மல்லி சாகுபடி

மல்லி சாகுபடி
Agriwiki.in- Learn Share Collaborate

மல்லியை கீரைக்காக மானாவாரி மற்றும் இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.

இது செம்மண், வண்டல் மண் மற்றும் கரிசல் மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது.
வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் தாண்டினாலோ, மிக அதிக மழை பெய்தாலோ செடியின் வளர்ச்சி குன்றும்.

விதைப்பு:

நிலத்தை இரண்டுக்கும் மேற்பட்ட முறை உழுது பண்படுத்திய பிறகு இறவைப் பயிருக்கு பாத்திகள் அமைத்தும், மானாவாரிப் பயிரை விதை விதைப்பான் மூலமும் வரிசைக்கு வரிசை 20 செ.மீ. இடைவெளியும், செடிக்கு செடி 15 செ.மீ. இடைவெளியும் விட்டு விதைக்க வேண்டும்.
விதைகளை இரண்டாக உடைத்து விதைக்க வேண்டும்.

இறவையில் ஹெக்டேருக்கு 10 முதல் 12 கிலோ கொத்தமல்லி விதை தேவை.
விதைகளை மானாவாரியாக விதைத்தால் ஹெக்டேருக்கு 20 முதல் 25 கிலோ தேவை.

மானாவாரியாக சாகுபடி செய்யும்போது விதைகளை தூவும் முறையில் விதைத்து, நாட்டுக் கலப்பை மூலம் மூடிவிட வேண்டும்.

ஒரு ஹெக்டர் விதைக்கு 3 பொட்டலம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைக்கும் முன்பு ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் அளவில் டிரைக்கோடர்மாவிரிடி கொண்டு விதை நேர்த்தி செய்யலாம். பிறகு உலர்த்தி விதைத்தால் வாடல் நோய் வராது.

நீர்ப்பாசனம்:

விதைத்த 8 முதல் 15-வது நாளில் விதை முளைக்க தொடங்கும்.
எனவே விதைத்தும் ஒரு முறையும், பிறகு 3-ம் நாள் ஒரு முறையும், 7 முதல் 10 நாள்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.
உர நிர்வாகம்:

கடைசி உழவின்போது ஒரு ஹெக்டேருக்கு 10 டன் நன்கு மக்கிய தொழுஉரம் இட வேண்டும்.

அறுவடை:

விதைத்த 30-ம் நாளில் இளங்கீரையாகவும், 60 மற்றும் 75-ம் நாள்களில் 50 சதவீதம் இலைகளையும் அறுவடை செய்யலாம்.
விதை அறுவடை :

விதைத்த 90 முதல் 110 நாள்களுக்குள் விதைகளை அறுவடை செய்ய முடியும். காய்கள் நன்கு முதிர்ந்து பச்சை நிறத்தில் இருந்து பொன்னிறமாக மாறும்போது அறுவடை செய்வது நல்லது.