கர்நாடகா எல்லையில் உள்ள அஞ்செட்டியில் உள்ள மலைப்பகுதியில் நண்பரின் mud blocks கொண்டு கட்டப்பட்ட மண் வீடு பார்வையிட வாய்ப்பு கிடைத்தது. சிறு குளம்,முன்புற திண்ணை,முற்றம்,சுற்றியும் மரங்கள்,கருங்கல் வேலைப்பாடுகள்,சாய்தள மங்களூர் ஒட்டு கூரை,மண்வாசயுடன் சுவர்,அழகான கருங்கல் படிக்கட்டு,பழைய செட்டிநாட்டு வீடுகளின் தூண்கள்,என வர்ணித்து கொண்டே போகலாம்.
Month: December 2018
இயற்கை விவசாயத்தில் இடுபொருள்
இயற்கை விவசாயத்தில் இடுபொருள்களுக்காக வெளிச் செலவு செய்யாதீர்கள்.
இதற்காக நமது பணம் வெளி செல்வது மிக தவறு. மண்ணில் நிறைய தொழு உரம் கொடுங்கள்.
நிறைய கொடுங்கள்.
மண்ணில் நுண்ணுயிர்கள் பெருக்கம் தானே நடக்கும்.
ஒரு ஏக்கரில் அதிக வருமானம் கிடைக்க பயிர் செய்யும் முறை
ஒரு ஏக்கர் நிலத்தில் அதிக வருமானம் கிடைக்கும் வகை பயிர் செய்யும் முறை பற்றி சொல்லுங்க என கேட்டபோது உருவாக்கம் பெற்ற பதிவு
நெல். ஜெயராமன் காலமானார்
புற்று நோய் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயற்கை விவசாயி நெல். ஜெயராமன் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
புயலால் வீழ்ந்த தென்னையை மீண்டும் காப்பாற்ற முடியுமா?
புயலால் வீழ்ந்த தென்னையை மீண்டும் காப்பாற்ற முடியுமா?
பட்டதை சொல்கிறேன் தொடர்ந்து படியுங்கள்..
1982 ,83 ல் சாணஎரிவாயு கலன் அமைக்க இருபது அடி குழி எடுக்கும் போது அருகிலேயே ஆறு அல்லது ஏழு வயதான நாட்டு தென்னை மரம் காய் பிடித்திருந்தது..
விறகு அடுப்பை ஒழிக்க அரசாங்கம் சாண எரிவாயும் கொண்டு வந்த சமயம்..
கோழி முட்டை வடிவத்தில் (கான்கீரீட் முறையில்) கலன் அமைக்க வேண்டும் என்பது அரசாணை.
அருகில் இருக்கும் தென்னையையை அப்புறபடுத்துவது நல்லது என்று அரசு ஊழியர்கள் என் தந்தையிடம் கூற,
வச்சவனே எப்படி வெட்டமுடியும் .??