Month: August 2018

துளைகள் உடைய பேவர் பிளாக்

துளைகள் உடைய பேவர் பிளாக்

பொதுவாக நகர்ப்புறங்களில் சிறு மழை பெய்தாலே ஆறு போல சாலையில் தண்ணீர் ஓடுவதை பார்த்திருப்போம்.இதற்கு முக்கிய காரணம் நகர்ப்புறங்களில் வீட்டை சுற்றியும்,மற்றும் சுற்று வட்டாரத்தில் பெரும்பாலான பகுதிகள் டைல்ஸ் அல்லது சிமெண்ட் தரை கொண்டு தளம் அமைத்து நீர் மண்ணுக்குள் கொஞ்சம் கூட இறங்காமல் தடுத்து விடுகிறார்கள்.

Continue reading

வீடுகள் என்பது வெறும் சுவர்கள் மட்டும் அல்ல

வீடுகள் என்பது வெறும் சுவர்கள் மட்டும் அல்ல

வீடுகள் என்பது வெறும் சுவர்கள் மட்டும் அல்ல.

கேரளத்தில் பல பரம்பரைகளாக மரபுவழி மாறாமல் வாழ்ந்துவரும் குடும்ப வீடே நாலுகெட்டு வீடு. திருச்சூர், ஆலப்புழா, தளசேரி போன்ற இடங்களில் இந்த நாலு கெட்டு வீடுகளை அதிகமாகப் பார்க்கலாம்.

நான்கு அறைகளைக் கொண்டும் வீட்டின் நடுப் பகுதியில் நடு முற்றம் கொண்டும் இந்த வீடு அழகாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. முன்பகுதியில் மரத் தூண்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும்.

முன்பகுதியில் விருந்தினர்கள் அமர்வதற்காக மரப் பலகையால் ஆன இருக்கை வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த இருக்கை வளைவான மரப்பகுதி கொண்டு அழகாக்கப்பட்டிருக்கும்.


இதை ‘சாருபடி’ என அழைக்கிறார்கள். இந்த வீட்டின் உள்பகுதி வடக்கினி (வடக்கு), படிஞாற்றுனி (மேற்கு), கிழக்கினி (கிழக்கு), தெக்கினி (தெற்கு) ஆகிய நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு பகுதிகளும் நடுமுற்றத்தில் வந்து முடியும். பொதுவாகக் கேரள வீடுகளில் முன் வாசலுக்கு நேர் எதிராகப் பின் வாசல் இருக்கும். பெரும்பாலும் எல்லா அறைகளிலும் ஜன்னல்கள் இருக்கும். இந்த நடுமுற்றம் மூலம் வெளிச்சமும் காற்றும் வீட்டுக்குள் தாராளமாக வரும்.

வீட்டைச் சுற்றி சுற்று வராந்தாவும் இருக்கும். இந்த வராந்தா முழுவதையும் மர வேலைப்பாடுகளால் ஆன சாருபடி சுற்றியிருக்கும். வீட்டு உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்காக ஒரு குளம் இந்த வீட்டுக்கு அருகிலேயே இருக்கும். இந்தக் குளத்தை அணுகுவதற்கான பாதை இந்தச் சுற்று வராந்தாவிலிருந்து பிரிந்துசெல்லும்.

ஜன்னல்களும் கதவுகளும் பலா, மா, தேக்கு ஆகிய மரங்களின் பலகைகளால் உருவாக்கப்படும். இந்த நாலுகெட்டு வீடுகளில் சமையலறையிலிருந்து நீர் எடுக்கக் கூடிய வகையில் ஒரு கிணறு இருக்கும். இந்தக் கிணற்றின் அடித்தளத்தில் நெல்லிப் பலகை அமைந்திருக்கும். அந்தப் பலகை 30-40 வருடங்கள் ஆனாலும் சேதமடையாமல் உறுதியாக இருக்கும்.

நடுமுற்றத்திலும் வேலைப்பாடுகள் கொண்ட நான்கு மரத் தூண்களால் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். நடுவில் துளசி மாடம் இருக்கும். வீட்டின் உள்கட்டமைப்பு பாரம்பரியம் மாறாமல் பிரம்மாண்டமாய் அமைந்திருப்பது வியக்கச்செய்கிறது. எல்லோரும் கூட்டுக் குடும்பங்களாக வாழ்வதற்கே இந்தக் கட்டமைப்பில் வீடுகள் கட்டப்பட்டன.

நாலுகெட்டு வீடு போலவே எட்டு அறைகளும் இரண்டு நடுமுற்றமும் கொண்டு அமைக்கப்பட்டவை எட்டுக்கெட்டு வீடுகள் எனவும், பதினாறு அறைகளும் நான்கு நடுமுற்றமும் கொண்டு அமைந்திருப்பது பதினாறுகெட்டு வீடு என்றும் அழைக்கப்படுகிறது.கேரள வீடுகளே தனி அழகு. இயற்கைச் சூழல் அழிந்துவரும் இந்தக் காலகட்டத்தில் இயற்கையோடு இணைந்து வாழ நாலு கெட்டு வீடுகளே சிறந்தவை

தொடரும்…
ஹரி

நிலைப்படுத்தப்பட்ட மண் சுவர் வீடு

நிலைப்படுத்தப்பட்ட மண் சுவர் வீடு rammed earth house

நிலைப்படுத்தப்பட்ட மண் சுவர் வீடு வீட்டின் சிறப்பு என்னவென்றால் 7% சிமெண்ட் மற்றும் செம்மண்ணை கொண்டு அழுத்தப்பட்டு வீட்டின் சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த வீடு பெங்களூர் ஆர்க்கிடேக்ட் சித்ரா விஸ்வநாத் அவர்களால் வடிவமைக்கப்பட்ட 1500 சதுர அடி கொண்ட rammed earth house.

Continue reading

சுண்ணாம்பு மண் கற்கள்

சுண்ணாம்பு மண் கற்கள் lime stabilized mud block

இந்த mud ப்ளாக்கிற்கு எல்லோரும் இதுவரை சிமெண்டை பயன்படுத்திதான் கற்கள் போட்டுள்ளனர்.நாங்கள் முழுக்க 10 சதம் சுண்ணாம்பு ,கடுக்காய் தண்ணி,நாட்டு சர்க்கரை தண்ணி கொண்டு மட்டுமே கற்கள் அடித்து உள்ளோம்.

Continue reading

ஹைட்ரோ ஃபோனிக்ஸ் தீவனங்களை ஆடுகளுக்கு தரலாமா

ஊட்டமேற்றிய ஆட்டு எரு

வெள்ளாடுகள், இயற்கையிலேயே பலவகைப்பட்ட தீவனங்களை உணவாக உட்கொள்ளும் பழக்கம் உடையவை.
ஒரே மாதிரியான தீவனங்களை அவை விரும்புவதும் இல்லை, உணவாக ஏற்பதும் இல்லை.
அவற்றின் தீவனத்தில் புல்வகைககள், தானிய வகைகள், பயறு வகைகள், மர இலைகள் என பல்வேறு வகைகளை உள்ளடக்கியது.
இவ்வாறு அவைகள் தேடி, தேர்ந்தெடுத்து உண்பதால் தான் வெள்ளாட்டு இறைச்சி மற்றும் பால் மருத்துவ குணம் மிக்கதாக, அனைவராலும் கருதப்படுகிறது.

Continue reading

மற்றுமொரு அற்புத பாரம்பரிய படைப்பு

மற்றுமொரு அற்புத பாரம்பரிய படைப்பு

நாம் வீடு கட்டும்போது முதலில் அந்த இடத்தின் லண்ட்ஸ்கேப் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நில அமைப்பையும் ,இயற்க்கை அமைப்பையும் சிதைத்து அதாவது மரங்களை வெட்டி ,பாறைகளை உடைத்து,நிலத்தை சமப்படுத்தி பின்னரே வீடு கட்ட முனைகிறோம்.இது முற்றிலும் தவறு.

Continue reading

கருங்குருவை புரியாத புதிர்

கருங்குருவை புரியாத புதிர்

கருங்குருவை நெல்\அரிசி பற்றி அனுபவ பதிவு விளைச்சல் புரியாத புதிர் … அறிவியல் பூர்வமாக அறிந்து இருக்கவில்லை இந்த இயற்கை விவசாயத்தையும் ..கருங்குருவை பாரம்பரிய நெல்லையும் மற்றும் என் இயற்கைக்கு மாறிய நிலத்தையும்.

ஆனால் என் உழைப்பையும் இயற்கையின் மேல் உள்ள நம்பிக்கையும் நம்புகிறேன்.

Continue reading