மண்ணை சோதிக்கும் போது மண்சோதனை முடிவுகள் பாஸ்பேட் உள்ளது என்று கூறும் ஆனால் அவை கிடைக்கப் பெறாத நிலையில் இரு துகள் மற்றும் முன்று துகள் நிலையில் உள்ளது. வனத்தில் உள்ள மண்ணிலும் ஒரு துகள் பாஸ்பேட் இருப்பதில்லை. இரு துகள் மற்றும் முன்று துகள் பாஸ்பேட் மட்டுமே இருக்கிறது. வனத்தில் உள்ள தாவரத்தின் ஒரு இலையை எடுத்துக்கொண்டு ஆய்வகத்தில் சோதனை செய்தால் அந்த தாவரத்தில் பாஸ்பேட் குறைபாடில்லை என்றே முடிவுகள் கூறும். அதாவது அந்த தாவரத்திற்கு பாஸ்பேட் கிடைத்துள்ளது, இதை வேர்பகுதிக்கு கிடைக்கச் செய்தது யார்? அவர்களே இரு துகள் மற்றும் மூன்று துகள் பாஸ்பேட்டை ஒரு துகள் பாஸ்பேட்டாக பிரித்துள்ளார்கள் யார் அவர்கள்?
Tag: வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்பம்
ஒளிச்சேர்க்கையும் உணவு உற்பத்தியும்
பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் பஞ்ச பூதங்களின் உருவாக்கப் பட்டுள்ளன. தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், நுண்ணுயிர்கள் என அனைத்தும் பஞ்ச பூதங்களால் ஆனது. இவை நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஐந்து பூதங்களாக உள்ளன.
பீஜாமிர்தம், ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் தயாரிக்க
பீஜாமிர்தம், ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் தயாரிக்க கடையில் இருந்து எந்த மூலப்பொருளும் வாங்க வேண்டியதில்லை. பயறு மாவு ஊடுபயிர்கள் மூலமாக நமக்கு கிடைத்துவிடும். சர்க்கரைக்கு பழமரங்களையும் வளர்த்து கொள்ளலாம், சுபாஷ் பாலேக்கர் விவசாயம் செலவைக் குறைக்கும் விவசாயம்.
மண்புழுக்களை மேலே கொண்டுவரும் நுண்பருவநிலை
மண்புழுக்கள் சாதகமில்லா நேரங்களில் மண்ணின் ஆழத்திற்கு சென்று சமாதி (dormancy) நிலையில் உள்ளன, சமாதி நிலை என்பது செயலற்ற நிலையாகும், இது எல்லா உயிர்களுக்கும் பொருந்தும், மரங்களும் குளிர்காலங்களில் சமாதி நிலையில் இருக்கக்கூடியது. விலங்குகளில் தவளைகள் வாழ்க்கையிலும் நாம் இதை நேரடியாகப பார்க்க முடியும்.
புற்கள் எதிரியா, நண்பனா
புல் வகையான களைகள் இயற்கை விவசாயத்தில் மிகப்பெரிய தடை என சொல்கிறார்கள். நாமும் அதை முழுமையாக நம்புகிறோம்.
ஆனால் உண்மை நிலை வேறு என தெரிகிறது.
எலிக்கட்டுப்பாடு – வயல்வெளிகளில் எலிகளை கட்டுப்படுத்தும் முறைகள்
எங்கெல்லாம் ஆட்டுக்கிடை அமர்த்துகிறோமோ, அந்த வயலில் எலி வாழாது.
நொச்சி மற்றும் எருக்கலை செடியை வயல் சுற்றி வேலிப்பயிராக நட்டால், எலித் தொல்லை வராது.
தங்கரளி கிளைகளை வயல்சுற்றி போட்டால் எலி வராது.