்கே அறிமுகப்படுத்தியது தமிழர்கள்தான் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தவர் நம்மாழ்வார். இன்றைக்குத் தமிழகத்தில் ஒற்றை நாற்று நடவு பிரபலமாகி, ஏக்கருக்கு 27 மூட்டைகள் வரை நெல் மகசூல் ஈட்ட முடிகிறது என்றால் அதற்குக் காரணகர்த்தா நம்மாழ்வாரே!

#1960 மற்றும் 70-களில் கலப்பின ரகங்கள் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது கலப்பினங்களைப் பற்றிப் படித்தவர்கள், அனுபவம் வாய்ந்த விவசாயிகளிடையேகூடப் பெரிதாக விழிப்புணர்வு இல்லை. அந்த நேரத்தில் “கலப்பினம் மற்றும் வீரிய ரகங்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் உற்பத்தியைப் பெருக்குவதற்காக அல்ல; மாறாக, ரசாயன உரங்களை விற்பனை செய்வதற்கான அரசியலே பசுமைப் புரட்சி பெயரிலான கலப்பின ஊக்குவிப்பு” என்று அன்றே சொன்னார் நம்மாழ்வார்.

#நம்மாழ்வார் வேளாண் விஞ்ஞானி மட்டும் அல்ல… மிகச் சிறந்த சுற்றுச்சூழலியலாளரும் ஆவார். மேற்குத்தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகள் அழிவை எதிர்த்துக் கடைசி வரை போராடினார். சோலைக்காடுகள் இல்லை எனில், ஆறுகள் உற்பத்தி கிடையாது.சோலைக்காடுகள் இல்லை எனில், மனிதனுக்குச் சோறு இல்லை என்பதைத் தனது பிரச்சாரங்களில் வலியுறுத்திவந்தார்.

#நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி மண்ணுக்கு – தனது எந்த ஒரு கூட்டத்திலும் இந்த வசனத்தைப் பேசத்தவறியதே இல்லை நம்மாழ்வார்.

#நம்மாழ்வாரின் தமிழ் பெரும்பாலும் பாமரத் தமிழ்தான். ஆனாலும், தமிழ் இலக்கியம் தொடங்கி ஆங்கில இலக்கியம் வரை அவருக்குப் பரிச்சயம். பெரியாரியம் தொடங்கி மார்க்சியம் வரைக்கும் பாமரத் தமிழில் சொன்னால்தானே ஏழை விவசாயிக்குப் புரியும் என்பார்.

#விவசாயிகளிடம் சென்று பப்பாளி, கொய்யா, வாழை, நாவல் போன்றவை பயிரிடுங்கள் என்பார். தனது கூட்டங்களிலும், ‘‘ஆப்பிள் அரை கிலோ 60 ரூபாய். அதைவிட அதிகம் சத்து இருக்கிற கொய்யா அஞ்சு கிலோ அம்பது ரூபாய். எதைச் சாப்பிடப்போறீங்க?’’ என்று நமது பாரம்பரியப் பழங்களையே வலியுறுத்துவார். ஆப்பிள், ஆரஞ்சு போன்ற அந்நியப் பழங்களைச் சாப்பிடுவதையும் இயன்றவரை தவிர்த்தே வந்தார்.

#பி.டி. கத்திரியை இந்தியாவில் அறிமுகம் செய்யலாமா என்று அன்றைய மத்திய சுற்றுச்சூழல்அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் நடத்திய கருத்துக்கேட்புக் கூட்டங்களில் தனது பிரதிநிதிகளை அனுப்பி பி.டி-க்கு எதிராகப் பேசச் செய்தார் நம்மாழ்வார். அதேபோல் நம்மாழ்வாரின் நண்பர்களான அரச்சலூர் செல்வம், டாக்டர் சிவராமன் ஆகியோர் அன்றைக்குத் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியிடம் நேரில் சென்று பி.டி-யின் கேடுகளை எடுத்துச் சொல்லி, தமிழகத்தில் அதற்குத் தடை உத்தரவும் பெற்றனர்.

#தொடக்கத்தில் சுற்றுச்சூழல், இயற்கை விவசாயம் தொடர்பாகப் பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக இயங்கிவந்தன. ஆனால், நம்மாழ்வார் ஆசைப்பட்டதாலேயே பூவுலகின் நண்பர்கள், ரிஸ்டோர், தமிழ்நாடு வணிகர்கள் சங்கம், பெண்கள் இணைப்புக் குழு, இந்திய நல்வாழ்வு நல்லறம் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் ஒன்றிணைந்து பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு 2008-ல் தொடங்கப்பட்டது.

#1990-களில் ஊடக விளம்பரங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பிரச்சாரங்கள் எனத் துரித உணவுக் கலாச்சாரம் இந்தியாவை மென்று தின்றுகொண்டிருந்தது. அப்போது இத்தாலி நாட்டில் நடந்த துரித உணவுக்கு எதிரான ஒரு பயிற்சி முகாமில் கலந்துகொண்டு திரும்பிய நம்மாழ்வார், இங்கு ஆரம்பித்ததுதான் ‘ஸ்லோ ஃபுட் மூவ்மெண்ட்’. இன்றைக்கு, பளபளக்கும் பல்பொருள் அங்காடிகளில் கெலாக்ஸ்களுடன் நமது பாரம்பரியத் தானியங்களான சாமையும் கம்பும் போட்டிபோட முடிகின்றன என்றால், அதற்குக் காரணம் நம்மாழ்வாரே!

#தனது வாழ்நாளில் அலோபதி மருத்துவத்தை வேண்டாம் என்று ஒதுக்கியவர், கடந்த மூன்று ஆண்டுகளாக அக்குபஞ்சர் மருத்துவத்தில் ஆர்வம்காட்டினார். அதில் நிறையக் கற்றுக்கொள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார்.

#நம்மாழ்வாருக்கு நல்ல குரல் வளம். வயலில் இறங்கிவிட்டால் பாட்டு தானாக வந்துவிடும். பட்டுக்கோட்டையாரின் தத்துவப் பாடல்கள், பாரதியின் ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?’ போன்றவை அவர் அடிக்கடி ராகமிட்டுப் பாடும் பாடல்கள்.

#நம்மாழ்வார் பகலில் பெரும்பாலும் உறங்குவது இல்லை. அவர் துயில் எழுந்தால் அது அதிகாலை 4.30 மணி என்று உறுதியாகச் சொல்லலாம். எழுந்ததும் வேப்ப மரப்பட்டையால் பல் துலக்கிவிட்டு, தலைகீழாக நின்று சிரசாசனம் செய்வார். பிறகு, மூச்சுப் பயிற்சி. அதன் பின்தான் அவரது வழக்கமான அலுவல்கள் தொடரும்.

#கடைசி வரை இளைஞர்களை அதிகம் நம்பினார் நம்மாழ்வார். கரூர் மாவட்டத்தில் இருக்கும் அவரது வானகம் பண்ணையில் சுமார் 6,000 இளைஞர்கள் இயற்கை விவசாயப் பயிற்சியை முடித்திருக்கிறார்கள்.

#காந்தியைப் போன்றே மேலாடையைத் துறந்தவர் நம்மாழ்வார். கடைசிவரை தனது கொள்கையில் உறுதியாக இருந்தவர், கடும் பனிக்காலத்திலும்கூட சட்டை அணிய மாட்டார்.

#வாழ்நாளின் பெரும்பாலான நாட்களைப் போராட்டங்களிலும் பயணங்களிலுமே செல விட்டார். எங்கு சென்றாலும் பேருந்து, ரயில் என பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தினார்; மற்றவர்களுக்கும் அதையே வலியுறுத்தினார். அவரது நண்பர்கள், நலம்விரும்பிகள் அவருக்கு கார் வாங்கித் தர முன்வந்தும் “என்னால முடிஞ்சவரைக்கும் சூழல் கேட்டைக் குறைச்சுக்குறேனே” என்று தவிர்த்துவிட்டார்.

#அவர் தனது வாழ்க்கைத்துணை சாவித்திரியை 50 ஆண்டுகளில் ஒருமுறைகூட ஒருமையில் அழைத்தது கிடையாது. “வாங்க… போங்க” என்று மரியாதையுடன்தான் அழைப்பார்.

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்

👌👌👌👍👍👍👌👌👌

*பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

01. *அகழி* – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

02. *அருவி* – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

03. *ஆழிக்கிணறு* – (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

04. *ஆறு* – (River) – பெருகி ஓடும் நதி.

05. *இலஞ்சி* -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

06. *உறை கிணறு* -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

07. *ஊருணி* -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை.

08. *ஊற்று* – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

09. *ஏரி* -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

10. *ஓடை* (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

11 *கட்டுந் கிணக்கிணறு* (Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.

12. *கடல்* – (Sea) சமுத்திரம்.

13. *கம்வாய் (கம்மாய்)* -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

14. *கலிங்கு* – (Sluice with many Ventures)ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

15. *கால்* – (Channel) நீரோடும் வழி.

16. *கால்வாய்* – (Supply channel to a tank ) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.

17. *குட்டம்* – (Large Pond) பெருங் குட்டை.

18. *குட்டை* – (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.

19. *குண்டம்* – (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.

20. *குண்டு* – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

21. *குமிழி* – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.

22. *குமிழி ஊற்று* – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று

23 . *குளம்* – (Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.

24. *கூவம்* – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.

25 . *கூவல்* – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.

26. *வாளி* (strea |m) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

27. *கேணி* –( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு.

28. *சிறை* – (Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.

29. *சுனை* – (Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.

30. *சேங்கை* – (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்.

31. *தடம்* – (Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.

32 . *தளிக்குளம்* – (tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.

33. *தாங்கல்* – (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.

34. *திருக்குளம்* – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்.

35. *தெப்பக்குளம்* -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

36. *தொடு கிணறு* – (Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.

37. *நடை கேணி* – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு.

38. *நீராவி* – (Bigger tank at the center of Building hall) மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.

39. *பிள்ளைக்கிணறு* -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

40. *பொங்கு கிணறு* – (Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு.

41. *பொய்கை* – (Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.

42. *மடு* – (Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

43. *மடை* – (Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

44. *மதகு* – (Sluice with many ventures) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது.

45. *மறு கால்* – (Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.

46. *வலயம்* – (Round tank) வட்டமாய் அமைந்த குளம்.

47 *வாய்ககால்* – (Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்.

*47 வகை நீர் நிலைகளையும் தன் சுயநலத்திற்காக அழித்தால் மனித எதிர் காலம் எங்கே..?*

*☂பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களும் தெரிந்து கொள்ளட்டும்.

👌 *வாழ்கவளமுடன்*