பசுமைப்பாதையின் இயற்கை வாழ்வியல் நிகழ்ச்சி

☄⛅💦💨🔥🌏🌈💧🌪🌞☔
*அனைவரையும் ஆழமாக சிந்திக்கத்தூண்டிய,*
*நீங்கள் அவசியம் சந்திக்கவேண்டிய,*
*வாழும் சித்தர்களுடன் வாழ்வியலில் ஒருநாள்…*

*30.07.2017 ஞாயிற்றுக்கிழமை*
👨‍👩‍👦‍👦👱🏽👵👴🏼👤✍👥👨🏻‍🔬👩‍🔬🤰🏻👪
*வாய்ப்பை தவறவிடாதீர்கள் தோழமைகளே…*
*98430 85615, 98430 85616.*

இதுவரையில் விலகாத, உங்கள் கண்களை விட்டு அகலாத தந்திர முடிச்சுகள் *திருச்சியில்* கட்டவிழ்க்கப்படுகிறது, *பசுமைப்பாதையின் இயற்கை வாழ்வியல் நிகழ்ச்சிகளில்…*

*இயற்கை வேளாண்மை* வழிமுறைகள், *பாரம்பரிய உணவுமுறை* பழக்கங்கள், *பண்டைய வாழ்க்கைமுறை* வழக்கங்கள், *மரபுவழி மருத்துவ* நுட்பமுறைகள் வழியே
எப்போதும் அறியப்பட்டவர்களில் *வாழும் சித்தராக வர்ணிக்கப்பட்ட, கரூர்*
*திரு. அன்பு சுந்தரம்* அவர்களின் அனுபவ உரைகளையும், இதுவரை நீங்காத திரைகளையும், மறைக்கப்பட்ட உண்மைகளையும், மூடப்பட்ட வரலாறுகளையும், சுற்றிலும் பின்னப்பட்ட சதிவலைகளையும், சூசகமாய் வஞ்சனை செய்த சீமை சகுனித்தனங்களையும், விழித்தெழுந்து முற்றிலும் இவற்றையெல்லாம் அறுத்தெறிந்து இனிவரும் தலைமுறைகளை காக்கவேண்டிய/மீட்கவேண்டிய வாழ்வியல் வழிமுறைகளையும்… *தெரிந்துகொள்ளவேண்டிய தெளிவான தருணங்கள்!*

ஆங்கிலேயரை எதிர்த்து, தன் குருதியை வீரம் விளைந்த மண்ணில் உதிர்த்து, நம் தேச மக்களுக்காக தன்னுயிரை மாய்த்த, மக்களின் மனதில் நீங்காத நினைவுகளை விதைத்த *வீரன் வாஞ்சிநாதன் அவர்களின் ஒரே மகள் லட்சுமி அம்மாவுக்குப் பிறந்த பேரன், நாட்டுப் பற்றாளர், மூலிகை ஆய்வியலர், சூழல் வல்லுனர், திருச்சி திரு. ஜெயகிருஷ்ணன்* அவர்களின் பகுத்தறிவு திறன் சார்ந்த பாரம்பரிய வீரியங்களையும், தொகுத்துத் திறம்பட வழங்கிட இருக்கும் வீரம் தோய்ந்த வாழ்வியல் ஜீவிதங்களையும் *உளமார உள்ளெடுக்கும் உணர்வுமிகு நிமிடங்கள்!!*

புயலுக்கும், நோய்க்கும் புதிதாக பெயர்களை கண்டறியப் போராடும் இன்றைய நாட்களில், *காய்ந்த மலத்தை கண்டே, அதற்கான மனிதனின் பாதித்த உடல்நலத்தையும், அதற்கென்றே முன்னோர்கள் போதித்த மூலிகை வளத்தையும்,* தனது நுட்பமான உயிரியல் மருத்துவத்தின் மூலம் சூட்சமமாக நோய்களை வெல்லும் பேராற்றலை ஆய்வுகளுடன் உணர்த்த வருகிறார் *மூலிகை உயிரியல் சித்தர், அரியலூர் திரு. காசிப்பிச்சை* அவர்கள்.

உலக வெப்பமயமாதலை உடனடியாக தடுக்கவேண்டிய தற்போதைய தருணங்களில், மரக்கன்றுகளுக்கு மாற்றாக போத்து மரங்களையே நட்டு, *தமிழகம் முழுவதிலும் பல்வேறு வகைப்பட்ட 8 லட்சம் மரங்களை உருவாக்கிய* அனுபவங்களையும், அதைப்பற்றிய சிறப்புத் தகவல்களையும், நெகிழ்ச்சிப் பதிவுகளாக பகிர்ந்துகொள்ள வருகிறார்கள்… *புதுக்கோட்டை திரு. ஆசைத்தம்பி* அவர்கள் மற்றும் *புதுக்கோட்டை*
*திரு. மரங்களானவன்* அவர்கள். நிகழ்வுகள் நடைபெறவுள்ள ஜூலை 30 ம்தேதி வளாகத்திலேயே நுட்பமுறைகளுடன்
*”போத்து மரங்கள்”* நடப்படும்.

இவர்களுடன் *பாரம்பரிய உணவுச் சித்தர், பாண்டிச்சேரி திரு. ராசி ராமலிங்கம்* அவர்கள்,
*நெல் ரகங்கள்/சிறுதானியங்கள்/விதைகள்/கதிர்களின் காவலர், பண்ருட்டி திரு. கவிதை கணேசன்* அவர்கள், வேளாண்மை அறிஞர்கள், விவசாய முன்னோடிகள், நாட்டுவிதைகள் சேமிப்பாளர்கள், தோட்டக்கலை பயிற்சியாளர்கள், உணவியல் ஆய்வியலர்கள், சூழல் வல்லுனர்கள், மருத்துவ நிபுணர்கள், சிறப்புச் சிகிச்சையாளர்கள் மேலும் வாழும் சித்தர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வருகை தரும் அற்புத நிகழ்வுகள்…

*கண்காட்சி மற்றும் அரங்கங்கள்*
இந்தியா முழுவதிலும் இருந்து 300 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள், பலதரப்பட்ட சிறுதானியங்களின் ரகங்கள், நாட்டு விதைகள்/ கதிர்கள், மரபு சார்ந்த உணவு வகைகளின் 20,000 தொழில்நுட்பங்கள், 3333 சிறப்பு உணவுப் பொருட்கள் மற்றும் *நாகப்பட்டினம்*
*திரு. மணிவாசகம் (பொதுச்செயலாளர்)* அவர்களின் மேற்பார்வையில் *தமிழ்நாடு சித்த மருத்துவ பாதுகாப்புச் சங்கத்துடன் இணைந்து வழங்கும் 108 அரியவகை மூலிகைகளின் அற்புத கண்காட்சியில் மூலிகைகள் அடையாளம் காணும் போட்டி,* பண்டையகால பயன்பாடுகளில் இருந்த ஆரோக்கியப் பொருட்கள், நலம் காக்கும் பொருட்கள், மறுசுழற்சிப் பொருட்கள், மக்கும் பொருட்கள், மூலிகைப் பொருட்கள், உணவுப் பொருட்கள், வேளாண்மைப் பொருட்கள், பசுமை மேவும் பொருட்கள் மற்றும் புத்தகங்கள்…

*அனைவரும், அனைத்தும் உங்களது வருகைக்காக…*

*முன்பதிவு அவசியம்.*

*2017 ஜூலை 30, ஞாயிற்றுக்கிழமை.*
*காலை 10:00 மணிமுதல்*
*மாலை 6:00 மணிவரை.*

*சமுதாய நல மன்றம் அரங்கம்,*
*தூய வளனார் கல்லூரி வளாகம் (St Joseph College Campus), நுழைவாயில் எண்- 3 (Gate No- 3) சத்திரம் பேருந்து நிலையம் அருகில், திருச்சி.*
*98430 85615, 98430 85616.*

*நன்றி! பசுமைப்பாதை!!*
🙏🙋‍♂🙏🙋‍♂🙏💐🙋‍♂🙏🙋‍♂🙏🙋‍♂

இலவச இயற்கை விவசாய பயிற்சி

*உயிர் இயற்கை விவசாயிகள்* கூட்டமைப்பு நடத்தும் மண்டல அளவிலான இலவச இயற்கை விவசாய பயிற்சி

*நாள்* 22/07/2017(சனிக்கிழமை)

*இடம்*அவினாசி(அன்னூர் ரோடு செந்தூர் மஹால்)

*நேரம்* காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை

*பயிற்சியாளர்கள்*
1. *திரு.ஸ்ரீதரன்* அவர்கள்(பேராசிரியர் பூச்சியியல் துறை,வேளாண் பல்கலைக்கழகம் கோவை)

2. *திரு.நவநீதகிருஷ்ணன்* அவர்கள்(உயிராற்றல்(பயோடைனமிக்)வேளாண்மை)பயிற்சியாளர்.

3. *திரு. ஏகாம்பரம் அவர்கள்*(முன்னோடி இயற்கை விவசாய பயிற்சியாளர்)

இயற்கை விவசாய ஆர்வலர்கள்,இயற்கை விவசாயிகள்,இராசாயன விவசாயிகள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

தமிழகத்தையே விஷமில்லா விவசாய மாநிலமாக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்குங்கள் தங்களிடமுள்ள அனைத்து வாட்ஸ்ஆப் குழுக்களிலும் மற்றும் முகநூல் பக்கங்களிலும் இச்செய்தியை பகிர்ந்துதவுங்கள்.

*முன்பதிவு அவசியம்*
தொடர்புக்கு
வரதராஜன்-90470686677
ரவிச்சந்திரன்-9842935035
திருஞானம் 9894366050

*குறிப்பு* மாடித்தோட்டம்,வீட்டுத்தோட்டம் மற்றும் விவசாய நிலமே இல்லாத நுகர்வோர்களும்கூட இந்நிகழ்வில் கலந்துகொள்ளலாம்.

உணவுச் சரித்திரம்

உணவுச் சரித்திரம் food

உணவால் ஆனது உலகம். இந்த உயிர்க்கோளத்தில் உள்ள பல்லாயிரம் கோடி ஜீவன்களுக்கும் உணவுதானே உயிர் ஆற்றல் தரும் ஜீவாமிர்தம்!

உணவுக்கு என ஒரு வரலாறு உண்டு. உயிரினம் தோன்றிய காலத்துக்கு முன்பே தொடங்குகிறது உணவின் வரலாறு. மனிதனுக்கும் முன்னதாக தோன்றியது உணவுகள். மனிதன் இங்கு பிறந்தபோதே, அவனுக்கான உணவுகள் இருந்தன.நாடோடியாகத் திரிந்த மனிதன், வேட்டையாடி உணவை உண்டான். நெருப்பைக் கண்டுபிடித்ததும், உணவை சமைத்துச் சாப்பிடும் முறையை தெரிந்து கொண்டான்.

Continue reading

மேம்படுத்தப்பட்ட அமிர்தக் கரைசல்

மேம்படுத்தப்பட்ட அமிர்தக் கரைசல்: நிறைந்த நுண்ணுயிரிகளுடன் அனைத்து சத்துகளுடன்.அனைத்து பயிர்களுக்கும் சிறப்பான வளர்ச்சி கொடுக்கக் கூடிய அருமையான கரைசல்.

Continue reading

நுண்ணுயிர்களை கண்டறிய உதவும் மைக்ரோஸ்கோப்புகள்

*அறிவியல் அறிவோம்*

*நுண்ணுயிர்களை கண்டறிய உதவும் மைக்ரோஸ்கோப்புகள்*

முதன் முதலில் விஞ்ஞான பூர்வமாக மைக்ரோஸ்கோப்புகளை தாமே அமைத்து அவைகளைக் கொண்டு கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிர்களைக் கண்டறிந்தவர் *அன்டோனி வான் லேவென் ஹீக்*- (Antoine Van Leeuwenhoek) என்பவரே.
*இவரது (1632 – 1723) வாழ்க்கை காலம்.*

ஹாலந்து நாட்டை சார்ந்த இவர் இளமையிலேயே தந்தையை இழந்தவர். தந்தையுடன் பள்ளிப்படிப்பும் போய்விட்டது. அப்பொழுது அவருக்கு வயது பதினாறு.வாணிபம் கற்றுக்கொண்டு நகரமன்ற வாயில் காப்பானாகப் பணியாற்றிய இவர் தமது ஓய்வு நேரங்களில் *கண்ணாடி வில்லைகளை இழைத்துச் செப்பமிடும் வேலையில் ஈடுபட்டு வந்தார்*. தான் செப்பனிட்ட கண்ணாடி வில்லைகளை இணைத்து நுண்ணுயிர்களை பன்மடங்கு பெரிதாக பார்த்தார். *இதுவே முதல் மைக்ரோஸ்கோப்* ஆகும். இதே போன்று 247 மைக்ராேஸ்கோப்புகளை அமைத்தார். ஒரு பொருளை 40- 270 மடங்கு பெரிதாக்கி காட்டின. இவைகளை மைக்ரோஸ்கோப் என்பதை விட லென்ஸ்கள் என்பதே சரியாகும்.

இவர் தாம் உருவாக்கிய மைக்ரோஸ் கோப்புகளைக் கொண்டு கண்ட கண்ட பொருட்களையெல்லாம் ஆராய்ந்து பார்த்தார். இதனைக் கண்ட பலரும் பைத்தியகாரன் என்றார்கள். அப்படிக் கூறிய மக்களைப் பார்த்து வேலன் ஹீக் மனம் வருந்தி அறியாமையால் உள்ள அவர்களை மன்னிப்போம் என்றார்.
ஹீக் தான் எடுத்துக் கொண்ட பொருளை நூற்றுக்கணக்கான முறைகள் ஆராய்ந்து பார்த்த பின்னர் அவற்றை பதிவு செய்வது என முடிவுக்கு வந்தார்.

பலமுறை பரிசோதனை செய்து தாம் கண்ட உண்மைகளை தொகுத்து இங்கிலாந்தில் *முதலாம் சார்லஸ் மன்னரால் ஏற்படுத்தப்பட்டிருந்த ராயல் சொசைட்டி என்னும் விஞ்ஞான கழகத்திற்கு அனுப்பினார்.* என்னுடைய மைக்ராேஸ்கோப்புகள் மூலம் நான் மயிர்களையும், விதைகளையும், தேனீக்களின் கொடுக்குகளையும், ஈக்களின் மூளையையும் பல நுண்ணுயிர்களையும் உற்றுப்பார்த்து வருகிறேன் சான்றோர்களே எனவும் இதுவரை எந்த மனிதனும் கண்டிராதவைகளை நான் பார்கிறேன் எனவும் எழுதி அனுப்பினார். மேலும் தான் அனுப்பிய கடிதத்தில் தான் பார்த்த பாக்டீரியாக்களையும் வரைந்திருந்தார்.

ஆனாலும் அவரது அறிவுப் பசியால் பல ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டார். தேங்கி நிற்கும் மழைநீர், பல்லின் அழுக்கு, பலவகை பூச்சிகள், தவளைகளின் குடல் என தனது ஆய்வை மேற்கொண்டார். சுத்தமான மழைநீரில் எத்தகைய உயிரும் இல்லை எனவும் அதனுடன் மிளகுப்பொடியை கலந்து நன்கு உறியதும் காற்றில் நான்கு நாட்கள் வைத்திருந்து நுண்ணுயிர்கள் பெருகுவதையும் கண்டறிந்து மகிழ்ந்தார். உடனே ராயல் சொசைட்டிக்கு ஒரு துளி மிளகு நீரில் பல லட்சம் நுண்ணுயிர்களைக் கண்டேன் என எழுதினார்.
*லேவென் ஹீக் தான் முதன் முதலில் பாக்டீரியாக்களை செயற்கை சூழ் நிலையில் சாேதனைச் சாலையில் வளர்க்கும் முறையை கண்டறிந்தவர். இத்தகைய ஆராய்சியின் விளைவாக இவரை *நுண்ணுயிர் இயலின் தந்தை* என்று அறிவியலாளர்கள் அழைக்கின்றனர்.

இவர் ஒருநாள் சிறிய மீனைப் பிடித்து அதன் வாலின் மீது மைக்ரோஸ்கோப்பை வைத்துப் பார்த்த போது மயிரிழை போன்ற இரத்தக் குழாய்களைக் கண்டார். அவைகளின் வழியே குருதி ஓடுவதைக் கண்டார். இதுவே *குருதி சுழற்சி ஓட்டம் பற்றிய அறிவை அறிவியல் அடிப்படையில் விளக்கியது*. மேலும் சூடான காஃபியைக் குடித்த பின் தமது பல்லில் உட்பகுதி அழுக்கை மைக்ராேஸ்கோப் மூலம் ஆராய்ந்தார். வெப்பமே பாக்டீரியாக்களை கொள்கின்றன என்பதை அறிவியல் அடிப்படையில் விளக்கினார். (நாம் இன்னும் காலையில் தரையை தண்ணிரில் வாசல் தெளித்து பாக்டீரியாக்களை வளர்கிறோம்.)

நுண்ணுயிர் அறிஞர் பலர் இருப்பினும் அனைவருள்ளும் மிகச் சிறப்பான சான்றோர் இவரே ஆவார். இவர் தமது ஆய்வை மிகச் சரியாகச் செய்தவர். ஆனாலும் இவர் ஏனையோருடன் ஒத்துழைக்காததால் லூயி பாஸ்டர் (1822 – 1895) வரும் வரை சுமார் 150 ஆண்டு காலம் வரை நுண்ணுயிர் இயல் வளர்ச்சி அடையவில்லை. ஹீக் தமது கருவிகளை குடும்ப உறுப்பினர்கள் கூடத் தொடாதவாறு பாதுகாத்து வைத்திருந்தார்.

நாம் தற்போது பயன் படுத்தும் எலெக்ட்ரான் மைக்ரோஸ் கோப்பிற்கும் லேவென் ஹீக் மைக்ரோஸ்கோப்பிற்கும் நிறைய வேறுபாடு உண்டு. லென்ஸ் மைக்ரோஸ்கோப் ஒரு பொருளை 2500 – 3000 மடங்கு அதிகப்படுத்திக்காட்டும். ஆனால் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் ஒரு பொருளை ) 200000 மடங்கு பெரிதாக்கிக் காட்டும். இத்தகைய மைக்ரோஸ்கோப்புகள் கண்டுபிடித்ததன் விளைவாகத் தான் அம்மை போன்ற கொடிய நோய்கள் ஒழிக்கப்பட்டன. அதுவரை பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை பற்றி அறியாத நாம் நம்மூரில் அம்மை நோய்க்கு மாரியம்மனுக்கு படையல் மற்றும் வேப்பிலை போட்டு தண்ணீர் ஊற்றி அபிசேகம் செய்து வந்தோம் என்பதே உண்மை.

எது எப்படியாகினும் லேவென் ஹீக் கண்டறிந்த மைக்ரோஸகோப் தான் நுண்ணுயிர் கண்டுபிடிப்பதில் முன்னோடி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

தனது தந்தையை இளம் வயதில் இழந்தாலும் சோர்ந்து போகாமல் தனது தன்னம்பிக்கையாலும் தளராத முயற்சியாலும் பகுத்தறிவாலும் முன்னேறி *மாபெரும் கண்டுபிடிப்பை உலகுக்குக் கொடுத்த லேவென் ஹீக்கை நாம் கொண்டாடுவதோடு நமது முன்னேற்றத்திற்கு தன்னம்பிக்கையூட்டிக்கொள்ள இவர் போன்றே சிந்திப்போம்.*

தகவல்…வளர்ந்தது விஞ்ஞானம், வீழ்ந்தது மூட நம்பிக்கை எனும் நூலிலிருந்து….

க.வி.நல்லசிவன்
திருப்பூர் இயற்கை கழகம்.

கிட்னி பழுது அடைந்தால்

  • தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள், அதிக சிரமம் மற்றும் செலவு creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும்,அப்படி இந்த level உள் இல்லை என்றால் கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள்,பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும் இதை சரி செய்ய எளிய வழி உண்டுநாட்டு மருந்து கடைக்கு சென்று இந்து உப்பு என்று கேளுங்கள்,  கிடைக்கும்,ஒரு கிலோ 60 ருபாய் மட்டுமே அல்லது 80 ருபாய் இந்த உப்பை கொண்டு வீட்டில் மூன்று வேளையும் உணவு சமைத்து சாப்பிடுங்கள் ,15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில் உங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் , அதன் பிறகு நீங்கள் creatinine level சோதனை செய்து பாருங்கள் சரியான அளவில் இருக்கும்இந்த உப்பை கொண்டு சமைத்த உணவை நோயாளி மட்டும் தான் சாப்பிட வேண்டுமா? … யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம், ஒரு வயது குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடலாம்இந்து உப்பு என்றால் என்ன ?…. இமாலய மழை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்க படும் உப்பே இந்து உப்பு இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள் , கூகிள் சென்று ஆங்கிலத்தில் himaalayan rock salt என்று type செய்தால் உங்களுக்கு தகவல் கிடைக்கும், உடலுக்கு தேவையான 80 மினரல் இந்த உப்பில் உள்ளதுஇந்த உப்பு வேற எந்த நோய்க்கு கேட்கும்? Thyroid பிரச்சனைக்கு கேட்கும்,வாய் கொப்பளித்தால் பல் ஈறுகள் பிரச்சனை வாய் புண் ஆகியவை கேட்கும்அல்சர் piles வந்தால் பச்சை மிளகாய் தவிர்த்து வர மிளகாய் சேர்ப்பது போல , சாதா உப்பை தவிர்த்து இந்து உப்பு சேருங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் ——————– Docter குடுகிற மருந்தை கேள்வி கேட்காம கண்ணை மூடி கொண்டு சாப்பிடுறீங்ககடையில் விக்கும் இந்த உப்பை வாங்கி சாப்பிடுங்க கிட்னி சரியாகும்னு சொல்லுறோம், சந்தேக படமா சாப்பிடுங்க ,Thanks for group admin

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல்

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் fruits

பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!!

பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!!

பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும்

வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!!

Continue reading