பதினைந்து வருடங்களுக்கு முன்பு எங்கவீட்ல உம்பளாச்சேரி வகைய சேர்ந்தமாடு ஒன்னு இருந்துச்சி நெத்திசுட்டி, வெடிவால், வெங்கொழும்பு, தட்டுபுள்ளி,நாலுகாலு வெள்ளனு உம்பளாச்சேரிக்கான அந்த ஐந்து அடையாளத்தோடும் பயிர்கொம்போடு கட்டுதரையில் அந்த சூரியங்காட்டு மாடு நிற்பதை நாள்முழுவதும் பாத்துகிட்டே இருக்கலாம்.
Month: April 2019
பருவநிலை மாற்றம்
பருவநிலை மாற்றம்
ஏந்தம்பி தீர்வுக்கு விதை, தற்சார்புனு சொல்றிங்களே இதெல்லாம் வேலைக்கு ஆகுமா? உலகமே பணத்த பாத்து ஓடிகிட்டு இருக்குது, நீங்க நுகர்வை குறைனு சொல்லிகிட்டு திரியறிங்க…மாற்று சக்தி, அறிவியல் கண்டுபுடிப்பு எல்லாரும் நம்மள காப்பாத்தும்.
லாரிபேக்கர் கட்டிடத்துறையின் காந்தி
திருவனந்தபுரம் ரயில்வே நிலையத்தையோ அல்லது பேருந்து நிலையத்தையோ கடந்து செல்லும் எவரும் அந்த இந்தியன் காஃபி ஹவுஸ் கட்டிடத்தின் மீது விழி பதிக்காமல் கடக்க முடியாது. நான் திருவனதபுரத்திற்கு செல்லும்போதெல்லாம் பிரம்மாண்டமான கலோசியத்தின் ஒரு பகுதி போலிருக்கும் அந்த கட்டிடத்தில் சென்று தேங்காய் எண்ணெயில் சுடப்பட்ட மைதா பூரியையும், தொட்டுக்கொள்ள பீட் ரூட் உருளை குருமாவையும் ஒரு ஜன்னலோரம் அமர்ந்து அவசரகதியில் இயங்கும் உணவகத்தில் கொஞ்சம் நிதானமாக வேடிக்கை பார்த்தப்படி உண்டபடி அமர்ந்திருப்பது வழக்கம். அது லாரி பேக்கர் கட்டிய கட்டிடம் என்று அவரை பற்றி அண்மையில் வாசித்த போது தான் அறிந்துகொண்டேன். லாரி பேக்கர் எனும் வரலாற்று ஆளுமையை அறிந்து கொண்டதும், நான் உணவருந்திய எனக்கு பிடித்தமான கட்டிடம் அவர் கட்டியது என்று அறிந்து கொண்டதும் எனக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது.
சீமைக் கருவேலமரத்திற்கு மாற்று மரம்
அப்பாடா கிடைச்சாச்சு.. சீமைக் கருவேலமரத்திற்கு மாற்று மரம். வறட்சியைத் தாங்கி, வளத்தை அளிக்க கூடியது.
செலவில்லாத சுத்திகரிப்பு கருவி வெட்டிவேர்
கழிவுநீரானது நல்ல நீராக மாறிவிட்டது… இத்தகைய அற்புதத்தைச் செலவில்லாமல் செய்து கொடுத்துவிட்டது வெட்டிவேர்…சாக்கடைகள் அதிகம் ஒடும் இந்தியாவின் லூதியானா நகரில் உள்ள கழிவுநீர்க் கால்வாய் உலக பிரசித்தி பெற்றது. அங்குள்ள பனியன் கம்பெனிகளின் கழிவுநீர் அனைத்தும் வெட்டிவேர் மீது பட்டுச் செல்லும்படி வடிமைத்தோம். அடுத்த சில மாதங்களில் அந்த நீர், நல்ல நீராக மாறிப்போனது” என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்…வெட்டிவேரை கொண்டு மண் மலடாவதை தடுக்கும் வழிமுறை !!! விளைவிக்கும் காய்கறிகளை இயற்கையாக பெற !!
மண் வளம் காக்க நீங்கள் செய்ய வேண்டியவை
உழவர்கள் தங்களது நிலத்தின் மண் வளத்தைப் பாதுகாத்து அதிக விளைச்சல் பெற பசுந்தாள் உரங்களை இட வேண்டும்.ஒவ்வொரு முறை அறுவடைக்குப் பின்னரும் மண்ணின் வளத்தைக் காக்கவும், மண்ணுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் பசுந்தாள் உரங்களை இட வேண்டும்.
தண்ணீருக்காக தமிழகம் கையேந்த வேண்டிய அவசியமில்லை
தண்ணீருக்காக எந்த மாநிலத்திடமும் *தமிழகம் கையேந்த வேண்டிய* அவசியமில்லை…ஏன்????தண்ணீருக்கான நோபல் பரிசு பெற்ற திரு”ராஜேந்திரசிங்”அவர்கள்.தமிழ் நாட்டின் காவேரி நதி வறட்சியை பற்றி பத்திரிக்கையாளர்களுக்கு கூறியதாவது….