நாம் வீடு கட்டும்போது முதலில் அந்த இடத்தின் லண்ட்ஸ்கேப் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நில அமைப்பையும் ,இயற்க்கை அமைப்பையும் சிதைத்து அதாவது மரங்களை வெட்டி ,பாறைகளை உடைத்து,நிலத்தை சமப்படுத்தி பின்னரே வீடு கட்ட முனைகிறோம்.இது முற்றிலும் தவறு.
Tag: லாரி பேக்கர்
பசுமை நிறைந்த வீடு
வீடு சிறியதாக இருந்தாலும் அதனை சுற்றி மரங்களும்,பூக்களும்,செடிகளும்,புல்லும்,என்று பசுமையாக இருக்கும் போது அது சொர்க்கம் போல காட்சியளிக்கிறது.அதனால் தான் நாம் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் ஊட்டி,கொடைக்கானல் நோக்கி ஒடுகிறோம்.அங்கே ஏன் ஓட வேண்டும் நம்ம வீட்டையே ஊட்டி,கொடைக்கானல் போல மாற்றுவோம்.வாங்க
பூச்சு வேலை வீட்டுக்கு தேவையான ஒன்றா???
உங்க வீட்டுக்கு அருகிலேயோ, அல்லது போகும் வழிகளிலோ பார்த்து கொண்டே செல்லுங்கள். முதல் படத்தில் உள்ளது போல ((ஏதாவது ஒரு காரணத்திற்காக அடுத்து பூச்சு வேலை செய்ய பணம் இல்லாமல் போவது அல்லது அருகில் ஒட்டி கட்டிடம் வருவது போன்ற காரணங்களால் சில வீடுகள் முழுக்க அல்லது சில பகுதிகள்)) பூசாமல் இருக்கும். அவைகளின் வயதை விசாரியுங்கள்
காந்திய சிந்தனையில் மனம் வயப்பட்ட லாரிபேக்கர்
காந்திய சிந்தனையில் மனம் வயப்பட்ட லண்டன் கட்டிடக் கலைஞர் லாரிபேக்கர் தமிழகத்துக்கு வந்தபோது இங்குள்ள மண் வீடுகளையும், செங்கல் ஓடுகள் வேய்ந்த வீடுகளையும் பார்க்கும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது.
வெறும் களிமண் சாந்தால் கட்டப்பட்ட மண் வீடுகள், அவற்றின் மீது வேயப்பட்ட தென்னங்கூரைகள் போன்றவற்றைக் கண்டு அவர் வெகுவாக ரசித்தார்.
மழைக்காலங்களில் கூம்பிய கூரைகள் தண்ணீரைக் கீழே தள்ளிவிடுவதால் வீட்டின் உள்ளே வெப்பம் உணரப்படுவதையும், கோடையில் தென்னங்கீற்றுகளின் வழியே குளிர்ந்த காற்று உள்ளே சென்று இதமான உணர்வை வீட்டில் வாழ்பவர்கள் பெறுவதையும் கண்டு ரசித்தார் பேக்கர்.
கதவு ஜன்னல்களுக்கு தேவையான மரத்தினை எப்படி கணக்கிடுவது
கதவு_ஜன்னல்களுக்கு_தேவையான_மரத்தினை__எப்படி_கணக்கிடுவது?
வீடு கட்ட தேவையான மர சட்டங்களை(wood frame) வாங்கும்போது நிறைய பேருக்கு அந்த அளவுமுறை குழம்பும்!கதவு மற்றும் ஜன்னல்களுக்கு வாங்கும் மரங்கள் கன அடி முறையிலேயே தரப்படுகின்றன… விற்கப்படுகின்றன!!
Why you have to plan a round shape house
லாரிபேக்கருக்கு பிடித்த வட்ட வடிவிலான கட்டிடத்தின் வரைபடம். நான் வரைந்தது.
இயற்கையில் எதுவுமே சதுரமாக செவ்வகமாக இல்லை. வட்டமாக கரடு முரடாகவே உள்ளது.
வட்ட வடிவத்தில் தான் அதிக பரப்புக்கு குறைந்த சுற்றளவு வரும். அதனால் செலவு குறையும்.
கட்டிடத்தில் வெயில் படும் பகுதி குறைவதால் குளிர்ச்சி கிடைக்கும்.
வட்டவடிவில் மூலை பகுதி இல்லாததால் நிலைப்பு தன்மை அதிகம்.
மண்ணும் மனிதரும் part 3
மண் வீடென்றதும் ஒருவித இளக்காரம் ஏற்பட்டு விடுகிறது. உண்மையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் பயன்படுத்தி வரும் கட்டடப் பொருட்களில் முக்கியமானதும் முதன்மையானதும் இந்த மண்தான். மனித குல நாகரிக வளர்ச்சியுடன் போட்டி போட்டுக் கொண்டு தப்பிப் பிழைத்து விட்ட சிறப்பு மிக்க கட்டடப் பொருள்தான் இந்த மண். இன்றும் கூட மனிதர்களால் அதன் இயல்பான நிலையிலும், உருமாறிய நிலையில் செங்கற்களாகவும் (Bricks) பயன்படுத்தி வரும் பாக்கியத்திற்குரியது இந்த மண்.