பல நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் அனைவருக்கும் பயன்படும் என்பதால் இப்பதிவு…
இந்த முறையானது நமது ஏர்வளம் இயற்கை வேளாண்மை மற்றும் நாட்டுமாட்டுப் பண்ணையில் பயன்படுத்திப் பார்த்து நல்ல பலன் கிடைத்தது அதைத்தான் இங்கு உங்களுக்காக பகிர்ந்துள்ளேன்…
Month: June 2020
நெல் பயிரின் பராமரிப்பு அட்டவணை
குறுகிய கால மற்றும் நீண்ட நாள் வயதுடைய நெல் பயிரின் பராமரிப்பு அட்டவணை
வயது : 110 லிருந்து 150 நாள் வரை.
*சிறப்பம்சங்கள்;*
🌾நாற்றுக்களை குறைந்த நாள் வயதில்(11 லிருந்து 18 நாள்) நடவு செய்வதால் பக்க கிளைப்புகள் மிக அதிகமான எண்ணிக்கையில் உருவாகும்.
🌾ஒருங்கிணைந்த உரம், களை, தெளிப்பு, பாசன நிர்வாக முறைகளை திறம்பட கையாளுவதன் மூலம் நெல்லின் வளர்இளம் பருவத்தில் ஒத்த வயதுடைய பக்க கிளைப்புகள் உருவாகுவதற்கு ஏதுவாகும். இதன் மூலம் தாமதமாக, பின்வரும் கிளைப்புகளில் நெற்கதிர்கள் இல்லாமல் போவதை தடுக்கலாம் .
விவசாயம் செழிக்க ஆட்டுஎரு பயன்படுத்துவோம்
விவசாயம் செழிக்க ஆட்டுஎரு பயன்படுத்துவோம்
‘ஏரினும் நன்றாம் எருவிடல் இட்டபின் நீரினும் நன்றாம்அதன் காய்ப்பு’
என்று வள்ளுவர் முன்பே கூறியது போல ஆட்டு எருவின் பயன்களைப் பற்றி பார்க்கலாம்.
தென்னைமரத்தை முறையாக பராமரிப்பது எப்படி
தென்னைமரத்தை முறையாக பராமரிப்பது எப்படி?
கற்பதரு என்று அழைக்கப்படும் தென்னை மரத்தை மிகவும் சரியான முறையில் பேணுவது அல்லது வளர்ப்பது மிகவும் அவசியமாகும் அதற்கான காரணம் பலவும் உண்டு. நானறிந்த சிலவற்றை உங்களிடம் பகிர்கிறேன் அதற்கான பதிவே இது..
தென்னை மரங்களுக்கு வருடத்துக்கு இரண்டு முறை சுண்ணாம்பு மற்றும் செம்மண் கொண்டு மேல்பூச்சு பூசுவோம். தை மாதம் ஒரு முறையும்,ஆடியில் ஒருமுறையும். இது வழக்கமான ஒரு நடைமுறை.
மனிதர்களாகிய நமக்கு வரும் நோய்களுக்கு இரும்பு, சுண்ணாம்பு சத்து குறைபாடு என்பதை நன்கு அறிவோம். மனிதர்கள் போலவே மரங்களுக்கும் அத்தகைய குறைபாட்டை போக்கவே இரும்புச்சத்து நிறைந்த செம்மண்ணும் கால்சியம் சத்து நிறைந்த சுண்ணாம்பையும் மரத்திற்கு பூசி மரத்திற்கு ஊட்டச்சத்தை வழங்கும் ஒரு எளிய மரபான முறையாகும்.
இவ்வாறே மண் இரும்பு ஆணியைக் கொண்டு மரத்தின் வேர்ப்பகுதியில் அடித்து விடுவதுண்டு. கொடுவாள் மற்றும் கதிர்அறுக்கும் கருக்கு அரிவாள் கொண்டு மரத்தை காயப்படுத்தும் பழக்கமும் உண்டு இரும்பால் ஆன பொருட்களை பயன்படுத்த இதில் உள்ள பெர்ரஸ் அயனியை கிரகிக்கும் தன்மை தென்னை மரத்திற்கு உண்டு….
தண்ணீர் பரிசோதனையின் அவசியம்
தண்ணீர் பரிசோதனையின் அவசியம்
விவசாயிகள் பாசன தண்ணீரை பரிசோதனை செய்வது அவசியமானது. ஏனென்றால் ஒரு பயிர் வளர்ச்சிக்கு மண்ணுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே அளவு நீருக்கும் பங்கு உண்டு
பொன் வண்டு என்ற பொன்னாள்பூச்சி
பொன் வண்டு என்ற பொன்னாள் பூச்சி
மறைந்து வரும் பூச்சி இனங்களில் இதுவும் ஒன்று – பொன்னாள் பூச்சி என்ற பொன் வண்டு
மக்காச் சோளம் படைப்புழுக்கள்
தென்னை ஈ பெருக இதுவும் ஒரு காரணி.
தவளை போன்ற முப்பரிமாண பூச்சி இனங்கள்
முட்டை , கொரத்தை குட்டி, தவளை
இது போன்றே ஈ,கொசு போன்றவை
பயிர்களில் வைரஸ் நோய் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும்
பயிர்களில் வைரஸ் நோய் தாக்கம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும்
தமிழகத்தில் பெரும்பாலும் இறவயில் பயிரிடப்படும் பயிர்களிலும் மானாவாரியாக பயிரிடப்படும் பயறுவகை பயிர்களில் மற்றும் தோட்டக்கலை பயிர்களான பப்பாளி முதலிய பயிர்களிலும் மிகவும் எதிரியாக இருப்பது வைரஸ் நோய் தாக்கம் ஆகும்.
எந்த ஒரு பயிருக்கும் முறையான அடியுரம், ஆரம்பகால பயிர் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட எந்த ஒரு பயிரிலும் வைரஸ் நோய் தாக்காது .