Category: Water Management

ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நீர் சேகரிப்பு

ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நீர் சேகரிப்பை விளக்கும் ஒரு பக்க கட்டுரை.
தாராபுரம் நீர் மேம்பாடு
ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நீர் சேகரிப்பு
ஏன் தாமதிக்க கூடாது?
1. ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கையால் நில அதிர்வுகள் ஏற்படும்.
2. திடீர் நில மற்றும் கட்டிட புதைவுகள் ஏற்படும்.
3. நிலத்தடியில் வெற்றிடம் ஏற்படுவதால் கடல் நீர் ஊடுறுவி நிலத்தடி நீர் ஒட்டுமொத்தமாக மாசுபட்டு பல உடல் நல கோளாறுகள் ஏற்படும்.
4. ஆங்காங்கே தற்போது இருக்கும் தண்ணீர் மாபியாக்கள் அதிகமாகி ஒட்டு மொத்த சமுதாயமும் அடிமைப்பட்டு சீரழிய நேரிடும்.
அவசியம் ஏன்?
1. காலநிலை மாற்றங்களால் மழை பொழியும் நாட்கள் குறைந்து வெப்பம் அதிகமாகி வருவதால் நிலத்தின் மேற்பரப்பில் நீரை தேக்கி வைப்பதால் நீர் மிகுதியாக ஆவியாகிவிடுகிறது.
2. நிலத்தடி நீர் கடல் மட்டத்தை தாண்டி ஏற்கனவே வறண்டுவிட்டது.
3. இருக்கும் ஆழ்குழாய்களை செறிவூட்டுவதால் புதிய கிணறுகளின் தேவை குறையும் மற்றும் பொருளாதார இழப்பையும் தவிர்க்க முடியும்.
செயல் படுத்தும் முறை
1. நீர் பிடிப்பு பகுதியின் பரப்பளவிற்கு உகந்த அளவில் தற்காலிகமாக மழை நீரை தேக்கி வைக்க பண்ணை குட்டையை அமைக்கவும்.
2. மண் கலந்த நீரை நன்றாக வடிக்க குட்டையின் நடுவிலோ அல்லது ஒரு ஒரத்திலோ சுமார் 5அடி x 5அடி x 5அடி பரப்புள்ள குழியை அமைக்கவும்.
3. நீர் வடிக்கும் குழியின் அடிப்பகுதியிலிருந்து ஆழ்குழாய் கிணறு வரைக்கும் சிறு அகலத்தில் அமைத்து பி.வி.சி. பைப்பை படத்தில் காட்டியுள்ளவாறு இணைக்கவும்.
4. பக்கவாட்டில் பி.வி.சி. பைப்பை படத்தில் காட்டியுள்ளவாறு நிறைய குறு துளைகள் இட்டு பச்சை பிளாஸ்டிக் வலையால் நன்கு சுற்றி மண்துகள்கள் எதுவும் நுளையா வண்ணம் கட்டி விடவும். இந்த சல்லடை அமைப்பு மூலம்தான் மழை நீர் மெல்ல ஊடுறுவி ஆழ்குழாய் கிணற்றுக்குள் செல்லும்.
5. நீர் வடிக்கும் குழியை முதலில் பெரும் கற்களால் பாதி அளவு மூடி விடவும். மீதியை சிறு கற்கள் கொண்டு மூடி விடவும். மேற்பகுதியில் ஓரிரு அடிக்கு மணலையோ அல்லது மணல் கப்பிகளையோ கொண்டு மூடிவிடவும். இந்த வடிகால் அமைப்பு சல்லடை அமைப்பை அடைக்காமல் இருக்க உதவும்.
6. மேலும் விபரங்களுக்கு பின்பக்கமுள்ள படத்தை பார்க்கவும்.

Home Page

மழைநீரை சேமிக்கும் வழிகள்

மழைநீரை சேமிக்கும் வழிகள்

மழைநீரை சேமிக்கும் வழிகள்

விவசாயிகள் மழைக்காலங்களில் பெரும் மழை நீரை சேமிக்கும் வழிகள்

கோடைஉழவு

விவசாயிகள் கோடை உழவின் மூலம் மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மையினை அதிரித்து மண்வளத்தினை பாதுகாக்கலாம். பொதுவாக களிமண் நிலங்களில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை சட்டிக்கலப்பை கொண்டு கோடையில் ஆழஉழவு செய்யவேண்டும். செம்மண் நிலங்களில் ஒன்று முதல் இரண்டு வருட இடைவெளியில் இத்தகைய ஆழஉழவு மழைநீர் சேமிப்பிற்கு உதவியாக இருக்கும்.

உழவு முறை

நாம் உழும்போது பயிரிடும்போதும் நிலத்தின் அமைப்பினை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். எப்போதும் உழவும் பயிர் சாலும் சரிவிற்கு குறுக்காகத்தான் இருக்க வேண்டும். உழவின் கரையும் பயிரின் கரையும் பெய்யும் மழை நீரின் வேகத்தினை கட்டுப்படுத்தி அதிக அளவு நீர் மண்ணின் உள்ளே செல்வதற்கு உதவியாக இருக்கும்.

அறைவட்ட கரைகள் போடுதல்

குறைந்த செலவில் மரத்திற்கு நீர் கிடைக்க வட்டப்பாத்திகள் ஒரு மீட்டர் வட்டத்தில் செடிகளைச் சுற்றி போடலாம் இது சமதளபூமிக்கு மிகவும் உகந்தது. ஆனால் சரிவான நிலத்தில் அரை வட்டத்திலோ அல்லது பிறைவட்டத்திலோ பாத்தி செய்து மழைநீரை சேமித்து மரங்களுக்கு கிடைக்கச் செய்யலாம்.

பண்ணைக் குட்டை அமைத்தல்

விவசாயிகளின் நிலங்களில் மழைநீரை தேக்கி வைப்பதற்கு நில அமைப்பிற்கு ஏற்ப சிறிய குட்டை அமைத்து அதில் சேகரிக்கப்படும் நீரை வறட்சிக் காலத்தில் பயிரின் முக்கிய பருவத்தில் நீர் பாசனம் செய்யலாம். பண்ணைக் குட்டையின் கொள்ளளவு ஒரு ஹெக்டேருக்கு சுமார் 250 கனமீட்டர் கொண்டதாக இருக்கலாம்.

கசிவு நீர் குட்டை

மழைநீர் செல்லும் ஓடைப்பகுதியில் கசிவு நீர்க்குட்டை அமைத்து அதில் மழைக்காலங்களில் மழைநீரைத் தேவையான அளவிற்கு தேக்கி விவசாயத்திற்கும், கால்நடைகளின் உபயோகத்திற்கும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும் பயன்படுத்தலாம். இந்தக் குட்டையால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள கிணறுகள் பயன்பெறும்

சமமட்ட குழிகள் தோண்டுதல்:

மண் அதிக்கப்பட்ட தரிசு நிலங்களில் மண்வளப் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தலாம். 30 செ.மீ அகலம் மற்றும் ஆழமுள்ள குழிகளை சமகோட்டில் தொடர்ச்சியாக தோண்டி ஓடும் நீரை தடுக்கலாம். இதில் காய்ந்த சருகு, இலை மற்றும் கழிவுகளை இட்டு நீர் ஆவியாதலை குறைக்கலாம். இம்முறை களிமண் நிலங்களுக்கு மிகவும் உகந்தது.

வயல் வரப்புகளை உயர்த்துதல்:

வயல் வரப்புகளை உயர்த்தி மழைநீரை வீணாக வெளியில் செல்வதைத் தடுக்கலாம் இதற்கு செம்மண்ணில் சரிவுப்பாத்தி முறையையும் களி மண்ணில் ஆழச்சால் அகலபாத்தி முறையையும் பின்பற்றலாம்.

நிலத்தைச் சமப்படுத்துதல்:

நிலத்தில் மேடு பள்ளம் இருந்தால் அதிக அளவில் தண்ணீர் குடிக்கலாம். ஒரு பக்கம் நிலம் காயும், மற்றொரு பக்கம் தண்ணீர் தேங்கி நிற்கும். ஆகையால் முதலில் நிலத்தில் மேடு பள்ளங்கள் இல்லாமல் நிரவி சமப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

மண் ஈரச் சேமிப்பு:

மண்ணில் செடியின் ஆழத்திற்கு உட்பட்ட இடங்களில் இருந்து மட்டும் 50 சதவீதம் தண்ணீர் ஆவியாகி விடுகின்றது. இலை, தழை, சருகு போன்ற நிலப்போர்வைகளைப் பயன்படுத்தி மண்ணின் ஈரப்பதம் ஆவியாகாமல் பாதுகாத்தல் வேண்டும்.

நீர் சேமிக்கும் முறை

மிகக் குறைந்த அளவு தண்ணீரை வைத்து வெங்காயம், தக்காளி, மக்காச்சோளம், பயறுவகைகள் மற்றும் கொடிவகை பயிர்களை சாகுபடி செய்யலாம்
தென்னை நார்க்கழிவு, கரும்புத்தோகை, போன்ற விவசாய கழிவுப்பொருட்களை பயன்படுத்தி நிலப்போர்வை செய்து நீர் ஆவியாவதைத் தடுக்கலாம்

சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் முறைகளைப் பயன்படுத்தி காய்கறி, பருத்தி, நெல், வாழை போன்றவற்றை சாகுபடி செய்வதன் மூலம் தண்ணீரை சேமிக்கலாம்.

தரிசு நிலங்களிலும், மலைப்பகுதியிலும்; மரங்களை நடவு செய்வதன் மூலம் மழை பெய்வதற்கு காரணமாகிறது. சுற்றுப்புற சூழல் மற்றும் நிலத்தடிநீர் ஆவியாகாமல் பாதுகாக்கப்படுகிறது.

~ ப.பி

borewell recharge போர்வெல் ரீசார்ஜ் 

borewell recharge போர்வெல் ரீசார்ஜ்

borewell recharge போர்வெல் ரீசார்ஜ் 

கடுமையான வறட்சி காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் கிணறுகளிலும், ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் மட்டம்  வெகுவாகக் குறைந்து விட்டது.

பல தோட்டங்களில், அரை மணி நேரம்  அல்லது ஒரு மணி நேர பாசனத்திலேயே கிணறு வற்றி விடுகிறது. அதனால், புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கலாமா?, கிணற்றைத்தூர் வாரலாமா? என்று குழம்பித் தவிக்கும் விவசாயிகளுக்காக… கோடை காலத்தில் கிணறுகளைப் பராமரிக்கும் முறைகள் பற்றி ஆலோசனை சொல்கிறார், திண்டுக்கல் நீர்வடிப்பகுதி முகமையின் விரிவாக்க அலுவலரும், வேளாண் பொறியாளருமான பிரிட்டோ ராஜ்

கோடை காலங்களில் கிணறுகள், போர் வெல்களில் தண்ணீர் மட்டம் குறைந்துதான் காணப்படும். நீர் நிலைகளுக்கு தண்ணீர் கொடுக்கும் நிலத்தடி ஓடைகள் வறண்டு போயிருப்பதுதான் தண்ணீர் குறைவுக்குக் காரணம். கோடையில் உங்கள் கிணறுகளில் அரைமணி நேரம் மட்டுமே தண்ணீர் கிடைத்தாலும்… இன்னும் உங்கள் நிலத்தடி நீர்வளம் நன்றாக இருக்கிறது’ என்றுதான் அர்த்தம். அதனால், கவலைகொள்ளத் தேவையில்லை. கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு எவ்வளவு பரப்பில் பாசனம் செய்ய முடியுமோ… அந்த அளவுக்கு மட்டும் பாசனம் செய்ய வேண்டும். குறிப்பாக, வாய்க்கால் பாசனத்தைத் தவிர்க்க வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம் மூலமாக, குறைந்த தண்ணீரில் அதிக பரப்பில் பாசனம் செய்யலாம். அதனால், புது போர்வெல் பற்றி யோசிக்கத் தேவையில்லை என்றார் பிரிட்டோராஜ்.

போர்வெல் போடாதீர்கள்!

பொதுவாக, கோடை காலத்தில் போர்வெல் அமைக்கக் கூடாது. நிலத்தடியில் உள்ள பாறை இடுக்குகளுக்கு தண்ணீர் கொடுக்கும் ஏரி, குளம், குட்டைகள் வறண்டு இருப்பதால், பாறை இடுக்குகளில் கோடை காலங்களில் தண்ணீர் இருக்காது.

80 அடி, 150 அடி, 320 அடி, 500 அடி என ஆங்காங்கே கிடைக்கும் ஊற்றுக் கண்களில் ஈரம் இருக்காது என்பதால் தண்ணீரைத் தேடி அதிக ஆழத்திற்கு போர்வெல் அமைக்க வேண்டி வரும்.

அதிக ஆழத்திற்கு ஊடுருவி. 700, 800 அடி ஆழத்தில் தண்ணீர் வந்தாலும்.. போர்வெல் டிரில்லர் சுழலும்போது, கீழே கிடைக்கும் தண்ணீருடன், மேல்பகுதியில் உள்ள மண் கலந்து, சிமெண்ட் போல் மாறி, மேலே சில நூறு அடிகள் ஆழத்திலேயே உள்ள வறண்ட ஊற்றுக்கண்களின் வாய்ப்பகுதியை அடைத்துவிடும். அதனால், கோடையில் அதிக ஆழத்திற்கு போர்வெல் அமைப்பதைத் தவிர்ப்பது நல்லது.

இதையும் தாண்டி போர்வெல் அமைப்பவர்கள். ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, பணம் செலவாகும் என நினைத்து, கேசிங் பைப்பை அதிக ஆழத்திற்கு இறக்க மாட்டார்கள்.

ஆனால், பாறை மட்டம் வரை கேசிங் பைப் இறக்க வேண்டும். அப்போதுதான் போர்வெல்லுக்குள் மண் சரிவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். இல்லாவிடில், மண் சரிந்து ‘நீர் மூழ்கி மோட்டார்களை குறிப்பிட்ட ஆழத்திற்கு கீழ் இறக்க முடியாமலோ … அல்லது எடுக்க முடியாமலோ போய் விடும்.

இறந்து போன போர்வெல்லிலும் தண்ணீர்!

புது போர்வெல் அமைத்து, தண்ணீருக்குப் பதிலாக வெறும் புகைதான் வந்தது என வேதனைப்படும் விவசாயிகள் அனேகம் பேர்.

ஆனால், எவ்வளவு வறண்ட பகுதியானாலும் அப்படி புகை வந்த போர்வெல்களிலும், தண்ணீரைக் கொண்டு வந்துவிட முடியும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மழைநீர்ச் சேமிப்பு அமைப்பை உருவாக்குவதுதான்.

அதற்கு, இந்தக் கோடைதான் சரியான நேரம்.

கோடையில் நிச்சயம் ஒரு மழை கிடைக்கும். அந்த மழை நீரை முழுமையாக அறுவடை செய்து, போர்வெல் குழாயில் செலுத்தி, நீர்ச் செறிவூட்டல் செய்தால், தண்ணீர் ஊறி விடும்.

நீர்ச் செறிவூட்டல்

கிணறு அல்லது போர்வெல்லில் இருந்து மூன்றடி தூரத்தில் … 6 அடி நீளம், 6 அகலம், 4 அடி ஆழம் என்ற அளவில் குழி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் குழியின் அடிப்பாகத்தில் இருந்து அரையடி உயரத்தில் 2 அங்குல பைப் ஒன்றைப் பொருத்தி, அதன் இன்னொரு முனையை கிணறு அல்லது போர்வெல்லுக்குள் இருக்குமாறு செய்ய வேண்டும். பிறகு, குழியில் 3 அடி உயரத்திற்கு கூழாங்கற்கள் அல்லது அருகில் கிடைக்கும் சிறிய கற்களை நிரப்பி வைத்தால்… மழைநீர், கற்களில் வடிகட்டப்பட்டு கிணறுகளில் சேகரமாகும்.

இப்படி தண்ணீர் போர்வெல்லுக்குள் செல்லும் போது, ஏற்கனவே ஊற்றுக்கண்களை அடைத்திருக்கும் சிமெண்ட் போன்ற பூச்சுகள் கரைந்து, புது ஊற்றுகள் திறந்து… இனி தண்ணீரே கிடைக்காது, என நீங்கள் நினைத்த… இறந்துபோன போர்வெல்லிலும் தண்ணீர் கிடைக்கும்.

மழை கிடைத்த நான்காவது நாளே, உங்கள் போர்வெல் குழாயில் சிறிய கல்லை கயிற்றில் கட்டி இறக்கி… தண்ணீர் ஊறி இருப்பதை அனுபவப்பூர்வமாக உணர முடியும்.

மானாவாரி விவசாயம் செய்பவர்கள், தங்கள் நிலங்களில் தாழ்வான பகுதிகளில், வரப்பு ஓரங்களில் ஆங்காங்கே 20 அடி நீளம், ஒரு அடி ஆழம் உள்ள வாய்க்கால்களை எடுக்க வேண்டும். குழியில் எடுக்கும் மண்ணை குழியின் மேல் பகுதியில் அணை போட வேண்டும். இப்படிச் செய்தால், மழைக் காலத்தில் கிடைக்கும் தண்ணீர், குழிகளில் சேகரமாகி, நிலங்களில் படுக்கை வசத்தில் நீர் பரவி, மண்ணின் ஈரப்பதம்  குறையாமல் இருக்கும்.

பிரிட்டோராஜ்.

 

கால்காணி சாத்தியமே-உணவுத் தேவையை 33சென்ட் நிலத்தில் பூர்த்தி செய்யலாம்

கால்காணி சாத்தியமே-உணவுத் தேவையை 33சென்ட் நிலத்தில் பூர்த்தி செய்யலாம் plenty-for-all

ஒரு குடும்பத்தின் உணவுத் தேவையை 33சென்ட் நிலத்தில் பூர்த்தி செய்யலாம் என ஜே.சி.குமரப்பா கூறியுள்ளார். சாத்தியமா?

என நண்பர்களிடம் பல குழுக்கள் மற்றும் முகநூல் வாயிலாக கேட்டேன் அதன் மூலமாக பல தகவல்கள் கிடைத்தன… சில தகவல்களை பகிர்கிறேன்…

1) சாத்தியம். 1 சென்ட் 436 அடி 33 சென்ட் x 436 அடி = 14,388.00 அடி. 1/3rd of an acre.

5 அடுக்கு முறையில் 36 x 36 அடி = 1296.00 அடி.

Continue reading

வேர்களுக்கு, நேரடியாக தண்ணீர் செல்லும் முறை

வேர்களுக்கு, நேரடியாக தண்ணீர் செல்லும் முறை tree-root-irrigation

வேர்களுக்கு, நேரடியாக தண்ணீர் செல்லும் முறை: வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், தண்ணீர் மற்றும் மின்சாரத்தை, சிக்கனமாக பயன்படுத்தி, மரங்களை வளர்க்கும் முறையை கண்டு பிடித்துள்ளார். இதை செயல்பாட்டுக்கு கொண்டு வர, அரசு துறைகள் பரிந்துரை செய்துள்ளன.

Continue reading

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள் natural-food-agriwiki

இயற்கை முறையில் விளைஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்விக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்

Continue reading

வயலில் மழைநீர் சேகரிப்பில் வெற்றிக்கதை

வயலில் மழைநீர் சேகரிப்பில் வெற்றிக்கதை

எனது பெயர் ரகுபதி.என் அப்பா விவசாயத்தைக் கவனித்து வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் கடந்த 31.7.2017 இரவு 2 இஞ்ச் மழை பெய்தது.

மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்காததால் என் வயலைச் சுற்றி அமைந்த இடங்களில் வயல்களில் மழைநீர் தேங்காமல் ,பயனில்லாமல் ஓடையில் கலந்து சென்றுவிட்டது.

திரு.பிரிட்டோராஜ் அவர்களின் ஆலோசனைப்படி எனது ஒவ்வொரு வயலிலும் ,சரிவின் குறுக்கே அடிப்பகுதியில் Jcb இயந்திரம் மூலம் 30*3*2 அடிகள் கொண்ட குழி எடுத்து தோண்டிய மண்ணை குழியின் கீழ் உள்ள வரப்பின் மேல் போட்டுவிட்டேன்.அனைத்து வயலிலும் அமைத்தேன். 4.5 ஏக்கருக்கு குழி எடுக்க ரூ.24000 செலவானது.இதில் 6000அடி நீளமுள்ள குழி தோண்டப்பட்டது. இந்த ஒரு நாள் மழையில்
இக்குழிகளில் மொத்தமாக சுமார் 9.3 லட்சம் லிட் நீர் சேமிக்கப்பட்டது. இது 60*60*10 அடி அளவுள்ள ஒரு பண்ணைக்குட்டையின் கொள்ளளவாகும்.

ஆரம்பத்தில் இந்த மாதிரி வயலில், மழைநீர்சேகரிப்பில் ஆர்வமின்றியும் இடம் வீணாகிறதே என கவலைப்பட்ட என் அப்பாவிற்கு இக்குழி எடுத்து வரப்பமைக்கும் திட்டத்தால் இரட்டைப் பலன் கிடைத்தது குறித்து பெரு மகிழ்ச்சி.

இம்மாதிரி அமைப்பால் சரிவாக இருக்கும் மலையடிவாரம் முதல் அனைத்து வகை மண் உள்ள அனைத்து தமிழகப் பகுதிகளுக்கும் தென்னை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கிடையேயும் மானாவாரி நிலங்களிலும் அமைக்க ஏற்ற, குறைந்த செலவில் அருமையான திட்டம்.கிணறுகளிலும் போரிலும் நீர் பெருமளவு உயர அருமையான அமைப்பு.

மகிழ்ச்சி.