Category: Organic Agriculture

JADAM method of natural farming

JADAM method of natural farming:
பேரூட்டச்சத்துகள்,நுண்ணூட்டச்சத்துகள் பற்றி நிறைய அதில் பேசப் படுகிறது.
பொதுவாக பேரூட்டச்சத்துகளை பயிர்கள் மண்ணில் இருந்து எடுப்பதைவிட காற்று, நீர், ஆகாயம் ஆகிய பூதங்களே அதிக அளவில் கொடுக்கிறது.

Continue reading

இந்த நாலு செடி இருந்தா தென்னைக்கு உரமே தேவை இல்லை

இந்த நாலு செடி இருந்தா தென்னைக்கு உரமே தேவை இல்லை

இந்த நாலு செடி இருந்தா தென்னைக்கு உரமே தேவை இல்லை

தென்னையை சுற்றி மட்டை நிழல் விழுவதிற்குள்ள இடத்தில் இவை இருக்கவேண்டும். அதன் பலனே வேறு.
1. சப்பாத்தி கள்ளி
2. எருக்கு
3. சோற்று கற்றாழை
4. பப்பாளி.
1. சப்பாத்தி கள்ளி
சப்பாத்தி கள்ளி ஒரு செடி ஒரு தென்னை அருகில் இரண்டு மூன்று மீட்டர் தூரத்தில் இருந்தால் உரமே தேவை இல்லை.
சப்பாத்தி கள்ளி மிக சிறந்த தண்ணீர் சுத்திகரிப்பு செய்யும் தாவரம். 98% கெட்ட தண்ணீரையும் சுத்திகரிப்பு செய்யும்.
கால்சியம் சத்து மிகுந்த தாவரம்.பொட்டாசியம் , மக்னீசியம், பயிர் வளர்ச்சி அடைய பாஸ்பரஸ் மிகுந்த அளவு உள்ளது.
2. பப்பாளி
பப்பாளி உள்ள சத்துக்கள் பொட்டாசியம் மக்னீசியம் காப்பர்
பப்பாளி வேர்கள் செம்மரம் போன்று நேராக கீழே செல்லும். அடியில் உள்ள சத்துக்கள் பப்பாளி வேர்கள் உறுஞ்ச தென்னை வேர்கள் அந்தவேர்களில் உறுஞ்சி கொள்ளும்.
3. சோற்று கற்றாழை
சோற்று கற்றாழை காற்றில் உள்ள ஈரப்பதத்தை இழுத்து வளரக்கூடியது.
கால்சியம் குளோரின் பொட்டாசியம் மக்னீசியம் காப்பர் போன்ற சத்துக்கள் உள்ளன. அல்லாய்ன் எனும் பொருள் பாதி அளவு உள்ளது. இது வெப்பத்தை தாங்கும் தன்மை உள்ளது.
4. எருக்கன்

போரான் சத்து மிகுந்தது.

Kalyan Sundar from Facebook

காய்கறி பயிர்களின் உயிரியல் நோய் கட்டுப்பாடு

காய்கறி பயிர்களின் உயிரியல் நோய் கட்டுப்பாடு: சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ரசாயன பூசண கொல்லிகளைத் தவிர்ப்பதன் மூலம், கத்தரிக்காய், தக்காளி, மிளகு, வெற்றிலை, பூசணி மற்றும் பீன்ஸ் போன்ற பயிர்களில் இயற்கையாகவே நோய்களைக் கட்டுப்படுத்தலாம். உயிரியல் முறையில் நோய்களைக் கட்டுப்படுத்துவதில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, சூடோமோனஸ் புளுரசன்ஸ் பாக்டீரியா எதிர் உயிரியாகவும் , டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சாண எதிர் உயிரியாகவும் செயல்பட்டு காய்கறி பயிர்களுக்கு பல நோய்களை கட்டுப்படுத்த உதவுகின்றன.

Continue reading

பாரம்பரிய வேளாண்மையில் பூச்சி நோய் மேலாண்மை

பாரம்பரிய வேளாண்மையில் பூச்சி, நோய் மேலாண்மை

இடைவிடாது மழை தூறிக்கொண்டே இருந்தால். அதிக எண்ணிக்கையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படும்.
டிசம்பர் மாதத்தின் கடைசியில் காற்று அடித்தால், அதிக பூச்சியைக் கொண்டு வரும்.

காரத்தன்மையுள்ள நிலத்தில் சாகுபடி செய்த பயிரில் நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

வயல்களைச் சுற்றி, சோளம் அல்லது கம்பு பயிரை அடர்வாக 4 வரிசை சாகுபடி செய்தால், அது அசுவினி, சிலந்திபேன் பூச்சிகள் வயலின் உள்ளே போகமுடியா வண்ணம் அதன் தாக்குதலைத் தடுக்கலாம்.

Continue reading

வேம்பு பூச்சி விரட்டி கரைசல் இயற்கை பூச்சி நிர்வாகம்

வேம்பு பூச்சி விரட்டி கரைசல் இயற்கை பூச்சி நிர்வாகம்

வேம்பு பூச்சி விரட்டி கரைசல் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் இயற்கை முறையில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்கும் எளிய தொழில்நுட்பங்கள்

வேம்பு

இதன் பாகங்களான இலை, பூ, விதை, பட்டை போன்றவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகித்தாலும் வேப்பங்கொட்டையானது ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வேம்பு 350 வகையான பூச்சிகளையும், 15 வகையான பூஞ்சாணங்களையும், 12 வகையான நூற்புழுக்களையும், 2 வைரஸ் கிருமிகள் மற்றும் 2 வகையான நத்தைகளையும் கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுவதால் இதை மக்கள் சர்வலோக நிவாரணி, இயற்கை கொடை, அதிசய மரம் மற்றும் கிராம மருந்தகம் என அழைக்கின்றனர்.
வேம்பின் கசப்புத் தன்மைக்கு காரணம் அசாடிராக்டின் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

அசாடிராக்டின் சுமார் 550 வகையான பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.

Continue reading

முட்டை அமினோ அமிலம் – Egg Amino Acid இயற்கை பூச்சிக்கொல்லி

முட்டை அமினோ அமிலம் - Egg Amino Acid இயற்கை பூச்சிக்கொல்லி

வீட்டில் தோட்டம் வைத்து காய்கறி சாகுபடி செய்பவரா நீங்கள்?

வீட்டிலேயே முட்டையைக் கொண்டு பூச்சிக்கொல்லி தயாரிக்கலாம். முட்டை அமினோ அமிலம் (Egg amino acid) என்பது இதன் பெயர்.

இந்த இயற்கை பூச்சிக்கொல்லி காய்கறிகள் சாகுபடிக்கு சிறந்தது. இந்தப் பூச்சிக்கொல்லியை வீட்டில் மிக எளிய முறையில் தயாரிக்கலாம்.

Continue reading

நெல் பயிரின் பராமரிப்பு அட்டவணை

குறுகிய கால மற்றும் நீண்ட நாள் வயதுடைய நெல் பயிரின் பராமரிப்பு அட்டவணை

வயது : 110 லிருந்து 150 நாள் வரை.

*சிறப்பம்சங்கள்;*

🌾நாற்றுக்களை குறைந்த நாள் வயதில்(11 லிருந்து 18 நாள்) நடவு செய்வதால் பக்க கிளைப்புகள் மிக அதிகமான எண்ணிக்கையில் உருவாகும்.

🌾ஒருங்கிணைந்த உரம், களை, தெளிப்பு, பாசன நிர்வாக முறைகளை திறம்பட கையாளுவதன் மூலம் நெல்லின் வளர்இளம் பருவத்தில் ஒத்த வயதுடைய பக்க கிளைப்புகள் உருவாகுவதற்கு ஏதுவாகும். இதன் மூலம் தாமதமாக, பின்வரும் கிளைப்புகளில் நெற்கதிர்கள் இல்லாமல் போவதை தடுக்கலாம் .

Continue reading