‘போத்து’ என்றால் மரங்களின் கிளை என்று பொருள். மரத்தின் கிளைகளை வெட்டி நடவு செய்தல் முறைக்குப் ‘போத்து நடவு’ என்று பெயர். ஆல், அரசு, உதியன், பூவரசு, அத்தி, இச்சி, வாதமடக்கி, கல்யாண முருங்கை ஆகிய 8 மரங்கள் போத்துமுறை நடவுக்கு ஏற்றது. இதில் உதியன், வாதமடக்கி வேகமாக வளரும். தேர்வு செய்யும் மரங்கள் குறைந்தது 10 வருட முதிர்ச்சி அடைந்த மரமாக இருக்க வேண்டும். வெட்டப்படும் கிளைகள், மணிக்கட்டுக் கனத்தில் அதிக வளைவு இல்லாமல் நேராக இருக்க வேண்டும்.
Month: November 2019
வரகு சாகுபடியும் நம் முன்னோர்களின் நுட்பமும்
நம் முன்னோர்கள் சிறுதானியங்களில் முன் காலங்களில் பல நுட்பங்களைக் கையாண்டுள்ளனர் அதனில் வெள்ளாடை கொண்டு மேய்ப்பது ……
டீ கம்போஸ்ட் உரம் தயாரிப்பது எப்படி (Compost Tea)
உங்கள் செடியில் காய் சிறிதாக இருக்கிறதா?, பூ பூக்கவில்லையா? செடியின் இலைகள் சிறிதாக உள்ளதா? இந்த மாதிரி பிரச்சனைகள் சரியாக்க Compost Tea தயார் செய்து அதை செடிகளுக்கு கொடுத்து பாருங்கள். காய் பிடிக்கும் செடி நன்றாக வளரும்.
டீ கம்போஸ்ட் உரம் தயாரிப்பது எப்படி?
விவசாய நிலத்தில் எலிகள் தொல்லை கட்டுபடுத்த
ஆந்தை மற்றும் கோட்டான் போன்ற பறவைகள் அதிகமான எலிகளை இரவில் வேட்டையாடும் பழக்கத்தை கொண்டவை அதை மட்டும் கோட்டங்களை நம் இடத்திற்கு வரவழைக்க ஒரு ஏக்கரில் ஐந்து முதல் எட்டு இடங்களில் 6 அடி முதல் 8 அடி உயரம் கொண்ட T வடிவ குச்சிகளை நட்டு வைப்பதன் மூலம் ஆந்தைகளும் கோட்டான்களும் நிலத்திற்கு வரவழைக்க முடியும்.
சாணி உருட்டும் வண்டு
சின்னாறு காட்டுலாவின் பொழுது எல்லோர் கவனத்தையும் ஈர்த்த இந்த ” சாணி உருட்டும் வண்டை ” பற்றிய முழுமையான செய்தியை பகிர்ந்து கொள்ள முடியவில்லை! காடு, ஒவ்வொரு நொடியும் புதிய செய்தியை நமக்கு கற்றுக்கொடுக்கிறது!
காடுகளில் வாழும் சாணி வண்டுகள் இலை தழைகளை உண்ணும் விலங்குகளின் கழிவை உணவாகக்கொள்கின்றன! ஒன்றின் கழிவு இன்னொன்றின் உணவு என்பதின் அடையாளம் வண்டுகள்! இயற்கையின் படைப்பில் எதுவும் கழிவில்லை! மனிதனின் நிரந்தரமற்ற வளர்ச்சிதான் கழித்துக்கட்ட முடியாத ரசாயனக்கழிவை மண்ணில் சேர்த்திருக்கிறது!
வளையாம்பட்டு வெங்கடாசலம் ஐயா
தமிழகத்தில் இன்றும் நம் கவனம் நெல்லின் மீது தான். சிறு தானியங்கள் மீதல்ல. ஆனால் நெல்லுக்கு நிகராக சிறு தானியத்தையும் சம அக்கறையுடன் பாதுகாக்க முயன்ற முதல் தமிழர் இவரே. இத்தனைக்கும் இவர் தமிழகம் முழுமைக்கும் அலைந்து திரிந்து சேகரித்தவை அல்ல. இவர் காட்டிய இராகி, திணை மற்றும் நெல் இரகங்கள் தான் வாழும் திருவண்ணாமலைப் பகுதி மற்றும் பொறியாளராகப் பணி புரிந்த பகுதிகளிலிருந்து சேகரித்தவை.