Month: March 2019

சூப்பர் நேப்பியர் பசுந்தீவனங்களின் ராஜா

சூப்பர் நேப்பியர் பசுந்தீவனங்களின் ராஜா supernapier

பசுந்தீவன ரகங்களில், அதிக உற்பத்தி திறன் கொண்ட ரகம். சூப்பர்நேப்பியர்.

தானிய வகை பயிரான கம்பையும் ,ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட யானை புல்லையும்( நேப்பியர் புல்) கலப்பினம் செய்து, தாய்லாந்தில் உருவாக்கப்பட்டது.

ஸ்டார்ச்சும், கார்போஹைட்ரேட்டுகள் மட்டுமே செறிந்திருக்கும் புல்லில், கம்பு வகை தானியத்தை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட , சூப்பர் நேப்பியரின் புரத அளவு 14 லிருந்து 18.சதவிகிதம்.

இது கால்நடைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகி, உடல் எடை கூடுவது, பாலின் தரம் மேம்படுதல், கன்றுகளின் உடல்வளர்ச்சி விகிதம் கூடுதல் என துணை புரிகிறது.

Continue reading

பயிர்களை பன்றியிடம் இருந்து பாதுகாக்கும் எளிய முறைகள்

பயிர்களை பன்றியிடம் இருந்து பாதுகாக்கும் எளிய முறைகள்

இயற்கை விவசாயி ரெங்கராஜன் அவர்கள் பயிர்களை பன்றியிடம் இருந்து பாதுகாக்கும் வழிமுறை கேட்டார் இதோ உங்கள் பார்வைக்கு….இயற்கை முறையில் பயிர்களை பன்றியிடம் இருந்து பாதுகாக்கும் எளிய முறைகள் :

Continue reading

புன்னை மரம்

புன்னை மரம்

புன்னை ஒரு மரவகையைச் சேர்ந்தது. மணற்பாங்கான இடம், வளமான ஈரமான இடங்களில் நன்கு வளரும். கழிமண் நிலத்திலும், உப்புத் தண்ணீரிலும் வளரும். இது சற்று நீண்ட எதிர் அடுக்கில் அமைந்த பெரிய பச்சையான பளபளப்பான இலைகளையும் உருண்டையான உள் ஓடு உள்ள சதைக் கனிகளையும் உடைய பசுமையான மரம். இது சுமார் 5 அடிக்குமேல் 12 அடிவரை உயரம் வளரும். இதன் பூக்கள் அழகாக இருக்கும். பூவின் அகலம் 25 எம். எம். ஆகும். ஒரு கொத்தில் 4 – 15 பூக்கள் இருக்கும். இதன் காய்கள் முதலில் மஞ்சளாகவும் பின் முற்றிய பின் மரக்கலராகவும் மாரும். ஒரு மரத்தின் காய் 100 கிலோ கிடைக்கும். அதில் 18 கிலோ எண்ணெய் கிடைக்கும்.

Continue reading

கூந்தற்பனை

கூந்தற்பனை

கன்னியாகுமரி மாவட்டத்தில்’#உலத்தி’ என்ற பெயரில் அழைக்கப்படும் இம்மரம் மற்ற இடங்களில் #கூந்தற்பனை என்று அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் #Caryota urens. ‘யா மரம்’ என்று குறுந்தொகையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த மரத்தின் இலைகளும் தண்டும் யானைகளுக்கு மிகவும் விருப்பமான ஸ்னாக்ஸ்.

Continue reading

வீடுகளில் குறைந்த செலவில் மழைநீரை சேமிக்கும் முறை

வீடுகளில் குறைந்த செலவில் மழைநீரை சேமிக்கும் முறை: rainwater-harvesting-at-homes

வீட்டின் சுவருக்கும் காம்பவுண்டு சுவருக்கும் இடையிலான இடத்தில் போர் குழியிலிருந்து சுமார் 5 அடி தள்ளி வீட்டின் மொட்டைமாடியிலிருந்து இறங்கும் 4 இஞ்ச் பைப் தண்ணீரைப் பெறும் வகையில் ( 4 அடி நீளம்*2.5 அடி அகலம்*4 அடி) ஆழம் கொண்ட குழி தோண்டலாம். இக்குழியில் மூன்றை அடி ஆழத்தில் 40 மி.மீ அளவுள்ள ஐல்லிக்கற்களை நிறைத்து மீதமுள்ள மேலே உள்ள அரை அடிக்கு செங்கல் வைத்து கட்டிவிடலாம். மேலும் இக் குழியை கடப்பா கல் வைத்தோ அல்லது ஜல்லி வலை வைத்தோ மூடி விட்டால் அந்த சந்தை எப்போதும் போல் உபயோகப்படுத்தலாம்.

Continue reading