நஞ்சில்லா இயற்கை வேளாண்மையா ? பஞ்சகவ்யா போடு என்று அன்புடன் ஆளாளுக்கு தெரிந்ததை சொல்லிவிட்டு போவார்கள். சொன்னதை எல்லாம் செய்துவிட முடியுமா. நானும் ஒருமுறை செய்முறை விளக்கமளித்தேன். (படம் 1). தோட்டத்தில் பணியாளர்கள் என்றைக்காவது ஒரு நாள் போட்டால் அதிசயம். அதற்கு காரணமிருக்கிறது. இந்த படத்திலுள்ள பொருட்களை சேகரிக்க முதலில் என் நண்பனின் அம்மா அதிகாலையில் மாட்டுக் கோமியத்தை குடத்தில் பிடிக்கவேண்டும். நல்ல மாட்டுச்சாணி எங்கிருந்தாவது கொண்டு வர வேண்டும். பக்கத்து ஊரில் மண்டை வெல்லம், பால், பழம், தயிர், கடலை மாவு, கரும்புச்சாறு என்று கிடைத்ததை வாங்கி வரவேண்டும். எல்லாவற்றையும் உற்ச்சாகத்துடன் கலந்து மூன்று நாட்கள் தேவுடு காத்தால் பஞ்சகவ்வியா தயார்.
Category: Water Management
தற்சார்பு விவசாயி-4 காற்றாடி
சோலார் 15 வருடம் உத்தரவாதம் என்பார்கள். மொத்த பணத்தையும் வாங்கிவிடுவார்கள். எலக்டிரானிக் பொருட்கள் 3 வருடத்துக்கு மேல் வராது. உங்கள் செல்போன், கணினி, மின் விசிறி, மிக்ஸி, தொலைகாட்சி இவைகளுக்கு வயசென்ன ? சொட்டை வெயிலிலும், மழையிலும் அப்பளமாக காயும் சோலார் பேனல் என்னைப்பொறுத்தவரை 3 வருடம் வந்தால் அதிசயம். பழுதானால் நாய் கூட சீந்தாது.
தற்சார்பு விவசாயி-3 தண்ணீர்
“விவசாயம் செய்கிறாயா? என்ன போட்டிருக்கிறாய் ?” என்று பார்ப்பவர் எல்லோரும் கேட்பார்கள். மனதிற்குள் திட்டி கொள்வேன்
“உன் வயசென்ன?” என்று பெண்களை கேட்பதும், “உன் சம்பளமென்ன” என்று ஆண்களை கேட்பதும், “இந்த வீடு என்ன விலை” என்று வீட்டுக்காரனை கேட்பதும் என்னை பொறுத்தவரை கேட்ககூடாத கேள்விகள். ஏனென்றால் பதில் சொல்லும்போது அதன் மறுபக்கத்தை எவரும் அவதானிப்பதில்லை.
கடுமையான சுட்டெரிக்கும் வெள்ளை வெயிலில், நிலத்தடி தண்ணீரெல்லாம் வறண்டு போன இடத்தில் பயிரைப்பற்றி யோசிக்கவா நேரம் ? ஏற்கனவே இருக்கும் மரங்களை காப்பாற்றுவதே பிரம்ம பிரயத்தனமாகும். தொடர்ந்து வெப்பக்காற்று அடிக்கும்போது 5 நிமிடத்துக்கொருமுறை தண்ணீர் குடித்து நிழலில் மல்லாக்க படுக்கத்தோன்றும். தண்ணீரே இல்லாத இடத்தில் புல் கூட கருகிவிடும். அப்படி தண்ணீர் இருந்தாலும் இறைப்பது எங்கனம் ?
தோட்டத்தில் எதுவும் தாமாக நடக்காது. ஒவ்வொரு துரும்பை நகர்த்தவும் முயற்சி, பணம் மற்றும் உழைப்பு அவசியம்.
ஒவ்வொரு பயிர் போடும்முன்பும் அதன் ஆயுட்காலம் முழுவதும் எப்படி தண்ணீர் பாய்ச்சுவது, பராமரிப்பது என்று திட்டமிட்டுதான் பிறகு போட முடியும். நிலம் எப்போதும் உங்களுக்காக தயாராக இராது. அதை பண்படுத்த வேண்டும். வேண்டிய நாற்றங்காலை கொண்டுவருவதே ஒரு வாரமாகும். மாதம் கூட ஆகலாம். இப்படியே ஒருமித்த சிந்தனையுடன் பல மாதங்கள் பயிரோடு கழித்துவிட்டு கடைசியில் விற்கும்/வாங்கும் உரிமை மட்டும் நம் கையிலிருக்காது.
நீர் மேலாண்மை என்றால் என்ன
நீர் மேலாண்மை என்றால் என்ன?
மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன?
இதைப் பற்றி என் அறிவுக்கு எட்டியதை இன்று பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன்.
இதை ஒரே நாளில் தெளிவாக சொல்லி விட முடியாது. எனவே முடிந்த வரை எழுத முயற்சி செய்கிறேன்.
நீர் மேலாண்மை – மூடாக்கு
இப்போது நம் காட்டில் முப்பது செமீ முதல் ஐம்பது செமீ வரை மூடாக்கு உள்ளது. உழவு செய்து ஏழு ஆண்டுகள் முடிந்து இது எட்டாவது ஆண்டு. இன்னும் இரண்டு வாரங்களில் மிளகாய் நாற்று நடவு செய்ய வேண்டும். முதலில் மூடாக்கு இட்டு அதன் பின்னரே நாற்று நடுவது. சரி இதனால் என்ன நன்மை? சாதாரணமாக மிளகாய் நட்டால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆனால் இங்கே நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் கொடுப்பது. வேர் பகுதியில் மண்ணை எப்போதும் வெப்பம் தாக்குவதில்லை. எனவே ஈரத் தன்மை முற்றிலும் காக்கப் படுகிறது.
ஏரிகள் மேலாண்மையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்
ஏரிகள் மேலாண்மையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்..
* வரத்து வாயக்கால், உபரி வாயக்கால், நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கரைகளில் ஆக்ரமிப்புகள் இருக்கக்கூடாது.
* தூர் எடுத்து கொள்ளளவை அதிகரிக்க வேண்டும்.
* பயன்படுத்தாத நீர் அளவை 20% வரை அதிகரிக்கலாம்
மழைநீரை அவசியம் சேமிக்கவும்
தமிழகத்தில் இன்னும் பெரும்பாலான இடங்களில் ஒரு மழை கூட பெய்யாமல் உள்ளது. இந்த 3 மாதங்கள் (அக்டோபர்,நவம்பர், டிசம்பர்) மட்டுமே மழை இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த 9 மாதங்கள் வறட்சி மாதங்களாகும்.