Month: May 2020

மண்புழு உருவாகத் தேவையான நுண்சூழல்

மண்புழு உருவாகத் தேவையான நுண்சூழல்

இந்திய விவசாயத்தின் இரண்டு சக்கரங்கள் நுண்ணுயிர்கள் மற்றும் மண்புழுக்கள். இரசாயன சாகுபடி வயலில் நிலம் முழுவதும் தோண்டிப் பார்த்தாலும் ஒரு மண்புழு பார்க்கமுடியாது, ஜீவாமிர்தம் கொடுத்தால் 10 நாட்களில் பெரிய மண்புழுக்களை பார்க்க முடியும். நிலத்தில் மண்புழுவே இல்லை என்றாலும் 10 நாளில் மண்புழு வந்துவிடும். ஜீவாமிர்தம் மண்புழுவை அழைக்கும்.

Continue reading

இயற்கை இடுபொருட்களை கலந்து தரலாமா

இயற்கை இடுபொருட்களை கலந்து தரலாமா

எனது நிலக்கடலை வயலுக்கு வேஸ்ட் டீகம்போஸர் மற்றும் பல கரைசலை ஒன்றாக இணைத்து தரைவழி தரலாமா? (இயற்கை இடுபொருட்களை கலந்து தரலாமா)
பதில்:  முடிந்தவரை தரக்கூடாது. இயற்கை விவசாயத்தில் உள்ள ஒவ்வொரு இயற்கை இடுபொருள் களுக்கும் ஒரு தனி குணம் உண்டு.

Continue reading

பூஞ்சைகளை கட்டுப்படுத்த இயற்கை வழிமுறைகள்

பூஞ்சைகளை கட்டுப்படுத்த இயற்கை வழிமுறைகள்

அ) ஜீவாமிர்தம் தெளிப்பு

100 லிட்டர் தண்ணிரில், 5 – 10 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்கவும். ஜீவாமிர்தம் சிறந்த வளர்ச்சி ஊடகம் என்றாலும், அது சிறந்த பூஞ்சான கொல்லியும் ஆகும். சிறந்த கிருமி நாசினி, பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை கட்டுப்படுத்தும், மேலும் வளர்ச்சிக்கான நொதிகளையும் கொடுக்கிறது, இதனால் இலைப்பரப்பு பெரிதாகிறது, ஜீவாமிர்தத் தெளிப்பு புறஊதாக் கதிர்களிடம் இருந்து தாவரத்தைக் காக்கிறது,

Continue reading

தென்னைக்கு இரட்டை வரப்பு பாசனமுறை

தென்னைக்கு மிகவும் உபயோகமான இரட்டை வரப்பு பாசனமுறை

இது தென்னைக்கு மிகவும் உபயோகமான இரட்டை வரப்பு பாசனமுறை

இரட்டை வரப்பு:

மரத்தின் தண்டில் இருந்து 4 அடி இடைவெளியில் ஒரு வட்ட வடிவ வரப்பும் 6 அடி இடைவெளியில் இன்னொரு வட்ட வரப்பும் போட்டு இரண்டுக்கும் நடுவில் ஒரு அடி தோண்டி அதில் நாங்கள் தயாரிக்கும் தென்னை சிறப்பு இயற்கை உரம் 15 கிலோ இட்டு மண் மூடி அதன் மேல் தக்கைப்பூண்டு விதை 200 கிராம் போட வேண்டும். இந்த பயிர் வளர்ந்த  50 நாளில் மிதித்து விட்டு மண் மூட வேண்டும்.

இதன் பயன்பாடு:

1, மண்ணில் உறிஞ்சும் வேர்கள் உள்ள இடத்தில் பாசனம் செய்வதால் பாசன நீர் வீணாகாமல் பயன் தரும்

2, நீர் சேமிப்பு

3, மரத்தின் தண்டை ஒட்டி புது வேர்கள் மண்ணிற்கு மேல் பரவாமல் அது சரியாகும்

4, ஊட்டச்சத்து அறைகளை நோக்கி வேர்கள் வளரும்

5, பாசன நீரில் உள்ள உப்பு குறையும். உப்பு இரண்டு வரப்புகளில் உள்ள காற்றோட்டத்தால் உப்பு வெளியே படியும்

6, இரண்டு வரபபுகளுக்கு இடைப்பட்ட பகுதி மிதிபடாமல் இருப்பதால். நிலக்தாற்றோட்டம். அதிகமாகும். இந்த நிலக்காற்றோட்டம். வேர்கள் சத்துக்களை உறிஞ்சி எடுக்க உதவும்

7. சுற்றுவட்ட நீர் பாதையில் உள்ள அனைத்து வேர்களும் தூண்டப்பட்டு வேலை செய்யும்

8, நிறைய சல்லி வேர்கள் தோன்றும்.

9. உச்சி வெயிலில் மரத்தின் நிழல் விழும் இடம் முழு வட்ட வடிவில் இருக்கும். அதுவே மரத்தின் வாழிடம் ஆகும். ( ஒரு மரத்திற்கு தேவையான இடவசதி) Canopy area.  இந்த இடங்களில் வேர் பரவி மரம் அதிக உற்பத்தி தரும்

Dial basin irrigation technology:

Our Dial basin irrigation technology for coconut
This technology has developed by me at 1998

Uses:

1 Irrigation at feeding zone
2,Water use efficiency
3,Water saving
4, Helps to remove Salinity of water by the aeration of both bunds
5,Root development and root elongation upto canopy area. So it can reach soil nutrient source.
6, Good soil aeration can be maintained by the furrows which has less chance to tightening by walking.
7,We got good soil development in gravel soil, because continuous irrigation on that area will help for good microbial communities development.
8,Soil erosion control will be there.

By
P.Balasubramanian.
CSO, Sakthi Agri Clinic
94422 53021

இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை

இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை

வயல்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை அதிகம் போட்டு வருவதாலும், பூச்சிகொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாலும் மண் வளம் குறைகிறது. நஞ்சு கலந்த உணவைப் பெற வேண்டி உள்ளது. ரசாயன உரங்களால் வயல்கள் பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.

Continue reading

அக்னி அஸ்திரம்

அக்னி அஸ்திரம், பெயருக்கேற்றார் போல் அக்னியாய்,பயிர்களை தாக்கும் பூச்சிகளையும் புழுக்களையும் அழித்து, அவைகளால் உண்டாகும் நோய்களையும் தீர்க்கும் அஸ்திரமாகவும் செயல்படுகிறது.

Continue reading

இலாபம் தரும் மரப்பயிர் சாகுபடி

இலாபம் தரும் மரப்பயிர் சாகுபடி

இலாபம் தரும் மரப் பயிர் சாகுபடி என்ற தலைப்பில் வனத்துக்குள் திருப்பூர் சார்பில் வலைதள இணைப்பின் மூலம் காணொளி கலந்துரையாடல் 25-04-2020 அன்று நடைபெற்றது.

மரப்பயிர் சாகுபடி குறித்து
துறை சார்ந்த வல்லுனர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Continue reading