மேம்படுத்தப்பட்ட ஜீவாமிர்தம்

மேம்படுத்தப்பட்ட ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை:

 

30 கிலோ பச்சை சாணம். (எருமை சாணம் சிறந்தது)

10 முதல் 15 லிட்டர் மாட்டுக் கோமியம்.

2 முதல் 4 கிலோ கடலை புண்ணாக்கு. நன்கு தூளாக்கப்பட்டது.

2 கிலோ வெல்லம்.

புளித்த தயிர் சுமார் அரை லிட்டர்.

பரங்கி பழம் (ஒன்று), பப்பாளிப் பழம்(இரண்டு, வாழைப்பழம் (சுமார் இருபது)

போன்ற பழங்கள் நன்கு பழுத்து இருக்க வேண்டும் (இவற்றில் எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் கிடைத்தால் மூன்றையும் பயன்படுத்தலாம்)

ஒரு லிட்டர் மீன் அமிலம்

தேவைப்பட்டால் திரவ உயிர் உரங்கள்

முற்றிய தேங்காய் ஒன்று

பிளாஸ்டிக் பேரல் (200 லிட்டர் கொள்ளளவு)

செய்முறை

முதலில் சாணம் மற்றும் கோமியம் இரண்டையும் கெட்டியாகக் கரைத்து பிளாஸ்டிக் கலனில் ஊற்ற வேண்டும்.

கடலைப் புண்ணாக்கு மற்றும் உருண்டை வெல்லம் இரண்டையும் சற்று தூளாக்கி அந்த கரைசலில் சேர்க்க வேண்டும்

பழங்களைத் தோலுடன் கூழாக்கி கரைசலில் சேர்க்க வேண்டும்

பின்னர் தயிர் மற்றும் மீன் அமிலம் ஆகியவற்றைக் கரைசலில் சேர்க்க வேண்டும்

பின் தேங்காயைக் கூழாக்கி கரைசலில் கலக்க வேண்டும்

தேவைக்கு ஏற்ப அனைத்து நுண்ணுயிர்களை 100 மிலி கரைசலில் கலக்க வேண்டும்

அதன் பிறகு சேர்த்துள்ள இடு பொருட்கள் மற்றும் நாம் ஊற்றும் தண்ணீர் ஆகிய இரண்டையும் சேர்த்து பிளாஸ்டிக் பேரலில் பாதி அளவுக்கு வருமாறு இருக்க வேண்டும். சுமார் 100 லிட்டர் இருக்க வேண்டும்

இந்த பேரலை நிழலில் இருக்குமாறு வைத்து வாய் பகுதியை நல்ல சணல் சாக்கு வைத்து மூடி விட வேண்டும்

இந்த கரைசலைத் தொடர்ந்து ஆறு நாட்களுக்குத் தினமும் ஒரு தடவை குச்சி கொண்டு கலக்க வேண்டும்

ஏழாம் நாள் இதைப் பாசன தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு பாய்ச்சலாம் , பாசனத்திற்கு ஒரு ஏக்கருக்கு இந்த அடர் கரைசல் சுமார் 20 லிட்டர் போதுமானது.

பயிர்கள் மீது தெளிக்க சுமார் 20 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் இந்த அடர் கரைசலை வடிகட்டி தெளிக்கலாம்.

அவ்வப்போது சிறிது சாணம் மற்றும் வெல்லம் சேர்க்கும் போது சில மாதங்கள் வரை பயன்படுத்தலாம். தொடர்ந்து தினமும் கலக்கி விடுவது நல்லது.

Powered by BetterDocs

Proudly powered by WordPress