புளி சாகுபடி

Agriwiki.in- Learn Share Collaborate
டேமரின்டஸ் இன்டிகா என்று தாவரவியலாளர்களால் அறியப் படும் புளியானது லெகுமினே சியே என்ற தாவரக் குடும் பத்தைச் சார்ந்த ஒரு வெப்ப மண்டல பயிராகும் . ஆப்பிரிக் காவைத் தாயகமாகக்கொண்ட புளியானது உலகம் முழுவது முள்ள வெப்ப மண்டலப் பகுதிகளிலும் , வறண்ட பகுதிகளிலும் அதிகமாகக் காணப்படுகின்றது . ‘ டேமரின்ட் ‘ என்ற ஆங்கிலப் பெயருக்கு ‘ இந்தியப் பேரிச்சை ‘ என்று பொருள் . கிரேக்கர்களும் , எகிப்தியர்களும் நான்காம் நூற்றாண்டிலேயே புளியைப் பயன்படுத்தி வந்துள்ளனர் .
வளரியல்பு ;
வெப்ப மண்டலப் பயிரான புளியானது 20 மீ உயரம் வரை வளரும் மரமாகும் . மரத்தின் பட்டைகள் நீளவாக்கில் பிளவுகளுடன் காணப்படும் . இலைகள் கூட்டிலைகளாகவும் , சிற்றிலைகள் காம்பு இல்லாமலும் காணப்படும் . மலர்கள் கொத்துகளாக மஞ்சள் நிறத்திலும் , இதழ்கள் வெளிறிய வெள்ளை நிறத்தில் சிவப்புக் கோடுகளுடனும் காணப்படும் . பழங்கள் 3-10 விதைகள் உடைய தாகவும் , சற்று வளைந்தும் இருக்கும் . பழத்தின் சதைப்பகுதியைச் சுற்றி 2-3 கெட்டியான நார்களும் , அவற்றைச் சூழ்ந்து கெட் டியான மேல் ஓடும் காணப்படும் .
பயன்கள் :
1. பதப்படுத்தப்பட்ட புளியானது ரசம் , சாம்பார் , சட்னி , சாஸ் , கேண்டி மற்றும் குளிர்பானங்கள் என அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் உணவு வகைகளில் பெருமளவில் பயன்படுகின்றது .
2.புளியில் 30 சதவீதம் வரை சதைப்பகுதியும் , 40 சதவீதம் வரை விதையும் , 30 சதவீதம் வரை ஓட்டுப் பகுதியும் ( தோல் ) அடங்கியுள்ளது .
3. சிவப்பு நிறத்தில் இருக்கும் புளிப்புச் சுவையுடைய கொழுந்து இலைகள் பருப்புடன் கலத்து பொரியல் செய்யப் பயன்படுத்தப்படுகின்றது .
4. உடலில் ஏற்படும் வீக்கங்கள் குறையவும் , வலி நிவாரணியாகவும் , இலைகளை அவித்து ஒத்தடம் கொடுகின்றனர் .
5. அதிக புளிப்புத் தன்மையுடைய காய்களின் மேல் தோலை சீவி விட்டு அதனை அரைத்து சட்னி , துவையல் மற்றும் ஊறுகாய் போன்றவை தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர் .
6. பிஞ்சுகள் பித்தம் , தாகம் ஆகியவற்றைப் போக்கும் தன்மையுடையது .
7. புளியம்பழம் பாத்திரங்களைத் துலக்கப் பயன்படுத்தப்படுகின்றது .
8. பழத்தின் சதைப்பகுதியில் டார்டாரிக் அமிலம் , சிட்ரிக் அமிலம் , மாலிக் அமிலம் , அசிட்டிக் அமிலம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன .
9. தேள்கடி , இரத்தக்கட்டி , கபம் , வாதம் , வயிற்று நோய் , கண்நோய் ஆகியவற்றையும் பழங்கள் குணமாக்குகின்றது .
10. பழத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் உடல் அழகு பெறுவதோடு , சிறுநீரகத்தில் கல் தோன்றுவதையும் தடுத்து நிறுத்துகிறது .
11.உலர்த்திப் பொடி செய்யப்பட்ட பழமானது ஏற்றுமதி செய்யவும் , குளிர்ப்பானங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது .
12. சதைப்பகுதி பெக்டின் எத்தனால் மற்றும் புரதம் ஆகியன தயாரிக்கப் பயன்படுகின்றது
13. புளியின் விதையினின்று தயாரிக்கப்படும் பசையானது புத்தகம் தைப்பதற்கும் , நூலுக்கு மெருகூட்டுவதற்கும் , சணல் , நார் நெசவிலும் , இரப்பர் பாலை கெட்டிப்படுத்தவும் பயன்படுத்தப் படுகின்றது .
14. விதையின் தோலிலிருந்து தயாரிக்கப்படும் சாயம் , மரத்தொழிலில் பயன்படுத்தப்படுகின்றது .
15. விதையில் 20 சதவீதம் புரதம் அடங்கியுள்ளதால் , அது ஒரு சிறந்த கால்நடை தீவனமாக கால்நடைகளுக்கு கொடுக்கப்படுகின்றது .
16 விதையினின்று எடுக்கப்படும் எண்ணெய் வார்னிஷ் மற்றும் பெயிண்ட்டுகள் தயாரிக்கப் பயன்படுகின்றது .
17. பூவானது கீழ்வாதம் . முடக்குவாதம் மற்றும் ஜலதோஷம் ஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மைப் பெற்றிருப்பதால் உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றது .
18. புளியின் மலர்களில் உள்ள தேன் , தேனீ வளர்ப்பிற்கு முக்கியமான ஒரு ஆதாராமாகும் .
19.புளி மரங்கள் நிழலுக்காகவும் , மண் அரிப்பைத் தடுப்பதற்கும் பெருமளவில்
வளர்க்கப்படுகின்றன .
சத்துப் பொருட்கள் :
பழத்தின் சதைப் பகுதியில் 18.2 சதவீதம் ஈரமும் , 16.5 சதவீதம் புளிப்புத் தன்மையும் , 38.2 சதவீதம் மொத்தச் சர்க்கரை சத்தும் , 2.8 சதவீதம் தாதுச்சத்தும் அடங்கியுள்ளன . விதைகளில் 30 சதவீதம் விதைத் தோல் மற்றும் 70 சதவீதம் விதைப் பருப்பும் அடங்கியுள்ளது . விதைத் தோலில் 30 சதவீதம் வரை டானினும் , நிறமிப் பொருளும் அடங்கியுள்ளது . விதைப் பருப்பில் 8.1 சதவீதம் தண்ணீர் 17 சதவீதம் புரதம் , 7 சதவீதம் கொழுப்பு , 5 , 6 சதவீதம் நார்ச்சத்து , 60 சதவீதம் மாவுச்சத்து மற்றும் 2.8 சதவீதம் தாதுச்சத்துக்களும் அடங்கியுள்ளன .
இரகங்கள்:
பிகேஎம் 1 :
பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தினின்று வெளியிடப்பட்ட இந்த ரகம் நடவு செய்த மூன்றாவது வருடத்திலேயே காய்க்க ஆரம்பிக்கின்றது . பழங்களி னின்று 39 சதவீதம் சதை கிடைக்கின்றது . மேலும் மரம் ஒன்றிற்கு ஆண்டுதோறும் 263 கிலோ புளியை மகசூலாகக் கொடுக்கின்றது . இது உள்ளூர் ரகங்களைக் காட்டிலும் 59 சதவீதம் அதிகமாகும் . ஒரு கொத்தில் 3 முதல் 7 காய்கள் உற்பத்தியாகின்றன .
இதன் சதைப் பகுதியில் 17.1 சதவீதம் டார்டாரிக் அமிலமும் , 3.9 சதவீதம் உயிர்ச்சத்து ‘ சி’யும் அடங்கியுள்ளன .
உரிகம் புளி :
இது தருமபுரி மாவட்டத்திலுள்ள , தேன்கனிக் கோட்டைக்கு அருகில் உள்ள உரிகம் என்ற இடத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் விளைச்சல் ரகமாகும் . இதன் பழங்கள் தட்டையாகவும் , வளைந்தும் காணப்படும் . ஒவ்வொரு பழங்களிலும் 10 முதல் 12 விதைகள் காணப்படும் . ஒவ்வொரு பழமும் சராசரியாக 180 முதல் 200 கிராம் எடையுடன் இருக்கும் . பழங்கள் மார்ச் மாதத்தில் முதிர ஆரம்பித்து ஜூலையில் அறுவடைக்கு வருகின்றன .
இதைத் தவிர இராஜஸ்தான் உள்ளூர் வெளியிடப்பட்ட மாவட்டத்தினின்றுபுரதிஸ்தான் மற்றும் தமிழக தேர்வுகளான கம்பம் தேர்வு , கொண்டதேவன் பள்ளி தேர்வு , தேவர் ஆனிமங்கலம் தேர்வு ஆகியனவும் ஆங்காங்கு சாகுபடியில் உள்ளன .
வகைப்பாடு:
புளியில் மூன்று வகைகள் காணப்படுகின்றன .
1. புளிப்புச் சுவையுடைய பழங்கள் ( பி . கே.எம் .1 )
2. இனிப்புச் சுவையுடைய பழங்கள் ( தாய்லாந்து தேர்வு )
3. சிவப்பு புளியமரம் ( பெரியகுளம் தேர்வு )
இவற்றில் புளிப்புச் சுவையுடைய பழங்கள் உள்நாட்டுத் தேவைகளுக்கும் , மற்ற இரு வகைகளும் ஏற்றுமதிக்கும் பயன்படுகின்றன . வட இந்தியாவில் இனிப்புப் புளியிலிருந்து ஜாம் , ஜெல்லி போன்றவை தயாரிக்கப்படுகின்றன .
பயிர் பெருக்கம்:
புளி உயர் விளைச்சல் ரகங்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்ட விதைகள் மூலம் வழிவழியாக இனவிருத்திச் செய்யப்படுகின்றன . ஆனால் ஒட்டு கன்றுகள் விரைவில் காய்ப்புக்கு வருவதாலும் அவை தாய்க் கன்றுகளை ஒத்திருப்பதாலும் தற்போது புளியானது ஒட்டுக் கன்றுகள் மற்றும் மொட்டுக் கட்டுதல் முறைகளில் இனவிருத்தி செய்யப்பட்டுவருகின்றன .
மண்:
பல்வேறுபட்ட புறக்கணிக்கப்பட்ட மண் வகைகளிலும் புளி வளரும் தன்மையுடையது . பொதுவாக மணல் கலந்த செம்மண் , வண்டல் மண் , செம்புறை மண் போன்ற நிலங்களில் புளி நன்கு வளரும் . மேலும் வறட்சி மற்றும் அமில காரத் தன்மையுடைய மானாவாரி நிலங்களிலும் கூட புளியை வளர்க்கலாம் .
கால நிலை :
புளி ஒரு வெப்ப மண்டல பயிராகையால் அது எல்லா வகை கால நிலையிலும் சிறப்பாக வளரும் . மழை குறைந்த கோடையில் 36 சென்டிகிரேட் வெப்பநிலை நிலவும் பகுதிகளிலும் புளியைச் சாகுபடி செய்யலாம் . ஆனால் இம்மரம் பனியைத் தாங்கும் தன்மை இல்லாதது . பொதுவாக ஆண்டு மழை அளவு 500 முதல் 1500 செ.மீ அளவுடைய எல்லாப் பகுதிகளிலும் புளியைச் சிறப்பாகச் சாகுபடி செய்யலாம் .
பருவம் :
செப்டம்பர் , அக்டோபர் மாதங்கள் புளி நடவு செய்ய உகந்தவை . பருவ மழைகள் இருந்தால் ஜீன் , ஜூலை மாதத்திலும் புளியை நடவு செய்யலாம் . நிலம் தயாரித்தல் ஒரு மீட்டர் நீளம் , அகலம் , உயரமுடைய குழிகளை 10 x 10 மீ இடைவெளியில் எடுத்துக்கொள்ள வேண்டும் . ஆனால் ஒட்டுக் கன்றுகள் நடவு செய்யும்போது 8 x 8 மீ இடைவெளி போதுமானது . பின்னர் 20 கிலோ எரு , மேல் மண் மற்றும் ஆகியவற்றைக் கலந்து குழிகளை நிரப்பவேண்டும் .
நடவு செய்தல் :
பருவ மழைக் காலங்களில் மழை ஆரம்பித்தவுடன் கன்றுகளை நடவு செய்யவேண்டும் . நடும்போது ஒட்டுப் பகுதி , மண்ணுக்கு மேல் இருக்கும்படியாக நடவு செய்து , துணை கொண்டு கட்டவேண்டும் .
நீர்ப்பாசனம் :
புளியானது மானாவாரியாகச் சாகுபடி செய்யப்படுவதால் பொதுவாக நீர்ப்பாசனம் கொடுக்கப்படுவதில்லை . ஆனால் செடிகள் தளிர் விட்டு வளரும் ஆரம்ப வளர்ச்சிக் காலத்தில் தண்ணீர் விட்டு வளர்ப்பது நல்லது . தற்போதைய ஆய்வின்படி சொட்டு நீர்ப் பாசனம் கொடுப்பதன் மூலம் பயிர் விரைவாக வளர்ந்து மகசூலுக்கு வருவதுடன் , அதிக மகசூலும் கிடைக்கிறது .
உரமிடுதல் :
செடி ஒன்றுக்கு 25 கிலோ எரு மற்றும் 200 : 150 : 260 கிராம் தழை , மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் உயர் மகசூலுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள உரங்களை ஆண்டுதோறும் பருவ மழைக்காலங்களில் இடவேண்டும் . மேலும் 50 கிலோ வேப்பம் புண்ணாக்கை மணிச்சத்துடன் கலந்து இடுவதால் செடிகளின் வளர்ச்சியும் மகசூலும் அதிகரிக்கின்றது .
பின்செய் நேர்த்தி:
வேர்க்குச்சிகளினின்று தோன்றும் துளிர்களை அவ்வப்போது அகற்றிவிட வேண்டும் . தோட்டத்தில் காணப்படும் களைகளை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் . ஊடுபயிராகக் காய்கறிகள் மற்றும் முருங்கை போன்றவற்றை ஆரம்பப் பருவத்தில் பயிர்செய்து அதிகப்படியான வருமானம் ஈட்டலாம் . அறுவடை விதை நாற்றுகள் நட்ட எட்டாவது வருடத்திலும் ஒட்டுக் கன்றுகள் நான்காம் வருடத்திலும் காய்க்க ஆரம்பிக்கின்றன . பொதுவாக மரங்கள் மே , ஜூன் மாதங்களில் பூத்து மார்ச் , ஏப்ரல் மாதங்களில் அறுவடைக்கு வருகின்றன . பூத்த பின் அறுவடைக்கு 10-11 மாதங்கள் ஆகின்றன . பழங்கள் மரக்கிளைகளை உலுக்கியும் , நீண்ட குச்சிகளைக்கொண்டும் அறுவடை செய்யப்படுகின்றன .
மகசூல் :
நன்கு வளர்ந்த மரம் ஆண்டொன்றிற்கு 200 முதல் 300 கிலோ பழங்களை மகசூலாகத் தர வல்லது . ஒரு எக்டரினின்று சராசரியாக 12-16 டன்கள் வரை மகசூல் பெறலாம் .
பயிர் பாதுகாப்பு
புளியில் பெரும்பாலும் பூச்சிகளோ , நோய்களோ தாக்கு வதில்லை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.